search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223226"

    • வாலிபர் போக்சோவில் கைது
    • வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பொள்ளாச்சி :

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

    அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனக்கும் பொள்ளாச்சி எஸ்.புரவி பாளையத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி கபில்தேவ் (வயது 19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. நாங்கள் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தோம்.

    இந்தநிலையில் கபில்தேவ் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி என்னை கடத்தி சென்றார். பின்னர் மீனாட்சிபுரம் அருகே உள்ள ராமர் பண்ணையில் உள்ள கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டி திருமணம் செய்தார். பின்னர் அங்குள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்து சென்று என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    தற்போது அவர் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வருகிறார். இது குறித்து நான் கேட்ட போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. எனவே என்னை ஏமாற்றி திருமணம் செய்து பலாத்காரம் செய்த கபில்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் 17 வயது சிறுமியை திருமணம் செய்து 7 மாதங்களாக பலாத்காரம் செய்த கபில்தேவை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • கோழிகளின் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.
    • அனைத்து கோழிப்பண்ணைகளும் கால்நடைத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர்.

    கோவை,

    கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 1, 500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது.

    இதனால், அங்கு மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை அழிக்க அந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில், கோவை- கேரள எல்லைகளான வாளையாறு, வேலந்தாளம், முள்ளி, ஆனைக்கட்டி, பட்டிசாலை, தோலம்பாளையம் உள்பட 12 சோதனைச் சாவடிகளில் கால்நடை டாக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும், கோவையில் உள்ள கோழிப்பண்னைகளிலும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.கேரளாவிற்கு கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றிச்சென்று திரும்ப வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடித்து தொற்று நீக்கம் செய்யப்படுவதோடு, வாகன எண்கள், செல்லும் முகவரி பதிவு செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பொள்ளாச்சியில் தமிழகம்- கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள மீனாட்சிபுரம், செமணாம்பதி, கோபால புரம், நடுப்புணி, ஜமீன் காளியாபுரம், வடக்குகாடு, வீரப்பகவுண்டன்புதூர் ஆகிய சோதனைச் சாவடிகளில் கால்நடை பராமரிப்புத் துறை டாக்டர்கள் அடங்கிய குழுவினர் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களின் டயர்களிலும் கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதித்தனர்.

    இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியதாவது:-

    பறவைக் காய்ச்சலால் கேரளாவில் மட்டுமே பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு இல்லை. எனினும், முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் வாகனங்களின் டயர்களில் ரசாயன மருந்துக் கலவை தெளிக்கப்படுகிறது.

    தமிழகம்- கேரள மாநில எல்லையோரம் உள்ள கோழிப் பண்ணைகளில் கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்து கோழிகளின் மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். அனைத்து கோழிப்பண்ணைகளும் கால்நடைத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளன என்றனர்.

    • காந்தபிரகாஷ் வேர்க்கடலை மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.
    • காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    கோவை

    பொள்ளாச்சியை அடுத்த மேற்கு சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் காந்தபிரகாஷ் (வயது 43). இவர் வேர்க்கடலை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி பாண்டி செல்வி (33).

    இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த வீராசாமி என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காந்தபிரகாசிடம் ரூ.50 ஆயிரத்துக்கு வேர்க்கடலை வாங்கி உள்ளார். அதற்கான பணத்தை அவர் இதுவரை தரவில்லை என தெரிகிறது.

    சம்பவத்தன்று பாண்டி செல்வி, வீராசாமியிடம் பணத்தை கேட்பதற்கு அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு அவரிடம் பணத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர் பணத்தை தருவதாக கூறினார்.

