search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 220390"

    • தற்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்குகளில் வி.கே.புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், தனிப்பிரிவு காவலர் போகன் குமார் மற்றும் 2 போலீசார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 4-வது வழக்கு ஒன்றை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்துள்ளனர்.

    கல்லிடைக்குறிச்சி அருகே ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் இந்த வழக்கில் சம்பவம் நடந்த காலகட்டத்தில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ராஜகுமாரி, அங்கு பணியாற்றும் காவலர்கள் ராமலிங்கம், ஜோசப் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    • வழக்கு கடந்த டிசம்பர் மாதம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.
    • கைது செய்யப்பட்ட சிறுவன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் விழிஞ்சம் கல்வெட்டான்குழி ஆஸ்பத்திரி ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது நசீம். இவரது மனைவி சுஜிதா. இவர்களது மகன் ஆதில் முகம்மது (வயது 12).

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் குமரி மாவட்டம் திட்டு விளை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். 6-ந்தேதி ஆதில் முகம்மது திடீரென மாயமானார்.

    இந்நிலையில் 8-ந்தேதி அந்த பகுதியில் உள்ள குளத்தில் ஆதில் முகம்மது பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் துப்பு துலங்கவில்லை.

    இந்நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று ஆதில் முகம்மதுவின் தாயார் சுஜிதா கேரள முதல்-மந்திரியை சந்தித்து கோரிக்கை வைத்தார். இதையடுத்து கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். ஆதில்முகம்மது மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் மேற்பார்வையில் மீண்டும் விசாரணை தொடங்கியது.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இது தொடர்பாக விசாரணை தொடங்கி னார்கள். டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பான தகவல்களை சேகரித்தனர். சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    சம்பவத்தன்று ஆதில் முகம்மதுவை அழைத்து சென்ற சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆதில் முகம்மது குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட போது டி-ஷர்ட் எதுவும் அணியவில்லை. ஆனால் அவர் வீட்டில் இருந்து சென்றபோது டி-சர்ட் அணிந்திருந்தார். அந்த டீ-சர்ட் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

    கடந்த 6 மாதமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சிறுவன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 304(2) ஆபத்தான இடத்திற்கு அழைத்து செல்லுதல், 201 தடயத்தை மறைத்தல், 202 செல்வதை சொல்லாமல் மறைத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். ஒரு ஆண்டுக்கு பிறகு இந்த வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
    • சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை சரகத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவத்தில் ஏற்கனவே விசாரணை நடத்திய அறிக்கையை குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பொன்ரகு, சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. நவராஜ், இன்ஸ்பெக்டர் உலகராணி ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார்.

    தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் அவர்கள் வழக்குப்பதிவு செய்த அதே பிரிவின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே புகார் கூறிய கே.டி.சி. நகரை சேர்ந்த சுபாஷ், அவரது மனைவி சங்கீதா, அவர்களது வக்கீல் உள்பட 5 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார். இதைத்தொடர்ந்து அவர்கள் பாளையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து வருகிறார்.
    • எடப்பாடியின் முன்னாள் பாதுகாவலரான போலீஸ் அதிகாரி ஒருவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் யாருமே எளிதில் நெருங்க முடியாத இடமாக இருந்த கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டதும், அங்கிருந்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

    300-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் நீடிக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வருவதற்காக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொடநாடு வழக்கில் திடீர் திருப்பமாக அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியான உதவி கமிஷனர் கனகராஜிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

    உதவி கமிஷனர் கனகராஜின் வீடு சென்னை மந்தைவெளியில் உள்ள சி.ஐ.டி. காவலர் குடியிருப்பில் உள்ளது.

    அங்குள்ள வீட்டுக்கு இன்று காலை 7.30 மணி அளவில் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் சென்றனர்.

    கொடநாடு வழக்கின் விசாரணை அதிகாரியான முருகவேல் வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை திரட்டி வரும் நிலையில்தான் இன்று திடீரென எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.

    காலை 7.30 மணியில் இருந்து 10 மணி வரையில் உதவி கமிஷனர் கனகராஜிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் மூலம் கொடநாடு கொலை-கொள்ளை வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொடநாடு வழக்கில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக பலர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் விசாரணை நடத்தி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளனர்.

