search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெற்றது
    • 400 ஆடுகளை விவசாயிகள் கொண்டுவந்தனர்

    அரியலூர்:

    அரியலூர் அருகேயுள்ள கடுகூர் கிராமத்தில் ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெற்றறது. தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ், கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் நடத்தப்பட்ட முகாமில், கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார்,கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் அடங்கிய கால்நடை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 250 வெள்ளாடுகளுக்கும், 150 செம்மறியாடுகளுக்கும் ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசிகளைச் செலுத்தினர்.

    • குமாரபாளையம் ஜானு ஓமியோ கிளினிக் மற்றும் சேவை சங்கத்தார் சார்பில் நகராட்சி பூங்கா எதிரில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் ஜானு ஓமியோ கிளினிக் மற்றும் சேவை சங்கத்தார் சார்பில் நகராட்சி பூங்கா எதிரில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் டாக்டர்கள் ஜனனி, இந்திரா, தமிழரசு மற்றும் குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு சர்க்கரை வியாதி, சிறுநீரக கோளாறு, தைராய்டு, ஆஸ்துமா, தோல் வியாதிகள், நரம்பியல் நோய்கள், குழந்தையின்மை, கர்ப்பபை நீர் கட்டிகள் உள்ளிட்ட பல நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கினர்.

    இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர். 

    • குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் மற்றும் ராஜா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • இந்த முகாமில் 220 பேர் பங்கேற்று பயன்பெற்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் மற்றும் ராஜா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    இதில் சங்க தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ முகாமை தொடக்கி வைத்தார்.

    டாக்டர் கிருஷ்ணமூர்த்தி குழுவினர் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை இலவசமாக பார்க்கப்பட்டது.

    இந்த முகாமில் 220 பேர் பங்கேற்று பயன்பெற்றனர். மேலும் முன்னாள் குளோபல் சேர்மன் ஈஸ்வர், முன்னாள் தலைவர்கள் மனோகர், சம்பத்குமார், சந்திரன், பன்னீர்செல்வம், தனசேகர், சண்முகம்,விஜயபிரதாப் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

    • நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பல விதமான யோகப்பயிற்சிகள் வேதாந்திரி மகரிஷி யோகா குழுவினரால் பயிற்றுவிக்கப்பட்டது.
    • மனதை அடக்கப் பழகிக் கொள்வதன் மூலம் மாணவர்கள் தங்களது குறிக்கோள்களையும் லட்சியங்களையும் எளிதில் அடையலாம் என்று கூறினார்.

    உடன்குடி:

    உடன்குடி தேரியூர் ஸ்ரீராம கிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேசயோகா தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனை, மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காலன் குடியிருப்பு அரசு மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்திய சித்த மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

    பள்ளி தலைமை ஆசிரியர் லிங்கேஸ்வரன் தலைமை தாங்கி பதினெண்சித்தர் திருவுருவச் சிலைகளுக்கு குத்துவிளக்கு ஏற்றி விழா வினை தொடங்கி வைத்தார்.

    இதில் சித்தர்களின் வரலாறு பற்றியும், பெருமை பற்றியும் பாரம்பரிய உணவு பற்றியும் விரிவாக பேசப்பட்டது. சாத்தான்குளம் அரசு சித்த மருத்துவர் வைகுண்ரமணி பேசியதாவது:-

    யோகா கலை காயகற்ப மருந்துகளில் ஒன்று. காயகல்ப மருந்து என்பது உடம்பை கல்போல் ஆக்கி நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு நீக்கி மனிதனை வாழச் செய்யும்ஓர்அற்புத மருந்து.மனதை ஒரு நிலைப்படுத்தி, அமைதிப்படுத்தி உடலுக்கும் மனதுக்கும் ஒரு புத்துணர்வைத் தருகிறது. இன்றைய மாணவர்களுக்கு யோகா சனத்தின் தேவை காலத்தின் கட்டாயமாகும்.பயம், பதட்டம், மன உளைச்சல், மன அழுத்தத்தினால் மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் உருவாகிறது அல்லது அவர்களின் மனதிலே வன்முறை எண்ணங்கள் எழுகின்றது.

