search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பு"

    • இரவு பொருட்களின் இடையில் பாம்பு இருப்பதைக்கண்டு மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • வீட்டின் படிக்கட்டில் பழைய பொருட்கள் வைக்கும் போது கவனத்துடன் கையாள வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கனிராவுத்தர் குளம் பெட்ரோல் பங்க் அருகே மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்தின் படிக்கட்டின் கீழ் மின்வாரிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இரவு இந்த பொருட்களின் இடையில் பாம்பு இருப்பதைக்கண்டு மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் பாம்பு பிடி வீரர் யுவராஜிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த யுவராஜ் பாம்பை தேடினார். சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மின்வாரிய அலுவலகப் பொருட்கள் அடியில் பதுங்கி இருந்த பாம்பை வெளியே கொண்டு வந்தார். அது சாரைப்பாம்பு. 8 அடி நீளம் இருந்தது. அந்த பாம்பை லாபகமாக பிடித்த யுவராஜ் வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

    இதேப்போல் ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் உள்ள ஒரு வீட்டின் படிக்கட்டில் இருந்த 5 அடி நீள நல்ல பாம்பை பாம்பு பிடி வீரர் யுவராஜ் பிடித்தார். ஈரோடு மாவட்டம் கஸ்பா பேட்டையில் உள்ள ஒரு வீட்டின் சமையலறையில் பதுங்கி இருந்த 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பையும் அவர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

    இது குறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜ் கூறும்போது,

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெப்பத்தை தாங்க முடியாமல் பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி வர தொடங்கியுள்ளன. எனவே பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    வீட்டின் படிக்கட்டில் பழைய பொருட்கள் வைக்கும் போது கவனத்துடன் கையாள வேண்டும். அதை போன்று பிரிட்ஜ், வாஷிங் மெஷின் அடிப்பகுதியில் பாம்புகள் வர வாய்ப்புள்ளது. பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார்.

    • புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.
    • ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நகர பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார்.

    வகுப்பு தொடங்கியதும் தனது புத்தகப்பையை அந்த மாணவர் எடுக்க முயன்றார். அப்போது புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.

    அதை கேட்டதும் மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்பறையில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே பள்ளி நிர்வாகத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வேலாயுதம் ஆகியோர் உடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்து மாணவரின் புத்தகப்பையில் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தனர்.

    இதன் பின்னரே மாணவர்களும் ஆசிரியர்களும் நிம்மதியடைந்தனர். பின்னர் வழக்கம் போல் வகுப்பு தொடங்கியது.

    இது குறித்து வனத்துறை ஊழியர்கள் கூறும் போது பிடிப்பட்ட பாம்பு விஷம் இல்லாத சாரை பாம்பு. வளர்ந்த பெரிய சாரைப் பாம்புகளின் கடி வலி மிகுந்ததாக இருந்தாலும் விஷதன்மை அற்றது. ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம். புத்தக பைகளை எடுக்கும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.

    • புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.
    • ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நகர பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார்.

    வகுப்பு தொடங்கியதும் தனது புத்தகப்பையை அந்த மாணவர் எடுக்க முயன்றார். அப்போது புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.

    அதை கேட்டதும் மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்பறையில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே பள்ளி நிர்வாகத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வேலாயுதம் ஆகியோர் உடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்து மாணவரின் புத்தகப்பையில் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தனர்.

    இதன் பின்னரே மாணவர்களும் ஆசிரியர்களும் நிம்மதியடைந்தனர். பின்னர் வழக்கம் போல் வகுப்பு தொடங்கியது.

    இது குறித்து வனத்துறை ஊழியர்கள் கூறும் போது பிடிப்பட்ட பாம்பு விஷம் இல்லாத சாரை பாம்பு. வளர்ந்த பெரிய சாரைப் பாம்புகளின் கடி வலி மிகுந்ததாக இருந்தாலும் விஷதன்மை அற்றது. ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம். புத்தக பைகளை எடுக்கும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.

    • வாகனத்தில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பை சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை உயிருடன் மீட்டனர்.
    • வாகனத்தில் சீட் பின் பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ராசிபுரம் பிரிவு ரோட்டில் ஒருவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு சென்று விட்டு மீண்டும் தனது வாகனத்தை எடுக்க வந்தார்.

    அப்போது அங்கு இருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் சீட் பகுதியில் பாம்பு சென்றதை பார்த்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இருசக்கர வாகனத்தில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பை சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை உயிருடன் மீட்டனர். பாம்பை மீட்டவுடன் இருசக்கர வாகன ஓட்டி நிம்மதி அடைந்தார். பின்னர் உயிருடன் பிடித்த பாம்பை தீயணைப்புத் துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

    இருசக்கர வாகனத்தில் சீட் பின் பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கதிரவனை கொண்டு சென்றனர்.
    • கதிரவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள காவனூரை சேர்ந்தவர் கதிரவன் (வயது 38 ). தொழிலாளி.

