search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 220791"

    • கோடைக்கால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மக்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    ராமநாதபுர மாவட்ட கலெக்டராக இருந்து வந்த ஜானி டாம் வர்கீஸ் நாகை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று கொண்டார்.

    கலெக்டர் அலுவலகம் வந்த புதிய கலெக்டரை கூடுதல் ஆட்சியர் பிரித்விராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

    பிறகு ஆட்சியர் அறைக்கு வந்த அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று க்கொண்டார்.

    பின்னர் நிருபர்களிடம் நாகை புதிய கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறியதாவது:-

    கள்ளச்சாராய புழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்னை களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

    மேலும் நாகை மாவட்டத்தில் கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுத்து, மக்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் உள்ள பழைய மோட்டார்கள் அகற்றப்பட்டு புதிதாக 268 மோட்டார்கள் அமைக்கப்பட உள்ளன.
    • வைகை அணையில் இருந்து நிலக்கோட்டை, திண்டுக்கல், ஆத்தூர் பகுதிகளுக்கு நேரடியாக குடிநீர் வினியோகம் செய்ய ரூ.680 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    திண்டுக்கல்லில் விடுபட்ட பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.206 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் நகருக்கு கூடுதலாக 18 எம்.எல்.டி தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் உள்ள பழைய மோட்டார்கள் அகற்றப்பட்டு புதிதாக 268 மோட்டார்கள் அமைக்கப்பட உள்ளன. ரூ.131 கோடி மதிப்பில் பழைய பைப் லைன்கள் அகற்றப்பட்டு புதிய பைப்லைன்கள் அமைக்கப்பட உள்ளது.

    இதன்மூலம் 20 எம்.எல்.டி தண்ணீர் கூடுதலாக கிடைக்கும். வைகை அணையில் இருந்து நிலக்கோட்டை, திண்டுக்கல், ஆத்தூர் பகுதிகளுக்கு நேரடியாக குடிநீர் வினியோகம் செய்ய ரூ.680 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல், தேனி மாவட்ட குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • 4-வது குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.
    • விரைவில் அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 4-வது திட்ட குடிநீரை அனைத்து வார்டுகளுக்கும் சீரான முறையில் வினியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர் தலைமை தாங்கினார்.

    மேயர் தினேஷ்குமார் பேசும்போது ,மாநகரில் 4-வது குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. பெரும்பாலான வார்டுகளில் 4 நாட்களுக்கு ஒரு முறை என்ற வகையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதுபோல் அனைத்து வார்டுகளிலும் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குடிநீர் திறப்புக்கான மண்டல பகுதிகள் குறைக்கப்பட்டு ஒரே நேரத்தில் பெரும்பாலான இடங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. விரைவில் அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.

    இந்த கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியன், தலைமை பொறியாளர் வெங்கடேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    • குடிநீர் வழங்ககோரி கிராமமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
    • ஆண்கள் சிலர் சாலையில் படுத்து நூதன போராட்டம் நடத்தினர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரையப்பாக்கம் ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சியில்கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரிவர விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டும் குறைந்த நேரத்தில் தண்ணீர் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதன் காரணமாக கூடுதல் பணம் கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குடிநீர் வழங்ககோரி கிராமமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. தொடர்ந்து குடிநீருக்காக திண்டாடும் நிலை ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்குதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மேலவளம்- திருக்கழுக்குன்றம் பிரதான நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள் சிலர் சாலையில் படுத்து நூதன போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து கிராமமக்கள் கூறும்போது, எங்கள் பகுதிக்கு குடிநீர் சரிவர வினியோகிக்கப்படாததால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். இதுபற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் ஆதாரங்களை உருவாக்காதது தான் குடிநீர் தட்டுப்பாடுக்கு காரணம் என்றனர்.

    • கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வடசென்னை பகுதியில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
    • குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வடசென்னை பகுதியில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    எர்ணாவூர் காமராஜ் நகர், பிருந்தாவன்நகர், கன்னிலால் லேஅவுட், காந்திநகர், எர்னீஸ்வரர் நகர், பஜனை கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரிவர வினியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை தெரிகிறது. இந்த நிலையில் இன்று காலை சீரான குடிநீர் வழங்க கோரி அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கவுன்சிலர் ஜெயராமன் தலைமையில் எர்ணாவூர் முருகன் கோவில் சாலை அருகில் காலி குடங்களுடன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் எண்ணூர் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • ஊராட்சிகளுக்கு பெரும்பாலும் குடிநீர் வழங்கல் வாரியத்தின் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தி அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • கடந்த இரண்டு வாரமாக பிரளையம்பக்கம், அவுரிவாக்கம் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்தில் மொத்தம் 55 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு பெரும்பாலும் குடிநீர் வழங்கல் வாரியத்தின் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தி அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் பொன்னேரி அடுத்த மெதூர் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து பிரளையம்பக்கம், அவுரிவாக்கம் ஊராட்சிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் நிரப்பப்படுகிறது. பின்னர் ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் ஒவ்வொரு தெருவிற்கும் குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டிற்கு இணைப்புகள் மற்றும் தெருக் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த இரண்டு வாரமாக பிரளையம்பக்கம், அவுரிவாக்கம் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் கிராமமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். குடிநீர் வழங்கப்படாததால் பொது மக்கள் 5 கிலோமீட்டர் தூரம் திருப்பாலைவனம் மற்றும் பழவேற்காடு பகுதிக்கு சென்று குடத்தில் தண்ணீர் பிடித்து வருகின்றனர். மேலும் கேன் தண்ணீரை 30 ரூபாய் கொடுத்து வாங்கி வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் கடந்த இரண்டு வாரமாக குடிநீர் சரியாக வராததால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். வெயிலின் தாக்கத்தை தீர்க்க தண்ணீர் குடிக்க முடியாமல் கேன் தண்ணீரை ரூ.30 கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. வீட்டு தேவைகளுக்கு சுமார் 5 கிலோமீட்டர் வெளியில் சென்று குடத்தில் தண்ணீர் பிடிக்கிறோம்.

    இதுபற்றி ஊராட்சி நிர்வாகம் மற்றும் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. குடிநீர் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தண்டையார்பேட்டையில் நடைபெற்றது.
    • காந்தி, ரேணுகா குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஸ்ரீதேவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் கோடைகால குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தண்டையார்பேட்டையில் நடைபெற்றது.

    மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமை தாங்கினார். இதில் கவுன்சிலர்கள் ஜெபதாஸ், ஜே. டில்லி பாபு, சர்மிளா, காந்தி, ரேணுகா குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஸ்ரீதேவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
    • பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 13 கன அடிதண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 4-ந் தேதி பூண்டி ஏரி வந்த டைந்தது. ஆரம்பத்தில் வினாடிக்கு 20 கனஅடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. அதன் பின்னர் தண்ணீர் வரத்து அதிகபட்சமாக வினாடிக்கு 310 கனஅடி வீதம் வந்து சேர்ந்தது. இந்த நிலையில் ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு கிருஷ்ணா நீரை எடுத்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்தது. இன்று காலை வினாடிக்கு 85 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டு இருந்தது.

    கிருஷ்ணா தண்ணீர் வரத்து குறைந்ததை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 26. 55 அடியாக பதிவானது. 1.071 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 13 கன அடிதண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிழ்த்தான் அக்ரஹாரம் தெருவில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோ கம் செய்யப்படவில்லை.

    போர்வெல் அமைத்து தண்ணீர் தொட்டி மூலம் வழங்கப்பட்டு வந்த நேரம் மோட்டார் பழுதானதால் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்கும், பிற தேவை களுக்கும் தண்ணீரின்றி சிரமப்பட்டு வந்தனர்.

    இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அச்சம்தவிழ்த்தான் அக்ரஹாரம் தெரு மக்களுக்கு குடிநீர் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. கவுன்சிலர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார்.

