search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல்"

    • உடலுக்கு தேவையான புரதத்துக்கும் தயிர் அவசியமானது.
    • உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

    உண்ணும் உணவில் தயிர் தவிர்க்கமுடியாத அங்கமாக இருக்கிறது. தயிரை ருசிக்க ஆர்வம் காண்பிக்காதவர்கள் கூட ரைத்தா, லஸ்சி, பச்சடி வடிவில் உட்கொள்கிறார்கள். தயிரில் புரோபயாடிக்குகள் நிறைவாக உள்ளன. அதில் இருக்கும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்தும். எலும்புகளின் ஆரோக்கியத்துக்கும், உடலுக்கு தேவையான புரதத்துக்கும் தயிர் அவசியமானது.

    தயிரை எப்போது சாப்பிடுவது சரியானது என்ற குழப்பம் பலரிடம் இருக்கிறது. அதனை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் அவரவர் உடல் நலனை பொறுத்து உண்ணும் நேரத்தை தீர்மானிப்பது நல்லது.

    குறிப்பாக சளி, இருமல், சுவாச கோளாறுகள் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் தயிர் உண்ணும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எந்தெந்த நேரத்தில் தயிர் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

    காலை: சுகாதார வல்லுனர்கள், ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி, காலையில் தயிர் சாப்பிட்டுவிட்டு அன்றைய நாளை தொடங்குவது வளர்சிதை மாற்றத்தை தூண்டும். தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமானத்தை சீராக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

    பழங்கள் அல்லது முழு தானியங்களுடன் தயிர் கலந்து காலை உணவாக உட்கொள்வது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் அளிக்கும். அன்றைய நாள் முழுவதையும் திருப்தியுடன் உணரவைக்கும்.

    மதியம்: மதிய உணவில் அவசியமாக தயிரை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் மதியம் தயிர் சாப்பிடுவது அன்றைய நாளில் இழந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நிரப்ப உதவும்.

    பொதுவாக மதிய வேளை நெருங்கும்போது நமது உடலில் ஆற்றலின் அளவு குறைய தொடங்கும். சாப்பாட்டுடன் தயிர் சாப்பிடும்போது ஊட்டச்சத்து இழப்பை ஈடு செய்துவிடும்.

    அத்துடன் திடீர் பசியை போக்க உதவும். அதனால் மாலை வேளையில் நொறுக்குத்தீனிகளை அதிகம் சாப்பிட தோன்றாது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பேணுவதற்கும் தயிர் வித்திடும்.

    இரவு: ஆயுர்வேத வல்லுனர்களின் கூற்றுப்படி இரவு உணவுடனோ அல்லது இரவு உணவை சாப்பிட்டு முடித்த பிறகோ தயிர் சாப்பிடுவது ஊட்டச்சத்துக்களை சீராக பராமரிக்க உதவும். குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் செய்யும்.

    அதேவேளையில் சளி, சுவாசம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் இரவில் தயிரை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் தயிருடன் அன்றைய நாளை நிறைவு செய்வது செரிமானத்திற்கு நன்மை சேர்க்கும்.

    கால்சியம், புரத தேவைகளை ஈடு செய்யும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படச் செய்யும்.

    • பல்வேறு நுண் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
    • அரிசிப் பொரியில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு அரு மருந்தாக செயல்படும்.

    அரிசியை பொரிப்பதன் மூலம் தயார் செய்யப்படும் அரிசிப் பொரியை உட்கொள்ளலாமா? என்ற தயக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. அரிசிப் பொரியும் ஊட்டச்சத்துமிக்க பொருள்தான். அதில் நார்ச்சத்து, புரதம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஏ, சி உள்பட பல்வேறு நுண் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அதனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவை. 

    * அரிசிப் பொரியில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு அரு மருந்தாக செயல்படும்.

    * இது குறைந்த கலோரி கொண்டது. அதனால் உடல் எடையை குறைக்கும் நபர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். இதிலிருக்கும் நார்ச்சத்தும், அத்தியாவசியமான ஊட்டச்சத்து கலவைகளும் பசியை கட்டுப்படுத்த உதவும். அதனால் அதிகம் சாப்பிடுவதை தடுத்து, விரைவாக உடல் எடை குறைவதற்கு வித்திடும்.