    இதன்படி அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் மேலும் பலரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இது தொடர்பான தகவல்களை திரட்டுவதற்கு வசதியாகவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர் விசாரணையில் இறங்கி உள்ளனர். இதன் மூலம் கொடநாடு வழக்கின் விசாரணை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் அவரது முன்னாள் பாதுகாவலரான போலீஸ் அதிகாரி ஒருவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதன் மூலம் கொடநாடு வழக்கின் அடுத்த கட்ட விசாரணை தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.

    • விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • இதுதொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    சென்னை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. இதற்கு காரணமான அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    இதையடுத்து பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பணி இடைநீக்க நடவடிக்கையும் அவர்மீது பாய்ந்தது. அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தற்போது இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே, இந்த வழக்கு பற்றி ஐ.ஏ.எஸ்.அதிகாரி அமுதா தலைமையிலான உயர்மட்டக் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது. அந்த உயர்மட்டக் குழுவினர் இதுதொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என சிபாரிசு செய்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

    • மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சில அமைப்புகளை தடை செய்தது.
    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் முகமது சபியை காவலில் எடுத்து விசாரிக்க தலைமை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

    கோவை:

    மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சில அமைப்புகளை தடை செய்தது. அப்போது கோவையில் 6 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. மேலும் 2 கடைகளில் டயர் எரிப்பு சம்பவம், 2 அரசு பஸ்கள் மீது கல் வீச்சு உள்ளிட்ட 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 9 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அப்போது கோவைப்புதூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆனந்த கல்யான கிருஷ்ணன் (வயது 67). ஆர்.எஸ்.எஸ். பிரமுகர். இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளியை மட்டும் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய குனியமுத்தூர் செல்வம் நகரை சேர்ந்த முகமது சபி (29) என்பவரை கடந்த 7-ந் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்தநிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முகமது சபியை காவலில் எடுத்து விசாரிக்க தலைமை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இன்று ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் முகமது சபியை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 6 பேரிடம் 3-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
    • 6 பேரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் விசாரணை அறிக்கை விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் கடந்த 2004-ம் ஆண்டு அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார்.

    இந்த ஆசிரமத்தில் இருந்து பலர் காணாமல் போனதாகவும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

    இது தொடர்பாக ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, ஊழியர்கள் பிஜி மோன், கோபிநாத், முத்து மாரி, சதீஷ், பூபாலன், அய்யப்பன், தாஸ் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் மனநலம் குன்றிய தாஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 8 பேரை நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்தனர். இவர்களிடம் விழுப்புரம் ஆயுதப்படை வளாகத்தில் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது

    இவர்களில் முத்து மாரி, சதிஷ் ஆகியோருக்கு மனநிலை சரியில்லை என்பது தெரியவந்தது. இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை இன்று மனநலத்துறை தலைவர் டாக்டர் புகழேந்தி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்கிறார்கள்.

    கைது செய்யப்பட்ட ஜூபின் பேபி உள்பட 6 பேரிடம் இன்று 3-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூபின் பேபி உள்பட 6 பேரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் விசாரணை அறிக்கை விரைவில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர்.

    விசாரணை முடிந்து 6 பேரும் நாளை (செவ்வாய்க்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    • ஆசிரமம் மீது பல்வேறு சர்ச்சையான புகார்கள் எழுந்தது.
    • ஆசிரமம் தொடங்கியதில் இருந்து இதுவரை எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் இயங்கி வருகிறது.

    இந்த ஆசிரமம் மீது பல்வேறு சர்ச்சையான புகார்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த மன நலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனது போன்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    இதனை தொடர்ந்து ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் 7 பேர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது.

    கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஆசிரம பணியாளர்கள் உள்பட 8 பேரையும 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி புஷ்பராணி 8 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

    இதனை தொடர்ந்து 8 பேரையும் அழைத்து சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆசிரமம் தொடங்கியதில் இருந்து இதுவரை எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டனர். காணாமல் போனவர்கள் விவரங்கங்கள் குறித்தும், பலாத்காரத்திற்கு உள்ளானவர்கள் குறித்தும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்த 143 பேர் மற்றும் கோட்டக்குப்பத்தில் இயங்கி வந்த கிளை ஆசிரமத்தில் இருந்த 25 பேர் என 177 பேரை அதிகாரிகள் மீட்டு பல்வேறு ஆசிரமங்களுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அன்பு ஜோதி ஆசிரமத்தில் இதுவரை 6 பேர் காணாமல் போனதாக கெடார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
    • 11 பேர் மாயமானது குறித்து உள்ளூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விக்கிரவாண்டி:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் கடந்த 2004-ம் ஆண்டு அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தார்.

