search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • பிளஸ்-2 தேர்வில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்தது.
    • லுப்னா சுலைஹா 577 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்று உள்ளார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் பிளஸ்-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    அதன்படி இந்த பள்ளியில் படித்த மாணவி லுப்னா சுலைஹா 577 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்று உள்ளார். மாணவி அல் அப்ரா 575 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், நுபிரா பாத்திமா 573 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பெற்று உள்ளனர்.

    அதற்கு அடுத்து மாணவி ருஷ்தா பாத்திமா 572 மதிப்பெண்ணும், ஹதீஜா பாத்திமா 571 மதிப்பெண்ணும், பாத்திமா பரா, ஐனுல் ஹீதா 571 மதிப்ெபண்கள் பெற்று அடுத்தடுத்து இடத்தை பிடித்து உள்ளனர்.

    பிளஸ்-2 தேர்வில் 9 மாணவிகள் கணக்கு பதிவியல், வணிகவியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர். இதேபோல் 20 மாணவிகள் 550 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.

    அதிக மதிப் பெண் பெற்று சாதனை படைத்த மாணவிகளுக்கு இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இபுராஹீம், முதல்வர் நேபிள் ஜெஸ்டஸ், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பாராட்டினர்.

    • தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • ஆதிதிராவிடர் நல மாவட்ட துணை அமைப்பாளர் வக்கீல் ராமச்சந்திரன் வரவேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கல்லுவெட்டுமேடு பகுதியில் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவரும், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாள ருமான சண்முக வடிவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சகா தேவன், ஒன்றிய அவைத் தலைவர் திருநாவுக்கரசு, பொருளாளர் கண்ணன், துணை செயலாளர்கள் முத்துராமன், சரசு சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் தங்கமணி, மணி, தவமணி, காட்டாம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட கவுன்சிலர் ரவி, ஆதிதிராவிடர் நல மாவட்ட துணை அமைப்பாளர் வக்கீல் ராமச்சந்திரன் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் இலக்கு வன் கலந்து கொண்டு பேசினார்.

    மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சுலைமான் பாதுஷா, மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்டோரும் சிறப்புரையாற்றினர். இதில் திருப்பத்தூர் நகர செய லாளர் கார்த்திகேயன், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் நாராயணன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சாக்ளா, நகர அவைத் தலைவர் ராமரவி, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிக்கந்தர் பாதுஷா, தொ.மு.ச. சண்முகநாதன், பேச்சாளர் ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஒன்றிய துணைச் செயலாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

    • திருச்சியில் உலக சாதனைக்காக நடத்தப்பட்டது
    • 390 மாணவிகள் சுழற்சி முறையில் சிலம்பம் சுற்றினர்

    திருச்சி,

    திருச்சி அரவிந்த் கல்வி மற்றும் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் முப்பெரும் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. விழாவை கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை தாங்கி சாதனை நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.முதலாவதாக தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 390 மாணவ, மாணவிகள் சுழற்சி முறையில் 23 மணி நேரம் 23 நிமிடம் 23 வினாடி சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தனர். இரண்டாவதாகஅரவிந்த் கல்வி மற்றும் தற்காப்பு கலைக்கூட மாணவர்கள் 9 பேர் தொடர்ந்து 7 மணி நேரம் 7 நிமிடம் 7 வினாடிகள் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர். 3-வதாக ஆசான் உமா குணசேகரன் 23 நிமிடங்களில் 23 விதமான சிலம்ப ஆயுதங்களை பயன்படுத்தி சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தார்.அதைத் தொடர்ந்து சிறப்பாக சிலம்பம் சுற்றிய மாணவ மாணவிகளுக்கு நவல்பட்டு போலீஸ் பயிற்சி பள்ளியின் ஓய்வு பெற்ற கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு திருச்சி கோவிந்தசாமி பரிசுகள் வழங்கினார்.இதில் சிறப்பு விருந்தினர்களாக திருநெல்வேலி மாயன் பில்டர்ஸ் டி.டி.ரமேஷ், ஓய்வு பெற்ற திருச்சி ரோட்டரி சங்க தலைவர் வளர்மதி குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேற்கண்ட 3 சாதனை நிகழ்வுகளையும் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஜெட்லி நேரில் பார்வையிட்டு உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்தார். மேலும் இச்சாதனை ஆசியா மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்துக்கு பதிவு செய்து அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரவிந்த் கல்வி மற்றும் தற்காப்பு கலைக்கூட ஆசான்கள் முத்துராமலிங்கம், கீதா , சுதாகர் மற்றும் அரவிந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பிளஸ் 2 பொதுத் தேர்வில் காரைக்குடி தி லீடர்ஸ் பள்ளி சாதனை படைத்தது.
    • சாதனை படைத்த மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைவர் பாராட்டினர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தி லீடர்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த பள்ளியின் மாணவி கீர்த்தனா 589 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவன் பழனியப்பன் 582 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், மாணவி ரூவாந்திகா 575 மதிப்பெண்களுடன் 3-ம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைவர் ராஜமாணிக்கம், தாளாளர் நிவேதிதா, இயக்குனர் ஞானகுரு, முதல்வர் சசிகலா பாராட்டினர்.

