search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதனை"

    • கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனைபடைத்தனர்.
    • தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம், பள்ளி முதல்வர், நிர்வாக அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித் துறை சார்பில் 'ஆகலாம் கலாம்' என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் ராமநாதபுரம் தனியார் பள்ளியில் நடந்தது. பல்வேறு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். இதில் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி மாணவிகள் வினாடி வினா போட்டியில் 6-8-ம் வகுப்பு பிரிவில் ராஜ கிரிஷா, பாத்திமா சனா ஆகியோரும், 11-12-ம் வகுப்பு பிரிவுகளில் நசாஹா, ஆயிஷா ரபிஹா ஆகியோரும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம், பள்ளி முதல்வர், நிர்வாக அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்

    • வெங்கடேச பெருமாள், மோகன் தாஸ், பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • முதல் 3 இடங்களை பிடித்த4 பேருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ- மாணவி களுக்கான கலைஞரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேச்சு போட்டிகள் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்க பூபதி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் ரசூல் பாஷா, சிவப்பிரகாசம், மலையரசன், சரவணன், வெங்கடேச பெருமாள், மோகன் தாஸ், பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்

    சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து கருணாநிதி வரலாறு குறித்த பேச்சு போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசும் போது, ஏழை தொழிலாளர்களின் மகன், மகள்களை பட்டதாரிகளாக உருவாக்கி சாதனை படைத்தவர்கருணாநிதி. அவர் வழியில் இன்று ஆட்சி செய்யும்முதலமைச்சர் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி இன்று பெண்களை பட்டதாரிகளாக உருவாக்கி சாதனை படைத்து வருகிறார் என்றார்.

    பேச்சுப்போட்டியில் பல்வேறு கல்லூரியிலிருந்து ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு கருணாநிதியின் வரலாற்றுகளையும், தமிழக மக்களுக்கு அவர் செய்த பல்வேறு சாதனைகளையும், பற்றி எடுத்துரைத்தினர். நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழுதலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் கல்லூரி செயலாளர் ஸ்ரீபதி, ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், நகர செயலாளர் கார்த்திக்,தொண்டரணி பாஷா விளையாட்டு மேம்பாட்டு அணி வக்கீல் சந்திரன், அட்மா குழு வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட முதல் இ3டங்களை பிடித்த4 பேருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

    • காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறை இரண்டாமாண்டு மாணவா் ஜெயராமன் 52 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டாா்.
    • மாணவா் ஜெயராமனுக்கு கல்லூரி முதல்வா் நசீம்ஜான், பேராசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

     காங்கயம்:

    கோவையில் இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் என்ற தனியாா் அமைப்பு சாா்பில் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறை இரண்டாமாண்டு மாணவா் ஜெயராமன் 52 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டாா். இதில் 150 கிலோ எடையை தூக்கி 3ம் இடம் பிடித்தாா். கடந்த வாரம் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டு 3ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.போட்டியில் வெற்றிபெற்ற மாணவா் ஜெயராமனுக்கு கல்லூரி முதல்வா் நசீம்ஜான், பேராசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

    • கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.
    • வெற்றி பெற்ற மாணவிகளுக்கு இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியின் தாளாளர் முகைதீன் இப்ராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள்,அலுலவர்கள் பாராட்டினர்.

    கீழக்கரை

    பள்ளி கல்வி துறை சார்பாக கலாமை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் முத்துப்பேட்டை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வினாடி, வினா போட்டியில் 6 முதல் 8-ம் வகுப்பு பிரிவில் பாத்திமா சனா, ராஜ கிரிஷா ஆகியோர் முதல் பரிசும், 11 மற்றும் 12-ம் வகுப்பு பிரிவில் நசாகா, ஆயிசா ராபிகா முதல் பரிசும் பெற்று மாவட்ட அளவில் பங்கு பெறுவதற்கு தகுதி பெற்றனர்.

    ஓவியப்போட்டியில் ஆயிஷா ஸைனா 2-ம் பரிசு, கட்டுரைப்போட்டியில் பசிஹா 2-ம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியின் தாளாளர் முகைதீன் இப்ராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள்,அலுலவர்கள் பாராட்டினர்.

    • மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் தமிழ் கலாச்சார பாரம்பரிய மைய இயக்குனர் சத்திய மூர்த்தி பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை யினை வழங்கினார்.

    ராமநாதபுரம்

    மதுரை காமராசர் பல்க லைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம் பம் போட்டியில் ராமநாதபு ரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் 38 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டியானது ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள் வாள், வாள் வீச்சு ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது.

    ஒற்றை கம்பு பிரிவில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் 29 பேர் முதல் பரிசும், 9 மாணவர்கள் இரண்டாம் பரிசும் வென்று பரிசு கோப்பையினை அள்ளினர்.

    வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பல்கலைக்கழகம் தமிழ் கலாச்சார பாரம்பரிய மைய இயக்குனர் சத்திய மூர்த்தி பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை யினை வழங்கினார்.

