என் மலர்
நீங்கள் தேடியது "slug 223314"
- கூடி நின்ற பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.
- குளச்சல் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர்.
கன்னியாகுமரி:
கருங்கல் அருகே உள்ள இனயம் பகுதியை சேர்ந்தவர் அசின். இவர் தனது நண்பருடன் காரில் கருங்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். கார் பாலூர் பகுதியில் வரும்போது திடீரெனை முன்பக்கம் இருந்து புகை வந்து உள்ளது. உடனடியாக அவரும், அவரது நண்பரும் காரை நிறுத்திவிட்டு இறங்கி விட்டனர். சிறிது நேரத்தில் காரில் தீப் பிடித்தது. அப்பகுதியில் கூடி நின்ற பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.
மேலும் குளச்சல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பிடித்திருந்த தீயை அணைத்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
- வீரர்கள் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கோவை:
தீபாவளி நாட்களில், பட்டாசு வெடி விபத்து ஏதாவது நடந்தால் அதனை சரி செய்ய தீயணைப்பு படையினர் தயாராக இருப்பார்கள். ஆனால், நேற்று பட்டாசு வெடி விபத்துகள் எதுவும், பெரியளவில் நடக்கவில்லை.
ஆனால், அவினாசி ரோடு பழைய மேம்பாலம் அருகே உள்ள கடலைக்கார சந்து எலக்ட்ரிக்கல் கடையில், நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடைகள், வீடுகள் நெருக்கமாக அமைந்துள்ள அந்த பகுதியில், தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்களும், குடியிருப்போரும் அச்சத்தில் அங்குமிங்கும் ஓடினர். இதுகுறித்து உடனே தெற்கு தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் 3 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் வராததால் காந்திபுரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் ஒரு வாகனமும் உதவிக்கு வரவழைக்கப்பட்டது.
வீரர்கள் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் கடையில் இருந்த ஏராளமான பொருட்கள் தீயில் கருகி நாசமாகி விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திடீரென இவர்களின் கூரை வீடு தீ பிடித்து எரிய தொடங்கியது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.
- சந்திரசேகரன் எம்.எல்.ஏ பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகளை வழங்கினார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமம் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது சகோதரர் செல்லப்பாண்டியன். இருவரும் இசை கலைஞர்கள். அருகருகே கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை திடீரென இவர்களின் கூரை வீடு தீ பிடித்து எரிய தொடங்கியது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். மேலும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
இது குறித்து தஞ்சை மற்றும் திருவையாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் 2 கூரை வீடுகள் முழுவதும் எரிந்து விட்டது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது.
இது குறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். என்ன காரணத்திற்காக வீடு தீப்பற்றி எரிந்தது என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு சென்று உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசால் வழங்கப்படும் நிவாரண உதவிகளை வழங்கினார். தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.
- நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் பின்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பரவியது.
- நாங்குநேரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்
நெல்லை:
நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டியில் இருந்து முனைஞ்சிபட்டி செல்லும் சாலையில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
திடீர் தீ
இந்த பயிற்சி நிறுவனத்தின் பின்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பரவியது. அப்போது காற்று வீசியதால் காய்ந்து கிடந்த சறுகுகளில் தீப்பற்றி மளமளவென பரவியது.
இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து நாங்குநேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து மூலக்கரைப்பட்டி போலீசாரும் விரைந்து வந்தனர்.
கட்டுக்குள் வந்தது
ஆனால் காட்டுத்தீ நள்ளிரவு வரையிலும் தொடர்ந்து வேகமாக மற்ற இடங்களுக்கும் பரவி வந்ததால் திசையன்விளையில் இருந்தும் கூடுதலாக தீயணைப்பு வண்டியுடன் வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் விடிய விடிய பற்றி எரிந்த தீயை இன்று அதிகாலை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். காலை 8 மணி அளவில் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
- நேற்று இரவு தங்கள் வீடுகள் முன்பு 3 மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு வழக்கம் போல தூங்க சென்றனர்.
- அவர்களது 3 மோட்டார் சைக்கிள்களுக்கும் நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் தீ வைத்தனர்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பிச்சனார் தோப்பு பகுதியில் முருகன், சக்திவேல், பேச்சு முத்து ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் நேற்று இரவு தங்கள் வீடுகள் முன்பு 3 மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு வழக்கம் போல தூங்க சென்றனர்.
