என் மலர்
நீங்கள் தேடியது "குடிநீர் தொட்டி"
- சேலம் தாதகாப்பட்டியில் மதுகுடித்ததை தட்டிக்கேட்ட அரசு அதிகாரி தாக்கப்பட்டார்.
- இது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி பொம்மன செட்டிக் காடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஓபிலி விஜய் ( வயது 25). இவர் சேலம் மாநகராட்சியில் கொண்டலாம்பட்டி மண்டலம் 58- வது டிவிஷன் மூணாங்கரடு பகுதி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று இரவு 8 மணி அளவில் மூணாங்கரடு அடுத்த செல்லக்குட்டி காடு பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் 3 வாலிபர்கள் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அதிகாரி ஓபிலி விஜய், அந்த வாலிபர்களை இந்த பகுதியில் மது குடிக்கக் கூடாது. உடனடியாக இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள், ஓபிலி விஜய்யை தாக்கினர். இது குறித்து அவர், அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு அதிகாரியை தாக்கிய வாலிபர் சேனை ( 22) உள்பட 3 வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரி வீரப்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- இங்கு 1500-க்கும் மேற்பட்டோர் இருப்பதால் காவிரி தண்ணீரை மேல்நிலைத்தொட்டிக்கு அனுப்பி சப்ளை செய்யப்படுகிறது.
திருமங்கலம்
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீரப்பட்டி கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் நீர்த்தேக்க மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. இந்த கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் இருப்பதால் காவிரி தண்ணீரை மேல்நிலைத் தொட்டிக்கு அனுப்பி சப்ளை செய்யப்படுகிறது. சில மாதங்களாக குடிநீர் நீர்த்தேக்க மேல்நிலைத் தொட்டியின் அடிப்பகுதி சேதமடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.
ேமலும் இந்த தொட்டி அருகே பாதுகாப்பு இல்லாத திறந்த வெளி கிணறு உள்ளது. 10 அடி தூரத்தில் பள்ளி இருப்பதால் மாணவ-மாணவிகள் இந்த பகுதியில் அடிக்கடி வந்து விளையாடி வருகின்றனர். இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கிராமமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உயிர் பலி ஏற்படும் முன்பு மேல்நிலைத் தொட்டியை சீரமைக்க வேண்டும். திறந்த வெளியில் உள்ள கிணற்றை மூட வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- புதிய கட்டிட பணிக்காக ஜெனகை மாரியம்மன் கோவிலில் குடிநீர் தொட்டி அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- இதற்கான பூர்வாங்க வேலையும் நடைபெற உள்ளது என்றார்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வளாகத்தில் மாற்று வேலைக்காக குடிநீர் குழாய் சின்டெக்ஸ் உடைக்கப்பட்டது.
இக்கோவிலில் பக்தர்க ளுக்காக சுத்திரிக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்ப டுத்திய பா.ஜ.க. விவசாய அணியின் மாநில துணைத்தலைவர் மணி முத்தையா கூறியதாவது:-
ஜெனகை மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் குளிப்பதற்கான தண்ணீர் வசதி இல்லாமல் பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தனர்.
இப்பகுதி பக்தர்களுடைய வேண்டு கோளை ஏற்று பக்தர்கள் வசதிக்காக எனது சொந்த செலவில் திருப்பணியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைப்பு 2000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி அமைத்துக் கொடுத்தேன்.
இந்த தண்ணீர் தொட்டி மூலம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், பழனி பாதையாத்திரை செல்லும் பக்தர்கள் அனைவரும் பயன்படுத்தி வநதனர்.
தற்போது அதனை நிர்வாகம் இடித்து சேதப்படுத்தியுள்ளது.இதனால் இங்கு வரும் பக்தர்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையரிடம் மனு அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் இளமதி கூறும்போது, நாங்கள் குடிநீர் தொட்டியை சேதப்படுத்தவில்லை. இந்த தொட்டியை அன்னதான மண்டபத்தின் அருகில் விரிவாக கட்டப்போகி றோம். இந்த இடத்தில் செயல் அலுவலர் அலுவலகம் கட்டுவதற்கு பணி ஆணையும் வந்திருக்கிறது. இதற்கான பூர்வாங்க வேலையும் நடைபெற உள்ளது என்றார்.
- குடிநீர் தொட்டி அமைக்க கோரிக்கை
- சிந்தாமணி 89-வது வார்டில் சுமார் 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
மதுரை
மதுரையில் சிந்தாமணி நீர் மேலாண்மை சங்க தலைவர் முனியாண்டி, கிராம விவசாய சங்க தலைவர் மும்மூர்த்தி மற்றும் பலர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
சிந்தாமணி 89-வது வார்டில் சுமார் 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு தற்போது அம்ரூத் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக் கப்பட உள்ளது. இதனால் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாது.