    வெற்றி பெற்ற மாண வர்களை சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானு வேல் மற்றும் பயிற்சியா ளர்கள் திருமுருகன், ஜெய ஸ்ரீ ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    • சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி
    • பள்ளி மாணவி சாதனை

    பெரம்பலூர்,

    பெரம்பலூ ர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவி மத்திய அரசின் என்சிஇடி தேர்வில் வெற்றிப்பெற்று

    அகில இந்திய அளவில் தரவரிசையில் இடம் பிடித்து சாதனை படைத்து ள்ளார்.  பெரம்பலூரை சேர்ந்த சக்திவேல் - ராஜேஸ்வரி தம்பதியின் மகள் மதுரா. இவர் சிறுவாச்சூர் ஆல்மை ட்டி வித்யாலயா பள்ளியில் 2016ம் ஆண்டு நடந்த ஒலிம்பியாட் தேர்வில் அதிக மார்க் பெற்று இலவச

    கல்வியில் சேர்க்கை பெற்று 6ம்வகு ப் பு முதல் 1 2 ம் வகுப்பு வரை படித்தார்.  மத்திய அரசின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆ ப் டெக்னாலஜி (என்சிஇடி) 2023 ஆண்டு தேர்வினை எழுதிய மாணவி மதுரா அதிக மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் தரவரிசையில் இடம் பிடித்தார். இதையடுத்து மதுராவிற்கு ஒடிசா மாநி லத்தில் உள்ள மத்தி ய அரசின் கல்வி நிறுவனமான ஐஐடியில் ஐடிஇபி 4 ஆண்டு கோர்ஸ் கல்வி பயில இடம் கிடைத்து சேர்ந்துள்ளார். என்சிஇடி தேர்வில் அகில இந்திய அளவில் தர வரிசையில் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவி மதுராவை ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி த ாளாளர் ரா ம்கு மா ர் , அகடமி இயக்குநர் கார்த்திக், பள்ளி முதல்வர் தீபா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். பெரம்பலூர் மாவட்டத்தில் மத்தி ய அரசின் என்சிஇடி தேர்வில் வெற்றிப்பெற்று அகில இந்திய அளவில் தரவரி சையில் இடம் பிடித்த சாதனை படைத்த முதல் மாணவி என்பது குறிப்பி டத்தக்கது.

    • கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவி சாதனை
    • 5000 டாலர் மதிப்பிலான அமேசான் வெப் சர்வீஸ் சந்தா வழங்கியது.

    வேலாயுதம்பாளையம், 

    சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவியல்-தரவு அறிவியல் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவி கிருத்திகாவும், அவரது குழுவினரும் கனடா நாட்டில் நடைபெற்ற மொராக்கோ சொலிடாரிட்டி ஹேக்கத்தான் என்ற போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசினை வென்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்க எம்ஐஎல்ஏ என்ற நிறுவனம் 5000 டாலர் மதிப்பிலான அமேசான் வெப் சர்வீஸ் சந்தா வழங்கியது. சாதனை படைத்த மாணவியை எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியின் செயலாளர் இராமகிருஷ்ணன், செயல் இயக்குனர் குப்புசாமி, முதல்வர் முருகன் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டினார்கள்.

    • மாநில அளவிலான பேச்சு போட்டியில்குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவன் வெற்றி பெற்று சாதனை
    • போட்டி 2 நாட்கள் தஞ்சை பெரியார் மணியம்மை கல்லூரியில் நடைபெற்றது.

    வேலாயுதம்பாளையம், 

    ஐ.சி.டி அகாடமி ஆண்டுதோறும் ஐ.சி.டி யூத் டாக் என்னும் மேடைப்பேச்சு போட்டியினை நடத்திவருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மேடைப்பேச்சு போட்டியில் கலந்து கொண்டனர். திருச்சி வட்டாரத்தில் நடைபெற்ற மேடை பேச்சு போட்டி 2 நாட்கள் தஞ்சை பெரியார் மணியம்மை கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் கரூர் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையில் பயிலும் மாணவன் திவேஷ் ஐயப்பன் கலந்து கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவதற்கான 5 பொன்மொழிகள் என்னும் தலைப்பில் உரையாற்றினார். இதில் அவர் 3-ம் பரிசு கிடைத்தது.

    இந்த போட்டியின் நடுவர்களாக முன்னணி ஐ.டி. துறைகளில் பணிபுரியும் மனித வளம் மேலாளர்கள் கலந்து கொண்டனர். மேடைப் பேச்சு போட்டியில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்த கல்லூரியின் மாணவனை கல்லூரியின் முதல்வர் முருகன், துறை தலைவர் ராஜகுரு மற்றும் கல்லூரியின் மனித வளத்துறையயைச் சேர்ந்த மஹேந்திரன் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவரை பாராட்டினர். 

