search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல்"

    • 2 கப் சர்க்கரையை சேர்த்து அதனுடன் 1 கப் தண்ணீரை ஊற்றி சர்க்கரை கரையும் வரை நன்கு கொதிக்க விடுங்கள்.
    • பொறித்து வைத்துள்ள மிட்டாய்களை சேர்த்து 2 மணி நேரம் ஊற விடுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்

    அரிசி – 1 டேபிள் ஸ்பூன்

    சர்க்கரை – 2 கப்

    பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்

    ஃபுட் கலர் – 1/4 டீஸ்பூன்

    எண்ணெய் – தேவையான அளவு

    தண்ணீர் – 1 கப்

    செய்முறை:

    * முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் உளுந்து மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அரிசி ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணிநேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்.

    * பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு மாவாக அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1/4 டீஸ்பூன் ஃபுட் கலர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

    * அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள மாவை ஒரு சிறிய ஸ்பூனை கொண்டு சிறிது சிறிதாக ஊற்றி பொறித்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

    * இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கப் சர்க்கரையை சேர்த்து அதனுடன் 1 கப் தண்ணீரை ஊற்றி சர்க்கரை கரையும் வரை நன்கு கொதிக்க விடுங்கள்.

    * அது நன்கு கொதித்தவுடன் அதனை அடுப்பில் இருந்து இறக்கி அதில் பொறித்து வைத்துள்ள மிட்டாய்களை சேர்த்து 2 மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் அதன் மீது சிறிதளவு சர்க்கரையை தூவி கொள்ளுங்கள்.

    இப்பொழுது நமது சுவையான தேன் மிட்டாய் ரெடி.

    • குழந்தைகளுக்கு ஒரு முறை செய்து தந்து பாருங்கள் அவர்கள் மீண்டும் விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள்.
    • 10 பாதாம் மற்றும் 10 பிஸ்தா ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    பால் – 2 1/2 கப்

    பால் பவுடர் – 1/4 கப்

    பிரட் – 4

    சர்க்கரை – 1/4 கப்

    குங்குமப் பூ – 1 சிட்டிகை

    சோள மாவு – 1 டீஸ்பூன்

    ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்

    நெய் – 2 டேபிள் ஸ்பூன்

    பாதாம் – 10

    பிஸ்தா – 10

    செய்முறை:

    * முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 1/2 கப் பாலினை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.

    * அதனுடன் 1/4 கப் பால் பவுடர், 1/4 கப் சர்க்கரை, 1 சிட்டிகை குங்கும பூ மற்றும் 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூளினையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

    * அது நன்கு கொதித்த பிறகு அதனுடனே 1 டீஸ்பூன் சோள மாவினை சிறிதளவு தண்ணீரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது அது ஓரளவு கெட்டியாகி விடும். அதனை அடுப்பிலிருந்து இறக்கி கொள்ளுங்கள்.

    * அடுத்து 4 பிரெட்டுகளின் ஓரங்களை நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் நெய்யினை ஊற்றி அதில் நாம் ஓரங்களை நறுக்கி வைத்துள்ள பிரெட்டுகளை சேர்த்து நன்கு பொறித்து எடுத்து கொள்ளுங்கள்.

    * பின்னர் அதனை நாம் முன்னரே தயாரித்து வைத்துள்ள கலவையில் பொரித்த பிரட்டை சேர்த்து அதன் மீது 10 பாதாம் மற்றும் 10 பிஸ்தா ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.

    * இப்பொழுது சுவையான ஷாஹி துக்டா தயாராகிவிட்டது வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த ஷாஹி துக்டா ரெசிபியை உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முறை செய்து தந்து பாருங்கள் அவர்கள் மீண்டும் விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள்.

    • அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் நண்டை போடவும்.
    • ஒரு கிணத்தில் ஊற்றி மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

    தேவையான பொருட்கள்:

    கடல் நண்டு - 5

    மிளகு தூள் - 1 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

    இஞ்சி பூண்டு பேஸ்ட்- தேவையான அளவு

    பிரிஞ்சி இலை - 1

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    தக்காளி - 2

    வெங்காயம் - 1

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி- தேவையான அளவு


    செய்முறை:

    * முதலில் நண்டை கழுவி இடித்து தனியாக தண்ணீர் ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.

