search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223230"

    • தாயின் தாலிசங்கிலியையும் அபகரிக்க முயன்றதாக புகார்
    • தக்கலை அருகே இன்று அதிகாலை துணிகரம்

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள பனங்கான விளை பகுதியைச் சேர்ந்தவர் அலோசியஸ், வியாபாரி.

    இவர், தனது பெற்றோர், மனைவி அனிட்டா(வயது 32) மற்றும் 1 வயது மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு இவர்கள் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தனர்.

    அனிட்டா தனது குழந்தை யுடன் ஒரு அறையில் படுத்தி ருந்தார். அந்த அறையில் காற்றுக்காக ஜன்னல் கதவை திறந்து வைத்து உள்ளனர். இதனை அறிந்த யாரோ மர்மநபர் இன்று அதிகாலை திறந்திருந்த ஜன்னல் வழியாக கை விட்டு கதவை திறந்துள்ளார்.

    பின்னர் அந்த நபர் வீட்டின் அறைக்குள் நுழைந்து குழந்தை கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளான். மேலும் அனிட்டா அணிந்திருந்த 9 பவுன் தாலிச்சங்கிலியையும் அபகரிக்க முயன்றுள்ளான்.

    அந்த நேரத்தில் குழந்தை அழுததால், அனிட்டா கண் விழித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மர்மநபர், நகையை பறித்து விட்டு தப்பி ஓட முயன்றான். ஆனால் அனிட்டா, தனது கழுத்தில் கிடந்த நகையை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார்.

    இதனால் அந்த மர்ம நபர், அனிட்டாவின் நகையை விட்டு விட்டு குழந்தையிடம் பறித்த ஒரு பவுன் நகையுடன் தப்பி ஒடிவிட்டான். இந்த துணிகர சம்பவம் குறித்து தக்கலை போலீசில் அனிட்டா புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் நகை பறித்த நபர் ஸ்கூட்டரில் ஏறிச் செல்வது தெரியவந்தது. சுமார் 30 வயது மதிக்கத்தக்க அவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் கடநத சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
    • ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள பாலூர் வெட்டுக்காட்டு விளையை சேர்ந்தவர் ஐயப்பன் ஆசாரி மகன் சுனில்குமார் (வயது 46). இவர் நகை தொழில் செய்து வந்தார். இவர் கடநத சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று, இவரது மனைவி சாந்தி இவரை வேலைக்கு செல்ல வலியு றுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சுனில்குமார் அவரை தள்ளி விட்டு அறைக்குள் சென்று மனைவியின் சேலையால் பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார்.

    இதுகுறித்து சாந்தி கருங்கல் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் கருங்கல் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜாக்கமங்கலம் அருகே எறும்பு காட்டை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 32). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சிவரஞ்சனி. கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வரதராஜன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

    இதுபற்றி ராஜாக்க மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து வரதராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர்.
    • கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சைமன் நகரை சேர்ந்தவர் சங்கரநாராயணன்( வயது 38).தனியார் நிறுவன மேலாளர். இவரது மனைவி பிருந்தா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    கடந்த 7-ந் தேதி பிருந்தா குழந்தையுடன் வில்லுக்குறி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். சங்கரநாராயணன் வேலை விஷயமாக நிறுவனத்தில் தங்கியிருந்தார்.அதிகாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 62 பவுன் நகை, ரூ.90 ஆயிரம் ரொக்க பணம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளையும் போலீசார் பதிவு செய்தனர். அப்போது இரண்டு கைரேகைகள் சிக்கியது. கொள்ளையர்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.

    அந்த பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது .அப்போது கண்காணிப்பு கேமராவில் இரண்டு நபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர் .அந்த நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்த ப்பட்டு வருகிறது.

    முதல் கட்ட விசாரணையில் அவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    • சி.சி.டி.வி. காமிராவில் பதிவான 2 கொள்ளையர் உருவம்
    • 3 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை

    நாகர்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன் (வயது 38).