    இதையடுத்து பாண்டி செல்வி வீடு திரும்பினார். சிறிது நேரம் கழித்து வீராசாமியின் மகன் டிரைவர் வேலை செய்து வரும் கார்த்தி (26)என்பவர் குடிபோதையில் காந்தபிரகாசின் வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டின் முன்பு நின்று சத்தம் போட்டு கொண்டு இருந்தார். சத்தத்தை கேட்டு பாண்டி செல்வி வெளியே வந்து கார்த்தியிடம் எதற்காக சத்தம் போட்டு கொண்டு இருக்கிறாய் என கேட்டார். அதற்கு அவர் எதற்காக எனது வீட்டுக்கு வந்து பணம் கேட்டாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இது தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி பாண்டி செல்வியை தாக்கினார். இதைகண்டு அதிர்ச்சி அைடந்த காந்தபிரகாஷ் ஓடி வந்து அவரை தடுத்தார். அப்போது அவரையும் அங்கிருந்த கல்லை எடுத்து தாக்கினார்.

    கணவன்-மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து பாண்டி செல்வி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • முருகேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி நாட்களை கழித்து வந்தார்.
    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் ஆத்துமேடு பகுதிக்கு சென்று விஷத்தை குடித்தார்.

    கோவை 

    பொள்ளாச்சி கோட்டூர் கரையான் செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவரது மகன் முருகேஷ் (20). கூலி தொழிலாளி.

    முருகேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி நாட்களை கழித்து வந்தார். இதனை அவரது தந்தை, மகன் முருகேசுக்கு அறிவுரை கூறி வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறினார்.

    ஆனாலும் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் முருகேஷ் தவணைக்கு புதியதாக ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கினார். இதனை பார்த்த அவரது பெற்றோர் அவரை கண்டித்தனர்.

    இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் ஆத்துமேடு பகுதிக்கு சென்று விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முருகேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் வாங்கியதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 3 மாதங்களுக்கு முன்பு பார்த்தசாரதி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.
    • பார்த்தசாரதி தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த அரிவாளை எடுத்து சங்கீதாவை வெட்டினார்.

    கோவை

    பொள்ளாச்சி பி.நாகூரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 29).டிரைவர். இவரது மனைவி சங்கீதா (25). அவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இந்தநிலையில் பார்த்தசாரதிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு பார்த்தசாரதி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது சங்கீதா அவரை கண்டித்தார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சங்கீதா கோபித்து கொண்டு எம்.ஜி.புதூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

    சம்பவத்தன்று பார்த்தசாரதி, சங்கீதாவை பார்ப்பதற்கு அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு 2 பேரும் பேசி கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த பார்த்தசாரதி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த அரிவாளை எடுத்து சங்கீதாவை வெட்டினார். பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அவர்கள் வருவதை பார்த்து பார்த்தசாரதி சங்கீதாவை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் அங்கிருந்தவர்கள் சங்கீதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து சங்கீதா வடக்கிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதியை தேடி வருகின்றனர்.

    • 16 இடங்களில் பெட்ரோல் குண்டோ அல்லது நாட்டு வெடிகுண்டோ வீச உள்ளோம்.
    • 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    கோவை

    கோவை மாவட்டம் ெபாள்ளாச்சி குமரன் நகரில் பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வாகனங்கள் கடந்த 22-ந் தேதி சேதப்படுத்தப்பட்டது. மேலும் அங்கு பெட்ரோல் குண்டும் வீசப்பட்டது. இதில் தொடர்புடைய சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.

    ஆய்வாளர் அவர்களுக்கு வணக்கம், நாங்கள் அமைதியான வழியில் சென்று கொண்டு இருக்கிறோம். போலீசார் எங்களுக்கு எதிரியல்ல. நாங்கள் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டோ அல்லது நாட்டு வெடிகுண்டோ வீச உள்ளோம். போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து கொள்ளவும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டு ஒரு அமைப்பின் பெயரும் அதில் எழுதப்பட்டு இருந்தது.

    இந்த மிரட்டல் கடிதத்தை யார் அனுப்பியது என்ற விவரங்கள் எதுவும் இல்லாமல் போலீஸ் நிலையத்துக்கு தபாலில் வந்தது. இந்த மிரட்டல் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அதனை யார் அனுப்பியது என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு வந்த மிரட்டல் கடிதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். 

    • சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    • ஆட்டோ மற்றும் பிக்கப் வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    அன்னூர்,

    கோவை நரசீபுரம் ராமதேவி கோவில் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார்.

