என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 223268"
- இந்த சாண்ட்விச்சை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
- காலையில் இந்த ரெசிபியை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
பிரெட் - 4
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
சீஸ் ஸ்லைஸ் - விருப்பத்திற்கேற்ப
சில்லி ஃபிளேக்ஸ் - விருப்பத்திற்கேற்ப
வெண்ணெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
முட்டை கலவை செய்ய
முட்டை - 3
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
செய்முறை
பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்
2 பிரெட் துண்டுகளை எடுத்து அதில் ஒன்றின் மீது சீஸ் ஸ்லைஸ் வைத்து, சில்லி ஃபிளேக்ஸ் தூவவும்.
மற்றொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடவும்.
தாவாவை அடுப்பில் வைத்து சூடு செய்து, வெண்ணெய் சேர்த்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
தாவாவை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை கலவையை ஊற்றி அதன் மேல் டோஸ்ட் செய்த சாண்ட்விச்'சை வைக்கவும்.
சான்விச் முழுவதும் ஆம்லெட் வரும் படி மூடவும். நன்றாக வேக விடவும்.
கடைசியாக அடுப்பிலிருந்து எடுத்து பாதியாக நறுக்கவும்.
இப்போது அருமையான ஆம்லெட் சீஸ் சாண்ட்விச் தயார்.
- குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும்.
- சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
துண்டு மீன் - 1/2 கிலோ
மிளகுத்தூள் - 4 ஸ்பூன்
எலுமிச்சைசாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
மீனை நன்றாக சுத்தம் செய்து, கழுவி தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி வைக்கவும்.
கழுவிய மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் எலுமிச்சை சாற்றை ஊற்றி, உப்பு, கறிவேப்பிலை, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பிசறி அரைமணி நேரம் வரை ஊற வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை போட்டு ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
இப்போது சூடான மீன் மிளகு வறுவல் ரெடி.
- வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இதை செய்யலாம்.
- காலையில் இட்லி, தோசைக்கு பதில் இதை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
பிரெட் துண்டுகள் - 5
முட்டை - 3
பெரிய வெங்காயம் -1
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
சில்லி ப்ளேக்ஸ் - ½ தேக்கரண்டி
மிளகு தூள் - ¾ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
வெண்ணை - 2 - 3 தேக்கரண்டி
செய்முறை
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நுரை வரும்வரை அடித்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, சில்லி ப்ளேக்ஸ், மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பிரெட்டை எடுத்து கலந்து வைத்துள்ள முட்டை கலவையில் முக்கி எடுத்து தோசைக்கல்லில் போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.
தீயை குறைத்து வைக்கவும். அப்போது தான் உள்ளே நன்றாக வேகும்.
ஒவ்வொரு பக்கமும் 1 - 2 நிமிடங்களுக்கு வேக வைக்கவும், அவ்வபோது திருப்பி போடவும். நன்றாக வெந்த பின்னர் எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான மசாலா பிரெட் ரோஸ்ட் தயார்.
- கிராமப்புறங்களில் நந்தை கறி சாப்பிடுவது வழக்கம்.
- நத்தை கறி சுவையானது, ஆரோக்கியமானது.
தேவையான பொருட்கள்
நத்தை - அரை கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 1
ப.மிளகாய் - 3
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு,
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
வயல்களில் கிடைக்கும் நத்தைகளை உயிரோடு பிடித்து வந்து கொதிக்க வைத்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் போதும் நத்தை இறந்து விடும். பிறகு ஓடுகளை உடைத்து நத்தையின் கறியை தனியாகப் பிரித்தெடுத்து நல்ல தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்கு அலசி கொள்ள வேண்டும்.
வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து தக்காளி குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
அடுத்து நத்தை கறியினை சேர்த்து நன்றாக வதக்கவும்.
நத்தை கறியின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் விட்டு கறியை நன்கு வேக விடவும்.
அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
கறி நன்கு வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இப்போது நத்தை கறி பரிமாறத் தயார்.
- வீட்டில் முட்டை தோசை செய்து இருப்பீங்க.
- இன்று முட்டை மசாலா தோசை செய்யலாம் வாங்க...
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 1 கப்
முட்டை - 6
கடுகு - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மல்லி தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
½ tbsp மிளகு தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும கடுகு சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும்.