    இவர், நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் மேலாளராக வேலை பார்த்து வரு கிறார். இதையடுத்து சங்கர நாராயணன் குடும்பத்தோடு நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன் தினம் சங்கரநாராயணன் மனைவி பிருந்தா மகள் இருவரும் வில்லுக்குறியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தனர்.

    சங்கர நாராயணன் வேலை பார்த்த நிறுவ னத்தில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 62¾ பவுன் நகை, ரூ.90 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து சங்கரநா ராயணன் நேசமணிநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நாகர்கோவில் டி.எஸ்.பி. நவீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்த னர். அதில் 2 பேரின் கைரேகைகள் சிக்கி உள்ளது.

    அந்த கைரேகை போலீ சார் கைப்பற்றி விசா ரணை மேற்கொண்டு வரு கிறார்கள். மோப்பநாய் மோப்பம் பிடித்து விட்டு யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளை யர்கள் 2 பேரின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீ சார் கைப்பற்றி தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளை யர்கள் நள்ளிரவு 1.36 மணிக்கு வந்துவிட்டு 2.40 மணி வரை கைவரிசையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் 4 நிமிடம் கொள்ளையர்கள் அங்கேயே இருந்து கைவரி சையில் ஈடுபட்டுள்ளனர்.சங்கர நாராயணன் மற்றும் அவரது மனைவி வீட்டில் இல்லாததை நோட்டமிட்டே இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர்.

    போலீசார் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான உருவத்தை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடு பட்டு வருகிறார்கள். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இன்னும் ஓரிரு நாட்களில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

    • மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    வல்லவிளை குருசடி வளாகத்தைச் சேர்ந்தவர் மேரிசைனி (வயது 32). இவரது மாமியார் டெல்பி.

    இவர்கள் இருவரும் வல்ல விளையிலிருந்து மார்த்தாண்டத்திற்கு பஸ்சில் வந்து கொண்டிருந்த னர். மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி பஸ் நிறுத் தத்தில் பஸ் நின்றபோது டெல்பியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் தாலிச் செயினை இளம்பெண் ஒருவர் பறித்துவிட்டு தப்பி ஓடினார்.

    இதை பார்த்த ஷைனி அந்த பெண்ணை துரத்தி சென்று மடக்கி பிடித்தார். உடனே பொது மக்கள் அங்கு திரண்டனர். இது குறித்து மார்த்தாண் டம் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் பிடியில் இருந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சென்று அவரிடம் விசாரணை நடத்திய போது பிடிபட்ட பெண் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பவானி (39) என்பது தெரிய வந்துள்ளது.இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பவானிக்கு குமரி மாவட்டத்தில் வேறு ஏதாவது வழக்குகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பவானியுடன் அவரது கூட்டாளிகள் யாரும் வந்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே நாகர்கோவில் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மூன்று பெண்களிடம் ஓடும் பஸ்சில் நகை பறிக்கப்பட்டது இது தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • வாகனத்தில் வந்த பெண் மீது மிளகாய் பொடி தூவி நகை, பணத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்
    • பூப்பு நீராட்டு விழாவிற்கு சென்று வந்த போது நடந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்காட்டை அருகே இருச்சக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் மீது மிளகாய் பொடி தூவி, கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா சம்மன்தான்பட்டியை சேர்ந்தவர் சிதம்பரம் மனைவி ரஞ்சிதா(வயது26). இவர் காயம்பட்டியில் நடந்த பூப்பு நீராட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு தனதுஇரு சக்கர வாகனத்தில் வீடு நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.

    ஆன்டிபட்டி மேல கன்மாய் பாலம் அருகே வந்த போது, மர்ம நபர்கள் 2 பேர் திடீரென் ரஞ்சிதா மீது மிளகாய் பொடியை தூவி, கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஏழுரை பவுன் தங்க சங்கிலியையும், வைத்திருந்த பணம் பத்தாயிரத்தையும், மொபைல் போனையும் பறித்து கொண்டு சென்று விட்டனர்.