    * மனித உடலின் முக்கிய அங்கமாக விளங்கும் எலும்புகளை வலுப்படுத்துவதற்கும் அரிசிப் பொரி உதவும். அதிலிருக்கும் கால்சியம், இரும்பு, வைட்டமின் டி, தியாமின், ரிபோபிளேவின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் எலும்புகளிலுள்ள செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். மீளுருவாக்கமும் செய்யும். ஒட்டுமொத்த உடல் கட்டமைப்பு வளர்ச்சிக்கும் உதவும்.

    * அரிசிப் பொரியில் சோடியம் குறைவாகவே இருக்கும். அதனை உட்கொள்வது ரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதற்கு உதவும். உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் இரண்டையும் நிர்வகிக்க உதவும். இதய செயல்பாட்டையும் மேம்படுத்தும். மாரடைப்பு, ரத்த குழாய்களில் அடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.

    * அரிசிப் பொரியில் ஏராளமான ஆன்டி ஆக்சிடென்டுகள், தாதுக்கள், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் செய்கின்றன. தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடுவதற்கும், வயிற்றை பாதிக்கும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குவதற்கும் உதவுகின்றன. சளி, தொண்டை புண் மற்றும் சுவாசம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் துணைபுரிகின்றன.

    * செரிமானத்தை ஊக்குவிக்கவும் அரிசிப் பொரி சிறந்த சிற்றுண்டியாக பரிமாறப்படுகிறது. வயிறு மற்றும் குடலில் சேரும் உணவுத்துகள்களை உடைத்து ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கு தூண்டிவிடும்.

    * அரிசிப் பொரியில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமத்தை பொலிவாகவும் வைத்திருக்க உதவும். குறிப்பாக சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் சூரியக்கதிர்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். தோல் சுருக்கம், கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுவதை தடுப்பதோடு விரைவில் வயதான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதையும் தள்ளிப்போடும்.

    * அரிசிப் பொரியுடன் மசாலாப் பொருட்களை கலந்து சிற்றுண்டியாக தயார் செய்து சாப்பிடலாம். அரிசிப் பொரி ஏராளமான நன்மைகளை வழங்கினாலும் அதனை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். 150 கிராமுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. அதை விட அதிகமாக உட்கொள்வது உடல் பருமன் பிரச்சினைக்கு வித்திடும். இரவுப்பொழுதில் உட்கொள்வது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்திவிடும்.

    • டோஃபு பன்னீரை சதுர வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
    • பிரட் தூளில் பிரட்டி வைத்திருந்த டோஃபு பன்னீரை போட்டு நன்கு பொன்னிறம் வரும் வரை பொறித்து எடுக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    டோஃபு பன்னீர் - 400 கிராம்

    கார்ன்ஃப்ளார் - தேவைக்கேற்ப

    மைதா மாவு - தேவைக்கேற்ப

    பிரட்தூள்கள் - தேவையான அளவு

    இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    ரெட் சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்

    சோயா சாஸ் - 2 தேக்கரண்டி

    எண்ணெய் - வறுக்க

    மிளகுத்தூள் - சுவைக்கு ஏற்ப

    உப்பு - ருசிக்கேற்ப

    செய்முறை:

    • டோஃபு பன்னீரை சதுர வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

    • ஒரு கண்ணாடி பவுளில் வெட்டி வைத்துள்ள டோஃபு பன்னீர், ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்

    • பின்னர் இந்த பன்னீர் கலவையை ஒரு 15 நிமிடம் ஊறவிடவும்.

    • ஒரு தட்டில் மைதா மாவு, மற்றொரு தட்டில் பிரட் தூள்கள், ஒரு பவுளில் கார்ன்ஃப்ளார் மாவுவை கெட்டியாக கரைத்து எடுத்து கொள்ளுங்கள்

    • டோஃபு பன்னீர் 15 நிமிடங்கள் ஊறிய பின்னர் முதலில் மைதா மாவில் டிப் செய்து பின்னர் கார்ன்ஃப்ளார் மாவில் டிப் செய்து எடுத்து கொள்ளவும்.

