search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223246"

    • புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    பல்லடம்,

    தமிழகத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் புகையிலை பொருட்களால் ஏற்படும் கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஆங்காங்கே புகையிலைப் பொருட்கள் குறித்து சுகாதாரத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .அந்த வகையில், பல்லடம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகநாதன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் முத்துப்பையன், தமிழ்ச்செல்வி மற்றும் சுகாதார அலுவலர்கள் பல்லடம் நகரப் பகுதிகளில் உள்ள பேக்கரிகள் மற்றும், பெட்டிக் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 9 கடைகளுக்கு தலா ரூ.100 விதம் 900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் புகையிலைப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்தால் கடைகளை சீல் வைப்பது, மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    • போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் அனுமதியின்றி மது விற்ற 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை அடியோடு தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் அதிரடியாக போலீசார் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அந்தியூர்-பர்கூர் ரோட்டில் உள்ள ஒரு கடையில் போலீசார் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பொருட்கள் 3887 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கடையின் உரிமையாளர் ராஜசேகரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் அப்பகுதியில் இருந்து ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து 3887 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைப்போல் பவானி, பெருந்துறை கோபி, சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் போலீசார் கடைகளில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஹான்ஸ் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    நேற்று ஒரே நாளில் மட்டும் 4, 840 ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஹான்ஸ் புகையிலை விற்றதாக 46 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் அனுமதியின்றி மது விற்ற 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×