    * இப்போது அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் நண்டை போடவும்.

    * அதில் வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய், பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு இடித்து போட்டாலும் சரி பேஸ்ட் போட்டாலும் உங்கள் வசதிக்கு ஏற்றது போல் சேர்த்துக்கொள்ளவும்.

    * பின்பு அதில் கருவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், இப்போது அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றவும்.

    * பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். அதனை மூடி வைத்து கொதிக்கவிடவும்.

    * இது அனைத்தும் நன்கு வெந்தவுடன் ஒரு சூப் போல் இருக்கும் அதனை எடுத்து ஒரு கிணத்தில் ஊற்றி மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

    • பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும், இதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்ந்து நன்கு வதக்கவும்.
    • இறுதியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    ஆடு போட்டி - 1

    சின்ன வெங்காயம் - 100கி

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி - 2

    பச்சை மிளகாய் - 4

    பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு

    சோம்பு - தேவையான அளவு

    மிளகு, சீரகம் - 2 ஸ்பூன்

    தேங்காய் - துருவியது சிறிதளவு

    இஞ்சி, பூண்டு விழுது - தேவையான அளவு

    கறிவேப்பிலை - ஒரு கொத்து

    கொத்தமல்லி - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    • ஆடு போட்டியை இரண்டு முதல் மூன்று முறை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்

    • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றவும் அதில் லவங்கம், கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

    • பின்னர் சின்ன வெங்காயத்தை சேர்த்து அதையும் நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

    • இதில் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கி விடவும்.

    • இதை ஆறவிட்டு பின்னர் ஒரு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் சேர்த்து பட்டை, சோம்பு, சீரகம் சேர்த்து வதக்கவும்.

    • இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    • பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும், இதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்ந்து நன்கு வதக்கவும்.

    • அதன்பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள ஆடு போட்டி சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் நன்கு பிரட்டவும்.

    • பிரட்டிய ஆடு போட்டியில் உள்ள நீர் வெளியே வந்தவுடன், அதனுடன் அரைத்து வைத்திருந்த சின்னவெங்காயம் விழுதை சேர்க்கவும்.

    • இதனுடன் மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியா தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்

    • பின்னர் குக்கரை மூடி வைத்து 7 முதல் 8 விசில் வரும் வரை சமைக்கவும்.

    • இறுதியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

    • இதோ சுவையான இட்லி, தோசை, சாப்பாடு, சப்பாத்தி என்று அனைத்திற்கும் சாப்பிட உகந்த ஆடு போட்டி கிரெவி ரெடி.

    • ஒரு வாணலியில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை நன்கு பாகு எடுத்துக் கொள்ளவும்.
    • இஞ்சியை தோல்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்:

    நெல்லிக்காய் - 400 கிராம்

    இஞ்சி - 100 கிராம்

    வெல்லம் - 400 கிராம்

    எலக்காய் - 1/2 ஸ்பூன்

    நெய் - 4 ஸ்பூன்

    செய்முறை:

    • ஒரு இட்லி பாத்திரத்தில் நெல்லிக்காய் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம்.

    • நெல்லிக்காய் நன்கு வெந்துவிட்டதா என்று பார்க்கவும். நெல்லிக்காயை லேசாக அழுத்தினால் வெந்துவிட்டதா என்று தெரியும்.

    • இஞ்சியை தோல்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    • வேகவைத்த நெல்லிக்காய் மற்றும் இஞ்சி துண்டுகளை ஒரு மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு வாணலியில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை நன்கு பாகு எடுத்துக் கொள்ளவும்.

    • பாகு எடுத்த வெல்லத்தில் அரைத்து வைத்திருக்கும் நெல்லிக்காய் இஞ்சி விழுதை சேர்த்து நல்ல கெட்டியான பதத்திற்கு கிளறவும்

    • கிளறும் போது இடை இடையே நெய் சேர்க்கவும்.


    • நெல்லிக்காய் இஞ்சி மரப்பா பதத்திற்கு வந்து விட்டதா என்று சரிப்பார்க்க உங்கள் கையில் லேசாக நெய் தொட்டு மிதமான சூடு இருக்கும் போது எடுத்து உருட்டி பார்க்கவும் நல்ல உருண்டை பதம் வந்துவிட்டால் நீங்கள் செய்த நெல்லிக்காய் இஞ்சி மரப்பா ரெடி என்று அர்த்தம்

    • அப்படி இல்லையென்றால் மறுபடியும் ஒரு 5 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து கிளறவும்.