இந்நிலையில் அவர்களது 3 மோட்டார் சைக்கிள்களுக்கும் நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் தீ வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு வீடு மற்றும் சமுதாய கொடியும், மர்மநபர்களால் தீவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதே பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்கள் அருகில் உள்ள மேலகோட்டைவாசல் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த நல்லபெருமாள் என்ற ராஜா என்பவரது லோடு ஆட்டோ மற்றும் ராமர், கணேசன் ஆகியோரது 2 கார்களின் கண்ணாடிகளையும் அடித்து உடைத்து உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
தக்கலை அருகே மேல பள்ளம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்ராஜ் (வயது 42). வைக்கோல் வியாபாரி.
இவர் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான டெம்போவில் வைக்கோல் பாரம் ஏற்றினார். பின்னர் அந்த டெம்போவை புலியூர் குறிச்சி அருகே சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றிருந்தார்.அதிகாலையில் அவரது டெம்போவில் இருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது.
இதை பார்த்த பொது மக்கள் ஜெகன் ராஜுக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வைக்கோல் போரில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் தீ விபத்தில் டெம்போ எரிந்து நாசமானது.
இது குறித்து ஜெகன் ராஜ் தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வைக்கோல் பாரத்திற்கு யாராவது தீ வைத்தார்களா அல்லது மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? என்பது குறித்து விசாரணை நடத் தப்பட்டு வருகிறது.
- 20 மாடுகளுக்கு காயம்
- இச்சம்பத்திற்கு மின் கசிவு காரணம் என கூறப்படுகிறது.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே சேக்கல் மடத்து ஏலா பகுதியைச் சேர்ந்தவர் கமலாம்பிகா (வயது 45).
இவர், அப்பகுதியில் பசுமாட்டுப் பண்ணை வைத்துள்ளார். இவரது பண்ணையில் உள்ள கொட்டகையில் சுமார் 22 பசுக்களும், 5 கன்றுகளும் உள்ளன. இந்தப் பசுக்களை பராமரித்தல் மற்றும் கறவை செய்வதற்கு ஒரு வட இந்திய குடும்பத்தினரும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலையில் வழக்கம் போல் அந்தக் குடும்பத்தினர் பசுக்களி லிருந்து பால் கறந்து விட்டு, பின்னர் தண்ணீ ரும், தீவனமும் வைத்து விட்டு பண்ணை கொட்டகை அருகிலுள்ள தங்களது குடி யிருப்பில் சென்று தூங்கி யுள்ளனர்.
இந்நிலையில் காலை சுமார் 8 மணி அளவில் கொட்டகையின் கூரை தீ பிடித்து எரிவதை அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் பார்த்து கூச்சலிட்டதுடன், ஓடி சென்று பண்ணை யை பரிமரிக்கும் குடும்பத்தி னரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து அனைவருமாக சேர்ந்து தீயை அனைத்து பசுக்களையும் கன்றுகளை யும் மீட்டுள்ளனர். இச்சம்ப வத்தில் 20 பசுக்கள் தீக்கா யம் அடைந்தன.
இதையடுத்து தகலறிந்த பசுக்களை பராமரிக்கும் தனியார் கால் நடை மருத்து வர் மற்றும் ஓய்வு பெற்ற அரசு கால்நடை மருத்துவர் ஜாண் கிறிஸ்டோபர் ஆகியோர் விரைந்து வந்து தீக்காயமடைந்த பசுக்க ளுக்கும், கன்றுகளுக்கும் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து நாகர்கோவி லில் இருந்து கால்நடை அவசர மருத்துவக் குழு ஆம்புலன்சுடன் விரைந்து வந்து காயமடைந்த பசுக்க ளுக்கு சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து மருத்துவக் குழுவினர் கூறும் போது, பசுக்களுக்கு தேவையான சிகிச்ைசகள் அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றனர். சம்பவ இடத் திற்கு திற்பரப்பு கிராம நிர்வாக அலுவலர் நவ நீதன் மற்றும் வார்டு உறுப்பி னர் ராஜப்பன் ஆகி யோர் நேரில் சென்று காய மடைந்த பசுக்களை பார்வையிட்டனர்.
இச்சம்பத்திற்கு மின் கசிவு காரணம் என கூறப்படு கிறது. கொட்டகையில் அமைக்கப்பட்டுள்ள மின் விசிறிகளின் இணைப்பி லிருந்து மின்கசிவு ஏற் பட்டு, கொட்டகையின் உள்பக்கம் குளிர்ச்இச்சம்பத்திற்கு மின் கசிவு காரணம் என கூறப்படு கிறது.இச்சம்பத்திற்கு மின் கசிவு காரணம் என கூறப்படு கிறது.க்காக போட்டப்பட்டிருந்த தென்னை ஓலைகள் தீ பரவியுள்ளதுடன், தீயில் எரிந்த தென்னை ஓலைகள் பசுமாடுகளின் மீது விழுந்து மாடுகளுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- மின்சாரம் தடைபட்டதால் பரபரப்பு
- மின்சாரம் இல்லாததால் ஊழியர்கள் பரிதவிப்பு
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கீழ்தளத்தில் இருந்த மின்இணைப்பில் இருந்து நேற்று இரவு திடீரென தீ பொறிகள் வந்தது.