    இதில் முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன் ஆகியோர் பேசினர். போராட்டம் முடிந்த பின் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எண்ணூர் பகுதியில் சுகாதாரமற்று குடிநீர் கேன்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
    • சுகாதாரமற்று விற்பனைக்கு வைத்து இருந்த 200 குடிநீர் கேன்களை பறிமுதல் செய்தனர்.

    எண்ணூர் பகுதியில் சுகாதாரமற்று குடிநீர் கேன்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து இன்று காலை உணவு பாதுகாப்பு கமிஷனர் லால் வினா தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது எண்ணூர் பகுதியில் உள்ள குடிநீர் ஆலையில் ஆய்வு செய்தபோது உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அபராதம் விதித்து சுகாதாரமற்று விற்பனைக்கு வைத்து இருந்த 200 குடிநீர் கேன்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பஜனை கோயில் தெரு, கத்திவாக்கம், நேதாஜி நகர், சத்தியமூர்த்தி நகர், அஜாக்ஸ், தேரடி பகுதிகளில் குடிநீர் கேன் விற்பனை செய்யும் 15 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.

    • சென்னை நகர மக்களின் 70 சதவீத குடிநீர் தேவை பூர்த்தியாகும்.
    • 3-வது ஆலையில் சுமார் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலை கடந்த 2013-ம் ஆண்டு 1 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்டது. இங்கிருந்து திருவான்மியூர், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம், பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் தற்போது ஓரளவு குடிநீர் பிரச்சினை குறைந்தது.

    இதைத்தொடர்ந்து சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் சூலேரிக்காட்டில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 2-வது ஆலை கட்ட முடிவு செய்யப்பட்டது.

    ரூ.1,260கோடி செலவில், 15 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் வைகயில் 2-வது புதிய ஆலை கட்டுமான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    தற்போது 2-வது ஆலை கட்டுமான பணிகள் 85 சதவீதம் முடிந்து உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த 2-வது ஆலை பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    இந்நிலையில் வரும் ஆண்டுகளில் சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், ஜப்பான் நாட்டு பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுடன் இணைந்து சூலேரிக்காடு கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட நவீன 3-வது ஆலையை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அப்பகுதியில் தற்காலிக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

    மேலும் நவீன கருவிகளுடன் கடல் நீர்நிலை ஆய்வு, மணல் தன்மை, குழாய்கள் பதிக்கும் பகுதி, மீன்வள பாதுகாப்பு, இயற்கை சூழல், மாசுபாடு, வனவளம் உள்ளிட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த ஆலையில் புதிதாக தொடங்கப்பட உள்ள 2-வது மற்றும் 3-வது ஆலை முழுபயன்பாட்டுக்கு வரும்போது சென்னை நகர மக்களின் 70 சதவீத குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, சூலேரிக்காட்டில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் 2-வது ஆலை அமைக்கும்பணி முடியும் நிலையில் உள்ளது. சுமார் 85 சதவீத பணிகள் முடிந்து உள்ளது.

    எனவே இன்னும் 3 மாதத்தில் இந்த 2-வது ஆலை பயன்பாட்டுக்கு வரும். இங்கு தற்போது 3-வது ஆலை அமைக்க திட்டமிடப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த பணி முடிய குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும்.

    3-வது ஆலையில் சுமார் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. 2-வது, 3-வது ஆலை பயன்பாட்டுக்கு வரும்போது சென்னையின் குடிநீர் தேவையில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில நாட்களாக அப்பகுதியில் முறையாக குடிநீர் வழங்கவில்லை.
    • சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்ப்பட்டமங்கலம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக இங்குள்ள பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில் குடிநீர் வழங்கதை கண்டித்து மயிலாடுதுறை - திருவாரூர் நெடுஞ்சாலையில், மயிலாடுதறை அருகே சீனிவாசபுரம் பகுதியில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் காவல்துறையினர் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து அதிகாரிகள் வரவேண்டும் என்று கூறினர்.

    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    தொடர்ந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததார்.

    இதைத் தொடர்ந்து பொது மக்கள் சாலைமறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×