search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 220390"

    • வீடியோ பதிவில் சீருடை அணியாமல் சாதாரண உடை அணிந்து சிலர் மனுதாரரின் கம்பெனி வளாகத்திற்குள் வருகின்றனர்.
    • காஞ்சிபுரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு வழக்கை முழுவதுமாக, தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

    சென்னை:

    ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் பிரபு. தொழில் அதிபரான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    என் மீது ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் பொய் வழக்கு பதிவு செய்து என்னை கைது செய்தனர். அதாவது, மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் உள்ள என்னுடைய கம்பெனி வளாகத்தை சோதனை செய்தபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட 4 கார்களை சோதனை செய்தபோது, அதில் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அந்த கார்களையும், மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆரில்) போலீசார் கூறியுள்ளனர்.

    இது வேண்டுமென்றே என் மீது போடப்பட்ட பொய் வழக்காகும். போலீசார் என் கம்பெனி வளாகத்திற்குள் வந்து கார்களை பறிமுதல் செய்யும் வீடியோ பதிவு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் சி.முனுசாமி ஆஜராகி வீடியோ பதிவை நீதிபதியிடம் போட்டு காண்பித்தார்.

    அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் இந்த வழக்கிற்கு போலீஸ் தரப்பின் விளக்கத்தை அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதை ஏற்க மறுத்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோ பதிவை பார்க்கும்போது இந்த மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க விரும்பவில்லை.

    இந்த வீடியோ பதிவில் சீருடை அணியாமல் சாதாரண உடை அணிந்து சிலர் மனுதாரரின் கம்பெனி வளாகத்திற்குள் வருகின்றனர். எந்தவித சோதனைகளும் மேற்கொள்ளவில்லை. மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்யவில்லை. ஆனால் வலுக்கட்டாயமாக 4 கார்களை மட்டும் எடுத்து செல்கின்றனர்.

    எனவே, இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு உத்தரவு விடுகிறேன். காஞ்சிபுரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீஸ் சூப்பிரண்டு இந்த வழக்கை முழுவதுமாக, தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

    வீடியோ பதிவுகளை பெற வேண்டும். விசாரணையில் மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய்யானது, வேண்டுமென்றே பதிவு செய்யப்பட்டது என்று தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை 3 மாதத்திற்குள் முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். தற்போது போலீஸ் சூப்பிரண்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதால் மனுதாரர் மீது பதிவான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கேள்வி எழவில்லை. இந்த மனுவை முடித்து வைக்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காசியின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்த சில ஆதாரங்கள் அழிக்கப்பட்டதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கண்டுபிடித்தனர்.
    • அதனை அழித்தது காசியின் தந்தை தங்கபாண்டியன் என தெரியவந்தது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில், கணேச புரம் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் சுஜி என்ற காசி.

    காசி மீது சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு புகார் கொடுத்தார்.

    அதில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரம் மூலம் காசியுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட நெருக்கத்தை பயன்படுத்தி காசி தன்னை ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

    இந்த புகாரை அவர் சென்னையில் இருந்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு இ-மெயில் மூலம் அனுப்பி இருந்தார். இது தொடர்பாக நாகர்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் காசியின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி ஆய்வு செய்த போது அதில் நூற்றுக்கணக்கான பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது தெரியவந்தது.

    அதிர்ச்சி அடைந்த போலீசார் காசியுடன் தொடர்பில் இருந்த பெண்கள் பற்றிய விபரங்களை சேகரித்தனர். அப்போதுதான் காசி, நாகர்கோவில் மட்டுமின்றி சென்னை, பெங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்களுடன் தொடர்பில் இருந்ததும், அவர்களுடன் நெருங்கி பழகி, அந்த பெண்களை ஆபாச படம் எடுத்ததும் தெரியவந்தது.

    இதில் குடும்ப பெண்கள், கல்லூரி பேராசிரியை, பெண் என்ஜினீயர், பள்ளி, கல்லூரி மாணவிகள் என பலரும் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களை பட்டியலிட்ட போது சுமார் 120 பேர் காசியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    முக்கிய பிரமுகர்களின் மனைவியர், மகள்களுக்கும் இதில் தொடர்பு இருந்ததால் இந்த விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் மாற்றப்பட்டது.

    அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த சாந்தி இந்த வழக்கை சவாலாக எடுத்து விசாரித்தார். இதையடுத்து காசி மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடந்த போது சுமார் 120 பெண்கள் காசியால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்களில் 60 பேரிடம் போலீசார் ரகசிய வாக்குமூலம் பெற்றனர். அதன்மூலம் 6 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டது. இதில்தான் காசியின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்த சில ஆதாரங்கள் அழிக்கப்பட்டதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கண்டுபிடித்தனர். அதனை அழித்தது காசியின் தந்தை தங்கபாண்டியன் என தெரியவந்தது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

    கடந்த 2 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் தங்க பாண்டியன் மற்றும் காசி ஆகியோரில் தங்கபாண்டியன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த போது, சி.பி.சி.ஐ.டி. போலீசார் காசி பற்றிய விபரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    அதில் இருந்த தகவலை பார்த்துதான் நீதிபதி அதிர்ந்து போனார். 1000-க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள், வீடியோக்கள் இருப்பதாக போலீசார் கூறிய தகவல் அதிர்ச்சியாக இருப்பதாக கூறிய நீதிபதி, வழக்கு விசாரணை முடியாத நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தார்.

    இதுபற்றி சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் கேட்டபோது, காசி மீது இன்னும் 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளோம்.

    இந்த வழக்கில் இன்னும் பலர் சாட்சியம் அளிக்க வருவார்கள் என எதிர்ப்பார்க்கிறோம். அவர்களிடமும் விசாரித்து குற்றப்பத்திரிகை தயாரிக்கப்படும், என்றனர்.

    காசி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

    மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த விவகாரத்தில் கைதாகியுள்ள நிர்மலா தேவி வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #NirmalaDevi
    சென்னை:

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் பேசிய அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி தற்போது கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, கவர்னர் அமைத்த விசாரணை அதிகாரி சந்தானம் தனது விசாரணை அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில், சிபிசிஐடி வசமுள்ள இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என ஜிஎஸ் மணியன் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், ஒரு புலனாய்வு அமைப்பின் விசாரணை முடியாத போதே, அது சரியில்லை என எப்படி கூறமுடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். 
    ×