search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223427"

    • கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.ஜெ.பிரபாகரன் தலைமை வகித்தார்.
    • திருப்புன்கூரில் திராவிட மாடல் அரசின் 2-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த திருப்புன்கூரில் திராவிட மாடல் அரசின் 2-ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.ஜெ.பிரபாகரன் தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர்கள் இரா.முருகன், கே.சசிக்குமார்,மாவட்ட பிரதிநிதி விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் தியாக.விஜயேஸ்வரன், பேரூர் கழகச் செயலாளர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், நகர செயலாளர் சுப்பராயன், மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், கொள்ளிடம் ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சாமிநாதன் ஆகியோர் பேசினர். தலைமை கழக பேச்சாளர் தீக்கனல் என்.செல்வம் சிறப்புறையாற்றினார்.

    • மாநிலமே வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளதால், மக்களும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
    • மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தான் மக்களுக்கு பொற்கால ஆட்சி என்பதை மக்கள் உணர தொடங்கிவிட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் நகர தி.மு.க. சார்பில், திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பரிதாநவாப் வரவேற்றார்.

    மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி, நகர அவைத்தலைவர் மாதவன், நகர துணை செயலாளர் பொன்.குணசேகரன், அரங்கண்ணல், மீனா நடராஜன், ஜான்டேவிட்ராஜ், சுகுமார், திருமலைச்செல்வன், அமீர்சுஹேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த ஆட்சியில் அனைத்து குடும்பத்தினரும் ஏதோ ஒரு வகையில் பயனடைந்து வருகின்றனர். மாநிலமே வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளதால், மக்களும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தான் மக்களுக்கு பொற்கால ஆட்சி என்பதை மக்கள் உணர தொடங்கிவிட்டனர்.

    குறிப்பாக தாய்மார்களுக்கு எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்து வரும் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனைவரும் என்னென்றும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லம், சித்ரா சந்திரசேகர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், வட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சி 16 கால் மண்டபம் பகுதியில் நடந்தது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. 16 கால் மண்டபம் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு இளைஞரணி துணை அமைப்பாளர் விமல் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ஆறுமுகம், ஜெயராமன், பெருங்குடி வசந்த் முன்னிலை வகித்தனர். மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினர். பகுதி துணை செயலாளர் ரமேஷ் வரவேற்றார். கவுன்சிலர்கள் சிவசக்தி ரமேஷ், கருப்பசாமி, வக்கீல் ஸ்ரீதர், தனுஷ்கோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • திருவேடகம் நீலமேகம், ஒன்றிய இளைஞரணி பால்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளத்தில் தி.மு.க. கிளை சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சேகர், மாநில பொதுக்குழு ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் கேபிள்ராஜா வரவேற்றார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    பேரூராட்சி சேர்மன்கள் ஜெயராமன், பால்பாண்டி, பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ், நகர துணைசெயலாளர் ஸ்டாலின், பொருளாளர் கண்ணன், அண்ணாதுரை, இளைஞரணி வெற்றிசெல்வம், ஊராட்சி தலைவர்கள் ஆனந்தன், சிறுமணி, சகுபர் சாதிக், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணி, கோகிலா சரவணன், கார்த்திகா ஞானசேகரன், ரேகா வீரபாண்டியன், விவசாய அணி முருகன் மற்றும் ராஜாராம், ராஜா, பெரியகருப்பன், திருவேடகம் நீலமேகம், ஒன்றிய இளைஞரணி பால்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • மாவட்ட பிரதிநிதி அமீர் ஹம்சா நன்றி கூறினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் ஏர்வாடி பகுதியில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குலாம்முகைதீன் தலைமை தாங்கினார். சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல், ஒன்றிய கவுன்சிலர் பிச்சை, சாயல்குடி நீர் பாசன சங்கத் தலைவர் ராஜாராம், ஊராட்சி தலைவர்கள் மங்களசாமி, தென்னரசி செல்ல பாண்டியன், ஒன்றிய பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஏர்வாடி பாலமுருகன் வரவேற்றார். தலைமைக்கழக பேச்சாளர்களான சிவகங்கை மாவட்ட அவைத் தலைவர் கணேசன், சாத்தங்குடி வில்வலிங்கம், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் கணேசன் ஆகியோர் பேசினர்.

    முன்னாள் ஒன்றிய பிரதிநிதி நாகேந்திரன், சாயல்குடி நகர இளைஞரணி செயலாளர் விக்னேஷ் ராம், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் வஹிதாசகுபர், இளங்கோவன், முன்னாள் சாயல்குடி பேரூராட்சி துணை சேர்மன் காமராஜ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஜலில், பழனிச்சாமி, பொன்னுத்தாய் பாண்டி, மாவட்ட பிரதிநிதி ஜெயபாலன், கிளை செயலாளர் ஏர்வாடி காதர்பாட்சா, மாரியூர் காசி, வாலிநோக்கம் சகுபர், மேலகிடாரம் குமாரராஜா, காவாகுளம் முருகேசன், கீழக் கிடாரம் முத்துகிருஷ்ணன், செய்யது அபுதாஹிர், ஒப்பிலான் செய்யது இப்ராஹிம், மேலமுந்தல் சண்முகம், சாயல்குடி குருசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட பிரதிநிதி அமீர் ஹம்சா நன்றி கூறினார்.

    • தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • இதில் தி.மு.க. கிளைச் செயலாளர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தை அடுத்த அச்சுந்தன் வயல் கிராமத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நாகலிங்கம் தலைமையில் தமிழக அரசின் சாதனை 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஈஸ்வரி கருப்பையா, கருப்பையா, பரமேசுவரன் அனீஸ் பாத்திமா, பாலசுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவரும், கிளைச் செயலாளருமான லிங்கம் சசிகலா வரவேற்றார். முன்னாள் மதுரை மாநகராட்சி மேயர்- தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குழந்தைவேலு சிறப்புரையாற்றினார்.

    இதில் தி.மு.க. கிளைச் செயலாளர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • தி.மு.க. நிர்வாகி மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசியில் அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிவகாசி பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. தி.மு.க. 6-வது பகுதி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநகரச் செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி பிரிவு இணைச்செயலாளரும், திருமங்கலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் குறித்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் சபையர் ஞானசேகரன், காளிராஜன், சேவுகன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகி மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு தி.மு.க. தலைமை கழக பேச்சாளர்கள் வயலூர் கிருஷ்ணமூர்த்தி, பையூர் இளையராஜா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரி ப்பட்டணம் அகரம் கூட்ரோட்டில் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவை தலை வர் தட்ர அள்ளி நாகராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காவேரி ப்பட்டணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.

    கூட்டத்திற்கு நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, அகரம் ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி, ரமேஷ், சண்முகம், கோவிந்தசாமி, பெரியசாமி, சுப்பிரமணி, தங்கராஜ், துரைசாமி, மணியரசு, குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்திற்கு தி.மு.க. தலைமை கழக பேச்சாளர்கள் வயலூர் கிருஷ்ணமூர்த்தி, பையூர் இளையராஜா ஆகியோர் கலந்துகொண்டு திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார் .

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் நாகராசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் விமலா மணி , மாதவி முருகேசன், மகேஸ்வரி சங்கர், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • கமுதி அருகே தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராம லிங்கம் அறிவுறுத்தலின் பேரில் நடந்த இந்த கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், துணைத் தலைவர் சித்ராதேவிஅய்யனார், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர்கள் தங்கமணி, மாரிமுத்து ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து வரவேற்றனர்.

    தலைமை கழக பேச்சாளர் நல்ல சேதுபதி பேசினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ்,அவைத் தலைவர் பொன்னுசாமி, பொருளாளர் விநாயக மூர்த்தி, பிரதிநிதி முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகரத்தினம், அழகர்சாமி, ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • ஆதிதிராவிடர் நல மாவட்ட துணை அமைப்பாளர் வக்கீல் ராமச்சந்திரன் வரவேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கல்லுவெட்டுமேடு பகுதியில் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவரும், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாள ருமான சண்முக வடிவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சகா தேவன், ஒன்றிய அவைத் தலைவர் திருநாவுக்கரசு, பொருளாளர் கண்ணன், துணை செயலாளர்கள் முத்துராமன், சரசு சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் தங்கமணி, மணி, தவமணி, காட்டாம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட கவுன்சிலர் ரவி, ஆதிதிராவிடர் நல மாவட்ட துணை அமைப்பாளர் வக்கீல் ராமச்சந்திரன் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் இலக்கு வன் கலந்து கொண்டு பேசினார்.

    மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சுலைமான் பாதுஷா, மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்டோரும் சிறப்புரையாற்றினர். இதில் திருப்பத்தூர் நகர செய லாளர் கார்த்திகேயன், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் நாராயணன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சாக்ளா, நகர அவைத் தலைவர் ராமரவி, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிக்கந்தர் பாதுஷா, தொ.மு.ச. சண்முகநாதன், பேச்சாளர் ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஒன்றிய துணைச் செயலாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

    • தளபதி அறிவாலய திடலில் நடந்தது
    • ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    ஆலங்காயம் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் மதனாஞ்சேரி கிராமத்தில் உள்ள தளபதி அறிவாலய திடலில் திமுக அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய கழக செயலாளர் மற்றும் வி.எஸ்.ஞானவேலன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தம்மாள் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் கணல் சுப்பிரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    ஒன்றிய நிர்வாகிகள் எம்.சி. ராமநாதன், வி.ஜி.அன்பு, ஷோபா வெங்கடேசன், லட்சுமி பொண்ணம்பலம். ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி மகேந்திரன், பாமிதா ஆசிப், ஊராட்சிமன்ற தலைவர் ஈச்சங்கால் ஏழுமலை, முருகன், செல்வம், பள்ளிபட்டு செல்வம், மெக்கானிக் நாகராஜ், பத்தாப்பேட்டை ஜெயராமன், கிளை கழக நிர்வாகிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • மாநில மாணவரணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், ஒன்றிய பொருளாளர் சித்திரைவேல் ஆகியோர் பேசினர்.

    இளையான்குடி

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தலைமை செயற்குழு உறுப்பினர் முகமது தலைமையில் சாலைக் கிராமம் பஸ் நிலையத்தில் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறு.செல்வராஜன், நகர செயலாளர் நைனா முகம்மது, பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், நடராஜன், குணசேகரன், ஜெகநாதன், பாலகிருஷ்ணன், திலகர் முன்னிலை வகித்தனர். மாணவரணி அமைப்பாளர் சாமிவேல் வரவேற்றார். மாநில மாணவரணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், ஒன்றிய பொருளாளர் சித்திரைவேல் ஆகியோர் பேசினர். கணபதி நன்றி கூறினார். ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மாவட்ட பிரதிநிதிகள் ரவிச்சந்திரன், தயாளன், சேவியர், செய்யதுகான், யாசர், இளைஞரணி நிர்வாகிகள் ராஜீவ் காந்தி,தனசேகரன், பிரபு,கவுன்சிலர்கள் முருகானந்தம்,செல்வி சாத்தையா, மலையரசி ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×