    இவர் தனது காரில் உறவினர் ரங்கசாமி மற்றும் பழனிச்சாமி ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி சென்று, மீண்டும் அங்கிருந்து கோவை நோக்கி வந்தனர்.

    இந்த காரை சிவக்குமார் இயக்கினார். கார் அன்னூர்-சத்தி சாலையில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பயணிகள் ஆட்டோ மற்றும் பிக்கப் வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் பிக்கப் வாகனம் குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை இயக்கி வந்த சிவகுமார் பலத்த காயம் அடைந்தார். மற்ற 2 பேர் லேசான காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவம் குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    சிவக்குமார் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ெசல்லும் மற்ற வாகனங்கள் மீது மோதும் காட்சிகள் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தன. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆயுத பூஜை, காலாண்டு விடுமுறையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது.

    கோவை

    பொள்ளாச்சி நகரில் மையப்பகுதியில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது.

    தீபாவளி, பொங்கல் என முக்கிய பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பயணிகள் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ் இயக்கப்படும்.

    இந்த ஆண்டில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு வரை அவ்வப்போது முகூர்த்த நாட்கள் இருந்ததால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர்களுக்கு கூடுதல் பஸ் இயக்கப்பட்டது. பின்னர் கடந்த 2 வாரமாக பஸ் நிலையத்தில் கூட்டம் குறைவால், வெளியூர் பஸ்களிலும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

    இதற்கிடையே, வரும் 30-ந் தேதியுடன் பள்ளி அரையாண்டு தேர்வு நிறைவடைந்து அக்டோபர் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை என தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் அந்த நாட்களில் காந்தி ஜெயந்தி விடுமுறையும் அதன்தொடர்ந்து 4 மற்றும் 5-ந் தேதிகளில் சரஸ்வதி பூஜை என அடுத்தடுத்து விடுமுறைகள் இருப்பதால், வெளியூர் பயணிகள் வசதிக்காக, வரும் 30-ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை முதல் 5-ந் தேதி வரை என தொடர்ந்து 5 நாட்களும், வழக்கம்போல் இயக்கப்படுவதை விட, பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதிலும் குறிப்பாக கோவை, பழனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருப்பூர், கரூர், ஈரோடு, திருச்சி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 35 பஸ்கள் சிறப்பு பஸ்களாக கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று வால்பாறையில் வசிக்கும் பலரும் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றுவதால், சரஸ்வதி பூஜையையொட்டி வால்பாறைக்கு அக்டோபர் 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கும், வெகுதூர பகுதிகளுக்கும் என தினமும் 190 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், சுமார் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் வெகுதூர பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

    விசேஷ நாட்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படு கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வரும் 30-ந் தேதி வரை பள்ளிகளில் தேர்வு நடக்கிறது. 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரையிலும் காலாண்டு விடுமுறையாக இருந்தாலும், சரஸ்வதி பூஜை பண்டிகை இருப்பதால், பெரும்பாலானோர் குடும்ப த்துடன் வெளியூர்களுக்கு செல்வர்.

    இதனால், வெளியூர்களுக்கு கடந்த ஆண்டை விட கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.இந்த முறை சரஸ்வதி பூஜை மற்றும் பள்ளி விடுமுறை என்பதால், 35 பஸ்கள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    இதேபோன்று கோவையில் இருந்தும் நெல்லை, தென்காசி மதுரை, சேலம், ஊட்டி, உள்பட மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.  

    • இளம்பெண்ணின் வீட்டிற்கு, அவரது கணவரின் நண்பரான 30 வயதுமதிக்கத்தக்க வாலிபர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2 பேரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    ஆனைமலை

    பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் இளம்பெண்ணின் வீட்டிற்கு, அவரது கணவரின் நண்பரான 30 வயதுமதிக்கத்தக்க வாலிபர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது இளம்பெண்ணுடன் வாலிபருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2 பேரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது மனைவி மற்றும் நண்பரை கண்டித்தார். ஆனாலும் அவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்தது.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென தனது குழந்தையுடன் மாயமாகி விட்டார். இளம்பெண்ணின் கணவர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர் கோட்டூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகளுடன் கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை பகு திக ளில் தொழிலாளர் உதவிஆய்வாளர்கள் தீவிர சோதனை நடத்தினர்.
    • முரண்பாடு கண்டறியப் பட்டதொழில் நிறுவனங்களின் மீது விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டது.