    இவர் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று அவரது கையில் கடித்தது.

    கண்ணாடிவிரியன் பாம்பு அவரை கடித்தது தெரிய வந்தது.

    பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கதிரவனை கொண்டு சென்றனர்.

    மேலும் கண்ணாடிவிரியன் பாம்பையும் பிளாஸ்டிக் கவரில் போட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அங்கு கதிரவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அங்கு கதிரவன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாம்பை தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தனர்.
    • கடந்த 4 நாட்களாக கோவில் வளாகத்தில் நாகப்பாம்பு உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஹுசூராபாத் நகரில் உள்ள ராமர் கோவிலில் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. கோவிலில் உள்ள சிவன் சன்னதிக்குள் நுழைந்தது. அங்கிருந்த சிவலிங்கத்தை சுற்றி சுற்றி வந்தது.

    மேலும் சிவலிங்கத்தின் மீது உடலை சுற்றியபடி படமெடுத்து ஆடியது. இது பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    கோவிலில் நாகப்பாம்பு இருப்பதாக தகவல் பரவியதையடுத்து, பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாம்பை தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தனர்.

    சிவலிங்கம் மீது நாகப்பாம்பு கண்டதால், சிவன் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

    அவர்களில் சிலர் பூஜை செய்து வழிபட்டனர். பாம்பின் காட்சிகளை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். கடந்த 4 நாட்களாக கோவில் வளாகத்தில் நாகப்பாம்பு உள்ளது. இதனால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    • அசம்பாவி தங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
    • நாகதேவதைக்கு ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகளை பலியிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவார்கள்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த செல்லகுடப்பட்டி ஊராட்சி நாகர்குட்டை பகுதியில் மலை அடி வாரத்தில் பிரசித்தி பெற்ற நாகதேவதை கோவில் உள்ளது. இங்கு மூலவராக நாக தேவதை சிலை அமைந்துள்ளது.

    சிலையின் அடிப்பகுதியில் பாம்பு வடிவிலான உருவம் உள்ளது. இது இயற்கையாக உருவாகிய அமைப்பு ஆகும்.

    ஆண்டுதோறும் தை மாதம் காணும் பொங்கல் அன்று நாகதேவதைக்கு திருவிழா நடப்பது வழக்கம். இந்த பகுதியை சுற்றி மலைகள், மலைக்குட்டைகள் உள்ளன. புதர்கள் அதிக அளவில் மண்டி உள்ளதால் அடிக்கடி விஷ பாம்புகள் ஊருக்குள் வந்து விடும்.

    ஆகையால் ஊருக்குள் பாம்புகள் வராமல் இருக்க இந்த பகுதி மக்கள் ஆண்டு தோறும் நாகதேவதைக்கு ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகளை பலியிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவார்கள்.

    அதேபோல் நேற்று காலை முதலே சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் புத்தாடை அணிந்து கூட்டம் கூட்டமாக வந்து நாகதேவதையை வணங்கினார்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து ஆடு கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து மாலையில் தேர் அலங்கரிக்கப்பட்டு மலையை சுற்றி வலம் வந்தது. அப்போது கூடி இருந்த பக்தர்களும், விவசாயிகளும் தாங்கள் கொண்டு வந்த ஆமணக்கு விதைகள், உப்பு, மிளகு உள்ளிட்ட தானியங்களை வாரி இறைத்து தங்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவில் பெங்களூர், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டிணம், பாரூர் அரசம்பட்டி, தருமபுரி, திருப்பத்தூர், மத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் அசம்பாவி தங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். 

    • விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.
    • பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூருவில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன் (வயது 21) என்பவர் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். கல்லூரி அருகேயே வீடு எடுத்து ஆதித் வாடகைக்கு தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.

    விழாவில் மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் பட்டம் வாங்கிக் கொண்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பினார். வீட்டின் அருகில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகே வந்தபோது அவரை விஷ பாம்பு கடித்தது. வீட்டின் அருகே பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் இருந்து இந்த விஷ பாம்பு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    பாம்பு கடித்ததை அவர் உணரவில்லை. வீட்டிற்கு வந்ததும் அவர் கீழே சுருண்டு விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். திருச்சூரில் இருந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மாணவனின் தந்தை இத்தாலியில் உள்ளார். அவருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் உடலில் பாம்புக்கடித்தற்கான அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது என்றனர்.

    கல்லூரி துணை முதல்வர் டாக்டர் பிரபாகர ஜி.என் கூறுகையில், ஆதித் சிறந்த மாணவர். அவரை சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்றார்.

    • குடோனில் பதுங்கி இருந்த 4 அடி நீள கண்ணாடி வீரியன் பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டது.
    • ஆள்நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.

    சீர்காழி:

    சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் தனியார் டூ வீலர் ஷோரூம் உள்ளது.

    இந்த ஷோரூமின் ஒரு பகுதியில் உள்ள குடோனில் பாம்பு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள்.