    யோகாசனம் மாணவர்களிடம் ஏற்படும் வன்முறை உணர்வுகளைப் போக்கி, தற்கொலை எண்ணங்கள் அவர்களிடம் எழாதவாறு அவர்களின் மனதை அமைதிப்படுத்தி, தூய்மைப்படுத்தி தன்னம்பிக்கை உணர்வை ஏற்படுத்தி நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கு கிறது. மாணவர்களின் நினைவாற்றல், ஞாபகசக்தி, புத்திக்கூர்மை அதிகரிக்க திருமூலர் அட்டாங்க யோகத்தில் கூறிய பிராணயாம மூச்சுப் பயிற்சி மாணவர்கள் தினந்தோறும் செய்ய வேண்டும். மூச்சை அடக்க பழகுவதன் மூலம் மனதையும் அடக்கலாம்.மனதை அடக்கப் பழகிக் கொள்வதன் மூலம் மாணவர்கள் தங்களது குறிக்கோள்களையும் லட்சியங்களையும் எளிதில் அடையலாம் என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பல விதமான யோகப்பயிற்சிகள் வேதாந்திரி மகரிஷி யோகா குழுவினரால் பயிற்றுவிக்கப்பட்டது. மேலும் முகாமில் மூலிகைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்மூலிகைக் கண்காட்சி, பாரம்பரிய உணவு முறைகள், சிறுவர்களின் புரதச் சத்துக் குறைபாட்டைப் போக்கும் பஞ்சமுட்டி கஞ்சி, நவதானியங்கள், அஞ்சறைப்பெட்டி வைத்தியம், உணவில் திரிதோட சமனப் பொருட்கள், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மூலிகைகள், உணவுப் பொருட்கள், ரத்தசோகை நோயை போக்கும் உணவுகள், மருந்துகள், எண்ணெய் தேய்த்துக் குளித்தலினால் ஏற்படும் பயன்கள், நலுங்கு மாவு குளியல் பொடி சித்தர்களின் நாள், கால ஒழுக்கம் போன்ற சித்த மருத்துவ விழிப்புணர்வுப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

    மாணவர்களுக்கு கடலை மிட்டாய், எள்ளுருண்டை, பேரிச்சம் பழம் மற்றும் நில வேம்பு குடிநீர், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி க்கான ஏற்பாட்டினை காலன் குடியிருப்பு அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மருந்தாளுநர் முருகேசன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் மெஞ்ஞானபுரம் சித்தா மருந்தாளுனர் ஆறுமுகம், ஐ.சி.டி.சி. கவுன்சிலர் சங்கர், பார்த்திபன், பள்ளி ஆசிரியர்கள் ராஜ திலகவதி, ராமலிங்கம், சிவசுப்பிரமணியன், அஜய் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் அய்யங்கண்ணு, அஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் அருகே மக்கள் சந்திப்பு இயக்க முகாமில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களை நேரடியாக சந்தித்துவரும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி, திருவள்ளுவர் நகரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு "மக்கள் பிரதிநிதிகளின் மக்கள் சந்திப்பு இயக்கம்" என்ற தலைப்பில் தெருத்தெருவாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்தார். பின்னர் பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது எம்.எல்.ஏ. நிதியில் புதிய நியாய விலை கட்டிடம் கட்டப்படும் என்றார்.