    • கார்ன்ஃப்ளார் மாவில் டிப் செய்த டோஃபு பன்னீரை பிரட் தூளில் நன்கு அனைத்து பக்கங்களில் பிரட்டி எடுக்கவும்.

    • ஒரு வாணலில் தேவையான எண்ணெய் ஊறி பிரட் தூளில் பிரட்டி வைத்திருந்த டோஃபு பன்னீரை போட்டு நன்கு பொன்னிறம் வரும் வரை பொறித்து எடுக்கவும்.

    • டோஃபு பன்னீர் நகட்ஸ் ரெடி.

    • இதனுடன் டெமேட்டோ சாஸ் வைத்து சாப்பிட கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் விருப்பி சாப்பிடுவார்கள்.

    • பொறித்து வைத்திருந்த நண்டை சேர்த்து நன்கு பிரட்டவும்.
    • வெங்காயம், இஞ்சி, பூண்டு, குடமிளகாய் ஆகியவற்றை பொடியான நறுக்கி கொள்ளவும்.

    தேவையான பொருட்கள்:

    நண்டு - 10

    தக்காளி - 6

    காஷ்மீர் மிளகாய் - 50 கிராம்

    குடமிளகாய் - 4 வண்ணங்களில்

    வெங்காயம் - 2

    இஞ்சி - 2 துண்டு

    பூண்டு - 15 பல்

    வெண்ணெய் - தேவையான அளவு

    எண்ணெய் - பொறிக்க

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    • முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அதன் ஓடை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    • தக்காளி மற்றும் காஷ்மீர் மிளகாய் இரண்டையும் ஒரு மிக்ஸியில் போட்டு நன்கு விழுதாக அறைத்துக் கொள்ளவும்.

    • வெங்காயம், இஞ்சி, பூண்டு, குடமிளகாய் ஆகியவற்றை பொடியான நறுக்கி கொள்ளவும்.


    • ஒரு வாணயில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் சுத்தம் செய்து வைத்திருந்த நண்டை அதன் ஓடுடன் பொறித்து எடுத்துக் கொள்ளவும்.

    • பின்னர் ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்க்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

    • வெங்காயம் பொன்னிறமானவுடன் நறுக்கி வைத்த இஞ்சி, பூண்டு, குடமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

    • பின்னர் பொறித்து வைத்திருந்த நண்டை சேர்த்து நன்கு பிரட்டவும்.

    • பிரட்டிய நண்டில் அரைத்து வைத்திருந்த தக்காளி காஷ்மீர் மிளகாய் விழுதை சேர்த்து நன்கு கிளறி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும்.

    • இறுதியாக அடுப்பை அணைத்து விட்டு நண்டு மற்றும் அதன் ஓடு இரண்டு ஒன்றாக வைத்து பாறிமாறுங்கள் சுவையோ ஆஹா... ஓஹோ... என்று இருக்கும்.

    • மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
    • மேலே சோள மாவு கலவையை பரப்பி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    துருவிய சீஸ் - கால் கப்

    உருளைக்கிழங்கு - 4

    பிரெட் துண்டுகள் - 8

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    பூண்டு - 4 பல்

    பச்சை மிளகாய் - 4

    கொத்தமல்லி - ஒரு சிறுகட்டு (சுத்தம் செய்யவும்)

    எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

    சோள மாவு - 4 டேபிள்ஸ்பூன்

    பால் - ஒரு கப்

    மைதா - ஒரு டேபிள்ஸ்பூன்

    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, நன்கு மசிக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு நைஸாக அரைக்கவும். இதை மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

    சோள மாவு, பால், மைதா, மிளகுத்தூள், துருவிய சீஸ், சிறிதளவு உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு, இரண்டாக நறுக்கவும். நறுக்கிய பிரெட் துண்டுகளின் மேல் உருளை மசாலாவைத் தடவி, அதன் மேலே சோள மாவு கலவையை பரப்பி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பின்னர் பரிமாறவும்.