இதையடுத்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின்வாரிய ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
உயர் மின்னழுத்தத்தின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு சில அலுவலகங்களில் இன்று காலை மின்சாரம் தடைப்பட்டது.
மதியம் வரை மின்சாரம் இல்லாததால் ஊழியர்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். மின் இணைப்பை சரி செய்யும் பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
- விழுப்புரம் தீயணைப்பு போலீசார் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் போராடி அணைத்தனர்.
- தீ விபத்தில் கடையில் உள்ள சுமார் 50,000 மதிப்புள்ள பொருள்கள் முழுவதும் எரிந்து சேதமானது.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் மாம்பழப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அபித் ரஹிமான். இவர் அதே பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரி எதிரில் பட்டாணிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்க ம்போல் வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை திடீரென அந்த கடை மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி யளித்தது. இதை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து விழுப்புரம் தீயணைப்பு போலீஸ் நிலையம் மற்றும் கடை உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த விழுப்புரம் தீயணைப்பு போலீசார் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் உள்ள சுமார் 50,000 மதிப்புள்ள பொருள்கள் முழுவதும் எரிந்து சேதமானது.
இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடையின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார்.
- கொலை வழக்கு,3 வழிப்பறி, குடவாசலில் கூட்டு கொள்ளைமுயற்சி வழக்கு உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் திருமுருகன்பூண்டி சன்னதிவீதியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 35).இவர் அப்பகுதியில் புதியபொருள் பழைய பொருட்கள்வாங்கிவிற்பனை செய்யும் கடைநடத்தி வருகிறார்.
கடந்த ஜூன் 26 ந்தேதி இவரது கடைக்கு மாமூல் கேட்டு ஒருவர்சென்றார். பணத்தைகொடுக்க மறுத்ததால்,திருப்பத்தூரை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (29) என்பவர், கடையின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இது குறித்த புகாரின் பேரில் சுபாஷ் சந்திரபோசை திருமுருகன்பூண்டி போலீசார்கைது செய்து சிறையில்அடைத்தனர்.
இவர் மீது வடக்கு போலீஸ் நிலையத்தில் இரண்டு வழிப்பறி, வேலம்பாளையத்தில் கொலை வழக்கு,3 வழிப்பறி, குடவாசலில் கூட்டு கொள்ளைமுயற்சி வழக்கு உள்ளது. இவர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில்நடந்துவருவதால், சுபாஷ் சந்திரபோசை குண்டர் தடுப்புசட்டத்தில் கைது செய்துசிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர்பிரபாகரன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போலீசார் சுபாஷ் சந்திர போசை இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருப்பூர் மாநகரில் கடந்த 8 மாதங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக 62 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- எதிா்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்துள்ளது.
- தீக் காயங்களுடன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் உப்புப்பாளையம் (கிழக்கு) பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருபவா் நடராஜ் (வயது 62). இவரது வீடு ஆலை வளாகத்துக்குள் அமைந்துள்ளது. இந்நிலையில், இவரது தாயாா் வேலுமணி (85), வீட்டைச் சுற்றியுள்ள குப்பைகளை கூட்டி தீ வைத்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, எதிா்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்துள்ளது. இதில் பலத்த தீக் காயங்களுடன் பாதிக்கப்பட்ட வேலுமணி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.இது குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்- நாமக்கல் செல்லும் சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அருகில் தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் கீற்றுகளால் நேயப்பட்ட பழக்கடைகள் உள்ளன.
- மின்சார ஒயர்கள் உரசியதால் கீற்றுக்கொட்டையின் மீது தீப்பொறி பறந்து விழுந்ததில் பழக்கடையில் தீப்பிடித்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்- நாமக்கல் செல்லும் சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அருகில் தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் கீற்றுகளால் நேயப்பட்ட பழக்கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் கீற்றுக் கொட்டகை உள்ள பழக்கடை வழியாக மேலே செல்லும் மின்சார ஒயர்கள் உரசியதால் கீற்றுக்கொட்டையின் மீது தீப்பொறி பறந்து விழுந்ததில் பழக்கடையில் தீப்பிடித்தது.
இதில் சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடிய வில்லை. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுப்படுத்தி தீஅருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.இருப்பினும் பழக்கடை முழுவதும் எரிந்து சாம்பலாயின.