    இந்த முகாமில் இலவசமாக ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், தொலைபேசி எண் இணைத்தல், புதியதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல், புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகள் செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணைத்தலைவர் துரை கற்பகராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட பிரதிநிதி திருக்குமரன், நகர கவுன்சிலர் அருள் உதயா, ஒன்றிய துணைச்செயலாளர் ஜெயந்தி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மாரிமுத்து, அங்குராஜ், ராமசுப்பு, ராம்நாத், மாரி, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விதை உற்பத்தி பயிற்சி முகாம் நடந்தது.
    • மேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி விளக்கம் அளித்தார்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள விநாயகபுரத்தில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் விதைப்பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி குறித்து மாவட்ட அளவிலான பயிற்சிமுகாம் நடந்தது. நாவினிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, உறங்கான்பட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 40 விதைப் பண்ணை உற்பத்தி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி விளக்கம் அளித்தார். வேளாண் துணை இயக்குனர் அமுதன், நுண்ணுயிர் பாசன திட்ட அலுவலர் சரவணன், உதவி இயக்குனர் சிங்கார லீனா, விதைச்சான்று அலுவலர் சுஜிதா, துணை வேளாண் அலுவலர் தனலட்சுமி, உதவி விதை அலுவலர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசால் இல்லம் தேடி மருத்துவம் கொண்டுவரப்பட்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
    • இந்த மருத்துவ முகாமில் 1065 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் கருணாகரன் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை, அரசு மருத்துவர் கௌசிகா முன்னிலை வகித்தனர்.

    இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.2000 வீதம் மதிப்புள்ள உணவு பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசுகையில், தமிழக அரசால் இல்லம் தேடி மருத்துவம் கொண்டுவரப்பட்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்படி வீட்டில் யாராவது நோயினால் பாதிக்கப்பட்டால் உறவினர்கள் வர மறுத்தாலும் அரசு ஆம்புலன்ஸ் நேரடியாக வீட்டிற்கு சென்று பாதிக்கப்பட்டவருக்கு தேவையான முழு மருத்துவ உதவியும் செய்து அதற்கான முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது என்றார்.

    இந்த மருத்துவ முகாமில் 1065 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். வட்டார அளவில் அங்கன்வாடிகள் சார்பில் இயற்கை உணவு மற்றும் இயற்கை வகையான ஊட்டச்சத்து கண்காட்சி முகாமில் இடம் பெற்றிருந்தது.

    முடிவில் சுகாதார ஆய்வாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

    • திருநங்கைகளையும் சமுதாயத்தில் மனிதர்களாக மதிக்க வேண்டும் அனைத்து திறமைகளும் அவர்களுக்கும் உள்ளது.
    • மாணவர்களாகிய நீங்கள் திருநங்கைகளை இழிவாக எண்ணாமல் நன்மதிப்புடன் மதிக்க வேண்டும் என்றார்.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில் ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான திருநங்கைகள் என அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமில் பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமாண அப்துல் கனி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். திருநங்கைகளையும் சமுதாயத்தில் மனிதர்களாக மதிக்க வேண்டும் என்றும் அனைத்து திறமைகளும் திருநங்கைகளுக்கு உள்ளது. மாணவர்களாகிய நீங்கள் திருநங்கைகளை இழிவாகவும் கேவலமாகவும் எண்ணாமல் நன்மதிப்பு அளிப்பதுடன் மற்றவ ர்களும் திருநங்கைகளை மதிக்க சொல்லித் தர வேண்டும் என்று கூறினார்.

    முகாமில் சிறந்த திருநங்கைகாண டாக்டர் பட்டம் பெற்ற தஞ்சாவூரை சேர்ந்த ராகினி என்ற திருநங்கையும் மற்றும் பொறியியல் பட்ட படிப்பு முடித்த திருநங்கையும் கலந்து கொண்டு மாணவர்கள் திருநங்கை களுக்கு நன்மதிப்பு அளிக்க வேண்டும் என்பது பற்றி கூறினார்கள் முகாமில் கல்லூரி முதல்வர்கள் நேர்முக உதவியாளர் இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சட்ட பணியாளர் தனசே கரன் செய்திருந்தார்.

