search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223386"

    • குழந்தைகள் சிலருக்கு, கணக்குப் பாடம் என்றால் மட்டும் அலர்ஜி.
    • கணக்கு தொடர்பான பயம், மற்ற விஷயங்களிலும் அவர்களின் ஞாபக சக்தியைக் குலைக்கிறது.

    மற்ற பாடங்கள் எல்லாவற்றையுமே ஆர்வத்தோடு படிக்கும் குழந்தைகள் சிலருக்கு, கணக்குப் பாடம் என்றால் மட்டும் அலர்ஜியாக இருப்பதுண்டு. இதை அலர்ஜி என்பதைவிட, 'ஃபோபியா' (பயம்) என்றே குறிப்பிட வேண்டும்.

    ஆம்...! அமெரிக்காவின் ஒஹையோவில் உள்ள கிளீவ்லேண்ட் ஸ்டேட் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் ஆஷ்கிராப்ட் இது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்திருக்கிறார். அதில் பல அதிர்ச்சியான தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

    கணித பயம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களிடம் அவர் செய்த ஆய்வில், கணக்கு தொடர்பான பயம், மற்ற விஷயங்களிலும் அவர்களின் ஞாபக சக்தியைக் குலைக்கிறது. கூடவே படிப்பு மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடுகிறதாம். இதனால், அவர்கள் மிகச் சாதாரணமான இரண்டு எண்களைக் கூட்டுவது போன்ற விஷயங்களுக்குக் கூட பதற்றமும், திணறலும் அடைகிறார்கள். சிலருக்கு ரத்த அழுத்தத்தின் அளவும், இதயத் துடிப்பின் அளவும் எகிறியதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

    இதற்கான காரணம் குறித்து விளக்குகையில், ''எண்களைப் பார்த்ததும் இவர்களது மனதில் ஏராளமான சிந்தனைகள் அலைமோதுகின்றன. அதனால் கணக்கிடத் தேவையான சிந்தனையோ, பொறுமையோ அவர்களிடம் இல்லாமல் போகிறது. இதனால் நாளடைவில் அவர்களின் தன்னம்பிக்கை தளர்ந்து போகிறது.

    இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி... கணிதம் தொடர்பான பயத்தை மழலை பருவத்திலேயே அகற்றி, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதுதான். கணக்கு என்றவுடனே, முகம் சுழிக்கும் குழந்தைகளுக்கு, அதை உற்சாகமாக எதிர்கொள்ளும் வழிமுறைகளை கற்றுக்கொடுங்கள். அப்போது அவர்களது பதற்றமும், கணக்கு பயமும் குறைந்துவிடும்'' என்கிறார் ஆஷ்கிராப்ட்.

    • பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்டம்.
    • ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, அரசாணையையும் வெளியிட்டது

    பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது முத்திரை பதித்து இருக்கக்கூடிய திட்டம்தான், புதுமைப்பெண் திட்டம்.

    ஏற்கனவே பெண்களுக்காக நடைமுறையில் இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டமாக அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டது. அந்த திட்டத்தின்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, தொழிற்படிப்புகளில் இடைநிற்றல் இல்லாமல் படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கில் மாணவிகளுக்கு ரூ.1,000 மாதந்தோறும் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    நடப்பாண்டிலேயே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, அரசாணையையும் வெளியிட்டது.

    புதுமைப்பெண் திட்டம்

    இந்த திட்டத்தில் பயன்பெற அரசு பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரிகளில் 2, 3, 4-ம் ஆண்டுகளில் படிப்பை தொடரும் மாணவிகள் விண்ணப்பிக்க முதலில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாணவிகள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவிகளிடம் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் படித்ததற்கான சான்று, 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார், கல்லூரி அடையாள அட்டை, வங்கி கணக்கு எண் ஆகியவை கேட்டு பெறப்பட்டது.

    அவ்வாறு விண்ணப்பித்த 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வரும் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இதில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில்தான் இதற்கு புதுமைப்பெண் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.

    3-வது தவணையாக...

