search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • சேலத்தில் நடைபெற்ற புதிய உலக கலாம் சாதனை போட்டியில் 150 ஆயுர்வேத மூலிகை செடிகளை அடையாளப்படுத்தி காட்டினார்.
    • மாறுவேடப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு தேசியஅளவில் சாதனை புரிந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளியில் 1-ம் வகுப்பு பயிலும் மாணவி சன்விகா சேலத்தில் நடைபெற்ற புதிய உலக கலாம் சாதனை போட்டியில் 150 ஆயுர்வேத மூலிகை செடிகளையும், அவற்றின் பெயர்களையும் 1 நிமிடம் 45 நொடிகளில் மிகத்தெளிவாக அடையாளப்படுத்தி காட்டினார்.

    மேலும் அன்று நடைபெற்ற மாறுவேடப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு தேசியஅளவில் சாதனை புரிந்தார். பல்வேறு சாதனைகள் புரிந்த சன்விகாவிற்கு"டேலண்ட் ஐகான்'' விருதினை கிரேட் சக்சஸ் அகாடமி வழங்கி கவுரவித்தது. மேலும் கராத்தே போட்டியில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

    மிகச்சிறிய வயதிலேயே பல்வேறு சாதனைகள் புரிந்த மாணவி சன்விகாவை பள்ளி தாளாளர்கார்த்திகேயன் ,முதல்வர் ,ஒருங்கிணைப்பாளர் , ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்தினர்.

    • அரசு விழாவில் ரத்த வங்கிகளுக்கு ரத்ததானம் கொடுத்து தேவைப்படும் நோயாளிக்கு ரத்தம் அளித்து அவர்கள் வாழ்வில் ஒளிர செய்தவர்.
    • ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் முனைவர் துரை ராயப்பனுக்கு நினைவுப்பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    உலக ரத்த தான கொடையாளர் தினத்தை முன்னிட்டு திருவாரூர் புலிவலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரத்த வங்கிகளுக்கு 2022-ம் ஆண்டு ரத்ததானம் கொடுத்து, தேவைப்படும் நோயாளிக்கு ரத்தம் அளித்து அவர்கள் வாழ்வில் ஒளிர செய்ததற்காக, ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர்முனைவர் நா.துரை ராயப்பனுக்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் நினைவுப்பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கினர். இந்த நிகழ்வில் திருவாரூர் மாவட்ட மருத்துவ கல்லூரியின் தலைமை மருத்துவ அதிகாரி ஜோசப்ராஜ், மாவட்ட ரத்த வங்கி டாக்டர் பிரதிக்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ராய் டிரஸ்ட் பரிந்துரையின் பேரில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த உடற்பயிற்சி பயிற்றுநர்பாலாஜி, சேவை சித்தர் ஜெயபிரகாஷ், ஆர்.வி. சி. டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சிவசைலம், கரூடா செல் ஷோரூம் உரிமையாளர் கார்த்தி ஆகியோருக்கும் நினைவுப் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

    • பெரம்பலூர் தனலட்சுமிசீனி வாசன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவமாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர்.
    • சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.

    பெரம்பலூர்:

    பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த 20-ந் தேதி வெளியிடப்பட்டன.

    இதில் பெரம்பலூர் தனலட்சுமிசீனி வாசன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவமாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர். இப் பள்ளிமாணவிகள் ஜி.கோமதி 600-க்கு 586 மதிப்பெண்களும், லாராஸ்ரீ 569 மதிப்பெண்களும், தர்ஷினி 567 மதிப் பெண்க–ளும் பெற்று சாதனை படைத்தனர்.

    திருச்சி தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்கு லேசன் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளான கேசவராஜ் 600-க்கு 584 மதிப்பெண்களும் கவிப்பிரியா 573 மதிப்பெ–ண்களும், உதயபிரகாஷ் 571 மதிப்பெண்களும் பெற்றனர். பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அரவிந்தன் 600-க்கு 583 மதிப் பெண்களும், பிரவீன் 568 மதிப்பெண்களும், கார்த்திகா 559 மதிப்பெண்களும் பெற்றனர்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் யாழினி 500-க்கு 483 மதிப்பெண்களும், கனிஷா பாக்கியலட்சுமி 479 மதிப்பெண்களும், தர்ஷினி 478 மதிப்பெண்களும் பெற்றனர். திருச்சி தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்கு–லேசன் மேல்நிலைப்பள்ளி மாணவிகளான ஆதர்ஷனா 500-க்கு 488 மதிப்பெண்களும், லட்சனா 485 மதிப்பெண்களும், சுபஸ்ரீ 469 மதிப்பெண்களும் பெற்றனர்.

