search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடு"

    • கோடை வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில் கடந்த ஓரிரு மாதங்களாக 700 முதல் 800 மாடுகள் வந்தது.
    • கன்றுகுட்டிகள் 12 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது.

    திருப்பூர் :

    ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை திருப்பூர் கோவில்வழி அடுத்த அமராவதிபாளையத்தில் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. பாரம்பரியமான இச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் என 500க்கும் அதிகமானோர் வருகின்றனர்.கோடை வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில் கடந்த ஓரிரு மாதங்களாக 700 முதல் 800 மாடுகள் வந்தது. இந்த வாரம் சந்தை துவங்குவதற்கு முன்பாக 8 மணிக்கே ஆட்டோக்கள் பெருந்தொழுவு ரோட்டில் நீண்ட வரிசையில் இரண்டரை கி.மீ., தூரத்துக்கு காத்திருந்தது.வழக்கமாக மதியத்துக்குள் வாகனங்கள் வருகை முடிந்து விடும். சந்தை முடிவு தருவாயை எட்டும் வரை தொடர்ந்து ஆட்டோ, வேன்களில் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    1,100 மாடுகள் வரத்தாக இருந்தது. சந்தை வியாபாரிகள், விவசாயிகள் கூட்டம் நிறைந்திருந்ததால் கடந்த வாரம் 8முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற கன்றுகுட்டிகள் 12 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. 40 முதல் 42 ஆயிரம் விற்ற மாடுகள் 46 முதல் 48 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. மாடுகள் விலை 2,000 முதல் 4,000 வரை உயர்ந்ததால் சந்தை ஏற்பட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரே நாளில் ரூ. 1.90 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

    • மாட்டை கொன்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    • சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் குல்லூர் சந்தையை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் ராமுத்தாயி. கருத்து வேறுபாடு காரண மாக இவர் தனது கணவர் மாரிகண்ணனை பிரிந்து வந்து விட்டார்.

    சம்பவத்த ன்று மாமனார் வீட்டுக்கு வந்த மாரிகண்ணன் வீட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டை கத்தியால் வெட்டி கொன்றார். இதற்கு உடந்தையாக அவரது நண்பர் பாலமுருகன் இருந்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ரவி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.

    • கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது.
    • கிருஷ்ணாபுரம் தனியார் பள்ளி அருகே உள்ள கிணற்றில் மாடு தவறி விழுந்தது

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 45). விவசாயி. இவர் பசு மாடு வளர்த்து வருகிறார். நேற்று இவர் மாடு மேய்க்க ஓட்டி சென்றபோது கிருஷ்ணாபுரம் தனியார் பள்ளி அருகே உள்ள கிணற்றில் அந்த மாடு தவறி விழுந்தது. இது பற்றி உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இறங்கி பசுமாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.

    • பொதுமக்கள் ஊதியூர் பகுதிக்கு செல்லவே அச்சம் அடைந்தனர்.
    • சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பு டிரோன் பயன்படுத்தப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் அருகே ஊதியூர் வனப்பகுதியில் கடந்த சில மாதத்திற்கு முன்பு வந்த சிறுத்தை ஒன்று அங்கு பதுங்கிக்கொண்டது. பின்னர் அந்த பகுதியில் தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் ஊதியூர் பகுதிக்கு செல்லவே அச்சம் அடைந்தனர். இதையடுத்து சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் கூண்டுக்குள் சிறுத்தை சிக்கவில்லை. எனவே சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பு டிரோன் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் சிறுத்தை எந்த இடத்தில் இருக்கிறது என யாருக்கும் தெரியவில்லை.

    காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள்,டிரோன் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர்.ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மலையடிவார பகுதியில் ஒரு தோட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த கன்று குட்டியை கவ்வி செல்ல முயற்சி செய்தது. கன்றுக்குட்டியின் அலறல் சத்தம் கேட்ட பெரிய மாடுகள் ஒன்று சேர்ந்து சிறுத்தையை துரத்தியது. இதில் பயந்து போன சிறுத்தை கன்றுக்குட்டியை விட்டு விட்டு வனத்துக்குள் ஓடியது. பின்னர் காயங்களுடன் இருந்த கன்றுக்குட்டியை அதன் உரிமையாளர் மீட்டு, கால்நடை டாக்டர் வரவழைக்கபபட்டு காயங்களுக்கு மருந்துகள் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஊதியூர் மலையடிவார பகுதியில் மீண்டும் சிறுத்தை கன்று குட்டியை தூக்கி செல்ல முயன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வடமன் தனது தோட்டத்தில் திருட்டுத்தனமாக கொக்கி போட்டு மின் இணைப்பு திருடியதாக அவருக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    ஏற்காடு:

    ஏற்காடில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மாரமங்கலம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வரதராஜன் (வயது 42) என்பவருக்கும், வடமன் (45) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வடமனின் மகள், அதே பகுதியில் வசிக்கும் வாலிபரை காதலித்தாகவும் அவர்களுக்கு வரதராஜன் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதிலிருந்தே இருவருக்கும் தகராறு நிலவியது.