    • தோசையை புரட்டி போட அவசியம் இல்லை.
    • ரவை தோசை பதத்திற்கு கரைத்து கொண்டால் இன்னும் சிறப்பு.

    தேவையான பொருட்கள்:

    ஓட்ஸ் - 1 கப்

    அரிசி மாவு - ¼ கப்

    கோதுமை மாவு - ¼ கப்

    வெங்காயம் - 1 நறுக்கியது

    பச்சை மிளகாய் - 1 நறுக்கியது

    இஞ்சி - 1 தேக்கரண்டி நறுக்கியது

    சீரகம் - 1 தேக்கரண்டி

    கருப்பு மிளகு தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி இலைகள் - 1 தேக்கரண்டி

    உப்பு - சுவைக்கு ஏற்ப

    தண்ணீர் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    ஒரு பத்திரத்தில் ஓட்ஸ், கோதுமைமாவு, அரிசி மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, சீரகம், மற்றும் உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.

    இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். ரவை தோசை பதத்திற்கு கரைத்து கொண்டால் இன்னும் சிறப்பு.

    பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடாக்கவும். பின்னர் சிறிது எண்ணெய் தடவவும். ஒரு குழி கரண்டி அளவு ஓட்ஸ் மாவை எடுத்து தோசை கல்லில் நல்லா வட்ட வடிவமாக சூடவும். இந்த தோசையை மிதமான தீயில் வைத்து செய்யவும். தோசை பொன்னிறமானதும் எடுத்து பரிமாறலாம். இந்த தோசையை புரட்டி போட அவசியம் இல்லை.

    • சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்ந்து நன்கு வதக்கவும்.
    • பிரிஞ்சி இலையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    இறால்கள் - 1/4 கிலோ

    சின்ன வெங்காயம் - 5 முதல் 6 எண்

    வேர்க் கடலை - 50 கிராம்

    முந்திரி - 7

    பிரிஞ்சி இலைகள் - 2

    கிராம்பு - 2

    இலவங்கப்பட்டை குச்சி - 1 அங்குலம்

    பச்சை ஏலக்காய் - 2

    எண்ணெய் - தேவையான அளவு

    கொத்தமல்லி - தேவையான அளவு

    உப்பு - 2 பின்ச்

    செய்முறை:

    வேர்க்கடலையை சிறிது நேரம் (20 நிமிடம்) ஊறவைத்து பின்னர் அதை ஒரு மிக்ஸர் சாரில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அறைத்து எடுத்தக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெயை ஊற்றி சூடானதும், இலவங்கப்ட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் முந்திரியை சேர்க்கவும், பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்ந்து நன்கு வதக்கவும்.

    இறால் நன்றாக வெந்தவுடன் அறைத்து வைத்துள்ள வேர்க்கடலை விழுதை அதனுடன் சேர்ந்து 5 நிமிடம் கிளறவும்.

    இறுதியாக கொத்தமல்லி சேர்ந்து பரிமாறவும்.

    • சிறிய வாணலியை சூடாக்கி, தேங்காயை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
    • பெரும்பாலும் இதை சமைப்பது கடினம் என்று நினைத்து சமைக்க மாட்டார்கள்.

    முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் அனைவருக்கும் மிகப் பிடித்தமான ஒரு பழம் ஆகும். பெரும்பாலும் இதை சமைப்பது கடினம் என்று நினைத்து சமைக்க மாட்டார்கள். ஆனால் இந்த பலாபழத்தை வைத்து செய்யும் கூட்டானது செய்வதற்கு எளிமையானது மட்டும் இன்றி மிக மிக சுவையானதும் கூட.

    தேவையான பொருட்கள்:

    பலாப்பழம் (சக்கை/பழப்பழம்) - 1 கோப்பை

    காரமணி - 2 டீஸ்பூன்.

    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.