    • புதுவயல் ஸ்ரீ கலைமகள் வித்யா பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
    • சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தாளாளர் பரமேஸ்வரன், ஆசிரி யர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் ஸ்ரீ கலைமகள் வித்யா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

    இந்த பள்ளியின் மாணவி காவியதர்ஷினி 578 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மாணவி சுபஸ்ரீ 576 மதிப் பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், மாணவி ரவின் ரஸ்மிதா 569 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பெற்றுள் ளார். கணிப்பொறியியல் பாடத்தில் 6 பரும், அக்கவுண்டன்சியில் 4 பேரும், காமர்ஸ்சில் 3 பேரும், கணிப்பொறி அறிவியலில் ஒரு மாணவியும் 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தாளாளர் பரமேஸ்வரன், ஆசிரி யர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

    • நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர்.
    • மாணவ, மாணவிகள் 98.60 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    மதுரை

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளி யாகின. இதில் மதுரை தெற்கு வாசல் நாடார் வித்தி யாபிவிருத்தி சங்கத்துக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்துள்ளனர். அதன்படி பள்ளியில் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 98.60 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் வேதியியல், கணினி அறிவியல், வணிக வியல் பாடங்களிலும் மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப் பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

    பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாண வர்களையும், அவர்களை ஊக்குவித்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் அலுவலக பணி யாளர்கள் ஆகியோருக்கு மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியாபிவிருத்தி சங்கம் (உறவின்முறை) துணை செயலாளர் அருஞ்சுணை ராஜன், நாடார் மேல் நிலைப்பள்ளி தலைவர் பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் வாழத்து தெரிவித்து உள்ளனர்.

    • கடலாடியில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, மாநில வர்த்தகர் அணி துணைச்செயலாளர் ராமர், மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள் பால்ராஜ், முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் அமைச்சர்-தி.மு.க. தேர்தல் பணிக்குழு துணைச் செயலாளர் சுந்தர்ராஜ் பேசினார். இதில் ஊராட்சித் தலைவர் கண்டிலான் மணிமேகலை முத்துராமலிங்கம், பெரியகுளம் நீர் பாசன சங்கத் தலைவர் ரவீந்திரநாத், இளைஞரணி அமைப்பாளர் சத்தியேந்திரன், தெற்கு ஒன்றிய இளைஞரணி முரளிதரன், மாவட்ட பிரதிநிதிகள் முருகன், கருப்பசாமி, புண்ணியவேல், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சர்புதீன், ராமகிருஷ்ணன், முத்துலட்சுமி பாண்டி, ஒன்றிய பொருளாளர் முனியசாமி, முன்னாள் கடலாடி துணை சேர்மன் பத்மநாதன், ஒன்றிய அவை தலைவர் ராஜசேகரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடலாடி செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.

    • விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனம் நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் திண்டிவனம் காந்தி திடலில் நடைபெற்றது.
    • விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 2 ஆண்டுகளில் தி.மு.க. அரசு செய்துள்ள பல்வேறு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனம் நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் திண்டி வனம் காந்தி திடலில் நடை பெற்றது. தி.மு.க. நகர செயலாளர் கண்ணன் தலை மையில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் சிறு பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாரு மான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 2 ஆண்டு களில் தி.மு.க. அரசு செய்துள்ள பல்வேறு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நாளில் நூறாண்டு காலம் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற திராவிடமாடல் ஆட்சி தான் தமிழகத்தில் நிலைத்து நிற்கும். மக்களுடைய அதிகாரத்தை ஏற்றுக் கொள்கின்ற திட்டம் தான் திராவிட மாடல் ஆட்சி. நீட்பொதுத்தேர்வில் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி மறுக்கப்படுகின்றது. இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை தற்போது இந்தியா முழுநவதும் வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிக்கின்ற பல்வேறு திட்டங்களை இந்தியாவை ஆளுகின்ற பா.ஜனதாவின் பிரதமர் நரேந்திர மோடி , முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் திட்டம் இலவசம் எனவும், வீண் திட்டங்கள்என அறிவித்துவிட்டு இன்று கர்நாடகாவில் நடைபெறும் தேர்தலில் முதலமைச்சர் திட்டங்களைசெயல்படுத்த போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இன்று இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவர் மு .க .ஸ்டாலின். இதுதான் திராவிட மாடல் என்பதை நிலை நிறுத்தி எதிர்காலத்தில் இந்தியாவைதிராவிட மாடல் ஆட்சி ஆளுகின்ற நிலை உருவாகும். இவ்வாறு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ரமணன், தி.மு.க. நிர்வாகி வக்கீல் அசோகன், மாவட்ட விளை யாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சந்திரன், துணை அமைப்பாளர் ரிஸ்வான், நகர துணை செயலாளர் ஓவியர் கவுத மன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் மாநகரம் திருப்பாதிரிப்புலியூர் பகுதி தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வண்டிப்பாளையம் சூரசம்ஹார வீதியில் நடந்தது.
    • கூட்டத்துக்கு பகுதி செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்முருகன், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகரம் திருப்பாதிரிப்புலியூர் பகுதி தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வண்டிப்பாளையம் சூரசம்ஹார வீதியில் நடந்தது. கூட்டத்துக்கு பகுதி செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்முருகன், மாரி யப்பன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா, அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட அவை தலைவர் தங்கராசு, மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு, அரசின் 2 ஆண்டுகள் சாதனைகள் குறித்து விளக்கி பேசினர்.   இதில் மண்டலக்குழு தலைவர் சங்கீதா செந்தில் முருகன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துன்னிஷா சலீம், சசிகலா, விஜயலட்சுமி செந்தில், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள் அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், பகுதி துணை செயலாளர்கள் ஜெயசீலன், சாமுவேல், ரகுராமன், வட்ட செயலாளர் குப்பு ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

    • ராமநாதபுரத்தில் இன்று தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமையில் நடக்கிறது.
    • தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    ராமநாதபுரம்

    தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை யிலான 'திராவிட மாடல்' அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை யொட்டி தமிழகம் முழுவ தும் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் கட்சி சார்பில் பொதுக்கூட் டங்கள் நடத்தப்பட்டு வரு கிறது.

    இதேபோல் ராமநாதபுரம் வடக்கு நகர் தி.மு.க. சார்பில் வடக்கு நகர செயலாளரும், நகர் மன்ற தலைவருமான ஆர்.கே.கார்மேகம் தலைமை யில் ராமநாதபுரம் சந்தை திடலில் இன்று மாலை 6 மணிக்கு தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறு கிறது.

    இந்த கூட்டத்தில் ராம நாதபுரம் எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருமான காதர்பாட்ஷா முத்துராம லிங்கம், மாநில இளைஞரணி செயலாளர் தூத்துக்குடி ஜோயல் ஆகியோர் கலந்து கொண்டு அரசின் சாதனை திட்டங்கள் குறித்து விளக்கி பேசுகிறார்கள்.

    கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், வார்டு செயலாளர்கள், பிரதிநிதி கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    • தி.மு.க. சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பதாக மாவட்ட செயலாளர் மணிமாறன் தெரிவித்தார்.
    • வார்டு மற்றும் கிளை செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி அருகில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

    மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமை தாங்குகிறார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகி கள், மாநில தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் மற்றும் வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அனைத்து அணிகளின் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள், வார்டு மற்றும் கிளை செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்

    இந்த தகவலை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தெரிவித்துள்ளார்.

    • சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தற்போது தினமும் நேரத்திற்கு திறக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
    • விசைத்தறி உற்பத்தியாளர்கள் முன்வந்தால் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்

    சங்கரன்கோவில்:

    தி.மு.க. ஆட்சி அமைந்து 2 ஆண்டு காலத்திற்குள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. முயற்சியாலும் முதல்- அமைச்சரின் நடவடிக்கையால் சங்கரன் கோவில் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மக்களு க்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

    ரூ. 12 கோடியில் புதிய கட்டிடம்

    சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தற்போது தினமும் நேரத்திற்கு திறக்கப்படும் சூழ்நிலை உள்ளது. அங்கு வரும் தொகுதி பொதுமக்கள் தங்கள் குறைகளை எம்.எல்.ஏ. ராஜா இல்லாத நேரத்திலும் எழுதிக் கொடுத்து விட்டு சென்றால் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

    தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் சங்கரன்கோவில் அரசு கலைக் கல்லூரிக்கு சுமார் ரூ. 12 கோடி மதிப்பில் புதிய கட்டிடம், ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் புதிய ஆர்.டி.ஓ. அலுவலக கட்டிடம், திருவேங்கடத்தில் ரூ. 2.61 கோடி மதிப்பீட்டில் புதிய தாசில்தார் அலுவலகம், குருவிகுளம் பள்ளி வளாகத்தில் ரூ. 5.2 லட்சம் மதிப்பில் கழிப்பறை வசதியுடன் கூடிய வகுப்ப றைகள், பெருங்கோட்டூர் மற்றும் பெரும்பத்தூர் கிராமத்தில் சுமார் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை, சங்கரன்கோவில் தொகுதியில் சுய உதவிக் குழுக்கள் தொழில் வாய்ப்புகள் பெருக்கவும் புதிய தொழில்கள் உருவாக்கவும் ஏற்கனவே உள்ள தொழில்களை மேம்படுத்தவும் 3 வட்டார வணிக மையங்களுக்கு 107 லட்சம் நிதி ஒதுக்கீடு, பெண் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வீதம் ரூ. 46 லட்சம் வழங்கப்பட்டுள்ளது,

    அடிப்படை வசதிகள்

    ஆதிதிராவிடர் நலத்துறை மாணவிகள் விடுதியில ரூ. 2.80 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள், சங்கரன்கோவில் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் ரூ. 6.99 லட்சம் மதிப்பீட்டில் மின்சாதனம், மக்களை தேடி மருத்துவ வாகனம், சங்கரன்கோவில் நகராட்சி யில் ரூ. 69 லட்சத்தில் நமக்கு நாமே திட்டம் திட்டத்தின் கீழ் 4 பணிகள், நீண்ட ஆண்டுகளாக குடமுழுக்கு விழா நடத்தாமல் இருந்த 100 ஆண்டுகள் பழமையான சாயமலை கோவில் கும்பாபிஷேக பணிகள், சங்கரன்கோவில் கோவில் கும்பாபிஷேக பணிகளு க்காக நிதி ஒதுக்கீடு, அரசு மருத்துவமனைக்கு முன்னோடி கட்டிடம் கட்ட ரூ. 9 கோடி நிதி ஒதுக்கீடு, விசைத்தறி உற்பத்தி யாளர்கள் முன்வந்தால் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று உத்தரவு, புதிய பஸ்நிலைய பணிகள், புதிய வணிக வளாகம், சங்கரன்கோவில் தொகுதி இளைஞர்களின் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாம், சங்கரன்கோவில் தொகுதி குருவி குளம், மேலநீலித நல்லூர், மானூர், சங்கரன்கோவில் ஆகிய ஒன்றியங்களில் குடிநீர் தட்டுப்பாட்டின்றி கிடைக்க சட்டமன்றத்தில் வலியுறுத்தி அது விரைவில் சரி செய்யப் படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    தேவநேய பாவாணர்

    சங்கரன்கோவில் தொகுதியில் பிறந்த தேவநேய பாவாணருக்கு, சென்னையில் சிலை, சங்கரன்கோவில் நகர்ம க்களுக்கு தினசரி குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் திட்டம், சங்கரன்கோவில் தொகுதியில் 2 புறவழிச் சாலைகள், சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி முதல் திருவேங்கடம் சாலை வரை நான்கு வழிச்சாலை திட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

    ×