    இதுகுறித்து நமணசமுத்திரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாசகன் வழக்குபதிவு செய்து நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளையும் பார்த்து விசாரனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பெண் தங்களது மகளுக்கு தோஷம் இருப்பதாகவும் தெரிவித்தார்
    • தங்கம் காகத்திற்கு உணவு வைத்துவிட்டு வீட்டிற்கு வருவதற்குள் தங்க நகைகளை மாற்றிவிட்டு அந்த பெண் கவரிங் நகை களை வைத்துள்ளார்

    நாகர்கோவில் :

    கொல்லங்கோடு அருள் குன்று பகுதியைச் சேர்ந்த வர் முருகன். இவர் வெளி நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தங்கம் (வயது 52). இவர்க ளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.மகன் வெளியூரில் தங்கி படித்து வருகிறார். மகள் எம்.எஸ்.சி. படித்து வருகிறார்.

    தங்கம் கடந்த 2-ந்தேதி நாகர்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக களியக்காவிளையிலிருந்து பஸ்ஸில் நாகர்கோவிலுக்கு வந்தார். அப்போது பஸ்சில் வைத்து பக்கத்தில் இருந்த பெண் ஒருவர் தங்கத்திடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தங்கத்திடம் குடும்ப விவரங்களை கேட்டு அறிந்தார். உடனே அந்த பெண் தங்களது மகளுக்கு தோஷம் இருப்பதாகவும் தெரிவித்தார். நான் களியக்காவிளைக்கு வரும் போது தோஷத்தை சரி செய்வதாக தெரிவித்தார்.

    இதையடுத்து தங்கத்தின் செல்போன் எண்ணை பெண் வாங்கிக் கொண்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கத்தை தொடர்பு கொண்டு பேசிய பெண் தான் களியக்காவிளைக்கு வந்திருப்பதாகவும் உங்களது வீட்டின் முகவரியை கூறுங்கள் என்றும் கூறி யுள்ளார்.

    உடனே தங்கம் களியக்கா விளைக்கு சென்று அந்தப் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டில் வைத்து பரிகார பூஜை நடத்த ஏற்பாடு செய்தனர். வீட்டில் அவரது மகளும் இருந்துள்ளார். மகளும், தங்கமும் பரிகார பூஜையில் இருந்தனர். அப்போது அவர்களை வீட்டிலிருந்து நகை அனைத்தையும் ஒரு துணியில் கட்டி கொண்டு வருமாறு அந்த பெண் தெரிவித்தார்.

    உடனே அவர்கள் வீட்டில் இருந்து 30 பவுன் நகையை துணி ஒன்றில் கட்டிக்கொண்டு அந்த பெண்ணிடம் கொடுத்தனர். பின்னர் வீட்டில் பரிகார பூஜை மேற்கொண்டார். பரிகார பூஜை மேற்கொண்டபோது அந்த பெண் தங்கத்தின் மகளிடம் அவருக்கு பரிகார பூஜைகள் முடிந்து விட்டதாகவும் அவரை வீட்டில் உள்ள அறைக்கு செல்லுமாறும் கூறினார்.உடனே அவர் வீட்டில் உள்ள மற்றொரு அறைக்கு சென்றார். தங்கத்திடம் காகத்திற்கு உணவு வைத்து விட்டு வருமாறு தெரிவித்தார்.

    உடனே தங்கமும் காகத் திற்கு உணவு அளிப்பதற்காக வெளியே சென்று மீண்டும் வீட்டிற்குள் வந்தார். அதன் பிறகு அந்த பெண் பூஜை வைத்து இருந்த நகைகளை உடனடியாக திறந்து பார்க்க கூடாது மாலையில் தான் பார்க்க வேண்டும் அந்த நகைகளை அலமாரியில் கொண்டு வைக்குமாறு கூறினார். உடனே தங்கமும் அந்த நகைகளை வீட்டின் அலமாரியில் கொண்டு வைத்துள்ளார்.

