search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223297"

    • மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவியது.
    • 1½ மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

    கூடலூர்

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இருப்பினும், வெப்பத்தை தணிக்கும் வகையில் மாலை நேரத்தில் அடிக்கடி பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக மழை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்தது.

    இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவியது. மேலும் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால், கூடலூர் நகர சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழை காரணமாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழைக்கு ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் குடைகளை பிடித்த படி நடந்து சென்றனர்.

    இந்தநிலையில் கூடலூரில் இருந்து மலப்புரத்துக்கு செல்லும் சாலையில் உள்ள கீழ்நாடு காணி பகுதியில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதனால் தமிழ்நாடு-கேரளா மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து 1½ மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இதனால் தொலைதூரங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதேபோல் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால், மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    • மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    • 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், தேயிலைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் உள்ளனர்.

    கோத்தகிரி

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இந்த தொழிலை நம்பி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள், தேயிலைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் உள்ளனர். கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை போதுமான அளவு பெய்தது. மேலும் வெயில், மழை என இதமான சீதோஷ்ண காலநிலை நிலவி வருகிறது.

    இதனால் தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகளில் தற்போது கொழுந்துகள் அதிகம் வளர்ந்து உள்ளன. இதன் காரணமாக மகசூல் அதிகரித்து உள்ளது. பச்சை தேயிலை ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.18-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் விலை போதுமானதாக இல்லா விட்டாலும், மகசூல் அதிகரித்து உள்ளதால் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இந்தநிலையில் பச்சை தேயிலையை பறிப்பதற்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் தேயிலை கொழுந்துகளை அறுவடை செய்வதற்கு, கையால் இயக்கும் எந்திரம், மோட்டார் மூலம் அறுவடை செய்யும் எந்திரம் மற்றும் அதி நவீன எந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். தேயிலை எஸ்டேட் உரிமையாளர்கள் மோட்டார் மற்றும் காற்றால் இயங்கக்கூடிய அதி நவீன எந்திரங்களை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 300 கிலோ வரை தேயிலையை அறுவடை செய்கின்றனர்.

    இதேபோல் சிறு தேயிலை விவசாயிகள் கைகளால் இயக்கும் கத்தரிக்கோல் வடிவிலான எந்திரம் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட எந்திரங்களை பயன்படுத்தி அறுவடை செய்து வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் ஒரு கிலோ பச்சை தேயிலை பறிக்க ரூ.6 கூலியாக பெற்று வருகின்றனர்.

    தற்போது தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளதால், விவசாயிகள் அதனை பறித்து தொழிற்சாலைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர். இதனால் தொழிற்சாலைகளுக்கு தேயிலை வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, தேயிலை தொழிற்சாலைகளுக்கும் ஓரளவு கணிசமான வருவாய் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வை மொத்தம் 7090 பேர் எழுதினர்.
    • தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் 32-வது இடம் பெற்றது.

    ஊட்டி,

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது.

    நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வை 3502 மாணவர்கள், 3588 மாணவிகள் என மொத்தம் 7090 பேர் எழுதினர்.

    இந்த நிலையில், நேற்று எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவு இணையத ளத்தில் வெளியிடப்பட்டது.

    மாணவர்கள் பாட வாரியாக எடுத்த மதிப்பெண் விவரம் மாணவர்கள் பள்ளிகளில் கொடுத்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது.

    மேலும் பள்ளிகளில் உள்ள தகவல் பலகைகளில் மாணவர்கள் தேர்ச்சி விவரம் ஒட்டப்பட்டது.

    எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவில் நீலகிரி மாவட்டத்தில் 2,916 மாணவர்கள், 3,336 மாணவிகள் என மொத்தம் 6,297 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 88.82 சதவீதம் ஆகும்.

    இதில் 84.55 சதவீதம் மாணவர்களும், 92.98 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றனர்.

    தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் 32-வது இடம் பெற்றது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 89.5 ஆக இருந்த நிலையில், மாநிலத்தில் 19-வது இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவு வெளியான நிலையில், வருகிற 26-ந் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது. இருப்பினும், சில பள்ளி களில் பிளஸ்-1 சேர்க்கை நடந்து வருவதால், மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் தாங்கள் எடுத்த மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இதன் மூலம் பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    • ஊட்டி-200-வது விழா மற்றும் கோடை விழா 2023 நடைபெற்று வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் தங்குகின்றனர்.