    ஆசிரமத்தில் பலர் காணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 10-ந்தேதி ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி உள்பட 9 பேர் மீது கெடார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் மீது 13 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர். ஆசிரமத்தில் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையர் நேரில் விசாரணை நடத்தி அங்கு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. விழுப்புரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 20 பேர் குழு வினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 8 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் வர உள்ளது.

    இதற்கிடையே ஆசிரமத்தில் இதுவரை 6 பேர் காணாமல் போனதாக கெடார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    இதில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த ஜாபருல்லா, தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமி அம்மாள், அவரது மகன் முத்து விநாயகம் ஆகியோரின் படங்களை வெளியிட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம் மட்டுமின்றி சேலம், கடலூர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இவர்களின் புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு ஒட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குண்டலப்புலியூர் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி பெங்களூருவில் உள்ள தனது நண்பர் ஆட்டோ ராஜா நடத்தும் ஆசிரமத்திற்கு ஜாபருல்லா உடள்பட 53 பேரை அனுப்பி வைத்திருந்ததாக தெரிவித்து இருந்தார். இதில் ஜாபருல்லா உள்பட 11 பேர் மட்டும் மாயமாகி போனது தெரிய வந்தது. இந்த நிலையில சி.பி.சி.ஐ.டி. போலீசார் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று விழுப்புரத்தில இருந்து பெங்களூருவுக்கு விரைந்தனர். அவர்கள் பெங்களூரு தொட்டக்குப்பியில் உள்ள ஆட்டோ ராஜாவுக்கு சொந்தமான ஆசிரமத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். 11 பேர் மாயமானது குறித்து உள்ளூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சில சட்டப்பூர்வமான ஆவணங்களை கைப்பற்றியும் விசாரித்து வருகிறார்கள்.

    • வேலூரை அடுத்த வாணியம்பாடி கருணை இல்லத்தில், எனது சகோதரர் இறந்து விட்டதாக ஒரு சிலர் கூறுகின்றனர்.
    • ஆசிரமத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் சில மருந்துகளை உட்கொண்டதால் மயங்கி விழுந்தார்.

    கடலூர்:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினராக இருப்பவர் ஜி.கிருஷ்ணமூர்த்தி. இவர் கடலூர் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது.

    எனது மூத்த சகோதர் ஜெயக்குமார் (வயது 60) என்பவரை கடலூரில் உள்ள இக்னைட் சாரிட்ட பிள் டிரஸ்டில் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் அனுமதித்தேன். அங்கு தங்கியிருந்த எனது சகோதரரை விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு மாற்றியுள்ளதாக சாரிட்ட பிள் ஊழியர்கள் என்னிடம் தெரிவித்தனர். மேலும், இயற்கை சூழலுடன் அங்கு இருக்கலாம், வசதிகள் மிகச் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் இருந்த ஜாபருல்லா என்பவரை காணவில்லை என்ற புகார் மீது விசாரணை நடத்தப்பட்டதை நான் அறிந்தேன். உடனடியாக அன்பு ஜோதி ஆசிரமத்தை தொடர்பு கொண்டு எனது சகோதரரின் நிலை குறித்து விசாரித்தேன்.

    உங்களது சகோதரரை வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சரணாலயம் அறக்கட்டளை நடத்தும் கருணை இல்லத்திற்கு மாற்றிவிட்டதாக கூறினார்கள். ஆனால் அங்கும் எனது சகோதரர் இல்லை. எனவே, எனது சகோதரர் இப்போது எங்கே இருக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறாரா? என்பது போன்ற கேள்விகள் எனக்குள் எழுந்தன.