    • கட்டியை கர்ப்பப்பையில் இருந்து அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் அகற்றினர்.
    • இந்த கட்டி சுஜித்ராவின் கர்ப்பப்பையில் சுமார் 20 ஆண்டுகளாக இருந்து உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி சுஜித்ரா (வயது 50). சுசித்ராவுக்கு கடந்த சில நாட்களாக வயிறு வலி இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க முடியாமல் அவதிப்பட்டார்.

    சம்பவத்த ன்று அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகி ச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    அங்கு சுசித்ராவின் வயிறு பகுதியை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கால்பந்தை விட 16 கிலோ எடையிலான கட்டி ஒன்று சுசித்ராவின் கர்ப்பபையில் இருப்பதை கண்டுபி டித்தனர்.

    இந்த கட்டியை அகற்ற சுசித்ராவுக்கு பல்வேறு கட்ட மருத்துவ மருத்துவ பரிசோ தனைகளும், ஆலோ சனைகளும் செய்யப்பட்டது.

    இதையடுத்து அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை நிபுணர் அமுதன் தலைமையில் உதவி நிபுணர் ராஜேஷ், மயக்கவியல் நிபுணர்கள் ஆனந்தராஜ், அருண் ஆகியோர் கொண்ட டாக்டர் குழுவினர் சுசித்ராவுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அதில் சுமார் 16 கிலோ எடை கொண்ட கட்டியினை கர்ப்பப்பையில் இருந்து அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

    பைப்ரோய்டு யூட்டரஸ் எனப்படும் இந்த கட்டி சுஜித்ராவின் கர்ப்ப பையில் 20 ஆண்டுகளாக இருந்து உள்ளது. தொப்பை தானே என்று கண்டு கொள்ளாமல் அவர் விட்டு விட்டார். சிறிது, சிறிதாக அந்த கட்டி வளர்ந்து ஒரு கட்டத்தில் சிறுநீரகத்தை அடைக்கும் தருவாயில் சென்று விட்டது.

    முடியாத பட்சத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றினோம். தற்போது நினைத்து நலமாக உள்ளார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • மாணவி மிருதுளா ஜனனி 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 3-வது இடம் பிடித்தார்.
    • வெற்றி பெற்ற மாணவிக்கு வெற்றிக்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட அளவிலான ஐ.பி.எல். சதுரங்க போட்டியானது பாவூர்சத்திரத்தில் உள்ள ஐ.பி.எல். சதுரங்க கலைக்கூடத்தில் நடைபெற்றது. இதில் இலஞ்சி பாரத் மாண்டி சோரி பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவி மிருதுளா ஜனனி 12 வயதுக்குட் பட்டோ ருக்கான பிரிவில் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்தார். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிக்கு ஐ.பி.எல். சதுரங்க கலைக்கூடத்தின் சார்பாக பாராட்டுச் சான்றிதழும், வெற்றிக்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.

    வெற்றி பெற்ற மாணவியை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.

    • இதம்பாடல், ஏர்வாடியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
    • துண்டு பிரசுரங்களை சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் வழங்கினார் .

    சாயல்குடி

    சாயல்குடி அருகே இதம்பாடல், ஏர்வாடி ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க அமைச்சர் ராஜ கண்ணப் பன், மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் ஆலோசனையின் படி சாயல்குடி கிழக்கு ஒன்றியம் சார்பாக மகளிர் உரிமை தொகை தொடர்பான துண்டு பிரசுரங்களை சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் வழங்கினார் .

    இந்நிகழ்ச்சியில் இதம் பாடல் ஊராட்சி மன்ற தலைவர் மங்களசாமி, சாயல்குடி நீர் பாசன சங்க தலைவர் ராஜாராம், மாவட்ட பிரதிநிதி அமீர் ஹம்சா, கிளைச் செயலாளர் காதர் பாட்ஷா, இளைஞர் அணி பால முருகன், முத்து ராஜா, காதர், நீலமேகம், சாதிக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங் கோவன், முன்னாள் ஒன்றிய துணை தலைவர் ராம கிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • போட்டியில் 38- க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன.
    • சதுரங்கப் போட்டியில் ஜூனியர் பிரிவில் ஹர்ஷத் கண்ணன் முதலிடம் பெற்றார்.

    சங்கரன்கோவில்:

    தமிழக அரசு சார்பில் சங்கரன்கோவில் வட்டார அளவிலான தடகள போட்டி ஆலமநாயக்கபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 38- க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை படைத்தனர். மாணவர்கள் ஜூனியர் பிரிவில் சந்தன முத்து வைரவன், சீனியர் பிரிவில் பவேஷ், சூப்பர் சீனியர் பிரிவில் பிரகாஷ் ஆகிய 3 பிரிவிலும் தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்று மாணவர்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர்.

    இதே போன்று பெண்கள் சூப்பர் சீனியர் பிரிவில் முத்துமலர் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்று மாணவிகள் பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர். வட்டார அளவில் சதுரங்கப் போட்டியில் ஜூனியர் பிரிவில் ஹர்ஷத் கண்ணன் முதலிடம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினர்.

    ×