    ஊட்டி,

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் 1819-ம் ஆண்டு ஊட்டியை கண்டறிந்தார். இதையடுத்து தனது அயராத முயற்சியால் 1822-ம் ஆண்டு ஊட்டியை உருவாக்கி வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஊட்டி நகரம் மற்றும் ஏரி உருவாக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டராக ஜான் சல்லிவன் இருந்தார்.

    கோத்தகிரி கன்னேரி முக்கு பகுதியில் அவர் கட்டிய பங்களா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு நினைவகமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் ஊட்டி நகரம் உருவாகி 200-வது ஆண்டு தொடக்க விழாவை கடந்த ஆண்டு மே மாதம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையொட்டி சுற்றுலாவை மேம்படுத்த வும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது. கோடை சீசனையொட்டி இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பா டுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் ஏற்கனவே தொடங்கிய ரோஜா கண்காட்சியை ஒட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் நீலகிரி மாவட்டம் முழுவதும் அலைமோதியது. இதன் காரணமாக வார இறுதி நாட்களில் தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். ஒரு சிலர் சாலையோரம் மற்றும் பஸ் நிலையத்தில் தங்கினர்.

    இந்த நிலையில் ஊட்டி-200-வது விழா மற்றும் கோடை விழா 2023 முன்னிட்டு மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக ஊட்டி வெண்லாக் சாலையில் சிறப்பு சுற்றுலா மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த சிறப்பு தகவல் மையம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வருகிற 31-ந் தேதி வரை செயல்படும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளின் காலியறைகள் குறித்த விவரம், புதிதாக அமைக்கப்பட்ட வாகன நிறுத்தும் இடங்கள் விவரம், வாகனங்கள் திருப்பி விடப்படும் வழித்தட விபர ங்கள் உள்பட பல்வேறு விவரங்களை நேரிலும் 0423-2443977 மற்றும் 8122643533 என்ற எண்ணி லும் தொடர்பு கொண்டு பெறலாம் என்றனர்.

    • திரைப்படவிழாவில் அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி பங்கேற்றனர்
    • சுற்றுலாத்துறை சார்பில் ரூ.150 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி 200-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியான திரைப்பட விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து ஆஸ்கார் விருது பெற்ற "தி எலிபெண்ட் விசுபெரர்சு" குறும்ப டத்தினை பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    இவ்விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா மற்றும் ஊட்டியின் 200-வது ஆண்டினை போற்றும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகள் இணைந்து சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஊட்டி 200 விழாவினை சிறப்பாக கொண்டாடுவதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதன் பேரில், மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.சுற்றுலா பயணிகளை வருகையினை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முதலாவதாக கடந்த 6-ந் தேதி அன்று காய்கறி கண்காட்சி தொடங்கப்பட்டு, அதனை தொடர்ந்து புகைப்படக்கண்காட்சி, படகு போட்டி, பழக்காட்சி என ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், கூடலூரில் தோட்டக்கலைத்துறையின் மூலம் தேவாலா பண்ணை யினை ரூ.3 கோடி மதிப்பில் மேம்படுத்தவும், படகு இல்லத்தில் சாகச பூங்கா மற்றும் பைக்காராவில் மிதவை படகு அமைக்கவும், சுற்றுலாத்துறை சார்பில் ரூ.150 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இவ்விழாவில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா கூறியதா வது:-

    கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சலீவன் அவரால் கண்டறியப்பட்டு கட்டமைக்கப்பட்ட இந்த 200-வது விழாவினை கொண்டாடும் வகையில், இன்றைய தினம் இந்த திரைப்பட விழாவானது நடைபெறுகிறது. தமிழ கத்திற்கு என உள்ள பல்வேறு மொழி, இன, கலாச்சாரங்களில், நீலகிரி மாவட்ட மக்கள் ஒரு பெரும் பங்கினை, தொன்மைகளை பெற்றிருக்கிறார்கள். அவற்றினை நாட்டிற்கு பறைசாற்றுகின்ற வகையில் கொண்டாட வேண்டும் என முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததையொட்டி சென்ற நிதியாண்டில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதேபோன்று திரைப்படம் என்பது மொழி, இனம், சமூகம், சாதி ஒழிப்பு, பெண் உரிமை. மத நல்லிணக்கத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திரைப்படங்கள் எல்லாம் ஊட்டி நகரில் எடுக்கப்பட்டது என்பது இந்த நகரத்திற்கு தனி சிறப்பு ஆகும். எனவே ஊடியில் எடுக்கப்பட்ட மூடுபனி, முள்ளும் மலரும், ஊட்டி வரை உறவு, புதையல் போன்ற பல்வேறு திரைப்படங்களையும் பார்த்து 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த சமூக சம்பவம் சமூக நிலை மற்றும் ஊட்டியின் பங்கு என்ன என்பதனை தெரிந்து கொள்ளவும், ஊட்டியில் பெருமையை தெரிந்து கொள்ளவும் திரைப்படம் உதவும், எனவே மொழியால், இனத்தால், இருக்கின்ற இடம் ஊட்டியினால், நாம் பெருமையடைகிறோம் என்கின்ற உணர்வை, இந்த திரைப்பட விழாவானது நமக்கு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, சுற்றுலாத்துறை அமைச்சர், நீலகிரி எம்.பி. ஆகியோர் "வாக்கத்தான்" குறும்படத்தினை இயக்கிய இயக்குநர்கள் சுரேஷ், பிரவீன் மற்றும் குழுவினரை பாராட்டி பொன்னாடை அணிவித்து, "பிளாஸ்டிக் தடை குறும்படம்", சுற்றுலா பயணிகள் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதது குறித்த மாவட்ட கலெக்டர் உரையாற்றிய விழிப்புணர்வு குறும்படம், "திஎலிபெண்ட் விசுபெரர்சு" போன்ற குறும்படங்களை பார்வை யிட்டனர்.

    விழாவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், உதவி வன பாதுகாவலர் தேவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் கருப்புச்சாமி, ஊட்டி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மனோகரி, வருவாய் கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி, முகம்மது குதுரதுல்லா (கூடலூர்), வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், வட்டாட்சியர்கள் ராஜசேகர் (ஊட்டி), காயத்ரி (கோத்த கிரி) உள்பட அரசுத்துறை அலுவலர்கள் அசெம்பிளி திரையரங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் பலர் கலந்து கொண்டனர்.

    • 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது
    • மலர் செடி கொடிகளை பார்வையிட்டு ரசித்து செல்கின்றனர்

    ஊட்டி

    கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் நாள்தோறும் அண்டைய மாநிலமான கேரளா கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர்.

    கடந்த வாரம் வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது சில நாட்களாக மேகமூட்டம் மற்றும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நேற்று மதியத்துக்கு மேல் ஊட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் சூடு தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. இரவில் கூட வெப்பம் தணிந்து முற்றிலும் குறைந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது

    சுற்றுலா பயணிகள் இதனை அனுபவித்து வருகின்றனர் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குடைகளை பிடித்தபடியே ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றி வருகின்றனர். பசுமையான புல்வெளிகளும் மருத்துவம் நிறைந்த மலர் செடி கொடிகளையும் குளிர்ச்சியான காற்றுடன் சேர்ந்து ஒரு குடைகளைப் பிடித்த படியே பார்வையிட்டு ரசித்து செல்கின்றனர்

    • கண்காட்சியில் சிறப்பாக அரங்கம் அமைத்த வனத் துறைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
    • கூடலூா் மற்றும் நெல்லியாளம் நகராட்சிக்கு 3 ஆம் பரிசும் வழங்கப்பட்டது.

    ஊட்டி

    கூடலூா் மாா்னிங் ஸ்டாா் பள்ளி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய கோடை விழா வாசனை திரவிய கண்காட்சி புதன்கிழமை நிறைவடைந்தது.

    நிறைவு விழாவுக்கு கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா தலைமை வகித்தாா்.

    கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன், நகராட்சி ஆணையா் பிரான்சிஸ் சேவியா், நகா்மன்றத் தலைவா் பரிமளா, துணைத் தலைவா் சிவராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜெயலட்சுமி, கூடலூா் வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் கூடலூர் நகர செயலிளர் இளஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    நிறைவு விழாவில், கண்காட்சியில் சிறப்பாக அரங்கம் அமைத்த வனத் துறைக்கு முதல் பரிசும், தோட்டக்கலைத் துறைக்கு இரண்டாம் பரிசும், கூடலூா் மற்றும் நெல்லியாளம் நகராட்சிக்கு 3 ஆம் பரிசும் வழங்கப்பட்டது.

    இதில் பொதுமக்கள், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

    • குன்னூரை சுற்றிய வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
    • வாகனங்கள் சப்தத்தால் எருமை அங்குமிங்கும் ஓடியது.

    குன்னூர்

    நீலகிரி மாவட்டம், குன்னூரை சுற்றிய வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் உலவி வருவது வாடிக்கை.

