search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223297"

    • கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் பலர் கலந்துகொண்டனர்.

    ஊட்டி,

    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நல சங்கம் சார்பில் கூடலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் சாமுலேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் சிவராஜ் தொடங்கி வைத்தார். வட்ட செயலாளர் அமீது கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.

    • பாத்திரம் கொடுக்க சென்ற சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றார்.
    • போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ஊட்டி,

    ஊட்டி அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் லெஸ்லி ரிச்சர்ட் (வயது 78). இவரது வீட்டு அருகே 5-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று ஜான் லெஸ்லி ரிச்சர்டிடம், அந்த சிறுமியின் பாட்டி சில பாத்திரங்களை வாங்கி இருந்தார். அந்த பாத்திரங்களை ஜான் லெஸ்லி ரிச்சர்ட் வீட்டில் கொடுத்து விட்டு வரும்படி கூறி சிறுமியை பாட்டி அனுப்பி வைத்தார்.

    வீட்டில் ஜான்லெஸ்லி ரிச்சர்ட் மட்டும் தனியாக இருந்தார். பாத்திரம் கொடுக்க சென்ற சிறுமியிடம் தவறாக நடக்க முயன்று அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

    அவரிடம் இருந்து சிறுமி தப்பி வெளியே ஓடி வந்தார். பின்னர் தனது பாட்டியிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதார்.

    இதுதொடர்பாக பாட்டி, பிங்கர் போஸ்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான் லெஸ்லி ரிச்சர்ட்டை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் புவனேஸ்வரிக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
    • மேலும் மாணவிக்கு புத்தகம் மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு குழுமம் அறிவியலில் புதுமை கண்டு பிடிப்புகளுக்கான ரூ.50 ஆயிரம் பரிசு தொகை பெற்றமைக்காக பாக்யா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 8 -ம் வகுப்பு மாணவி புவனேஸ்வரி மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், கடந்த 2022 செப்டம்பர் மாதம் 6 முதல் 12 -ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியலில் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான விருதிற்காக அறிவிக்கப்பட்டு, ஆய்வு கட்டுரை மற்றும் ஆய்வின் புகைப்படங்கள் இணையவழி வாயிலாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் 3 கட்ட அறிவியல் அறிஞர்கள் வாயிலாக தேர்வு நடைபெற்றது.

    இதில் கண்டுபிடிப்புகள் 14 தேர்ந்தெடுக்கப்பட்டதில் தேசிய அளவில் நீலகிரி மாவட்டம் பாக்யா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் பயிலும் 8 -ம் வகுப்பு மாணவி புவனேஸ்வரி குறைந்த விலையில் புதுமையான மறு சுழற்சி காகித தீப்பெட்டி உற்பத்தி எந்திரம் என்ற தலைப்பில் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

    அந்த காசோலையை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றதை தொடர்ந்து கலெக்டர் அம்ரித், மாணவிக்கு புத்தகம் மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், பாக்யா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சுந்தரம், பெற்றோர் பாக்யம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஆ.ராசா எம்.பி பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது

    அரவேனு,

    கோத்தகிரி அருகே பழங்குடியின குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    விழாவில் ஆ.ராசா எம்.பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    முகாமில் பழங்குடியின மக்கள் தங்கள் கிராம பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம், பஸ் வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என மனு அளித்தனர்.

    மனுவை பெற்று கொண்ட ஆ.ராசா எம்.பி., மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    மேலும் பழங்குடியின கிராம மக்களுக்கு தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.இதில் கலெக்டர் அம்ரித், நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு. முபாரக், குன்னூர் கோட்டாட்சியர் பூஷனகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஷ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார், தாசில்தார் காயத்திரி, கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தந்தி மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து ஒன்றரை மாதம் திருவிழா நடக்கிறது.

    இந்த கோவில் திருவிழாவின் போது நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம் மதத்தினர் இணைந்து குண்டம் திருவிழாவினை நடத்துவது சிறப்பம்சமாகும்.

    இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்து.

    இதனைத் தொடர்ந்து மாலை தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் ஊர்வலத்துடன் குண்டம் இறங்க காப்பு கட்டிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் குழந்தைகளுடன் ஊர்வலமாக வி.பி. தெரு காய்கறி மார்க்கெட் அருகே குண்டம் அமைக்கப்பட்ட பகுதிக்கு வந்தனர்.

    பின்னர் தந்தி மாரியம்மன் குண்டத்தை 3 முறை வலம் வந்ததை தொடர்ந்து, காப்பு கட்டிய பெண்கள், ஆண்கள், குழந்தைகள் குண்டம் இறங்கினர்.