    உப்பு - 1 தேக்கரண்டி

    துருவிய தேங்காய் - 3/4 கப்

    சீரகம் - 1 தேக்கரண்டி

    சிவப்பு மிளகாய் - 1 எண்

    தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

    கடுகு விதைகள் - 1 தேக்கரண்டி

    உளுந்து பருப்பு (உளுத்தம் பருப்பு) - 1 தேக்கரண்டி

    சிவப்பு மிளகாய் - 2 எண்

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    துருவிய தேங்காய் - 1/2 கப்

    செய்முறை:

    * காரமணியை சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பலாப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும்.

    * 1/4 கப் தண்ணீரைப் பயன்படுத்தி காரமணியை 3 விசில் வரை அழுத்தி சமைக்கவும்.

    * அடி கனமான பாத்திரத்தில், வெட்டிய பலாப்பழம், மஞ்சள் தூள், உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.

    * கடாயை மூடி சுமார் 6 முதல் 8 நிமிடங்கள் சமைக்கவும்.

    * சமைத்த காரமணியை சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் சமைக்கவும்.

    * இதற்கிடையில், தேங்காய், சிவப்பு மிளகாய் மற்றும் சீரகத்தை ஒரு மென்மையான பேஸ்டாக அரைக்கவும்.

    * இந்த கலவையை வேகவைத்த பலாப்பழத்தின் மீது ஊற்றவும். நன்கு கலந்து 3 முதல் 4 நிமிடங்கள் வரை இளங்கொதிவாக்கவும்.

    * ஒரு சிறிய வாணலியை சூடாக்கி, 1 தேக்கரண்டி சேர்க்கவும். எண்ணெய் மற்றும் கடுகு விதைகள். கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், உளுந்து பருப்பு (உளுத்தம் பருப்பு), சிவப்பு மிளகாய் மற்றும் சில கறிவேப்பிலை சேர்க்கவும். இந்த டெம்பரிங் சக்கா கறி மீது ஊற்றவும். வெப்பத்தை அணைக்கவும்.

    * சிறிய வாணலியை சூடாக்கி, தேங்காயை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். தேங்காய் துருவல் உலக வாசனையை வீசுகிறது. இதை கறி மீது ஊற்றவும்.

    * இப்போது சக்க கூட்டு கறி பிரசாதம் மற்றும் பரிமாற தயாராக உள்ளது.

    • பீட்ரூட்டை தோல் உரித்து நறுக்கி வைக்கவும்.
    • மிகவும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் ரசம் சுவைக்கத் தயார்.

    தேவையான பொருட்கள்:

    பீட்ரூட் - 1

    தக்காளி - 1

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மிளகு - 1/2டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 2

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    தேங்காய் எண்ணெய் - 1டீஸ்பூன்

    கடுகு - 1/4டீஸ்பூன்

    கறிவேப்பிலை - தேவையான அளவு


    செய்முறை:

    பீட்ரூட்டை தோல் உரித்து நறுக்கி வைக்கவும்.

    தக்காளி, பீட்ரூட் துண்டுகள், சீரகம், மிளகு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

    எல்லாம் ஒரு வாணலியில் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து உப்பு கலந்து நன்கு கொதிக்கவிடவும்.

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

    எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.

    இப்போது மிகவும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் ரசம் சுவைக்கத் தயார்.

    • மசாலா தடவிய மீனை தோசை கல்லில் வைத்து லேசாக இரண்டு புறமும் வேக வைக்க வேண்டும்.
    • வாழை இலை மீனை வைத்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    தேவையான பொருட்கள் :

    மீன் - அரை கிலோ

    சின்ன வெங்காயம் - 10

    மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன்

    கரம்மசாலா பொடி - 2 ஸ்பூன்

    பூண்டு - 4

    இஞ்சி - சிறிது

    புதினா, கொத்தமல்லி இலை - சிறிது

    கறிவேப்பிலை - 2 கொத்து

    தக்காளி - 2

    பச்சை மிளகாய் - 2

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 ஸ்பூன்


    செய்முறை:

    மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து உப்பு, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்றாக பிசறி தனியாக வைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

    சிறிது வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய புதினா, கொத்த மல்லி இலை தட்டிய இஞ்சி, பூண்டு இவைகளை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.