இது எங்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கும். இந்த இடத்தில் எந்த மடையும் கிடையாது. சிலர் ஆக்கிரமிப்பு செய்ய வேண்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கும், அந்த இடத்துக்கும் சம்பந்தமும் கிடையாது. இந்த இடம் முழுமையாக அரசு புறம்போக்கு நிலமாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு சிந்தாமணி கிராமத்தில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் தேக்க தொட்டியை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- குற்றவாளிகளை விரைவில் பிடிக்க ஏதுவாக விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.
சென்னை:
புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த மாதம் 26-ம்தேதி மனிதக்கழிவு கலந்தது தொடர்பாக புகார் வந்தது. இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையை தொடர்ந்து, இறையூர் அய்யனார் கோயிலுக்குள் வேங்கைவயல் பகுதி மக்களை செல்லவிடாமல் தடுத்தது, இரட்டைக்குவளை முறை பின்பற்றப்பட்டது குறித்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். விசாரணையை தீவிரப்படுத்தி குற்றவாளிகளை விரைவில் பிடிக்க ஏதுவாக விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.
- ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் தொட்டி கட்ட யூனியன்சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.
- பண்ருட்டி யூனியன் அலுவலகம் முன்பு இன்று காலை தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே மணப்பாக்கம் பஞ்சாயத்து உள்ளது/ இதன் தலைவராக சியாமளா சுரேந்தர் உள்ளார். இந்த பஞ்சாயத்தில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் தொட்டி கட்ட யூனியன்சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனை அறிந்த பஞ்சாயத்து தலைவர் சியாமளா சுரேந்தர் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி டெண்டர் விடப்பட்டதாக கூறி பண்ருட்டி யூனியன் அலுவலகம் முன்பு இன்று காலை தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசிகாமணி அவரிடம் பேச்சுவார்த்ைத நடத்தினார்.
- நாய் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அது இறந்து பல நாட்கள் இருக்கலாம் என தெரிகிறது.
- தொட்டிக்குள் கிடந்த நாயை அகற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட புதுக்கோட்டை பஞ்சாயத்து பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 4 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிள்ளையார்கோவில் அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கட்டப்பட்டது.
சுமார் 60 அடி உயரம் கொண்ட இந்த நீர்தேக்க தொட்டியில் 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த தொட்டியில் இருந்து அந்த பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
பஞ்சாயத்து நிர்வாகத்தின் உத்தரவுப்படி இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய அதன் ஆபரேட்டர் கடந்த சனிக்கிழமை தண்ணீர் ஏற்றாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வந்தபோது துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் அச்சம் அடைந்த டேங்க் ஆபரேட்டர் இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. போலீசார் விரைந்து வந்து தொட்டியின் மீது ஏறி பார்த்தபோது அதற்குள் நாய் இறந்து கிடந்துள்ளது. நாய் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அது இறந்து பல நாட்கள் இருக்கலாம் என தெரிகிறது.
இதுகுறித்து போலீசார், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஆய்வு செய்தனர்.
தொட்டிக்குள் கிடந்த நாயை அகற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பஞ்சாயத்து தலைவர் காளீஸ்வரி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
நாயை கொன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்குள் யாரேனும் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகே வீடுகள் மற்றும் ஒவ்வொரு வீட்டுக்கும் மின் விநியோகம் செய்யும் மின்சார கம்பிகள் அமைந்துள்ளன.
- 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் காங்கிரீட் தூண்கள் பழுதடைந்து தூண்களில் உள்ள கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் சேதம் அடைந்துள்ளது.
செங்கல்பட்டு:
காட்டாங்கொளத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள திருவடிசூலம் ஊராட்சிக்கு உட்பட்ட புலிக்குடிவனம் கிராமத்தில் 150 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இப்பகுதியில் 40 வருடங்களுக்கு முன்பு காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலமாக கிணற்றின் அருகே 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி அங்குள்ள குடும்பங்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது புலிக்குடிவனம் கிராமத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்ற 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் காங்கிரீட் தூண்கள் பழுதடைந்து தூண்களில் உள்ள கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் சேதம் அடைந்துள்ளது.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகே வீடுகள் மற்றும் ஒவ்வொரு வீட்டுக்கும் மின் விநியோகம் செய்யும் மின்சார கம்பிகள் அமைந்துள்ளன. மிகவும் ஆபத்தான நிலையில் திருவடிசூலம் ஊராட்சியில் புலிக்குடிவனம் கிராமத்தில் அமைந்துள்ள பழுதடைந்து உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி அதே இடத்தில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க வேண்டும். பாதுகாப்பற்ற நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் அருகே அமைந்துள்ள திறந்தவெளி கிணற்றுக்கு கம்பி வலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அலுவலகத்தின் நுழைவாயில் அருகே நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டி திறந்தவெளியில் பழுதாகி காணப்படுகிறது.