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி மாணவிகளான புவனா 500-க்கு 466 மதிப் பெண்களும், நிஷா 463 மதிப்பெண்களும், பிருந்தா 460 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். இதையடுத்து, சாதனை படைத்த மாணவ-மாணவிகள் மற்றும் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.

    • செல்வஹேம்ராஜ் 12-ம் வகுப்பு தேர்வில் 585 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவனாக தேர்வு பெற்றார்.
    • 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சினேகா என்னும் மாணவி பள்ளியின் முதல் மாணவியாக தேர்வு பெற்றார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கல்வி சேவையில் 27ஆண்டுகளாக சிறந்து விளங்கி வரும் எம்.கே.வி.கே மெட்ரிக் பள்ளி மாணவர்களான செல்வஹேம்ராஜ்

    12-ம் வகுப்பு தேர்வில் 600க்கு 585 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவனாக தேர்வு பெற்றார். அதில் 3 பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    அதேபோன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சினேகா என்னும் மாணவி 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று 10-ம் வகுப்பு தேர்வில் பள்ளியின் முதல் மாணவியாக தேர்வு பெற்றார். இவர் இரண்டு பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    இப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 500க்கு மேல் 28 மாணவர்களும், 10-ம் வகுப்பு தேர்வில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 34 மாணவர்களும் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர். 10 மற்றும்

    பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் பாலமுருகன் பாராட்டினார். முதல் இடங்களை பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாகம் சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளி சாதனை படைத்துள்ளனர்.
    • சிறந்த மதிப்–பெண் பெற்ற மாணவ-மா ண–வி–களை பள்ளி தாளாளர் மணிமா–றன் பரிசு வழங்கி பாராட்டினார்.

    கள்ளக்குறிச்சி:

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 99.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய 616 மாணவ-மாணவிகளில் 613 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 580 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேரும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 55 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 88 பே ரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 246 மாணவ-மாணவிகளும் பெற்றனர்.

    அதேபோல் கணித பாடத்தில் 12 பேர், வேதியியலில் 17 பேர், இயற்பியலில் 4 பேர், உயிரியலில் 2 போ், கணினி அறிவியலில் 8 பேர், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் ஒருவர், கணக்குப்பதிவியலில் 2 பே ர் என மொத்தம் 46 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். மாணவி ஜான்சிராணி 600-க்கு 589, மாணவர்கள் ராம்குமார்-588, சாய்கணேஷ் மற்றும் மதன் மோகன் ஆகியோர் தலா 587 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் மணிமாறன் பரிசு வழங்கி பாராட்டினார். அப்பொழுது பள்ளி முதல்வர் கலைச்செல்வி, துணை முதல்வர் முத்துக்குமரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடன் இருந்தனர்.

    • பிளஸ்-2 தேர்வில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி சாதனை படைத்துள்ளனர்.
    • முதல்வர் வெங்கட்ரமணன், துணை முதல்வர் சர்ப்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி பிளஸ் -2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அதில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    மாணவி ஜெயஸ்ரீ-594 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண் விபரம், தமிழ் 99, ஆங்கிலம் 97, கணக்குபதிவியியல் 98, பொருளியல் 100, வணிகவியல் 100, கணினிபயன்பாடுகள் 100 மதிபெண் பெற்றுள்ளார்.

    பள்ளியில் 2-ம் இடம் பெற்ற மாணவி அம்சவள்ளி-590 மதிபெண் பெற்றுள்ளார். இவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண் விபரம் தமிழ் 98, ஆங்கிலம் 95, இயற்பியல் 98, வேதியியல் 99, உயிரியல் 100, கணிதம் மதிப்பெண்பெ ற்றுள்ளார்.பள்ளி அளவில் 3-ம் மதிப்பெண் 588 இரண்டுபேர் பெற்றுள்ளனர். மாணவி நவினா தமிழ் 96, ஆங்கிலம் 97, இயற்பியல் 99, வேதியியல் 100, உயிரியல் 96, கணிதம் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். கிருஷ்ண பிரசாத் தமிழ் 98, ஆங்கிலம் 95, இயற்பியல் 100, வேதியியல் 98, உயிரியல் 97, கணிதம் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். இப்பள்ளி மாணவ, மாணவிகள் 37 பேர் 100 க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

    மேலும் இந்த பள்ளி மாணவ-மாணவிகள் 590-க்கும் மேல் 2 பேர், 580 க்கும் மேல் 11பேர், 550க்கும் மேல் 55 பேர், 500க்கும் மேல் 188 பேர் அதிக மதிப் பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் 99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைபிடித்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, இயக்குனர் ராஜேந்திரன், முதல்வர் வெங்கட்ரமணன், துணை முதல்வர் சர்ப்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    • தண்ணீரில் மிதந்து சாதனை படைத்த சிறுவனுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
    • தண்ணீரில் அதிக நேரம் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியா புத்தகத்தில் புதிய சாதனை புரிந்துள்ளார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் இம்பாலா சுல்தான். இவரது மகன் இன்ஷாப் முகமது. கொடைக்கானல் கோடை இன்டர்நேஷனல் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் தண்ணீரில் அதிக நேரம் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியா புத்தகத்தில் புதிய சாதனை புரிந்துள்ளார். உலக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கீழக்கரையில் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சிறுவன் இம்பாலா இன்ஷாப் முகம்மது தண்ணீரில் யோகாசனம் செய்தார்.