    விண்ணப்பித்து தகுதியான மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ந்தேதி அவரவர் வங்கி கணக்கில் ரூ.1,000 உதவித்தொகை சென்றடையும் வகையில், அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படைத்தன்மையுடன் இணைய வழியில் நடக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

    அதன்படி, திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதில் இருந்து தற்போது 3-வது தவணையாக ரூ.1,000 உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது முதலாம் ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து இருக்கும் மாணவிகளும், ஏற்கனவே 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வந்து இந்த திட்டத்தில் சேராதவர்களும் வருகிற 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • செல்போன்களில் மூழ்கி கிடக்காதீர்கள்
    • மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

    நாகர்கோவில்:

    கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் உயர் கல்வி வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நேற்று நடந் தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார். இதில் கலெக்டர் அரவிந்த், பங்கேற்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, பேசியதாவது:-

    குமரி மாவட்டம் கல்வி மற்றும் எழுத்தறிவில் சிறந்த மாவட்டமாக திகழ்ந்து வரு கிறது. அதற்கேற்ப, பள்ளி மாணவ, மாணவிகள் தங்க ளது தனி திறமைக்கேற்ப கல்வி பயின்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும். பொது அறிவினை வளர்த் துக்கொள்ளும் வகையில் ஒவ்வொரு நாளும் பத் திரிகைகள் மற்றும் அறி வுசார்ந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தினை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். செல்போன்க ளில் மூழ்கி கிடக்ககூடாது. ஒரு பாடத்தை படிக்கும் பொழுது கேள்வி, பதில் களை மட்டும் படிக்காமல் முழு பாடத்தையும் படிக்க வேண்டும்.

    கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல் படிக்கிற மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராக வேண்டும். எளிதாக புரிந்து கொண்டு அதிக மதிப்பெண் பெறக்கூடிய பாடங்களில் அதிக கவனம் செலுத்தி வெற்றிபெறலாம். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கு ஏதா வது ஒரு பட்டப்படிப்பு போதும். ஐஏஎஸ் படிப்பில் 27 வகையான மத்திய அரசு பணிகள் உள்ளன. அதற்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். பெண்கள் சட்ட கல்வி பயில நிறைய வாய்ப்புகள் உள்ளது. மத் திய பல்கலைக்கழகங்களில் படிக்க நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். ஆங்கில அறிவு நன்றாக இருக்க வேண்டும். அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் சட்ட கல்லூரிகளில் சேர வேண்டுமானால் 12-ம் வகுப் பில் 85 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். மருத்துவ படிப்பு மட்டுமல்லாமல் அதற்கு நிகரான துறையை யும் தேர்ந்தெடுத்து படிக்க லாம். டிபார்ம், பல் மருத்து வம்போன்ற படிப்புகளையும் படிக்கலாம். கால்நடை மருத் துவம், விவசாயம், பொறியி யல் படிப்பு (தமிழ் வழியில்) படித்து வேலை வாய்ப்பை பெற முடியும்.

    பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து உங் களை உயர்வான நிலைக்கு கொண்டு வர கஷ்டப்படுகி றார்கள். அவர்களின் கஷ் டங்களை, எண்ணங்களை புரிந்து கொள்ள வேண்டும். தேவையில்லாத பழக்க வழக் கங்களை தவிர்த்து, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வாழ்வில் உயரிய இலக்கை எட்டும் நோக்கில் 12-ம் வகுப்பு தேர்வில் கவன சிதைவின்றி தன்னம்பிக்கை யுடனும், விடா முயற்சியுட னும், கடின உழைப்புடனும் தேர்வினை எதிர்கொண்டு வாழ்வில் ஏற்றம்பெறவேண்டும் என்றார்.

    தொடர்ந்து மாணவ, மாணவிகளின் உயர்கல்வி வேலைவாய்ப்பு குறித்து பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். கொட்டாரம் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தங்கதீபா மற்றும் ஆசிரியர் கள், கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் இன்றே தேர்வுக்கான பயிற்சியை தொடங்குங்கள்.
    • இந்த தேர்வுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் இலவச பயிற்சிகள் குறித்து காண்போம்.

    ஸ்டாப் செலக்சன் கமிஷன் - எஸ்.எஸ்.சி (Staff Selection Commission-S.S.C) என்ற அமைப்பு, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது 20 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுக்கான (Combined Graduate Level Exam) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இந்த தேர்வு நடைபெறும் விதம் குறித்த தகவல்கள் கடந்த வாரம் வெளியானது. இந்த வாரம் இந்த தேர்வுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் இலவச பயிற்சிகள் குறித்து காண்போம்.

