search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223268"

    • கருவாட்டில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று கருவாட்டில் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்:

    கருவாடு - 5 துண்டுகள்

    தக்காளி - 2 பெரியது

    வெங்காயம் - 1 பெரியது

    புளி - எலுமிச்சை அளவு

    தனியா தூள் - 1/2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மிளகு - 2 டீஸ்பூன்

    பூண்டு - 10 பல்

    உப்பு - தேவையான அளவு

    காய்ந்த மிளகாய் - 4

    கொத்தமல்லி - 1 கைப்பிடி

    கறிவேப்பிலை - 2 கீற்று

    பச்சை மிளகாய் - 1

    எண்ணெய் - தேவையான அளவு

    இஞ்சி - சிறு துண்டு

    செய்முறை:

    கருவாட்டை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்த பின்னர் வறுத்து வைக்கவும். வறுத்த கருவாட்டை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வெங்காயம், 1 தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    அதனுடன் 1 தக்காளியை சேர்த்து லேசாக அரைத்துக்கொள்ளவும்.

    புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும்.

    பச்சை வாசனை போகும் அளவுக்கு நன்றாக வதக்கி அதில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும்.

    மீதமுள்ள ஒரு தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தனியா தூள் முதலியவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி பின்னர் புளி தண்ணீர் கொஞ்சம் அதிகமாகவே சேர்க்க வேண்டும்.

    பிறகு வறுத்த கருவாடு துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்து கருவாடு வெந்து வாசனை வரும்போது கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான கருவாட்டு ரசம் தயார்.

    இதற்கு நெத்திலி கருவாட்டையும் பயன்படுத்தலாம். சூப்பராக இருக்கும்.

    • சேமியாவில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று சேமியா முட்டை பிரியாணி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 1 கப்

    நெய் - 3 டீஸ்பூன்

    பட்டை - 2

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    முட்டை - 1

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சேமியாவை நெய் விட்டு வறுத்து கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி போட்டு குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி பின்பு முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்.

    இதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும்.

    கொதித்த பிறகு, வறுத்த சேமியாவை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.

    சேமியா நன்கு வெந்தபிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    சுவையான சேமியா முட்டை பிரியாணி தயார்.

    • தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1/2 கிலோ.

    முருங்கைக்காய் - 4.

    வெங்காயம் - 200 கிராம்.

    தக்காளி - 100 கிராம்

    பச்சை மிளகாய் - 4.

    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்.

    மிளகுத் தூள் - 4 டீ ஸ்பூன்.

    மிளகாய் தூள் - தேவைக்கேற்ப

    மிளகாய் வற்றல் - 6.

    கொத்தமல்லி இலை - 1 கப்.

    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்.

    உப்பு - தேவையான அளவு.

    எண்ணெய் - 1 குழிக்கரண்டி.

    செய்முறை:

    சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    முருங்கைக்காயையும் துண்டுகளாக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, முருங்கைக்காய், சிக்கன் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

    சிக்கன், முருங்கைக்காய் நன்கு வெந்ததும், மிளகுத் தூளைச் சேர்த்துக் கிளறவும்.

    கிரேவி திக்கான பதம் வந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    இப்போது முருங்கைக்காய் பெப்பர் சிக்கன் கிரேவி ரெடி.

    • குழந்தைகளுக்கு உணவுகளை வித்தியாசமான செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    • இன்று சிக்கன் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் கொத்துக்கறி - 200 கிராம்

    சின்ன வெங்காயம் - 10

    தக்காளி - 1

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    மிள்காய் தூள் - 2 டீஸ்பூன்

    பச்சைமிளகாய் - 1

    கரம்மசாலாத்தூள் - 1 சிட்டிகை

    எண்ணெய், உப்பு - தேவைக்கு

    கொத்தமல்லி - சிறிதளவு

    முட்டை - 1

    தோசை மாவு - 1 கப்

    செய்முறை:

    சிக்கன் கொத்துக்கறியை நன்றாக கழுவி வைக்கவும்.