    • பின்னர் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வடிவத்தில் உள்ள பாத்திரத்தில் மாற்றி உங்களுக்கு தேவையான வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

    • இதோ சுவையான உடலுக்கு நல்ல ஆரோக்கியம் நிறைந்த நெல்லிக்காய் இஞ்சி மரப்பா ரெடி.

    குறிப்பு: குழந்தைகளுக்கு இஞ்சியின் சுவை பிடிக்கவில்லை என்றால் இஞ்சிக்கு பதிலாக பாதாம் பருப்பு பொடி செய்து சேர்த்துக் கொள்ளலாம்.

    • ஊற வைத்துள்ள இறால் துண்டுகளை சேர்க்கவும்.
    • இவை அனைத்தையும் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்:

    இறால் - 1/2 கிலோ

    தேங்காய் பால் - 50 கிராம்

    மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

    மிளகுதூள் - நுனுக்கியது 1/2 ஸ்பூன்

    வரமிளகாய் பொடித்தது - 1/2 ஸ்பூன்

    இஞ்சி - பொடியாக நறுக்கியது 1 ஸ்பூன்

    பூண்டு - பொடியாக நறுக்கியது 1 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

    பச்சை மிளகாய் - 4 கீறியது

    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை:

    • இறாலை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

    • ஒரு பாத்திரத்தில் இறால், மஞ்சள் தூள், பொடித்த மிளகு, வரமிகாய் பொடித்தது, பூண்டு, தேங்காய் எண்ணெய் இவை அனைத்தையும் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.

    • மிக்ஸ் செய்த இறால் கலவையை ஃபிரிட்ஜில் வைத்து 30 முதல் 45 நிமிடம் ஊற வைக்கவும்.

    • ஒரு பௌவுலில் 50 கிராம் தேங்காய் பால், தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலையை பொடியாக கட் செய்து அதனுடன் சேர்த்து, தயாரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    • பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றில், அதில் ஊற வைத்துள்ள இறால் துண்டுகளை சேர்க்கவும்.

    • 3 நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பிவிடவும். மொத்தம் 5 நிமிடம் சமைக்கலாம். பின்னர் பச்சை மிளாய் சேர்க்கவும்

    • தயாரித்து வைத்துள்ள தேங்காய் பால் கலவையை இறாலுடன் சேர்த்து 3 நிமிடங்கள் கிளறவும்.

    • இதோ சுவையான தேங்காய் பால் ஃபிரான் ரோஸ்ட் ரெடி.

    • நூடுல்ஸ் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
    • காய்கறி பொரியலுக்கும் எப்படி பயன்படுத்தலாம்.

    நூடுல்ஸ் செய்வதற்கான மாசாலா வீட்டிலேயே தயாரிக்கலாம். அதன் செய்முறை பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

    நூடுல்ஸ் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதேவேளையில் அதன் மசாலாவை வீட்டிலேயே தயாரிக்கலாம். இதை காய்கறி பொரியலுக்கும் பயன்படுத்தலாம். எப்படி செய்வது என்று காணலாம்.

    வீட்டிலில் இருக்கும் மசாலா பொருட்களை வைத்து இதை தயாரித்து விடலாம். பட்டை, சீரகம், கொத்தமல்லி விதை, மக்சள், பூண்டு, எண்ணெய், மிளகு ஆகிய இருந்தால் மட்டும் போதுமானது.

    கடைகளில் கிடைக்கும் மசாலா பொடிகளை வைத்தும் இதை தயாரிக்கலாம். இல்லையென்றால் வீட்டிலேயே பொடி தயாரித்து அதன் பிறகு நூடுல்ஸ் மசாலா தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்களில் 100கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கடாயில் எண்ணெய் இல்லாமல் சீரகம், பட்டை, கொத்தமல்லி விதை, மிளகு ஆகியவற்றை நன்றாக வதக்க வேண்டும். கரம் மசாலா தயாரித்து வைத்துகொள்ள வேண்டும், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக ஈரப்பத்தம் இல்லாமல் வதக்கி அதையும் பொடியாக தயாரிக்க வேண்டும்.