அதன் பின் இதனுடன் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் முட்டைகளை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுப் பொடி சேர்த்து முட்டை உதிரி உதிரியாக வரும் வரை கிளறி விட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடாகியதும் இரண்டு கரண்டி மாவை எடுத்து தோசைகளாக ஊற்றி சற்று தடிமனாக ஊற்றவும்.
பின் அதன் மேல் முட்டை மசாலாவை சேர்த்து பின் அதற்கு மேல் பொடியாக நறுக்கி வெங்காயம், கொத்தமல்லி தூவி தோசை கரண்டியால் மெதுவாக அமிக்கி விட்ட பின் சுற்றி எண்ணெய் விட்டு ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் சுவையான முட்டை மசாலா தோசை தயாராகி விட்டது.
- கிறிஸ்துமஸ் என்றாலே கேக், பிரியாணி தான் ஸ்பெஷல்.
- சீரக சம்பா அரிசியில் மட்டன் பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
சீரக சம்பா அரிசி - 4 கப்
மட்டன் - அரை கிலோ
இஞ்சி, பூண்டு - 4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி
தயிர் - அரை கப்
லெமன் - 1
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
நெய் - அரை கப்
எண்ணெய் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கிராம்பு - 3
பட்டை - 3 சிறிய துண்டு
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - ஒரு ஸ்பூன்
செய்முறை :
* மட்டனை நன்றாக கழுவி வைக்கவும்.
* அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
* தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு அரைத்து 4 கப் பால் எடுத்து வைக்கவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* கொத்தமல்லி, புதினாவை சுத்தம் செய்து வைக்கவும்.
* குக்கரில் மட்டனை போட்டு அதனுடன் கால் கப் தயிர், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது 2 ஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்த பின் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.
* இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள் போட்டு 5 நிமிடங்கள் வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.
* அடுத்து அதில் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 8 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.
* ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு அதனுடன் லெமன் சாறு சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து குக்கரை இறக்கவும்.
* பின்பு 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து ஒருமுறை கிளறி விட்டு பரிமாறவும்.
* சுவையான சீரக சம்பா மட்டன் பிரியாணி தயார்.
- மட்டன் நல்லி எலும்பு வறுவல் ஒரு சூப்பரான உணவாகும்
- எலும்பு பிரியர்களுக்கு இது ஒரு சிறப்பான டிஷ்.
தேவையான பொருட்கள்
மட்டன் எலும்பு - முக்கால் கிலோ
வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 150 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் தூள் - ½ டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - ¼ டீஸ்பூன்
கருப்பு மிளகு தூள் - ½ டீஸ்பூன்
தேங்காய் பால் - அரை கப் கெட்டியானது
உப்பு - தேவைக்கேற்ப
தாளிப்பு
கடுகு - அரை டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மட்டன் எலும்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
குக்கரில் சுத்தம் செய்த மட்டன் எலும்பை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து 4 விசில் வரை வேக விடவும். எலும்புகள் நன்கு வேகவைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், பெருஞ்சீரகம் தூள், கரம் மசாலா தூள், கருப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும் போது, மட்டன் எலும்பை வேக வைத்த நீருடன் சேர்க்கவும். தண்ணீர் வற்றும் வரை அடுப்பை மிதான தீயில் வைத்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
அடுத்து அதில் தேங்காய் பால் சேர்க்கவும்.
எண்ணெய் பிரிந்து, தண்ணீர் வற்றி திக்கான தொக்கும் பதம் வந்ததும் இறக்கி தனியாக வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெயை சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து வறுத்த எலும்புகளுடன் சேர்க்கவும்.
நன்றாக கலந்து சாதம், ரொட்டி அல்லது தோசையுடன் பரிமாறவும்!
இப்போது சூப்பரான மதுரை ஸ்டைல் மட்டன் நல்லி எலும்பு வறுவல் ரெடி.
- மதுரை கறி தோசை மிகவும் பிரபலம்.
- இந்த தோசையை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கீமா மசாலா செய்ய
மட்டன் கீமா - கால் கிலோ
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் தூள் - அரை டீஸ்பூன்
மிளகு தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
கல் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கரி தோசை செய்ய:
தோசை மாவு
மட்டன் கீமா மசாலா
கொத்துமல்லி இலை
எண்ணெய்
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி, கல் உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து குழைய வதக்கவும்.