    சின்ன வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், சேர்த்து வதக்கவும் பின்பு கொத்துக்கறியை போட்டு வதக்கி உப்பு தண்ணீர் சேர்த்து வேகவிட்டு சுருண்டு வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    தோசைக்கல்லை காயவைத்து மாவை கனமான தோசையாக வார்த்து அதன் மேல் கொத்துக்கறி கலவையை பரப்பி அதன் மேல் முட்டையை அடித்து ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சுவையான சிக்கன் தோசை தயார்.

    • இட்லி, சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    • மட்டன் குழம்பிற்கு மாற்றாக இந்த ரெசிபியை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    மட்டன் எலும்பு - 200 கிராம்,

    துவரம்பருப்பு - 50 கிராம்,

    கடலை பருப்பு - 50 கிராம்,

    கத்தரிக்காய் - 2,

    வாழைக்காய் - 1/2 காய்,

    புளி - 10 கிராம்,

    மாங்காய் - 1/2,

    இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்,

    பச்சை மிளகாய் - 4,

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,

    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,

    பட்டை - 5 கிராம்,

    பிரிஞ்சி இலை - 2,

    உப்பு - தேவைக்கு.

    செய்முறை

    துவரம் பருப்பு, கடலைப்பருப்பை நன்கு கழுவி, ஊற வைக்கவும்.

    வாழைக்காய், கத்தரிக்காய், மாங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு குக்கரில் இரண்டு பருப்புகள், மட்டன் எலும்பு, சிறிது கொழுப்பு, கத்தரிக்காய், வாழைக்காய், மாங்காய், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்.

    தேவைப்பட்டால் புளியை கரைத்து அதனை பருப்பு வெந்தவுடன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கலாம்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, பிரிஞ்சி இலை தாளித்து இதனுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    • பிரியாணி, புலாவ், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இன்று சிக்கன் சுக்கா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - ½ கிலோ

    வெங்காயம் - 1

    பட்டை - 1 துண்டு

    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

    மிளகு - 2 ஸ்பூன்

    சீரகம் - 1 ஸ்பூன்

    சோம்பு - 1 ஸ்பூன்

    இஞ்சி - 1 துண்டு

    பூண்டு - 10 பல்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.

    * மிக்ஸியில் பட்டை, சீரகம், மிளகு, சோம்பு, இஞ்சி, பூண்டு போட்டு நன்றாக அரைக்கவும்.

    * ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், அரைத்த மசாலா, தேவையான உப்பு சேர்த்து பிசறி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    * ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் ஊற வைத்த சிக்கனை போட்டு வேக வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும்.

    * இதற்கு சிக்கனில் உள்ள தண்ணீரே போதுமானது. தண்ணீர் சேர்க்கக்கூடாது. சிக்கனில் தண்ணீர் வற்றிய பிறகு சிறு தீயில் வைத்துக் கிளறினால் உப்பு, காரம் சிக்கனில் சேர்ந்து இருக்கும்.

    * எண்ணெய் பிரிந்து வரும் போது சிக்கனை கொத்தமல்லி தூவி இறக்கவும்.

    * சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல் ரெடி.

    • கோலா உருண்டைகளில் பல வகைகள் உண்டு.
    • இன்று நாம் காண இருப்பது மீன் கோலா உருண்டை.

    தேவையான பொருட்கள்

    வஞ்சிரம் மீன் - 250 கிராம்

    பிரெட் தூள் - தேவையான அளவு

    சோள மாவு - 2 மேஜைக்கரண்டி

    பெரிய வெங்காயம் - 1

    உருளைக்கிழங்கு - 1

    பூண்டு - 4 பல்

    இஞ்சி - சிறிய துண்டு

    மஞ்சள் தூள் - ½ மேஜைக்கரண்டி

    மிளகு தூள் - 1 சிட்டிகை

    கொத்தமல்லி - சிறிதளவு

    மிளகாய் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மீன் துண்டுகள் சிறிது உப்பு, மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் தெளித்து 5 நிமிடங்கள் வேக விடவும்.