    மனத்தடையை அகற்றுங்கள்

    எஸ்.எஸ்.சி தேர்வுகள் கடினமானவை, ஆங்கிலப் பகுதிக்கு விடையளிப்பது என்னால் முடியாது, ஆங்கிலம் தெரியாது, கணிதம் எனக்கு வராது, ரீசனிங் (Reasoning) பகுதி எனக்குப் புரியாது.... போன்றவை இந்த தேர்வு எழுதாமைக்கு மாணவர்கள் சொல்லும் காரணங்கள்.

    பொதுவாக நமது மாணவர்கள், "எனக்கு கணக்கு வராது, ஆங்கிலம் புரியாது என தனக்குத்தானே மனத்தடைகளை (Mental Barriers) ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சிறு வயதில் அவ்வப்போது நாம் சந்தித்த சில தோல்வி களின் காரணமாக நமக்கு நாமே தடைகளையும், தவறான எண்ணங்களையும் உருவாக்கிக் கொண்டு அதை முழுமையாக நம்பி விடுகிறோம்.

    இதனால் கணக்கு பாடத்தை கண்டாலே வெறுப்பு வருவதுடன், அதில் தங்களால் நல்ல மதிப்பெண்கள் பெற முடியாது, தனக்கு அந்தப்பாடம் ஒத்துவராது என்ற எண்ணம் வந்துவிடுகிறது. இதனால் முயற்சியை கைவிடுகின்றனர். ஆனால் பயிற்சியின் மூலம் இந்த மனநிலையை மாற்ற முடியும்.

    1954-க்கு முன்பு வரை ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடிக் கடப்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகவே தடகள வீரர்களால் நம்பப்பட்டு வந்தது. ஆனால் 1954-ம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஜர் பெனிஸ்டர் ஒரு மைல் தூரத்தை 3 நிமிடங்கள் 59.4 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதுபோல ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் புதிய சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. முடியும் என்ற நம்பிக்கையும், கவனக்குவிப்புமே, தடைகளைத் தாண்டி வெற்றி பெற வழி வகுக்கிறது.

    எனவே, என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் இன்றே தேர்வுக்கான பயிற்சியை தொடங்குங்கள். உங்களுக்கான பயிற்சிகளை நீங்கள் வீட்டில் இருந்தபடி அல்லது வேலை செய்துகொண்டு மற்ற நேரங்களில் எடுத்துக்கொள்ள முடியும். இந்த பயிற்சிகளை தமிழக அரசு இலவசமாக அளிக்கிறது. அதுதொடர்பான விவரங்கள் வருமாறு:-

    மெய்நிகர் கற்றல் வலைத்தளம்

    தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையானது அரசு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு உதவும் நோக்கில் இணைய வழியிலான மெய்நிகர் கற்றல் வலைத்தளத்தை (Virtual Learning Portal) செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற மாணவர்கள் உள்பட அனைத்துப் போட்டியாளர்களும் பயனடையும் வகையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மெய்நிகர் கற்றல் (Virtual Learning) என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.

    இது TNPSC (Group I, Group II, Group IV and Group VIIB/VIII) TNUSRPB, UPSC, SSC, Airforce, IBPS, RRB போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகளை கொண்டுள்ளது.

    ஒருங்கிணைந்த இணைய வழியிலான மெய்நிகர் கற்றல் முறையின் மூலம் மாணவர்கள் எந்த இடத்திலிருந்தும் எந்த நேரத்திலும் கற்கும் சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். போட்டித் தேர்வுக்கு தயார் செய்துவரும் இளைஞர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் தங்கள் பெயரை கட்டணமின்றி இலவசமாக பதிவு செய்து பயன் பெறலாம்.