    இப்போது ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு உப்பு, சீரகப் பொடி, மிளகுப் பொடி, சீரத்தூள், பட்டை தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், மிள்கு தூள், பூண்டு,வெங்காய தூள் எல்லாவற்றையும் சம அளவில் சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்ளோதான். நூடுல்ஸ் மசாலா தயார். இதை உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், கோவக்காய் உள்ளிட்ட பொரியலுக்கு பயன்படுத்தலாம்.

    • குழந்தைகளுக்கு பிடித்தமான டிஷ் வரிசையில் பட்டர் சிக்கன் கண்டிப்பா இருக்கும்.
    • வெண்ணையில் வைட்டமின் ஏ சத்து மற்றும் சிக்கனில் புரோடீன் உள்ளது.

    குழந்தைகளுக்கு பிடித்தமான டிஷ் வரிசையில் பட்டர் சிக்கன் கண்டிப்பா இருக்கும். இன்னைக்கு பட்டர் சிக்கன் சமைக்கப் போறேன்ன்னு மட்டும் சொல்லி பாருங்க. உங்க குழந்தைங்க ரொம்ப ஜாலி ஆயிடுவாங்க. வெண்ணையில் வைட்டமின் ஏ சத்து மற்றும் சிக்கனில் புரோடீன் உள்ளது. இது குழந்தைகளோட ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது. ஹோட்டல்களில் பிரபலமா உள்ள இந்த பட்டர் சிக்கன் நம்ம வீட்டில் எப்படி சமைக்கலாம்னு பாக்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் -500 கிராம்

    வெங்காயம்- 2

    தக்காளி- 2

    இஞ்சி பூண்டு விழுது- ஒரு ஸ்பூன்

    காஷ்மீரி மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்

    மல்லி தூள்- ஒரு ஸ்பூன்

    தயிர்- ஒரு ஸ்பூன்

    சீரக தூள்- ஒரு ஸ்பூன்

    கரம் மசாலாதூள்- ஒரு ஸ்பூன்

    மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்

    கஸூரி மெத்தி

    கொத்தமல்லி இலை

    ஃபிரெஷ் கிரீம்- தேவைப்பட்டால்

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை:

    சிக்கனை நன்றான சுத்தம்செய்து எடுத்துகொள்ள வேண்டும். அதற்க்கு ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கன் துண்டுகள், இஞ்சி பூண்டு விழுது, கெட்டி தயிர், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி முப்பது நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதனுடன் மசாலாவில் ஊறிய சிக்கனை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மசாலா விழுது தயாரிக்க ஒரு கடாயில் ஒரு துண்டு வெண்ணெய், சிறிதளவு எண்ணெய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, காஷ்மீரி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்

    வதக்கியவற்றில் பத்து முந்திரி பருப்பு சேர்த்து பின்பு மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    அடுத்து பட்டர் சிக்கன் செய்ய ஒரு கடாயில் வெண்ணெய், மிளகாய் தூள் சேர்த்து கலக்கிய பின்பு அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    இந்த கலவையில் வேகவைத்த சிக்கன் துண்டுகள் மற்றும் பிரெஷ் கிரீம் சேர்த்து மூடிய நிலையில் பத்து நிமிடத்திற்கு சமைக்க வேண்டும். பத்து நிமிடத்திற்கு பிறகு கஸூரி மெத்தி மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான மற்றும் எளிமையான பட்டர் சிக்கன் தயார்.

    • சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் கொத்துக்கறியை போட்டு நன்கு வேக வைக்கவும்.
    • வறுத்து எடுத்ததை ஒரு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்:

    நல்லெண்ணெய் - பொறிக்க

    மட்டன் கொத்துக்கறி - 1/2 கிலோ

    உப்பு - தேவையான அளவு

    மஞ்சள் - 1/2 ஸ்பூன்

    மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப

    இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு

    கடலை பருப்பு 100 கி

    உளுந்தம் பருப்பு - 100 கி

    மிளகு - 50 கிராம்

    கருப்பு எள்ளூ - 50 கி

    சீரகம் - 50 கி

    வரமிளகாய் - 50 கி

    இட்லி மாவு - 1 கிலோ


    செய்முறை:

    • முதலில் மட்டன் கொத்துக்கறியை நன்கு அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் கொத்துக்கறியை போட்டு நன்கு வேக வைக்கவும்.

    • இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், காரத்திற்கு ஏற்ற மிளகாய் தூள், தேவையான அளவு இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்ந்து அதனுடைய பச்சை வாடை போகும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு கடாயில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, கருப்பு எள்ளு, சீரகம், வரமிளகாய் போன்றவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    • வறுத்து எடுத்ததை ஒரு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

    • ஒரு இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி தட்டுகளில் மேல் ஒரு துணி போட்டு, முதலில் இட்சி மாவை 1/2 கரண்டி ஊற்றவும்.

    • பின்னர் தயாரித்து வைத்துள்ள மட்டன் கொத்து கறி கலவையை சிறிதளவு வைக்கவும்.

    • பின்னர் மறுபடியும் 1/2 கரண்டி அளவு மாவை ஊற்றி பின்னர் இட்லி தட்டுகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    • பின்னர் வெந்த இட்லிகளை தனியாக எடுத்து வைக்கவும்.

    • பின்னர் ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி தயாரித்து வைத்திருக்கும் பொடியை போட்டு சிறு தீயில் கிளறவும்.

    • பின்னர் தயாரித்து வைத்துள்ள கறி இட்லியை பொடி கலவையில் போட்டு பிரட்டி எடுக்கவும்.

    • இதோ தமிழ்நாட்டு ஸ்டைல் கறி இட்லி ரெடி.

    • ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு மஞ்சள் தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
    • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சிறிது உப்பு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்:

    வடா பாவ் பன் - 10

    உருளைக்கிழங்கு - 4

    மஞ்சள் தூள் - 1 பின்ச்

    எண்ணெய் - தேவையான அளவு

    கடுகு - 1/4 ஸ்பூன்

    கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு

    எலுமிச்சை - 1

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - தேவையான அளவு

    கடலை மாவு - 200 கிராம்

    தண்ணீர் - தேவையான அளவு

    நல்லெண்ணெய் - பொறிக்க

    பச்சை மிளகாய் - 10

    புதினா சட்னி - தேவையான அளவு

    கார சட்னி - தேவையான அளவு

    செய்முறை:

    • முதலில் உருளைக் கிழங்கை ஒரு குக்கரில் போட்டு நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    • வேகவைத்த உருளைக் கிழங்கை தோல்களை நீக்கி, ஒரு மத்து அல்லது மேஷர் கொண்டு மசித்து எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடுகு மஞ்சள் தூள், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    • பின்னர் மசித்து வைத்துள்ள உருளைக் கிழங்கு, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும்.


    • கிளறிய உருளைக்கிழங்கை சிறிது நேரம் ஆற விடவும்.

    • ஆறிய கிழங்கை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சிறிது உப்பு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு கடாயில் நல்லெண்ணை ஊற்றவும்.

    • நன்கு எண்ணெய் காய்ந்தவுடன் உருட்டி வைத்திருந்த உருளைக்கிழங்கை கடலை மாவு கலவையில் சேர்த்து எண்ணெய் சட்டியில் போட்டு பொறித்து எடுத்து கொள்ளவும்.

    • அதே எண்ணெயில் பச்சை மிளகாய் போட்டு பொறித்து எடுத்துக் கொள்ளவும்.

    • பின்னர் வடா பாவ் பன்னை எடுத்து குறுக்கே இரண்டாக வெட்டிக் கொள்ளவும். (முழுமையான வெட்டக்கூடாது)

    • வெட்டிய பன்னின் உள்ளே ஒருபக்கம் புதினா சட்னியையும், மறுப்பக்கம் சட்னியை தடவி பொறித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை நடுவில் வைத்து அதனுடன் பொறித்து எடுத்த பச்சை மிளகாய் வைத்து பரிமாறிவும்.

    • இதோ வீட்டிலேயே எந்த தீங்கும் இல்லாத வடா பாவ் ரெடி.

    • பஜ்ஜி மாவில் சிறிது இட்லி மாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
    • பருப்பு வேகவைக்கும்போது, விளக்கெண்ணெய் சேர்த்தால், பருப்பு நன்கு குழைந்து வரும்.

    ஆட்டுக்குடல் குழம்பு வைக்கும்போது அதில் தேங்காய் சிரட்டை போட்டு வேகவைத்தால், ஆட்டுக்குடல் சீக்கிரம் வெந்து விடும்.