    குண்டம் திருவிழாவை காண உள்ளூர் மட்டுமின்றி, வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் குண்டம் நிகழ்ச்சியை பார்த்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவ நற்பணி மன்றம் மற்றும் அறநிலையத்துறை செய்திருந்தது.

    • இந்த கிராமங்களுக்கு இதுவரை பஸ் வசதி கிடையாது.
    • பல ஆண்டுக்கு பிறகு பஸ் சேவை தொடங்கியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள பழங்குடியினர் கிராமம் செம்மநாரை.

    இந்த கிராமத்தை சுற்றி கனுவட்டி, கோழிக்கரை, மேல் கூப்பு, கீழ் கூப்பு, தாலமொக்கை உள்ளிட்ட கிராமங்களும் உள்ளன.

    இந்த கிராமங்களில் ஏராளமான பழங்குடியினர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களுக்கு நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளை கடந்தும் இதுவரை பஸ் வசதி கிடையாது. நடந்தே பல பகுதிகளுக்கும் இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் சென்று வந்தனர். எங்கள் பகுதிக்கு பஸ் இயக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு மனு அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் பழங்குடியின கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் மூலம் அந்த கிராம பகுதிகளில் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோத்தகிரியில் இருந்து செம்மநாரை வரை பஸ் இயக்கி வெள்ளே ாட்டமும் பார்க்கப்பட்டது.

    இதில் வெள்ளோட்டம் வெற்றி பெற்றதை அடுத்து நேற்று கோத்தகிரி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து செம்மநாரைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது.

    பஸ்சை நீலகிரி எம்பி ஆ.ராசா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் முபாரக், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஷ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், மாவட்ட போக்கு வரத்து கழக மேலாளர் நட்ராஜ், கோத்தகிரி போக்குவரத்து பணிமனை மேலாளர் ஞான பிரகாஷ், தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் குமார், தலைவர் ரத்தனகுமார், பொருளாளர் ஸ்டீபன் மற்றும் ஆனந்தன், நிரேஷ்கு மார், கோபாலகிருஷ்ணன், யோகரத்தினம், ராமலிங்கம், ரவி, குமார், எர்க்குலர்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தேர்வு 2023 தொடர்பான அறிவிப்பினை 3.4.2023 அன்று வெளியிட்டுள்ளது.
    • பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு 2023 தொடர்பான அறிவிப்பினை 3.4.2023 அன்று வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்ட பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் குரூப் "B" மற்றும் குரூப் "C" நிலையில் 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

    பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.

    இப்பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வா ணையத்தின் இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 3. 5.2023 மற்றும் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்து வதற்கான கடைசி நாள் 4. 5.2023 ஆகும்.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படப்படவுள்ளன. இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணை யதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும், இந்த இணையத ளத்தில் 'TN Career Services Employment' மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் 'AIM TN' என்ற You Tube Channel-களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தே ர்விற்கான காணொலியை கண்டு பயன்பெறுமாறும், நீலகிரி மாவட்டத்தில் இத்தேர்விற்கு வி ண்ணப்பி த்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கீழ்கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ். கைகாட்டியில் தனியார் கூட்டரங்கில் நடந்தது.
    • ஒன்றிய செயலாளர் காவிலோரை பீமன் தலைமை வகித்தார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ். கைகாட்டியில் தனியார் கூட்டரங்கில் கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் காவிலோரை பீமன் தலைமையில் தி.மு.க. பாகநிலை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இதில் தலைமை கழக குன்னூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாண்டி செல்வம் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காண படிவங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் குன்னூர் நகர செயலாளர் எம்.ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, கருப்பையா, கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் ராமகோபால், வின்சென்ட், முருகன், ஆதித்தன், ராஜேந்திரன், எஜமான் அய்யா, கஸ்தூரி பா நகர் குமார், சுரேஷ், மோகன், அமிர்தலிங்கம், மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் வாசிம்ராஜாவுக்கு பொன்னாடை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    ஊட்டி,

    குன்னூர் நகர மன்ற துணை தலைவர் வாசிம்ராஜா தி.மு.க. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    விளையாட்டு மேம்பாட்டு துறை மாநில துணை செயலாளராக நியமிக்க பட்டிருக்கும் குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் பா.மு. வாசிம் ராஜாவுக்கு குன்னூர் நகர செயலாளர் ராமசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி குன்னூர் நகர தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது.