    சிறப்பம்சங்கள்

    கிராமப் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் தேவை அறிந்து தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அனைத்து மென்பாடக்குறிப்புகளும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மேலும், இம்மென்பாடக்குறிப்புகளை ஆஃப் லைன் முறையிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில், மாதிரி தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுகளை மேற்கொண்டு பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் தினந்தோறும் எடுக்கப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாத தொலைதூரத்தில் உள்ள இளைஞர்கள் பயனடையும் வகையில் பயிற்சி வகுப்புகளுக்கான காணொலி பாடக் குறிப்புகளும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

    தன்னார்வ பயிலும் வட்டம்

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படுகிறது. இதில் அனைவரும் உறுப்பினராகலாம். கட்டணம் எதுவுமில்லை. போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து மாதாந்திர சஞ்சிகைகள், தினசரி நாளிதழ்கள் மற்றும் TNPSC, வங்கிப்பணி (IBPS), SSC, ரெயில்வே தேர்வாணையம் மற்றும் யு.பி.எஸ்.சி, என்ஜினீயரிங் துறை போன்ற அனைத்து வகை தேர்வுகளுக்கான புத்தகங்களும் இங்கே உள்ளன.

    இதைத் தவிர இப்போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும், நடத்தப்படுகின்றன. அனைத்து வகுப்பு (கம்யூனிட்டி) இளைஞர்களும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

    இத்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும் விவரம், தேர்வு முடிவுகள், இதர துறை வேலைவாய்ப்புகள், ஒவ்வொரு வருடமும் எஸ்.எஸ்.சி, யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி போன்ற பலவகை தேர்வு வாரியங்களில் என்னென்ன தேர்வுகள் எந்த மாதத்தில் நடைபெறும் என்னும் கால அட்டவணை போன்ற வேலைவாய்ப்பு விவரங்களும் இந்த தன்னார்வ பயிலும் வட்டத்தில் கிடைக்கிறது.

    கல்வி தொலைக்காட்சி

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பாக டி.என்.பி.எஸ்.சி (TNPSC), ரெயில்வே தேர்வாணையம் (RRB), பணியாளர் தேர்வு குழுமம் (SSC), வங்கிப் பணியாளர் சேவைகள் குழுமம் (IBPS) உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தயாராகும் மாணவ - மாணவிகள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக நடைபெறும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாதவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டு அரசுப் பணிக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தினமும் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7 மணியிலிருந்து 9 மணி வரையிலும் ஊக்கவுரைகள், முந்தைய ஆண்டுகளில் வினாத்தாள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    மேலும், தினசரி நிகழ்ச்சிகளை TN Career Services Employment என்ற Youtube Channel - ல் அடுத்தடுத்த நாட்களிலும் காணலாம். எனவே, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் அனைத்து இளைஞர்களும் கல்வி தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சியினை கண்டு பயன்பெறலாம்.

    இந்த தேர்வுக்கு தயாராகும் முறைகள், மாதிரி வினாத்தாள்கள் குறித்த விவரங்களை அடுத்த வாரம் காணலாம்.

    எம்.கருணாகரன்,

    துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), கோவை.

    • இந்தி மொழி திணிப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
    • தமிழ் மொழிதான் தாய் மொழி, அதுதான் உலகின் சிறந்த மொழி.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஒன்றிய அரசின் இந்தி மொழி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு நகர செயலாளரும் நகர மன்றத் தலைவருமான குண்டாமணி என்கின்ற செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான இளையபெருமாள், தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இமயநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சிவதாஸ், ஜூபையர் அஹமது, நகர இளைஞரணி அமைப்பாளர் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர் வரவேற்றார். பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதா முருகன் பேசும்போது, தமிழக்கத்தில் ஒன்றிய அரசு தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிப்பது ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

    தமிழ் மொழிதான் தாய் மொழி, அதுதான் உலகின் சிறந்த மொழி என்றார்.இந்நிகழ்ச்சியில் சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள். மாவட்ட துணைச் செயலாளர்கள் ஞானவேலன், செல்வமணி, வழக்கறிஞர் அணி ராம. சேயோன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன், குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில் நன்றி கூறினார்.

    • நெல்களில் எழுத வைத்தும், நோட்டு பேனா பொருட்களை சிவனிடம் வைத்தும் வழிபட்டனர்.
    • குழந்தைகளுக்கு நாவில் தேனால் எழுதப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே இன்னம்பூரில் பிரசித்தி பெற்ற கல்விக்குரிய சிறப்பு ஸ்தலமான எழுத்தறிநாதர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    பொதுமக்கள் காலை முதல் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    மேலும், நெல்மணிகளில் குழந்தைகளை எழுத வைத்தும், நோட்டு பேனா உள்ளிட்ட பொருட்களை சிவனிடம் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    மேலும் குழந்தைகளுக்கு நாவில் தேனால் எழுதப்பட்டும் வருகிறது.