- விபத்து ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வருவாய் கோட்டத்தின் உட்பட்ட 32 ஊராட்சிகளில் புலிகரை, மாரண்டஹள்ளி, பாலக்கோடு, வெள்ளிச்சந்தை ஆகிய வருவாய் கிராமங்களிலிருந்து தினதோறும் தங்கள் அடிப்படை தேவையான ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பட்டா, சிட்டா மாறுதல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓய்வூதியம், உதவித்தொகை, உள்ளிட்டவைகளுக்கும் அரசு கருவூலகம், பொதுபணிதுறை அலுவலகத்திற்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், குழந்தைகள் என வந்து செல்லுகின்றனர்.
இந்த அலுவலகத்தின் நுழைவாயில் அருகே நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டி திறந்தவெளியில் பழுதாகி காணப்படுகிறது.
விபத்து ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்த பள்ளியில் கல்வியிலும், விளையா ட்டிலும் மாணவிகள் சிறந்து வருகின்றனர்.
- மாத சம்பளத்தில் ரூ.1.5 லட்சம் செலவில் பள்ளிக்கு இலவசமாக குடிநீர் தொட்டி கட்டி பராமரித்து வருகிறார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சியை சேர்ந்த சூளகிரி பேரிகை செல்லும் ரீங் ரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது.
இந்தபள்ளிக்கு சூளகிரி சுற்றுவட்டாரத்தில் உள்ள 100-க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து 1835 மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர். அவர் களுக்கு 47 ஆசிரியர்கள் வருகை தந்து கல்வி அளித்து வருகின்றனர்.
பொதுவாக இந்த பள்ளியில் கல்வியிலும், விளையா ட்டிலும் மாணவிகள் சிறந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் நாகலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். தற்போது வயது மூப்பு காரணமாக மே மாத கடைசியில் பணி ஓய்வு பெற உள்ளார்.
இந்நிலையில் பள்ளி நலனுக்காக மாணவிகள், ஆசிரியர்கள் குடிநீர் வசதிக்காகவும் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் நாகலட்சுமி மாத சம்பளத்தில் ரூ.1.5 லட்சம் செலவில் பள்ளிக்கு இலவசமாக குடிநீர் தொட்டி கட்டி பராமரித்து வருகிறார். அவரை மாணவிகள், ஆசிரியர்கள், பி,டி,ஏ நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
- குதிரை ஒன்று எதிர்பாராத விதமாக குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து அதிக சத்தம் எழுப்பியது.
- கட்டிடத்தில் வேலை பார்த்தவர்கள் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடுமலை :
உடுமலை அடுத்துள்ள கிரீன் பார்க் லேஅவுட் பகுதியில் புதியதாக பிரகதீஸ் என்பவர் வீடு ஒன்று கட்டி வருகின்றார். இந்த நிலையில் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த குதிரை ஒன்று எதிர்பாராத விதமாக குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து அதிக சத்தம் எழுப்பியது.
உடனே கட்டிடத்தில் வேலை பார்த்தவர்கள் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த குதிரையை ராட்சத கயிறு மூலம் சுமார் ஒரு மணி நேரம் போராடி வெளியே கொண்டு வந்தனர்.குதிரையை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
- பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப் தொடங்கி வைத்தார்
- சின்டெக்ஸ் மற்றும் பைப்புகள் அமைத்து குடிநீர் வழங்கும் பணி நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி :
தென்தாமரைகுளம் பேரூராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.10.20 லட்சம் மதிப்பில் முகிலன் குடியிருப்பு, இலந்தையடிவிளை, தென்தாமரைகுளம், வெள்ளையன் தோப்பு உள்ளிட்ட ஊர்களில் சின்டெக்ஸ் மற்றும் பைப்புகள் அமைத்து குடிநீர் வழங்கும் பணி நடைபெற உள்ளது.
இதன் முதற்கட்டமாக 9-வது வார்டுக்குட்பட்ட வெள்ளையன் தோப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணி தொடங்கியது.
வார்டு கவுன்சிலர் ஆல்வின் தலைமை தாங்கினார். வெள்ளையன்தோப்பு ஊர் தலைவர் ரெத்தின சிகாமணி, முன்னாள் தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப் கலந்துகொண்டு சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகி தாமரைபிரதாப், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலர் ராகவன், வெள்ளையன்தோப்பு ஊர் துணை தலைவர் தங்கதுரை, செயலாளர் சுயம்புலிங்கம், இணை செயலாளர் பொன்னுலிங்கம், பொருளாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.