    பிறகு மசாலா தடவிய மீனை தோசை கல்லில் வைத்து லேசாக இரண்டு புறமும் வேக வைக்க வேண்டும்.

    அதன் பிறகு வாழை இலை எடுத்து நன்கு கழுவி வேண்டிய அளவு வெட்டி அதன் மேல் சிறிதளவு மசாலாவை வைத்து பரப்பி விட வேண்டும்.


    நடுவில் மீனை வைத்து மீனின் மேல் மீண்டும் மசாலாவைத் நன்றாக கலந்து விட வேண்டும்.

    இப்போது இலையை மடக்கி நன்றாக பேக் செய்ய வேண்டும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள வாழை இலை மீனை வைத்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான கேரளா ஸ்டைல் மீன் பொளிச்சது ரெடி. இதனை சாதம், இட்லி அல்லது தோசையுடன் சாப்பிடலாம்.

    • தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
    • சர்க்கரை பாகில் சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.

    வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் பெண்களுக்கு கையும் ஓடாது... காலும் ஓடாது... என்ன செய்வது என்று தெரியாமல் திணருவோம்... அப்போ நமக்கு ஈஸியா ஒரு ஸ்வீட் ரெடி பண்ணணும் தோணும். அப்போ இதை பண்ணுங்க... வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து மிகவும் சுவையாகவும், சுலபமாகவும் செய்ய கூடிய ரெஸிபி....

    தேவையான பொருட்கள்:

    ரவை - 1/2 கப்

    கோதுமை மாவு - 1/2 கப்

    மைதா - 1/4 கப்

    சர்க்கரை - 1 கப்

    எண்ணெய் (அல்லது) நெய் தேவையான அளவு

    ஏலக்காய் தூள்

    செய்முறை:

    முதலில் சர்க்கரை 1 கப் மற்றும் தண்ணீர் 1/2 கப் சேர்த்து கொதிக்க (5 நிமிடங்கள்) வைத்து பாகு தயாரித்து கொள்ளவும். இறுதியாக ஏலக்காய் தூள் சேர்த்து விடவும்.

    ஒரு பாத்திரத்தில் ரவை + கோதுமை மாவு+ மைதா தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சூடாக்கி அதில் நாம் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி பொரித்து எடுக்கவும்.

    நாம் பொரித்து வைத்துள்ள பூரிகளை சர்க்கரை பாகில் சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.

    சுவையான மால்புவா தயார்...

    • சிறிது பால் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
    • குங்குமப்பூ பாலை அடுப்பில் வைத்துத் பாலை நன்கு கொதிக்க விட வேண்டும்.

    தேவையானவை :

    பால் - 2 1/2 கப்

    தோல் நீக்கிய கனிந்த மாம்பழ துண்டுகள் - ஒரு கப்

    சர்க்கரை - 1/4 கப்

    பிஸ்தா - 5

    பாதாம் - 4

    ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

    குங்குமப்பூ - சிறிது

    செய்முறை:

    1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்துத் விட்டு பிறகு இறக்கி அதில் பாதாமை போட்டு இருபது நிமிடம் ஊற வைத்து, பின் அதன் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

    2. பின்னர் பிஸ்தாவையும் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துத் வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்கி, அதில் குங்குமப்பூவை சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    3. பிறகு மாம்பழ துண்டுகளை மிக்ஸியில் போட்டு , அத்துடன் சிறிது பால் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    4. பின் குங்குமப்பூ பாலை அடுப்பில் வைத்துத் பாலை நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து கிளறி, சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    5. பாலானது குளிர்ந்ததும், அதில் மாம்பழ கூழ் சேர்த்துத் , ஏலக்காய் பொடி, பாதாம், பிஸ்தா, சேர்த்துத் கிளறி பரிமாறினால், சுவையான மாம்பழ ரப்ரி ரெடி!!!

    ×