    பின்னர் அந்த பெண்ணை ஆட்டோ ஒன்றில் ஏற்றி நடை காவிற்கு தங்கம் வழிஅனுப்பி வைத்தார். மாலையில் அலமாரியை திறந்து நகையை பார்த்தபோது தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர். தங்க நகை களுக்கு பதிலாக கவரிங் நகைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கம் இதுகுறித்து கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். தங்கம் காகத்திற்கு உணவு வைத்துவிட்டு வீட்டிற்கு வருவதற்குள் தங்க நகைகளை மாற்றிவிட்டு அந்த பெண் கவரிங் நகை களை வைத்துள்ளார். திட்டமிட்டு இந்த கொள்ளையில் அந்த பெண் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். நடைக்காவு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த பெண் முககவசம் அணிந்து கொண்டு குடையை பிடித்தவாறு செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. எனவே அவரை அடையாளம் காண முடியவில்லை.

    இதையடுத்து போலீசார் தங்கத்திடம் அந்த பெண்ணின் அடையாளங் களை கேட்டறிந்தனர்.இதை தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் 30 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் சென்னை சென்றார்.
    • திரும்பி வந்துபார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள வலிவலத்தை சேர்ந்தவர் மாதவன்.

    சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் சென்னை சென்றார்.

    திரும்பி வந்துபார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு ரூ.20 ஆயிரம் ரொக்கம், 2 தங்க மோதிரம், வெள்ளி பொருட்கள் மாயமாகியது.

    மர்ம நபர்கள் வீடு புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இது குறித்து அவர் வலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வேம்பரசி என்பவர் இரவில் வீதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள்.
    • மர்ம நபர்களால் இருவர் பெண் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

    நீடாமங்கலம்:-

    கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் காவல் சரகத்திற்குட்பட்ட தேப்பெருமாநல்லுரில் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த ராஜாங்கம் என்பவரது மனைவி வேம்பரசி (வயது 49) என்பவர் இரவு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பின்ெதாடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் பெண் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு வெளியே சென்றுள்ளார்.
    • பூட்டை கோடாரியால் உடைத்து உள்ளே புகுந்து தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கே.கிருஷ்ணாபுரம் பிரிவில் வசிக்கும் ஆறுமுகம் மகன் சுப்பிரமணி (58) என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு வெளியே சென்றுள்ளார்.

    திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் பூட்டை கோடாரியால் உடைத்து உள்ளே புகுந்து பீரோவை திறந்து வைத்திருந்த 14பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து விவசாயி சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • மர்ம நபர்கள் கைவரிசை
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை

    கன்னியாகுமரி:

    பளுகல் அருகே குழி விளாகம் மத்தம்பாலை பகுதியை சார்ந்தவர் அருண். இவர், பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார்.

    இப்போது இவர் ஊரில் உள்ளார். இவருடைய மனைவி செலின்மலர் இவர்கள் குடும்பத்துடன் மத்தம்பாலை பகுதியில் வசித்து வருகின்றனர். அருண் இன்று பெங்களூருக்கு செல்வதால் நேற்று இவர்கள் குடும்பத்துடன் பரக்குன்று பகுதியில் உள்ள செலின்மலரின் தாய் விட்டிற்கு சென்றுள்ளனர்.

    அங்கு தங்கி விட்டு இன்று அதிகாலை அருண் பெங்களூருக்கு கொண்டு செல்வதற்கு பொருட்கள் எடுக்க வீட்டிற்கு சென் றுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருண் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அறை கதவு உடைக்கப்பட்டு துணி மணிகள் சிதறி கிடந்தன. பக்கத்தில் சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 தங்க வளையல்கள் மற்றும் 3 கோல்ட் வாட்சுகள் போன்ற வற்றை ஏதோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பளுகல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பளுகல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற் கொண்டு பின்னர் கை ரேகை நிபூனர்கள் வரவ ழைத்து அவர்களும் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×