    கோவை

    கோவை தொழிலாளர் உதவி ஆணையாளர் வெளி யிட்ட செய்திகுறிப்பில் கூறி யிருப்பதாவது:

    கோவை கூடுதல் தொழிலா ளர் ஆணையாளர் வழிகாட் டுதலின் படியும், இணை ஆணையாளர் அறிவுரையின் படியும் எடையளவு சட்ட விதிகளின் கீழ் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை பகு திக ளில் தொழிலாளர் உதவிஆய்வாளர்கள் தீவிர சோதனை நடத்தினர். இதில், பொட்டலபொருட்கள் விதிகளின் கீழ் உரிய பதிவு சான்று பெறாதது. உரிய அறிவிப்பு இல்லாதது, அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

    இது தொடர்பாக மொத்தம் 51 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், முரண்பாடு கண்டறியப் பட்டதொழில் நிறுவனங்களின் மீது விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டது. மேலும் அந்த நிறுவனங்க ளுக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.

    மேலும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் எடைகு றைவு, மறு முத்திரையிடப்ப டாத எடையளவு வைத்திருத் தல் உள்ளிட்டவை தொடர்பாக 105 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் முரண்பாடு கண் டறியப்பட்டது. மொத்தம் 156 நிறுவனங் களில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதில் முரண்பாடு கண்டறியப்பட்ட 51 தொழில் நிறுவனங்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பொள்ளாச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அ.தி.மு.க. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்தார்.

    பொள்ளாச்சி,

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அ.தி.மு.க. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பொள்ளாச்சி வந்தார். அவருக்கு பொள்ளாச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பொள்ளாச்சி -கோவை சாலையில் காரில் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர். அப்போது காரில் இருந்து திறந்த வாகனத்தில் ஏறி ஊர்வலமாக வந்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், அமுல்கந்தசாமி, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் வரவேற்பு அளித்தனர் .

    பொள்ளாச்சி ஜெயராமன், வீரவாள் வழங்கி வரவேற்றார். அதற்குப் பிறகு காந்தி சிலை இருந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

    எடப்பாடி பழனிசாமி பேச்பேசை தொடங்கும் போது முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை நினைவு கூர்ந்தார். இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பொள்ளாச்சி வருகிறேன். என்னை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இத்தனை பேர் திரண்டு வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். 

    • பொள்ளாச்சியில், 80 ஆயிரம் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
    • 20.52 சதவீத வாக்காளர்கள் இணைத்துள்ளனர்.

    கோவை, செப்.8-

    கோவை மாவட்டத்தில், 30 லட்சத்து, 21 ஆயிரத்து, 446 வாக்காளர்கள் உள்ள னர். இதில், 6 லட்சத்து, 20 ஆயிரத்து, 26 வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    இன்னும், 24 லட்சத்து, 1,420 வாக்காளர்கள் இணைக்க வேண்டியுள்ளது. மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் அதிகப ட்சமாக, பொள்ளாச்சியில், 80 ஆயிரம், வால்பாறையில், 75 ஆயிரம் வாக்காளர்கள், ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    சிங்காநல்லுார் தொகுதியில் மிகவும் குறைவாக, 47 ஆயிரத்து, 282 வாக்காளர்கள் மட்டும் இணைத்துள்ளனர். மாவட்ட அளவில், 20.52 சதவீத வாக்காளர்கள் இணைத்துள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறும்போது,

    100 சதவீதம் தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதில் இறந்தவர்கள் பெயர் நீக்கப்படுவதோடு, ஒருவருக்கே 2 பதிவு இருந்தால் காட்டிக் கொடுத்து விடும்.

    இதனால் வாக்காளர்கள் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடலாம். இன்னும் 6 மாதங்கள் அவகாசம் இருப்பதால், அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண்ணும் இணைத்து விடுவோம் என்றனர்.

    ×