    • ஆசிரியைகள் குழந்தைகளின் கைகளை பிடித்து தமிழ் எழுத்துக்களை எழுத வைத்து கல்வியை தொடங்கினர்.
    • குழந்தைகளின் கல்வியை இன்று தொடங்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில் நெல், பச்சரிசி ஆகியவற்றில் அட்சரம் எழுதி குழந்தைகள் கல்வியை தொடங்கினர்.

    மேலும் கோதுமை, நெல், துவரை, பயறு, கடலை, எள், உளுந்து, கொள்ளு, மொச்சை போன்ற நவதானியங்களில் எழுதியும் தங்களது கல்வியை தொடங்கினர்.

    ஆசிரியைகள் குழந்தைகளின் கைகளை பிடித்து தமிழ் எழுத்துக்களான உயிர் எழுத்துகளையும், மெய் எழுத்துக்களையும் எழுத வைத்து தங்களின் கல்வியை தொடங்கினர்.

    கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக எம் பள்ளியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    விழாவில் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கார்த்திகேயன் சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார்.

    கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பெற்றோர்கள் இன்று தங்கள் குழந்தைகளின் கல்வியை தொடங்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தனர்.

    பள்ளி முதல்வர் அம்பிகாவதி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை வரவேற்றார். விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • மார்த்தாண்டத்தில் மாவட்ட முதன்மை மாவட்ட கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை ஆணையர் ஆகியோரிடம் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வழங்கியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்ட கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலரின் கீழ் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் ஆகிய கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதன்படி நாகர்கோவில் கல்வி மாவட்டத்தின் கீழ் அகஸ்தீஸ்வரம், தோவாளை ஒன்றிய பகுதிகளும், தக்கலை கல்வி மாவட்டத்தின் கீழ் குளச்சல், பத்மநாபபுரம் நகராட்சி பகுதிகள் மற்றும் ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, தக்கலை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளிகளும், குழித்துறை கல்வி மாவட்டத்தின் கீழ் கொல்லங்கோடு நகராட்சி மற்றும் கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளிகளும், திருவட்டார் கல்வி மாவட்டத்தின் கீழ் குழித்துறை நகராட்சி பகுதிகள் மற்றும் மேல்புறம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது.

    அந்தந்த கல்வி மாவட்டத்திற்குட்பட்ட மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்க பள்ளி, நர்சரி பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகள் என அனைத்து பள்ளி கல்வி நிறுவனங்களும் அந்தந்த கல்வி மாவட்ட அதிகாரியின் கீழ் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு நான்கு மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வந்த நிலையில் அரசாணை எண் 151 -என்ற புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

    அந்த அரசாணைபடி, மேற்கண்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் மறுசீரமைப்பு செய்யப்படுவதாக தெரியவருகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கென நாகர்கோவில், தக்கலை என இரண்டு மாவட்ட கல்வி அலுவலகங்களும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கென நாகர்கோவில் பகுதியில் ஒரு கல்வி மாவட்ட அலுவலகமும், தனியார் சுயநிதி பள்ளிகளுக்கென ஒரு மாவட்ட கல்வி அலுவலகமும் அமைய உள்ளதாக தெரிய வருகிறது.

    அரசின் இந்த முடிவு குமரி மேற்கு மாவட்டத்தின் மையப்பகுதியான மார்த்தாண்டத்தில் குழித்துறை, திருவட்டார் என இரண்டு மாவட்ட கல்வி அலுவலகங்களை கொண்ட மார்த்தாண்டம் பகுதியை முற்றிலும் புறக்கணிப்பதாக உள்ளது.

    இதனால் கிள்ளியூர், விளவங்கோடு, திருவட்டார் தாலுகாவிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    எனவே குமரி மாவட்டத்திலுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கென நாகர்கோவில், தக்கலை, குழித்துறை என மூன்று மாவட்ட கல்வி அலுவலகங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

    மேலும் குழித்துறை, திருவட்டார் என இரண்டு மாவட்ட கல்வி அலுவலகங்கள் அமைந்துள்ள குமரி மாவட்டத்தின் மையப்பகுதியான மார்த்தாண்டத்தில் மாவட்ட முதன்மை மாவட்ட கல்வி அலுவலகம் அமைக்க வேண்டும். மேலும் குழித்துறை கல்வி மாவட்டம் தொடர்ந்து செயல்பட அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் படிப்பவர்கள் வேலைவாய்ப்புகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை.
    • அரசு பணிவாய்ப்புகளும் நிறைய உண்டு.