    • பரமத்தி வட்டாரம் வில்லிபாளையம் கிராமத்தில் நடமாடும் மண்பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
    • நீர் மாதிரிகளை கொண்டு வந்து பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:- பரமத்தி வட்டாரம் வில்லிபாளையம் கிராமத்தில் நடமாடும் மண்பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

    அது சமயம் வில்லிபாளையம் ஊராட்சி, ஜங்கமநாய்க்கன் பட்டி, குச்சிப்பாளையம் கிராமம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள மண் மற்றும் நீர் மாதிரிகளை கொண்டு வந்து பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சவுந்தர்ராஜன் மற்றும் பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலர் பாபு ஆகியோர் "மண் மற்றும் நீர் மாதிரி எடுக்கும் முறை, மண் மற்றும் நீர் பரிசோதனையின் மூலம் பெறப்படும் பலன்கள், மண்வள அட்டையின் சாராம்சம் குறித்து விளக்கமளிக்கவுள்ளனர்.

    மேலும் விபரங்களுக்கு பரமத்தி உதவி வேளாண்மை அலுவலர் ரகுபதியை தொடர்பு கொண்டு பயன் பெறமாறு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • இந்த முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவா்கள் பங்கேற்கலாம்.
    • மேலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் காங்கயம் மகாராஜா மகாலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டம், காங்கயம் ஸ்ரீ மஹாராஜா மஹாலில் தனியாா் துறை சாா்பில் வருகிற 2-ந்தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு மற்றும் திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.

    இந்த முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவா்கள் பங்கேற்கலாம். அதேபோல, கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோா்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் சாா்பில் வங்கிக்கடன் வழங்குவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன. ஆகவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாா்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மகளிா் திட்ட இயக்குநா் மதுமிதா, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.மேலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் காங்கயம் மகாராஜா மகாலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

    • கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் கொண்டரசம்பாளையம் கிராமத்தில் நடைப்பெற்றது.
    • அதிக மகசூல் தரும் நீடித்த, நவீன கரும்பு சாகுபடி முறையை விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வட்டாரம், சித்தம்பூண்டி, கொண்டரசம்பாளையம் கிராம கரும்பு விவசாயிகளுக்கு 'நீடித்த நிலையான கரும்பு சாகுபடி'' குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைப்பெற்றது. பயிற்சியில் பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, கரும்பில் இருந்து சர்க்கரை மட்டும் தயாரித்த காலம் போய் தற்போது கரும்புச்சாறு கழிவில் மொலாசஸ், சாக்லெட் மற்றும் கரும்பு சக்கையில் இருந்து மின்சாரம், இயற்கை உரம், காகிதம் என கரும்பின் அனைத்து பாகங்களும் பயன்படுகிறது. குறைந்த அளவு விதை நாற்று, குறைந்த அளவு தண்ணீரை உபயோகித்து அதிக மகசூல் தரும் நீடித்த, நவீன கரும்பு சாகுபடி முறையை பயன்படுத்தி பயன் பெற விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார்.

    பொன்னி சுகர்ஸ் நிறுவன கரும்பு ஆய்வாளர் பழனிச்சாமி, மற்றும் மேலாண்மை அலுவலர் அல்லிமுத்து ஆகியோர் பயிற்சி வழங்கினர். பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி வேளாண்மை அலுவலர் கௌசல்யா, அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் விவசாயிகளுக்கு நன்றி கூறி பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • ஊர்வலத்தில் தூய்மை மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
    • தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகராட்சி வளாகத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார்.

    நகராட்சி ஆணையாளா் பார்கவி, மேலாளா் கண்ணன், பொறியாளா்கண்ணன், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி வரவேற்று பேசினார்.

    அதனைத்தொடா்ந்து தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னா் நகராட்சி பகுதிகளில் அனைத்து வார்டுகளிலும் எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊர்வலம் நடந்தது.

    ஊர்வலத்தில் தூய்மை மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. வீடுகள்தோறும் சென்று பொதுமக்களுக்கு குப்பைகளை வாங்கும் இடத்திலேயே மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினா்கள் முத்துப்பாண்டி, முருகையா, வேம்புராஜ், செண்பகராஜ், பேபிரெசவுபாத்திமா, மேரிஅந்தோணிராஜ், சுகாதார மேற்பார்வையாளா்கள், தூய்மை இந்திய திட்ட பணியாளா்கள், பள்ளி மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    ×