search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223193"

    • தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.
    • 4 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.952 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்ற-தாழ்வு இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த 13-ந்தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. நேற்று பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37 ஆயிரத்து 440-க்கு விற்றது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்தது. அதிரடியாக ஒரே நாளில் பவுனுக்கு ரூ.432 குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுன் ரூ.37 ஆயிரத்து 8-க்கும், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 626-க்கும் விற்றது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து ரூ.61 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.60-க்கு விற்கிறது.

    தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. விலை தொடர்ந்து குறைந்து பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.952 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37 ஆயிரத்து 440-க்கு விற்றது.
    • ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 680 ஆக உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை இன்று 3-வது நாளாக குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37 ஆயிரத்து 440-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 680 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.61 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.10க்கு விற்கிறது. மூன்று நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.520 குறைந்துள்ளது.

    • வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.61 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.80-க்கு விற்கிறது.
    • இரண்டு நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.352 குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்ற தாழ்வு காணப்பட்டு வரும் நிலையில் நேற்று பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37 ஆயிரத்து 800-க்கு விற்றது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37 ஆயிரத்து 608-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 701 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.61 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.80-க்கு விற்கிறது.

    இரண்டு நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.352 குறைந்துள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது.
    • தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4725-க்கும், ஒரு சவரன் ரூ.37,800-க்கும் விற்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.37,920-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37,800-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,740-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4725-க்கு விற்கப்படுகிறது.

    அதேநேரத்தில் வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.60.40-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ரூ.60.50-க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.60,500-க்கு விற்கப்படுகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,920-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.60 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.40-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.308 உயர்ந்து ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. நேற்று பவுன் ரூ.38 ஆயிரத்து 144-க்கு விற்றது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 குறைந்தது. இதனால் பவுன் மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 920-க்கும், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 740-க்கும் விற்றது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.60 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.40-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,840-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.700 உயர்ந்து ரூ.59 ஆயிரத்து 500-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.59.50-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் நேற்று பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.37 ஆயிரத்து 800-க்கு விற்றது. இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 840-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 730 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.700 உயர்ந்து ரூ.59 ஆயிரத்து 500-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.59.50-க்கு விற்கிறது.

    • மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மதுரை மார்க்கெட்டுக்கு தக்காளி அதிக அளவில் கொண்டு வருவது வழக்கம்.
    • மழை காரணமாக செடிகளில் அழுகல் ஏற்பட்டதால் தக்காளி மகசூல் வெகுவாக குறைந்துள்ளது.

    மதுரை:

    மதுரையில் 2 மாத இடைவெளிக்கு பிறகு தக்காளி விலை மீண்டும் 50 ரூபாயை தொட்டுள்ளது. வரத்து குறைந்ததால் மேலும் விலை உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் தக்காளி அன்றாட உணவில் முக்கிய அங்கமாகும். தக்காளி சேர்த்தால்தான் உணவில் ருசி கூடும் என்பதால் தக்காளியை எந்த காலத்திலும் மக்கள் ஆர்வத்துடன் வாங்குவது உண்டு.

    வரத்து அதிகமான காலங்களில் தக்காளியை குப்பைகளில் கொட்டுவதும், வரத்து குறைந்த நேரத்தில் 100 ரூபாயை தாண்டி விற்றாலும் தக்காளிக்கு போட்டி போடுவதுதான் மக்களின் இயல்பு நிலையாக இருந்து வருகிறது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உச்சத்தில் இருந்த தக்காளி விலை கிலோ 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக விலை குறைந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிலோ 10 ரூபாய் வரை விற்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது.

    மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மதுரை மார்க்கெட்டுக்கு தக்காளி அதிக அளவில் கொண்டு வருவது வழக்கம். மழை காரணமாக செடிகளில் அழுகல் ஏற்பட்டதால் தக்காளி மகசூல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நேற்று முன்தினம் உழவர் சந்தைகளில் 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று விலை ஏற்றம் காரணமாக 40 முதல் 45 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டுகளில் சில்லரை விற்பனையில் தக்காளி விலை ரூ. 50-ஐ தாண்டியுள்ளது. இந்த திடீர் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக வியாபாரிகள் கூறுகையில், தற்போது மழை காரணமாக தக்காளி மகசூல் குறைந்துள்ளது. இதனால் இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் தக்காளியின் தேவை அதிகரிக்கும் என்பதால் விலையும் மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இதனால் மார்க்கெட்டுகளில் தக்காளி விலையை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,560-க்கு விற்பனையாகிறது.
    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.58 ஆயிரமாக உள்ளது

    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. கடந்த 1-ந்தேதி தங்கம் பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அன்று ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 680-க்கு விற்றது. நேற்று பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.38 ஆயிரத்தை தொட்டது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. இதனால் தங்கம் பவுன் மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ஒரே நாளில் ரூ.440 குறைந்தது.

    ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 560-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 695-க்கும் விற்றது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 குறைந்து ரூ.58 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.58-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று வெள்ளி 1 கிராம் ரூ.58.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.59-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.37,888-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.38 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

    தங்கம் விலை கடந்த 31-ந்தேதி பவுன் ரூ.38,032-க்கு விற்பனையானது. மறுநாள் 1-ந் தேதி அன்று ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்து ரூ.37,680 ஆக குறைந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தொட்டது.

    நேற்று 1 கிராம் தங்கம் ரூ.4736-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4750-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று வெள்ளி 1 கிராம் ரூ.58.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.59-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.59 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

    • தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை
    • ஓணம் பண்டிகையையொட்டி வியாபாரிகள் குவிந்தனர்

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் அப்டா மார்க்கெட் மற்றும் கனக மூலம் சந்தை செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஓசூர், மேட்டுப்பா ளையம், பெங்களூர், மதுரை பகுதிகளில் இருந்து காய்கறி கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேலும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மாவட் டத்தில் இருந்தும் விற்ப னைக்காக வருகிறது. கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை குறை வாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தற்பொழுது காய்கறிகளின் விலை கிடு கிடுவென உயரத் தொடங்கியுள்ளது.

    ஓணம் பண்டிகை களைக் கட்டி உள்ள நிலையில் கேரள வியாபா ரிகள் ஏராளமானவர் குமரி மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்களில் காய்கறி களை வாங்கி செல்வதால் விலை அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று தக்காளி விலை 5 மடங்கு உயர்ந்து கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்டது. இதேபோல் பீன்ஸ், கேரட், வெள்ளரிக்காய் விலையும் கடுமையான அளவு உயர்ந்துள்ளது.

    பீன்ஸ் ஒரு கிலோ ரூ.120-ம், கேரட் ரூ.300-ம், வெள்ளரிக்காய் ரூ.30-ம், மிளகாய் ரூ.80-ம், புடலைங்காய் ரூ.25-ம், சேனை ரூ.30-ம், பல்லாரி ரூ.30-ம், உருளைக்கிழங்கு கிலோ ரூ.40-ம், இளவக்காய் ரூ.20-ம், பீட்ரூட் ரூ.40-ம், கத்தரிக்காய் ரூ.70-ம், வழு தலங்காய் ரூ.60-ம், வெண்டைக்காய் ரூ.40-க்கும் விற்பனையானது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், கேரளா வில் ஓணம் பண்டிகை களை கட்டியுள்ளதையடுத்து அங்கிருந்து வியாபாரிகள் ஏராளமானோர் காய்கறி களை வாங்குவதற்காக குமரி மாவட்டத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். எனவே இன்னும் மூன்று நாட்களுக்கு காய்கறிகளின் விலை அதிகமாக தான் இருக்கும். ஓணம் பண்டிகை முடிந்த பிறகு விலை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இனிவரும் ஒரு வார காலத்திற்கு திருமண நிகழ்வுகளும் அதிகம் உள்ளதால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,888-க்கு விற்கப்படுகிறது.
    • ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.4,722-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4,736-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை அதிரடியாக குறைவதும் அதன்பிறகு சற்று உயருவதுமாக உள்ளது. கடந்த 28-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.38,440-க்கு விற்கப்பட்டது. அது மறுநாள் 29-ந்தேதி ரூ.38,120-ஆக குறைந்தது. 30-ந்தேதி மீண்டும் உயர்ந்து ரூ.38,320 ஆனது.

    கடந்த 31-ந்தேதி தங்கம் விலை மீண்டும் குறைந்து பவுன் ரூ.38,032-க்கு விற்றது. கடந்த 1-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக குறைந்து ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது. அன்று பவுன் ரூ.37,680-க்கு விற்கப்பட்டது.

    அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து உயரத் தொடங்கியது. 2-ந்தேதி ஒரு பவுன் ரூ.37,720 ஆக உயர்ந்தது. 3-ந்தேதி மீண்டும் உயர்ந்து ரூ.37,776 ஆனது. நேற்றும் அதே விலையில் நீடித்தது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.37,888-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.4,722-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.4,736-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.58.20-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.58.50-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.58,500-க்கு விற்கப்படுகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,778-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.58 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.58.20-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வரும் நிலையில் இன்று விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.56 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 778-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 722 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.58 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.58.20-க்கு விற்கிறது.

    ×