    இந்நிலையில், வனத்தைவிட்டு வெளியேறிய காட்டெருமை குன்னூா் பேருந்து நிலையத்துக்குள் புதன்கிழமை காலை நுழைந்தது. வாகனங்கள் சப்தத்தால் எருமை அங்குமிங்கும் ஓடியது. இதனைக் கண்ட பொதுமக்கள் பஸ்களில் ஏறி அமா்ந்து கொண்டனா்.

    சிறிது நேரம் உலவிய காட்டெருமை பிறகு தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது.

    குடியிருப்பு பகுதிகளில் உலவி வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • பலாப்பழங்களை உண்பதற்கு தோட்டங்களை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் வருகின்றன.
    • ஒற்றை காட்டு யானையால் அடிக்கடி வாகன ஓட்டிகள் இது போன்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    கோத்தகிரி

    கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பகுதிகளில் அதிக அளவு பலாத்தோட்டங்கள் இருப்பதால் பலாப்பழங்களை உண்பதற்கு தோட்டங்களை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இருந்து யானை, கரடி போன்ற வன விலங்குகள் சாலையில் தற்போது அதிகமாக நடமாடி வருகின்றது . இப்பகுதியில் கடந்த 4 மாதங்களாக சுற்றி தஞ்சமடைந்து வந்த ஒற்றை காட்டு யானை ஒன்று அவ்வப்போது சாலையில் செல்லும் வானங்களை சேதப்படுத்தியும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியும் வந்தது. கடந்த ஒரு வாரமாக வாகன ஓட்டிகளின் கண்களில் அகப்படாத அந்த யானை நேற்று மாலை குஞ்சப்பனை பகுதியில் உள்ள சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை சிறை பிடித்தது சாலையின் நடுவில் நின்றிருந்த யானையால் அப்பகுதியில் வாகனங்கள் மேலும் கீழும் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் நின்றிருந்த அந்த யானை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றது. இந்த ஒற்றை காட்டு யானையால் அடிக்கடி வாகன ஓட்டிகள் இது போன்ற நிலைக்கு தள்ளப்படுவதால் அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது

    • தற்போது ரூ.20 முதல் 25 ரூபாய்க்கே பீட்ரூட் விற்பனையாகி வருகிறது.
    • மலைக்காய்கறிகளுக்கு நிரந்தரமான விலையை நிர்ணயிக்க வேண்டும்.

    அரவேணு,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

    கோத்தகிரி சுற்றியுள்ள கூக்கல்தெரை, கக்குச்சி ,கூக்கல், கட்டப்பெட்டு, பில்லிக்கம்பை , தீனட்டி, மானியடா, நெடுகுளா போன்ற பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழுது பண்படுத்தி மலை காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், காலிபிளவர், முள்ளங்கி, நூல் கோல், பீன்ஸ், பூண்டு, பட்டாணி, அவரை போன்ற மலை காய்கறிகளை விளைவித்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

    மேலும் ஒரு சில விவசாயிகள் வெளிநாட்டு காய்கறிகளை சாகுபடி செய்து வருமானம் பெற்று வருகின்றனர். தற்போது கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பீட்ரூட் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். பீட்ரூட் விளைந்து அறுவடைக்கு தயாரானதை அடுத்து விவசாயிகள் அதனை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் மார்க்கெட்டில் பீட்ரூட்டுக்கான ெகாள்முதல் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பீட்ரூட் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரை விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது ரூ.20 முதல் 25 ரூபாய்க்கே பீட்ரூட் விற்பனையாகி வருகிறது.இதனால் எங்களுக்கு போதிய வருமானம் கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே மலைக்காய்கறிகளுக்கு நிரந்தரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • புதர் மறைவில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென சஞ்சையை தாக்கியது.
    • இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரவேணு,

    கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சஞ்சய்(வயது 16). இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டு, முடிவுக்காக காத்திருக்கிறார்.

    தற்போது விடுமுறை என்பதால் சஞ்சய் நேற்று தனது நண்பர்கள் 3 பேருடன் கொடநாடு செல்லும் சாலை பிரிவில் நெடுகுளா சுண்டட்டியில் உள்ள சுண்டட்டி நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.

    அங்கு அவர்கள் நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்தபடி நின்றிருந்தனர். அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென சஞ்சையை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை நண்பர்கள் மீட்டு நெடுகுளா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குன்னூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஊட்டி,

    தற்போது கோடைசீசன் தொடங்கியுள்ளதால் ஊட்டி மற்றும் குன்னூருக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக குன்னூர் பஸ் நிலைய கட்டண கழிப்பிடம் திறக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    பஸ் நிலையத்தின் 4 புறமும் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது குறித்து குன்னூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×