    பொறியியல் படிப்பில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், ஐ.டி. எனப்படும் தகவல் தொழில் நுட்பம், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மவுசு இருந்துகொண்டுதான் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பத்துறையில் தேக்க நிலை ஏற்பட்டபோதுகூட மாணவர்கள் ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் சேருவதை முற்றிலுமாக தவிர்த்துவிடவில்லை.

    பொறியியல் பாடப்பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் மற்றும் ஐ.டி. படிப்புகள் 'எவர் கிரீன்' படிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இன்றைய தினம் அனைத்து துறைகளும் கணினிமயமாகிவிட்ட சூழலில் இந்த இரண்டு படிப்புகளுக்கும் எப்போதும் தேவை இருந்துகொண்டுதான் இருக்கும்.

    கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்சர், டேட்டா ஸ்ட்ரக்சர், டேட்டா பேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம், டிசைன் மற்றும் அனலிசிஸ், ஜாவா மற்றும் இன்டர்நெட் புரோகிராமிங், ஆபரேட்டிங் சிஸ்டம், சாப்ட்வேர் என்ஜினீயரிங், மைக்ரோ புராசசர்ஸ் மற்றும் கண்ட்ரோலர்ஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், டிஜிட்டல் சிக்னல் புராசசிங் முதலிய பாடங்கள் இடம்பெறுகின்றன.

    பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் முடிப்பவர்கள், சாப்ட்வேர், எம்பெட்டட் சிஸ்டம்ஸ், கம்ப்யூட்டிங், நெட்வொர்க் மற்றும் டேட்டா பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் உள்ளிட்ட துறைகளிலும் தற்போது மிகவும் பிரபலமாகி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துறையிலும் பணியாற்றலாம். அவர்களுக்கு டெவலப்பர், குவாலிட்டி ஸ்பெசலிஸ்ட், கன்சல்டன்ட், கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்ட், சாப்ட்வேர் என்ஜினீயர், டேட்டா பேஸ், சிஸ்டம் அனலிஸ்ட், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர் உள்ளிட்ட பதவிகள் அளிக்கப்படுகின்றன. இப்போதும், வருங்காலத்திலும் அனைத்து துறைகளிலும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு தேவை இருந்துகொண்டே இருக்கும்.

    எனவே, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் படிப்பவர்கள் வேலைவாய்ப்புகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. தற்போது அரசு துறைகள் அனைத்தும் வேகமாக கணினிமயமாக்கப்பட்டு வருவதால் அரசு பணிவாய்ப்புகளும் நிறைய உண்டு. மேலும், பள்ளிகளில் ஆசிரியர், பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர், பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி என கற்பித்தல் துறைகளிலும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

    இப்போதெல்லாம் அரசு மற்றும் தனியார் வங்கிகள் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பட்டதாரிகளைச் சிறப்பு அதிகாரி பதவியில் அதிக எண்ணிக்கையில் பணியமர்த்தி வருகின்றன. எனவே, வங்கித்துறையில் பணியாற்ற விரும்புவோருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

    • குழந்தைகளுக்கு எதிலும் தீவிர கவனம் இருக்காது.
    • ஆசிரியர் பாடம் நடத்தும்போது அவர் சொல்வதை கவனமாக கேட்க வேண்டும்.

    மாணவர்கள் தங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தினால் தான் கல்வியில், வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும். குழந்தைகளுக்கு எதிலும் தீவிர கவனம் இருக்காது. அவர்களது மனம் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். அதுபோன்ற நிலையில் இருப்பவர்கள் தங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தினால் தான் கல்வியில், வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும். அவ்வாறு வெற்றிகளைப்பெற மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி என்பதை காண்போம்.