    வெந்த மீனை ஆறவிட்டு எள், தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டைசேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் உதிர்த்து வைத்துள்ள மீனை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பின்னர் அதில் மிளகு தூள், மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு கிளறி விட்டு அதை வேக விடவும்.

    அனைத்தும் ஒன்று சேர்ந்து வரும் போது கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    இப்பொழுது ஒரு பவுலில் சோள மாவை போட்டு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    பிடித்து வைத்துள்ள உருண்டைகளை சோள மாவில் நன்கு முக்கி பின்பு அதை பிரெட் தூளில் நன்றாக பிரட்டி ஒரு தட்டில் வைக்கவும். இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் செய்யவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை போட்டு பக்குவமாக பொரித்து எடுக்கவும்.

    பொரித்த உருண்டைகளை ஒரு தட்டில் வைத்து அதை கெட்சப்புடன் சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் மொறு மொறுப்பாக இருக்கும் மீன் கோலா உருண்டை தயார்.

    • சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இந்த ரெசிபி அருமையாக இருக்கும்.
    • இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1/2 கிலோ

    எண்ணெய்/நெய் - 5 டேபிள் ஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    பட்டை - 1 பெரிய துண்டு

    பெரிய வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

    தயிர் - 1 கப்

    உப்பு - சுவைக்கேற்ப

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்

    சீரகத் தூள் - 2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    கரம் மசாலா - 2 டீஸ்பூன்

    காய்ந்த வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன்

    கொத்தமல்லி - ஒரு கையளவு

    செய்முறை:

    * கொத்தமல்லி தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கனை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சிக்கன் ஒரு பதத்திற்கு வெந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.

    * பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    * பின்பு அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.

    * பின் அதில் சிக்கனை சேர்த்து, சிக்கனில் மசாலா நன்கு ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.

    * பின்னர் அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.

    * சிக்கன் நன்கு வெந்ததும், அதில் காய்ந்த வெந்தய கீரை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான தயிர் சிக்கன் கிரேவி தயார்.

    • தயிர், சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ரெசிபி.
    • குழந்தைகளுக்கு இந்த மீன் மிளகு மசாலா மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    துண்டு மீன் – அரை கிலோ

    வெங்காயம் – 200 கிராம்

    பச்சை மிளகாய் – நான்கு

    இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

    சீரகம் – ஒரு டீஸ்பூன்

    மிளகு தூள் – நான்கு டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் – ஐந்து

    கொத்தமல்லி இலை – ஒரு கப்

    மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

    உப்பு – தேவைகேற்ப

    எண்ணெய் – தேவைகேற்ப

    கறிவேபில்லை – சிறிதளவு

    செய்முறை

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேபில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

    பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டி விழுது, மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் மீன் சேர்த்து, உடையாமல் வேகும் வரை அவ்வப்போது கிளறி, புரட்டி விடவும்.

    மீன் வெந்ததும், மிளகுதுளை சேர்த்து கிளறவும்.

    நறுக்கிய கொத்தமல்லி இலையை மீனை இறக்குவதற்கு முன் சேர்த்து கிளறி இறக்கவும்.

    இப்போது சூப்பரான மீன் மிளகு மசாலா ரெடி.

    • சமோசாக்களில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
    • இன்று மாட்டு இறைச்சி வைத்து சமோசா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மாட்டு இறைச்சி - அரைக்கிலோ (கொத்து இறைச்சி/கீமா/கைமா)

    உருளைக்கிழங்கு - 4

    பச்சை மிளகாய் - 3

    பெரிய வெங்காயம் - 2

    கறிமசாலா - 1 தேக்கரண்டி

    மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி

    மிளகாய் பொடி - தேவையான அளவு

    நச்சீரகம், பெருஞ்சீரகம் பொடி - தலா 1 தேக்கரண்டி

    ஏலக்காய் - 2

    கருவாப்பட்டை - 2

    இஞ்சி பூண்டு, விழுது - 1 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    சமையல் எண்ணெய் - பொரிக்கவும், தாளிக்கவும்

    மைதா மாவு - 1 கப்

    செய்முறை:

    ப.மிளகாய், வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறைச்சியை நன்றாக கழுவி சிறிது உப்பு, மஞ்சள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

    மைதா மாவில் உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய், தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரைமணிநேரம் ஊற வைக்கவும்.