இந்தக் கலவையில் மட்டன் கொத்துக்கறி சேர்த்து நன்கு கிளறவும்.
இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் கடாயை மூடி வேக வைக்கவும்.
20 நிமிடம் கழித்து கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கி எடுத்து வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி அதன் மேல் அடித்து வைத்த முட்டையை ஊற்றவும்.
அடுத்து மட்டன் கீமா மசாலாவை தோசையின் மேல் பரப்பி விடவும் இதன் மேல் கொத்தமல்லி தலை, மிளகுத்தூள் சேர்த்து மறுபுறம் திருப்பி விடவும்.
மறுபுறம் மசாலா நன்கு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
இப்போது சூடான மற்றும் சுவையான மதுரை ஸ்டைல் கறி தோசை தயார்
- மீனை விதவிதமாக செய்து சாப்பிடலாம்.
- புது விதமான எளிதான மீன் வறுவல் செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
மீன் - 1/2 கிலோ
சிறிய வெங்காயம் - 6
மல்லி - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 10
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
எலுமிச்சை - 1
செய்முறை
மீனை நன்றாக சுத்தம்செய்து கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயத்தை போட்டு அதனுடன் சோம்பு, சீரகம், மிளகு வர மிளகாய், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மீன் வருவளுக்கு தேவையான மசாலா இப்பொழுது ரெடியாகி விட்டது.
அரைத்த மசாலாவில் எலுச்சை சாறு சேர்த்து அதில் மீன் துண்டுகளை போட்டு நன்றாக கலக்கி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா கலந்து மீன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மொறு மொறு இடித்து அரைத்த சுவையான மீன் வறுவல் ரெடி.
- தோசை, இட்லிக்கும் தொட்டு கொள்ள அருமையான இருக்கும்.
- இந்த ரெசிபியை செய்ய 20 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
முட்டை - 6
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சீரக தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
அடுத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்
மசாலா நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் முட்டையை உடைத்து ஊற்றி கடாயை மூடி 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
பின்பு மறுபக்கம் திருப்பி விட்டு 2 நிமிடம் வேகவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இப்போது சூப்பரான முட்டை மசாலா தயார்!
- இட்லி, தோசைக்கும் அருமையாக இருக்கும்.
- குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
வேகவைத்த முட்டை - 5
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு - தாளிக்க
உப்பு - சுவைக்கு
செய்முறை:
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி விட்டு கீறி வைக்கவும்.
வாணலியில் வெண்ணெய்விட்டு உருகியதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்து முந்திரி பருப்பு சேர்க்கவும்.
பின்னர், பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து குழைய வேக வைக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிவிட்டு இறக்கி ஆறவைக்கவும்.
பிறகு, இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
மீண்டும் மற்றொரு வாணலியில், வெண்ணெய் சேர்த்து உருகியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்..
பிறகு, அரைத்து வைத்த விழுது, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
கூடவே, முட்டையை நான்கு பக்கத்தில் கீறிவிட்டு கலவையுடன் சேர்த்து கிளறி சுமார் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
இந்த கலவை கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும்.
அவ்ளோதாங்க.. சுவையான முட்டை பட்டர் மசாலா ரெடி..!.
- சிக்கனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- நாளை ஞாயிற்றுக்கிழமை இந்த ரெசிபி செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
குடைமிளகாய் - சிறியது 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
கொத்தமல்லி - சிறிது
உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
வறுத்து அரைப்பதற்கு...
மல்லி விதைகள் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய - 3
பட்டை - 1 இன்ச்
செய்முறை:
* வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* தக்காளியை அரைத்து கொள்ளவும்.
* வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், குடைமிளகாயை சேர்த்து ஒருமுறை வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* சிக்கனை மஞ்சள் சேர்த்து நன்கு கழுவி பின்னர் அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியில் பாதியைப் போட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி, உப்பு மற்றும் மீதமுள்ள வறுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
* பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கி, 1 கப் நீர் ஊற்றி மூடி வைத்து 10-15 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும் அல்லது குக்கரில் போட்டு 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ளலாம்.
* இறுதியில் குக்கரைத் திறந்து, கிரேவி அதிகம் வேண்டுமானால் தேவையான அளவு நீர் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு, வதக்கி வைத்துள்ள குடைமிளகாயையும் சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கடாய் சிக்கன் கிரேவி தயார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்