    1) இரவில் நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் மிக அவசியம். அப்போது தான் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த முடியும். மருத்துவ ரீதியல் ஒரு மனிதனுக்கு தினமும் குறைந்தபட்சம் 8 மணி நேர தூக்கம் அவசியம். சரியான உறக்கம் இல்லை என்றால் உடலும் மனமும் சோர்ந்து கல்வி கற்பதில் தடுமாற்றம் ஏற்படும். எனவே இரவில் நீண்ட நேரம் டெலிவிஷன் பார்ப்பது, திரைப்படங்கள் பார்ப்பது போன்றவற்றை தவிர்த்து சரியான நேரத்திற்கு உறங்கச்சென்று அதிகாலையில் விழித்து படிப்பது நல்லது.

    2) காலை உணவு மிக அவசியம். சிலர் பள்ளிக்குப்புறப்படும் அவசரத்தில் காலை உணவை தவிர்ப்பதுண்டு. இது ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இரவு நீண்ட நேரத்திற்கு பிறகு வயிறு காலியாக இருக்கும். எனவே காலை உணவு சாப்பிட்டால் தான் உடலும், மூளையும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். இல்லை என்றால் உடலும், மூளையும் சோர்ந்து போகும். ஆர்வமுடன் படிக்க முடியாது. படிப்பதும் மனதில் பதியாது.

    3) ஆசிரியர் பாடம் நடத்தும்போது அவர் சொல்வதை கவனமாக கேட்க வேண்டும். அவர் கரும்பலகையில் எழுதிப்போடும் குறிப்புகளை கவனமுடன் எழுதிக்கொள்ள வேண்டும். ஆசிரியர் பாடம் நடத்தும் போது மனதை அலைபாய விடுவது, கவனக்குறைவாக இருப்பது போன்றவை கூடாது.

    4) ஒவ்வொரு வகுப்பிற்கும் இடையில் சிறிதுநேரம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். அதாவது ஒரு சில நிமிடங்கள் கண்களை மூடி அமைதியாக இருந்தாலே போதும். இவ்வாறு செய்வதன் மூலம் அடுத்தடுத்த வகுப்புகளை ஆர்வத்துடன் கவனிக்க முடியும்.

    5) வகுப்பறையில் அமரும்போது எப்போதும் நேராக, நிமிர்ந்து அமருங்கள். உடலை வளைத்துக்கொண்டு அமரக்கூடாது.

    6) கவனம் தடைப்படும்போது உடலை அசைத்துக்கொள்ளலாம். கை, கால்களை அசைத்து உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து சுறுசுறுப்பை உருவாக்கலாம். கொஞ்சம் தண்ணீர் குடித்தாலும் உடலில் சுறுசுறுப்பு ஏற்படும்.

    • வெளிநாட்டுக்கு சென்று படிக்கும் ஆர்வமும், மோகமும் மாணவர்களிடம் மேலோங்கி உள்ளது.
    • வெளிநாட்டுக்கு செல்லும் முன் மாணவர்கள் சில விஷயங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

    வெளிநாட்டுக்கு உயர்கல்வி படிக்க செல்லும் ஆர்வமும், மோகமும் மாணவர்களிடம் மேலோங்கி உள்ளது. அங்குள்ள பல்கலைக்கழகங்களில் இணைந்து படிப்பை தொடர்வதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    வெளிநாட்டுக்கு சென்று படிக்க முடிவு செய்துவிட்டால் முதலில் மேற்கொள்ள வேண்டிய விஷயம் விசாவுக்கு விண்ணப்பிப்பதுதான். அங்கு எத்தனை ஆண்டு கல்வி கற்க போகிறீர்கள் என்பதை குறிப்பிட்டு கல்வி விசாவுக்கு விண்ணப்பித்துவிட வேண்டும். அதை விட முக்கியமான விஷயம் விசாவுக்கு விண்ணப்பித்திருக்கும் தகவலை பல்கலைக்கழகத்துக்கு தெரியப்படுத்துவதுதான்.

    ஏற்கனவே விசா பெற்றிருந்தாலோ, காலதாமதமாக விசா கிடைக்கும் என்றாலோ அது பற்றியும் பல்கலைக்கழகத்துக்கு உடனே தெரியப்படுத்திவிட வேண்டும். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் கிடைத்துவிட்டால் உடனே கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். அதற்கு தேவையான பணத்தை முன்கூட்டியே தயார் செய்துவிட வேண்டும். பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் தவணை முறையில் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளன. அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    அங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்களுடனும், அவர்கள் பின்பற்றும் கலாசாரங்களுடன் இணைந்து வாழவும் பழகிக்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் அங்கு செல்வதற்கு முன்பே அங்குள்ள கலாசாரங்களை தெரிந்து கொள்வது சிறப்பானது. இணைய தளங்களும், யூடியூப் வீடியோக்களும் அதற்கு உதவும்.