    1 மணி நேரத்திற்கு மேலாக மிதந்து சாதனை படைத்த சிறுவனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு பாராட்டினார்.

    • 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவில் சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி. பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
    • அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி :

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அருகே சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி.மேல்நிலை பள்ளியில் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.3 சதவீத மாணவ மாணவிகளும்,10-ம் வகுப்பில் 100 சதவீத மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பள்ளியில்12-ம் வகுப்பில் தேர்வு எழுதிய 140 பேரில் 139பேர் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் இதில் கண்மணி 579 மதிப்பெண்களும் மோகனா 575 மதிப்பெண்களும் மானசா ஸ்ரீ 574 மதிப்பெண்களும், ஆஷிகாபிலா 572 மதிப்பெண்களும் பெற்றனர். 36 மாணவர்கள் 500க்கு மேல் மதிப்பெண்களும், மானசாஸ் ஸ்ரீ வணிகவியல் பாடத்தில் 100 மதிப்பெண்ணும், குணசீலன் கணினி பயன்பாட்டில் 100 மதிப்பெண்களும் பெற்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய 120 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். இதில் ஓவியா என்ற மாணவி 488 மதிப்பெண், பார்த்தசாரதி 487 மதிப்பெண்களும் ,ஹரிபிரசாத் 482 மதிப்பெண்களும் பெற்றனர். 44 மாணவ மாணவிகள் 400 மதிப்பெண்கள் பெற்றனர். கணிதத்தில் 5 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் ஒரு மாணவரும் 100 மதிப்பெண்கள் பெற்றனர். அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர் தமிழரசி, செயலாளர் சுஜாதா, பள்ளியின் முதல்வர் திருவேங்கடம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாவட்ட அளவில் 3-வது இடத்தை பிடித்தார்.
    • மாணவ -மாணவிகளை தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டினர்.

    தென்காசி:

    தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட 44-வது பிடா செஸ் ஒலிம்பிக் - 2022 போட்டிகளில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    அதில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாவட்ட அளவில் 3-வது இடத்தையும், மாணவன் ஜகத்பிரபு 17-ம் இடத்தையும் பிடித்து பரிசுகளை வென்றனர்.

    மாணவன் சமேரியா மாவிஸ் போட்டியில் கலந்துகொண்டு ஆறுதல் பரிசு பெற்றார். மாணவன் வசீகரன் போட்டியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழை பெற்றார். வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • மாநில ஸ்டேர் அமெச்சூர் பாக்சிங் போட்டியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 14 பதக்கம் வென்றனர்.
    • கரூர் திரும்பியவர்களுக்கு உற்சாக வரவேற்பு

    கரூர்:

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தமிழ்நாடு ஸ்டேர் அமெச்சூர் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் 47 கிலோ எடை பிரிவில், பாலாஜி வெள்ளி, 36 கிலோ எடை பிரிவில் பூபேஷ் வெண்கலம், 12 வயதுக்கு உட்பட்டோடர் பிரிவில் 28 கிலோ எடை பிரிவில் சுஜித்குமார் வெண்கலம், 17 வயதுக்குட்பட்டோர் 65 கிலோ எடை பிரிவில் ஹேமலதா தங்கம், 14 வயதுக்குட்பட்டோர் 65 கிலோ எடை பிரிவில் ஜெய்ஸ்ரீ தங்கம், 12 வயதுக்குட்பட்டோர் 38 கிலோ எடை பிரிவில் சவுபாக்யா வெள்ளி.

    14 வயதுக்கு உட்பட்டோர் 40 கிலோ எடை பிரிவில் லோகபிரகாஷ் வெண்கலம், 47 கிடை எடைபிரிவில் சிவனேஷ் வெள்ளி, 14 வயதுக்கு உட்டோர் 38 கிலோ எடை பிரிவில் கவுதம் வெண்கலம், 27 வயதுக்கு உட்பட்டோர் 60 கிலோ எடைபிரிவில் ஆகாஷ் தங்கம், 14 வயதுக்கு உட்பட்டோர் மியூசிக் பார்மில் ஜி.ரம்யா, தேவஸ்ரீ, சபிதா ஆகியோர் தங்கப்பதக்கம் என கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் தங்கம், 3 பேர் வெள்ளி, 4 பேர் வெண்கலம் என 14 மாணவ, மாணவிகள் பதக்கங்களை வென்றனர். வென்றனர்.

