search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 221220"

    • சின்னசேலத்தில் ஏற்பட்ட வன்முறையில் ரூ.20 கோடி பொருட்கள் சேதம் அடைந்தன.
    • பள்ளிக்கு முன்பு ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி பள்ளியில் நுழைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரிய நெசலூர் கிரா–மத்தை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17), இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 13- ந் தேதி–அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடி–யில் இருந்து குதித்து தற்கொலைசெய்து கொண்டதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பள்ளி தாளாளரை கைது செய்ய வேண்டும்.

    பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்ற வேண்டும், மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று கனியாமூரில் சக்தி மேல்நிலைப் பள்ளிக்கு முன்பு ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள் போலீசாரின் தடுப்புகளை மீறி பள்ளியில் நுழைந்தனர். அப்போது பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிர்ந்த 17 பஸ், 4 டிராக்டர், 1 ஜே.சி.பி. மற்றும் 1 போலீஸ் வாகனம் உள்ளிட்ட 23 வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். மேலும் அங்கே நிறுத்தி வைத்திருந்த போலீசாரின் 29 மோட்டார் சைக்கிள் மற்றும் செய்தி–யாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 30 மோட்டார் சைக்கிள் களுக்கும் தீ வைத்தனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தை முழுவதுமாக அடித்து நொறுக்கி வகுப்பறைகள், அலுவலகங்கள் ஆகியவற்றையும் தீ வைத்த–னர். இதில் சுமார் 20 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது. இதனால் பள்ளி வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போராட்டம் தொடர்பான நிலை அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்
    • தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் அக்னிபாத் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்

    புதுடெல்லி:

    ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆள் சேர்ககும் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்துக்கு எதிராக பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டக்காரர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர். ரெயில்களுக்கு தீ வைப்பு, ரெயில் நிலையங்கள் சூறை என பல்வேறு போராட்டங்களால் ரெயில் சேவைகள் முடங்கி போய் உள்ளன.

    இந்நிலையில், வன்முறை போராட்டங்களை விசாரிப்தற்கு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விஷால் திவாரி பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டம் மற்றும், வன்முறையால் ரெயில்வே சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கும்படி, மத்திய அரசு, உத்தர பிரதேசம், தெலுங்கானா, பீகார், அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருக்கிறார். 


    அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம்

    அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம்

    போராட்டம் தொடர்பான நிலை அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

    மேலும், அக்னிபாத் திட்டமானது, தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை ஆராய்வதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் விஷால் திவாரி தனது மனுவில் கூறி உள்ளார்.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேற்கு வங்காளம் பஞ்சாயத்து தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறை குறித்து மாநில அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #PanchayatElection #Pollviolence
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தல் இன்று காலை துவங்கியது. 58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பிருந்தே மேற்கு வங்காளத்தின் பல கிராம பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே மோதல் வெடிக்கத் துவங்கியது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது, பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, வெடிகுண்டு தாக்குதல் போன்றவை அரங்கேறின.



    நதியா மாவட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் சவுஜித் பிராமனிக் அப்பகுதி மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். பிரக்னாஸ் அம்டங்கா பகுதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    முர்ஷிதாபாத் பகுதியில் பாஜக பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த ஆரிப் அலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கணவன் மனைவி கொல்லப்பட்டு, அவர்களது வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறிய நிலையில் இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.



    இதையடுத்து, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி மற்றும் பல கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தேர்தல் வன்முறையை எதிர்த்து கொல்கத்தா நகரில் உள்ள மாநில தேர்தல் கமிஷன் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், தேர்தலின் போது மாநிலத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து மாநில அரசு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #PanchayatElection #Pollviolence

    ×