    விழாவில் வாசிம்ராஜாவுக்கு பொன்னாடை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    இதில் பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, பொது குழு உறுப்பினர் செல்வம் நகர துணை செயலாளர் வினோத், நகர மன்ற உறுப்பினர்கள் ஜாகிர்கான், மன்சூர், குமரேசன், இளைஞர் அணி பத்மநாபன், வெலிங்டன் நகரிய செயலாளர் மார்டின், நகர பொருளாளர் ஜெகநாதராவ், தி.மு.க நிர்வாகிகள் கோவர்தணன், மணிஅல்போன்ஸ் உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தினர்.

    • தேவாலா வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து பார்த்தனர்.
    • சிறுத்தை புலியின் உடலை தீ மூட்டி எரித்தனர்.

    ஊட்டி,

    கூடலூர் தாலுகா தேவாலா அருகே கோட்ட வயல் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி.

    இவரது தோட்டத்தில் குடிநீர் தரைக்கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து தான் தினமும் தண்ணீர் எடுத்து அந்த குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், சம்பவத் தன்றும் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்கு சென்றனர்.

    அப்போது கிணற்றுக்குள் எட்டி பார்த்த போது, சிறுத்தை ஒன்று உள்ளே இறந்த நிலையில் கிடந்தது.

    சிறுத்தை கிணற்றுக்குள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் தேவாலா வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போ து கிணற்றுக்குள் கிடந்தது பெண் சிறுத்தை என்பதும், வனத்தை விட்டு வெளியே றிய சிறுத்தை தண்ணீர் குடிப்பதற்காக வந்த போது கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என சந்தே கிக்கின்றனர்.

    மேலும் கிணற்றுக்குள் பிடித்து கொள்ள வேறு வழி இல்லாததால் தண்ணீ ரில் தத்தளித்தவாறு திரிந்த சிறுத்தை சிறிது நேரத்தில், மூச்சு திணறி உயிரிழந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கிணற் றுக்குள் விழுந்து இறந்த சிறுத்தையை மீட்கும் பணி யில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் வனத்துறையினர் அங்கி ருந்து சென்றனர்.

    நேற்று காலை முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேரில் வந்து கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த பெண் சிறுத்தை யின் உடலை கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர்.

    தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் முக்கிய உடற்பா கங்களை சேகரித்து விட்டு சிறுத்தை புலியின் உடலை தீ மூட்டி எரித்தனர்.

    இது குறித்து வனத்து றையினர் கூறும் போது, சுமார் 2 வயது பெண் சிறுத்தை தண்ணீர் அல்லது இரையை தேடி வந்த போது கிணற்றுக்குள் விழுந்து மூச்சு திணறி இறந்தது தெரிய வந்தது.

    • சித்திரை 2-ந் தேதி மலையாள மக்களின் விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

    கோத்தகிரி,

    சித்திரை 1-ந் தேதி தமிழர்களின் புது வருட பிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதற்கு அடுத்த நாள் மலையாள மக்களின் விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இதனையொட்டி விஷூ கனிக்கு முந்தைய தினம் பூ, பழங்கள், நகைகளின் மூலம் பூஜையறையில் உள்ள சாமி சிலைகள் மற்றும் போட்டோக்களை அலங்கரித்து அடுத்த நாள் காலை சூரிய உதயதிற்கு முன்பதாக குடும்பத்தினர் அனைவரும் அந்த அலங்கரிக்க ப்பட்ட சாமி சிலை மற்றும் போட்டோக்களை வணங்குவர். பின்பு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று வணங்கி தங்களுடைய சக நண்பர்களுக்கு வீட்டில் வைத்து உணவுகளை அளித்து அவர்களுக்கு தங்களால் முடிந்த பணம் போன்றவற்றை வழங்குவர். இதனை கைநீட்டம் என்றும் அழைப்பர்.

    இதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் உள்ள மலையாள மக்கள் காலை முதலே தங்களின் வீடுகளில் விஷூ கனி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    கோத்தகிரி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

    காசிம்வயல் 16-வது வார்டு உறுப்பினர் ஆபிதாபேகம் கோரிக்கையை ஏற்று கண்காணிப்பு காமிரா வைக்கப்பட்டது.

    ஊட்டி,

    கூடலூர் நகராட்சி உட்பட்ட காசிம்வயல் 16-வது வார்டு உறுப்பினர் ஆபிதாபேகம் கோரிக்கையை ஏற்று நீலகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கூடலூர் நகராட்சி மூலமாக அந்த பகுதியில் கண்காணிப்பு காமிரா வைக்கப்பட்டது.இதற்கு இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் நன்றி தெரிவித்தனர். காசிம்வயல் பகுதி மக்களின் சார்பில் முதல்-அமைச்சருக்கும், கூடலூர் நகரமன்ற தலைவர் பரிமளா, துணை தலைவர் சிவராஜ், நகராட்சி ஆணையாளர் ப்ரான்ஷிஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    ×