    உருளை கிழங்கை கழுவி விட்டு நன்றாக அவித்து தோலுரித்து, அதை மசித்து வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் 3 மேசைக்கரண்டி விட்டு சூடானதும் ஏலக்காய், கருவாப்பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி பூண்டு விழுதை போட்டு கிளறவும்.

    அடுத்து அதில் வேக வைத்த இறைச்சியை போட்டு நன்றாக கிளற வேண்டும்

    அடுத்து மஞ்சள் தூள், உப்பு, மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.

    அத்துடன் பச்சை மிளகாய், கறிமசாலா பொடி, மல்லி பொடி, மிளகாய் பொடி, நச்சீரகம், பெருஞ்சீரகம் பொடி போட்டு கிளறி விடவும்.

    கடைசியாக வெங்காயம் போட்டு நன்றாக வதங்கி நீர் வற்றியதும் இறக்கி தனியாக வைக்கவும்

    மாலை சப்பாத்தி போல் திரட்டி இரண்டாக வெட்டி கோன் வடிவில் செய்து அதன் உள்ளே சிறிது பீப் மசாலாவை வைத்து ஓரங்களில் நன்றா ஒட்டி விடவும்.

    இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான பீப் சமோசா ரெடி.

    • முட்டையை வைத்து பல்வேறு வகையான ஆம்லெட்டுகளை செய்யலாம்.
    • இன்று உருளைக்கிழங்கு சேர்த்து ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    முட்டை - 5

    உருளைக்கிழங்கு - 2

    மிளகாய் - 5

    பெரிய வெங்காயம் - 1

    வெண்ணெய் - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு

    செய்முறை

    கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அதனுடன் வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் தடவி உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி ஆம்லெட் போல வேகவிடவும்.

    நன்கு வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறலாம்.

    சூப்பரான உருளைக்கிழங்கு ஆம்லெட் ரெடி.

    • இந்த ரெசிபி சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.
    • சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    கீமா - 1 கிலோ (நன்கு நீரில் அலசிக் கொள்ளவும்)

    வெண்ணெய் - 1 கப்

    தயிர் - 500 கிராம்

    இஞ்சி பேஸ்ட் - 3 டீஸ்பூன்

    பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்

    வெங்காயம் - 3

    தக்காளி - 2

    கிராம்பு - 5-7

    பட்டை - 1 இன்ச்

    கருப்பு ஏலக்காய் - 2

    பச்சை ஏலக்காய் - 2

    பச்சை மிளகாய் - 6-7

    பிரியாணி இலை - 2

    உப்பு - தேவையான அளவு

    மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிது

    செய்முறை:

    * தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, பட்டை, கருப்பு மற்றும் பச்சை ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்த, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    * பின்னர் அதில் இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

    * அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கீமாவை போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.

    * பின்பு அதில் தக்காளியை போட்டு நன்கு வதக்கி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.

    * பின் அதில் வெண்ணெயை சேர்த்து நன்கு பிரட்டி, மற்றொரு அடுப்பில் உள்ள வாணலியில் போட்டு கிளறி விட வேண்டும்.

    * பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை நன்கு கீமாவை வேக வைக்க வேண்டும்.

    * அடுத்து அதில் தயிர் சேர்த்து கிளறி, மிதமான தீயில் மூடி வைத்து கீமா தயிரை முற்றிலும் உறிஞ்சியதும், அடுப்பில் இருந்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், பட்டர் கீமா மசாலா ரெடி!!!

    ×