    வேலூரை அடுத்த வாணியம்பாடி கருணை இல்லத்தில், எனது சகோதரர் இறந்து விட்டதாக ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால், அங்கிருந்து எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி எனது சகோதரர் ஜெயக்குமாரின் நிலை குறித்து எனக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

    இது குறித்து கிருஷ்ண மூர்த்தி கூறும் போது:-

    கடலூரில் உள்ள ஆசிர மத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் கைதிகளை மேற்கோள் காட்டி, அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டனர். சிலர் சித்ரவதை செய்யப்பட்டு அவர்களின் மன உறுதியை பாதிக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டன. ஆசிரமத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் சில மருந்துகளை உட்கொண்டதால் மயங்கி விழுந்தார். 3 நாட்களுக்குப் பிறகு சுயநினைவு திரும்பிய அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். ஆசிரம அதிகாரிகளிடம் எனது தொடர்பு விவரங்கள் உள்ளன. எனது சகோதரர் ஏதாவது நோயால் இறந்திருந்தால், அவர் இறந்ததை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் எந்த தகவலும் இல்லை என்றார்.

    • அன்பு ஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி ஜூபின் பேபி ஆசிரமத்தின் பேரில் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தை ஆரம்பித்து தான் ஆசிரமத்தில் செய்யும் சேவைகளை படங்களுடன் வெளியிட்டு வந்துள்ளார்.
    • பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஜூபின் பேபி கைது செய்யப்பட்டு ஆசிரமமும் மூடப்பட்ட நிலையில் ஆசிரமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சிபி.சி.ஐ.டி போலீசார் முடக்கினார்கள்.

    விக்கிரவாண்டி:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் அன்பு ஜோதி ஆசிரமத்தை நடத்தி வந்தார்.

    இந்த ஆசிரமத்தில் இருந்து திருப்பூரை சேர்ந்த ஜபருல்லாகாணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 10-ந்தேதி கெடார் போலீசார், மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூக நலத்துறை, வருவாய் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஆசிரமத்தில் இருந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த ஜபருல்லா உள்பட 11-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனது என பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.

    இதனை தொடர்ந்து ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கவேலு மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இதற்கிடையே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தாக்கல் செய்த ஆவணங்களை விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    அன்பு ஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி ஜூபின் பேபி ஆசிரமத்தின் பேரில் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தை ஆரம்பித்து தான் ஆசிரமத்தில் செய்யும் சேவைகளை படங்களுடன் வெளியிட்டு வந்துள்ளார்.

    மேலும் பலரிடம் நிதி உதவிகளையும் இணையதளம் மூலம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஜூபின் பேபி கைது செய்யப்பட்டு ஆசிரமமும் மூடப்பட்ட நிலையில் ஆசிரமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சிபி.சி.ஐ.டி போலீசார் முடக்கினார்கள்.

    • குண்டலப்புலியூர் ஆசிரம வழக்கில் கர்நாடகா, ராஜஸ்தான் என வழக்கு விசாரணை பட்டியலில் வெவ்வேறு மாநிலங்களும் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன.
    • வழக்கு தொடர்பாக ஏற்கனவே அரசியல் கட்சி தலைவர்களும் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    விழுப்புரம்:

    கேரளாவை சேர்ந்த ஜூபின் பேபி கடந்த 2003-ம் ஆண்டு குண்டலப்புலியூர் வந்தார். அங்கு மன நலம் குன்றியோருக்கு உதவும் பணிகளை செய்து வந்த இவர் 2005-ம் ஆண்டில் அறக்கட்டைளை தொடங்கினார்.

    இதனை தொடர்ந்து காப்பகம் நடத்தி வந்த ஜூபின் பேபி கடந்த 2021-ம் ஆண்டில் போதை மறு வாழ்வு மையம் என்ற பெயரில் அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்தும் இதுவரை அனுமதி பெறாமல் இருந்தது போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

    காப்பகத்தை அனுமதி பெறாமல் தான் அவர் நடத்தி வந்ததாக தெரிவிக்கும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    குண்டலப்புலியூர் ஆசிரம வழக்கில் கர்நாடகா, ராஜஸ்தான் என வழக்கு விசாரணை பட்டியலில் வெவ்வேறு மாநிலங்களும் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன.

    மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே அரசியல் கட்சி தலைவர்களும் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில் அன்புஜோதி ஆசிரம வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

    ×