    பஜ்ஜி மாவில் சிறிது இட்லி மாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

    முட்டை ஆம்லெட் செய்யும்போது, காரம் சாப்பிடாதவர்கள் பச்சை மிளகாயை தவிர்த்து குடை மிளகாயை சேர்த்தால், சுவை கூடுதலாகும்.

    ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும்போது அதனுடன் சிறிது கொள்ளுவையும் சேர்த்தால் ரசத்தின் சுவை கூடும்.

    சாம்பார் தயாரிப்பதற்கு பருப்பு வேகவைக்கும்போது, அதில் விளக்கெண்ணெய் சேர்த்தால், பருப்பு நன்கு குழைந்து வரும்.

    புளிச்சோறு, ரசம், வத்தக்குழம்பு போன்ற புளி சம்பந்தப்பட்ட உணவு தயார் செய்யும்போது அதில் சிறிதளவு வெல்லம் சேர்த்தால், சுவை கூடும்.

    புளி சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றுக்கு, நிலக்கடலையை வறுத்துப் போடாமல், எண்ணெய்யில் பொரித்துப்போட்டால், மொறு மொறு என்று இருக்கும்.

    பீன்ஸ், முட்டைக்கோஸ் கூட்டு செய்யும்போது தேங்காய், சீரகம் அரைத்து சேர்த்தால், ருசியாக இருக்கும்.

    பாசிப்பயறு, கொண்டைக்கடலை சுண்டல் செய்யும்போது, தேங்காய் துருவலுடன் சிறிது இஞ்சி துருவல் சேர்த்து தாளித்தால் சுவை கூடும்.

    குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால், பாயசம் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக ஜீராவை கலந்து கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

    • பார்ப்பதற்கு சிம்பிளாக தெரிந்தாலும், ருசி அப்படி இருக்கும்.
    • ஆரோக்கியமான உணவு என்றே சொல்லலாம்.

    குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா போன்ற வட இந்திய பகுதிகளில், தால் தோக்லி என்ற டிஷ், பிரபலமாக இருக்கிறது. பார்ப்பதற்கு சிம்பிளாக தெரிந்தாலும், ருசி அப்படி இருக்கும்.

    இதில் எண்ணெய் சேர்க்கப்படாது. நெய் கொண்டு தான் செய்யப்படும். அதுவும் குறைந்த அளவு தான். அதனால் இது ருசி மட்டும் அல்ல, ஆரோக்கியமான உணவு என்றே சொல்லலாம். இத்தகைய தால் தோக்லி உணவை எப்படி செய்வது என்று இங்கே காண்போம்.

    தேவையான பொருட்கள்

    துவரம் பருப்பு - 1/2 கப்

    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

    பூண்டு - 5 பல்

    கோதுமை மாவு- 1 கப்

    ஓமம் - 1/4 டீஸ்பூன்

    நெய் - 3 டீஸ்பூன்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    பெருங்காயம் - சிறிதளவு

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    மல்லி இலை - ஒரு கைப்பிடி

    செய்முறை

    குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அரை கப் துவரம் பருப்பை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து மூடவும். 5 விசில் வரும் வரை விடவும்.

    தற்போது ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஓமம், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாதி மாவு பதத்திற்கு பிசையவும்.

    பின்னர் இந்த மாவை சப்பாத்தி போல் தேய்த்து எடுத்துக்கொள்ளவும். இதனை சின்ன சின்ன துண்டுகலாக நறுக்கவும். இதனை ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும்.

    கடாயில் நெய் சேர்த்து கடுகு, பெருங்காயம் சேர்த்து வதக்கவும். கடுகு வெடித்ததும், வெந்த பருப்பை சேர்த்துக்கொள்ளவும்.

    இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பருப்பை கலந்துவிட்வும். இதனுடன் உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

    இவை நன்கு கொதித்து வந்ததும், நறுக்கி வைத்த மாவு துண்டுகளை இதில் சேர்க்கவும். 15 நிமிடம் வேக வைக்கவும்.

    அவ்வளவு தான் தால் தோக்லி ரெடி. இதனை வேறு பாத்திரத்தில் மாற்றி, இதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் மல்லி இலை சேர்த்து சாப்பிடவும்.

    ×