    இது குறித்து சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான பாண்டி யனுக்கு தகவல் அளித்தனர்.

    அதன்பேரில் அங்கு சென்ற பாண்டியன் குடோனில் பதுங்கி இருந்த நான்கடி நீளம் உள்ள கடுமையான விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்துடப்பாவில் அடைத்து ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை லாவமாக பிடித்தனர்.

    கடலூர்:

    கடலூர் புதுக்குப்பத்தில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த குழந்தைகள் மையத்தில் 16 குழந்தைகள் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் குழந்தைகள் மையம் இயங்கி வந்தது. அங்கு இருந்த பணியாளர் சத்து மாவு எடுப்பதற்காக அறைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று பாம்பு ஒன்று இருந்தது. இதனை பார்த்து அலறிய பணியாளர் "பாம்பு பாம்பு" என அலறிக்கொண்டு அங்கிருந்த குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து பணியாளர்கள் தங்கள் மேல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் மேல் அதிகாரிகள் கடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை லாவமாக பிடித்தனர். இதனை பார்த்த பிறகு தான் பணியாளர்கள் பெரும் மூச்சுவிட்டபடி அமைதி நிலைக்கு வந்தனர். தற்போது மழைக்காலங்கள் என்பதால் கட்டிடங்களுக்குள் பாம்புகள் வருவதால் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தீயணைப்பு துறையினர்கள் அறிவுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் பொதுமக்களும் பெற்றோர்களும் திரண்டதால் பரபரப்பாக காணப்பட்டது.

    • பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அதிகாலை நேரத்தில் நடந்து சென்றனர்.
    • சபரிமலைக்கு செல்லும் பாதையில் சிறுமியை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்த வருகின்றனர். இந்நிலையில் சபரிமலைக்கு தனது தந்தையுடன் வந்த சிறுமியை பாம்பு கடித்தது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் கட்டாக்கடை பகுதியை சேர்ந்த நிரஞ்சனா (வயது 6) என்ற சிறுமி, தனது தந்தை பிரசாந்த்துடன் சபரிமலைக்கு யாத்திரை சென்றார். பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு அதிகாலை நேரத்தில் நடந்து சென்றனர். சுவாமி அய்யப்பன் சாலையில் நடந்து சென்ற போது சிறுமி நிரஞ்சனாவை பாம்பு கடித்துள்ளது.

    இதையடுத்து சிறுமி, பம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு விஷ எதிர்ப்பு ஊசி போடப் பட்டது. பின்பு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமி யின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    சபரிமலைக்கு செல்லும் பாைதயில் சிறுமியை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கேரள வனத்துறை மந்திரி சுசீந்திரனுடன், தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.அதனை தொடர்ந்து சன்னிதானத்திற்கு செல்லும் வழிகளில் வனத்துறையை சேர்ந்த பாம்பு பிடிப்பா ளர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.

    அவர்கள் சபரிமலைக்கு செல்லும் பாதையில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் வனப்பாதை யில் பக்தர்களுக்கு உதவ வன அலுவலர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

    • நாகப்பாம்பு வீட்டுக்குள் நுழைய முயல்வதும், இதனை வளர்ப்புப்பூனை சீறியபடி தடுக்க முயல்வதும் தெரியவந்தது.
    • சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

    கோவை:

    கோவை கவுண்டம்பாளையம், சரவணாநகரை சேர்ந்தவர் விஜர். இவர் தனது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் விஜர் குடும்பத்தினர் சம்பவத்தன்று வீட்டில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது விஜர் வீட்டு வளாகத்தில் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது.

    தொடர்ந்து அந்த பாம்பு வீட்டுக்குள் நுழைய முயன்றது. இதற்கிடையே அங்கு நின்றிருந்த வளர்ப்பு பூனை தற்செயலாக நாகப்பாம்பை பார்த்தது. அது உடனடியாக பாம்பை நோக்கி சீறிக்கொண்டு வந்தது. இருந்தபோதிலும் அந்த பாம்பு வீட்டுக்குள் நுழைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. வீட்டு வாசலில் பூனையின் சீறலை தற்செயலாக கேட்ட விஜர் குடும்பத்தினர் உடனடியாக அங்கு வந்து பார்த்தனர். அப்போது நாகப்பாம்பு வீட்டுக்குள் நுழைய முயல்வதும், இதனை வளர்ப்புப்பூனை சீறியபடி தடுக்க முயல்வதும் தெரியவந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக வீட்டுக்கதவை மூடினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். பாம்பு வீட்டுக்குள் நுழைய முயல்வதையும், அதனை பூனை தடுத்து நிறுத்துவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்தனர்.

    பூனையின் எதிர்ப்பால் பாம்பு அடங்கி அங்கிருந்து வெளியேறிச் சென்றது. இந்த காட்சிகளை வீடியோ எடுத்த சிலர் அதனை இணையத்தில் பரப்பினர். தற்போது சமூகவலை தளத்தில் அந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

    ×