    வெளிநாடுகளில் நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். பெரும்பாலான பல்கலைக்கழகங்கள், அங்கு சேருவதற்கு முன்பு போட வேண்டிய தடுப்பூசிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கும்.

    அதில் தட்டம்மை, ரூபெல்லா, ஹெபடைடிஸ் பி, கொரோனா தடுப்பூசிகள், பூஸ்டர்கள் ஆகியவை அடங்கும். சர்வதேச பயணங்கள் மேற்கொள்வதற்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்ற தடுப்பூசிகளில் எவையெல்லாம் அவசியம் போட வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விமான டிக்கெட் புக்கிங் செய்வதற்கு காலம் தாழ்த்தக்கூடாது. அங்கு சென்று படிப்பது உறுதியாகிவிட்ட உடனேயே விமான டிக்கெட் புக்கிங் செய்துவிடுவதுதான் நல்லது. கடைசி நேரத்தில் புக்கிங் செய்வது தேவையற்ற பதற்றத்தை வரவழைக்கும். டிக்கெட்டின் விலையும் அதிகமாக இருக்கும். ஆரம்பத்திலேயே டிக்கெட் முன் பதிவு செய்யும்போது சவுகரியமான பயணத்திற்கு திட்டமிட்டு விடலாம். பயண சலுகைகளையும் பெறலாம்.

    வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது பண விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். கூடுமானவரை டிஜிட்டல் பணமாக வைத்திருப்பதுதான் சிறந்தது. அங்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் சர்வதேச வங்கிகளின் ஏ.டி.எம்., கிரிடிட் கார்டுகளை கைவசம் வைத்திருப்பது நல்லது.

    அத்தகைய கார்டுகளை பயன்படுத்துவது பாதுகாப்பானது. வெளிநாட்டில் வங்கிக்கணக்கைத் திறக்கும் வரை ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு அவற்றை பயன்படுத்தலாம்.

    வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வது அவசியமானது. அவசிய தேவை இருப்பின் டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகளின் சீட்டுகளை உடன் எடுத்துச் செல்லலாம்.

    இரண்டு வாரங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்லலாம். அந்த பொருட்களை விமானத்தில் எடுத்து செல்ல அனுமதி இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியமானது.

    விமான வழிகாட்டு நெறிமுறைகளை படித்து பார்த்துவிட்டு பயணத்தை மேற்கொள்ள வேண்டும். சில நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விஷயங்கள் மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்டதாக இருக்கலாம். அதனால் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

    • நுழைவுத் தோ்வு மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
    • இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய தோ்வு முகமையின் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயிலும் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதார நிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சாா்ந்த 15 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நுழைவுத் தோ்வு மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமு றைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    2022-2023-ம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய தோ்வு முகமையால் நுழைவுத் தோ்வு நடத்தப்பட உள்ளது.

    நுழைவுத் தோ்வு தொடா்பான விவரங்களை இணையதளத்தில் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம். கணினி வழியில் நுழைவுத் தோ்வு நடைபெறும்.

    தோ்வு செய்யப்படும் 9, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆண்டிற்கு ரூ.75 ஆயிரம், 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டிற்கு ரூ.1,25,000, பள்ளிக் கட்டணம், விடுதிக் கட்டணங்கள் சோ்த்து கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும், மேலும் மாணவ, மாணவிகளால் அளிக்கப்பட்டுள்ள விவரங்களை சரிசெய்து கொள்ள நாளை முதல் 31-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தோ்வுக்கான நுழைவுச்சீட்டு வருகிற 5-ந் தேதி இணைய தளத்தில் வெளியிடப்படும். 11 -ந் தேதியன்று தோ்வு நடைபெறுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும்போது தொலைபேசி எண், ஆதாா் எண், ஆதாா் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.

    மேலும், இத்திட்டம் தொடா்பான அனைத்து விவரங்களும் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    ×