    போட்டியில் வெற்றி பெற்று கரூர் திரும்பிய மாணவ, மாணவிகளை தலைமை பயிற்சியாளரும், கரூர் மவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் செயலாளருமான ரவிகுமார், முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷணன் ஆகியோர் பாராட்டினர்.  

    • கீழக்கரை மாணவர்ஆசிய அளவில் சாதனை படைத்தார்.
    • ஒரு மணிநேரம் 11 நிமிடம் 14 விநாடிகள் யோகா நிலையில் தண்ணீரில் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியாவில் இடம் பிடித்துள்ளார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்த இம்பாலா சுல்தான். இவரது மகன் இன்ஷாப் முகமது. கொடைக்கானல் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு தாயார் நித்தாஷா பர்வீன் மற்றும் அல் ரய்யான் என்ற சகோதரியும் உள்ளனர்.

    இவர் தண்ணீரில் அதிக நேரம் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியா புத்த கத்தில் புதிய சாதனை புரிந்துள்ளார். முந்தைய சாதனையில் கேரளாவைச் சேர்ந்த சிறுவன் 60 நிமிடம் தண்ணீரில் மிதந்து சாதனை புரிந்தான்.

    அதனை முறியடிக்கும் வகையில் ஒரு மணிநேரம் 11 நிமிடம் 14 விநாடிகள் யோகா நிலையில் தண்ணீரில் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியாவில் இடம் பிடித்துள்ளார். மேலும் 2022 ரெக்கார்டு புக் ஆப் இந்தியாவில் தண்ணீரில் மிதந்து சாதனை புரிந்து ள்ளதை மாணவனை பாராட்டும் வகையில் தமிழக அரசு சார்பில் கபீர் சாகர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இவருடைய சாதனை 18 நாடுகளை சேர்ந்த ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் க்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு அதற்கான விருதும் பெற்றுள்ளார். 11 வயதைச் சேர்ந்த இளம் சாதனையாளர் இன்ஷாப் முஹம்மதை கவுரவிக்கும் வகையில் துபாய் வருகை தந்த அவருக்கு இந்திய துணை தூதரகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தூதரக அதிகாரி ராம்குமார் வரவேற்று பாராட்டி பரிசு வழங்கினார். ஈமான் சார்பில் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் ஆகியோர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    எமிரேட்ஸ் டென் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆடிட்டர் இளவரசன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. மேலும் இவர் கின்னஸ் சாதனைக்கு முயன்று வருகிறார். ஒலிம்பிக்கில் மத்திய, மாநில அரசுகள் தனக்கு வாய்ப்பு வழங்கினால் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வெல்வேன், என்றார்.

    • ஆணழகன் போட்டியிலும் மயிலாடுதுறையில் நடைபெற்ற கிழக்கு தமிழ்நாடு அளவிலான வலுதூக்கும் போட்டியிலும் திருவாரூர் மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மன்னார்குடியை சேர்ந்த வீரர்கள் விமல்ராஜ், சசிகுமார், விஜயகுமார், சுதர்சன், சமிர் அஹமது வீரவேல், சக்திவேல் மற்றும் பலர் சாதனை படைத்தனர்.
    • வலுதூக்கும் போட்டியில் மன்னார்குடி வீரர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.

    மன்னார்குடி:

    மாநில அளவில் பழனியில் நடைபெற்ற ஆணழகன் போட்டியிலும் மயிலாடுதுறையில் நடைபெற்ற கிழக்கு தமிழ்நாடு அளவிலான வலுதூக்கும் போட்டியிலும் திருவாரூர் மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மன்னார்குடியை சேர்ந்த வீரர்கள் விமல்ராஜ், சசிகுமார், விஜயகுமார், சுதர்சன், சமிர் அஹமது வீரவேல், சக்திவேல் மற்றும் பலர் சாதனை படைத்தனர். முகிலன் என்பவர் இரும்பு மனிதன் என்ற சிறப்பு பட்டம் வென்றார்.

    சாதனை படைத்தவர்கள் திருவாரூர் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் -பிட்னஸ் சங்கத் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவருமான டாக்டர் மன்னார்குடி அசோக்கு மார், செயலாளர் ரத்தி னபாலன், பொருளாளர் விஜய்ஜேசி, மண்டலத் தலைவர் என்.எஸ்.அசோக்குமார், என். எஸ். பாலசுப்ரமணியம், எஸ்.ராமதாஸ், உலக வலுதூக்கும் வீரர் சி.விமல்ராஜா ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    பின்னர் சங்கத்தின் தலைவர் டாக்டர் மன்னார்குடி அசோக் குமார் வீரர்களை பாராட்டி பரிசளித்தார்.

    ×