    இந்நிலையில் கடந்த வாரம் மின்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வடமன் தனது தோட்டத்தில் திருட்டுத்தனமாக கொக்கி போட்டு மின் இணைப்பு திருடியதாக அவருக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கும் வரதராஜன் தான் காரணம் என ஆத்திரம் அடைந்த வடமன் தனது வீட்டில் சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வரதராஜன் வீட்டிற்கு சென்று தேடியதில் வரதராஜன் அங்கு இல்லாததால் ஆத்திரமடைந்த வடமன் அங்கு இருந்த பசுமாட்டை சுட்டு கொன்றுவிட்டு தலை மறைவானார்.

    இந்நிலையில் வரதராஜன் மகள் விஷ்ணு பிரியா அளித்த புகாரில் பேரில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக சுற்றி திரிந்த வடமன் ஏற்காட்டில் இருந்து தப்பி செல்வதற்காக கோட்டச்சேடு பேருந்து நிலையம் அருகே வந்துகொண்டிருந்த போது ஏற்காடு போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    • மின்னல் தாக்கி பசு மாடு இறந்தது
    • இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அங்கமுத்து(வயது50). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான வயலில் கொட்டகை அமைத்து மாடு வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் 3 மாடுகளையும் நேற்று முன்தினம் மாலை மேய்ச்சல் முடிந்த பிறகு கொட்டகையில் கட்டி விட்டு கிராமத்தில் உள்ள சொந்த வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை கொட்டகைக்கு சென்று பார்த்தபோது அவரது பசு மாடுகளில் ஒன்று மின்னல் தாக்கி உயிரிழந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தனது பசுமாடு உயிரிழந்ததால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும், தனக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
    • இதில் பங்கேற்க விரும்புவோர், நாளை காலை 10:30 மணிக்குள் நேரடியாக வந்து பயிற்சியில் சேரலாம்.

    கரூர்:

    கரூர் அருகே, கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நாளை தொடங்குகிறது என, கரூர் அருகே, பண்டுதகாரன்புதுாரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர், மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதுாரில் உள்ள கால் நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    அறிவியல் ரீதியான கறவை மாடு வளர்ப்பில் பராமரிப்பு முறைகளான இனங்களை தேர்வு செய்தல், பண்ணை வீட்டமைப்பு, கறவை மாடுகளை தாக்கும் நோய்கள், அவற்றை தடுக்கும் வழிமு றைகள், மூலிகை மருத்துவ சிகிச்சை முறைகள், பசுந்தீவன உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் கலப்பு தீவனம் தயாரித்தல் ஆகிய தலைப்புகளில் பல்கலைக்கழக பேராசிரியர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், நாளை காலை 10:30 மணிக்குள் நேரடியாக வந்து பயிற்சியில் சேரலாம். என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • பாலமேடு அருகே பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் மாடு பலியானது.
    • விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.



    பலியான மாடு.

     அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் முழுவதும் சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நேற்று அலங்காநல்லூர் பகுதிக ளில் மதியம் 2 மணி அளவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

    பாலமேடு அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளின் மீது மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. கூரை, ஓட்டு வீடுகள் பலத்த காற்றுக்கு தூக்கி வீசப்பட்டன.

    தோட்டங்களில் போடப் பட்டிருந்த தகர செட், மற்றும் கொட்டகைகள் காற்றில் சேதமடைந்தன.

    கொட்டகையில் கட்டப்பட்டிருந்த பசுமாடு பரிதாபமாக இறந்தது. மின் கம்பங்கள் சாய்ந்ததால் அந்தப்பகுதியில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. மின்சார ஊழி யர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.

    சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில் நேற்று பெய்த கனமழையால் அலங்காநல்லூர், பாலமேடு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • உத்திர பிரதேச மாநிலத்தில் பசுமை உணவகத்தை மாடு திறந்து வைத்தது.
    • பசுமை உணவகத்தின் உரிமையாளர் முன்னாள் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சைலேந்திர சிங் ஆவார்.

    உத்திர பிரேதச மாநிலத்தின் லக்னோவில் உணவகம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் மாடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதோடு மாடு அந்த உணவகத்தை திறந்து வைத்து இருக்கிறது. லக்னோவின் முதல் பசுமை உணவகமான இது, 'ஆர்கானிக் ஒயாசிஸ்' என்ற பெயரில் திறக்கப்பட்டு உள்ளது.

    முன்னாள் காவல் துறை துணை கண்காணிப்பாளர் சைலேந்திர சிங் இந்த பசுமை உணவகத்தின் உரிமையாளர் ஆவார். பசுமை பொருட்களால் சமைக்கப்பட்ட உணவு வகைகள் மட்டுமே இந்த உணவகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. பசுமை உணவகத்தை மாடு திறந்து வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

     

    வைரல் வீடியோவின் படி, மாடு மஞ்சள் நிற ஆடை அணிந்த நிலையில் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. மேலும் அங்கு கூடியிருந்த பொது மக்கள் மாட்டை கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பசுமை உணவக ஊழியர்கள் ஆர்கானிக் ஒயாசிஸ் என்று அச்சிடப்பட்ட டி-சர்ட்களை அணிந்துள்ளனர்.

    "நமது விவசாயம் மற்றும் பொருளாதாரம் மாடுகளை சார்ந்தே இருக்கிறது. இதன் காரணமாகத் தான் எங்களது உணவகத்தை கோமாதா திறந்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். மக்கள் ஆரோக்கிய உடலமைப்பு கொண்டிருக்க வேண்டும் என்று தற்போது நினைக்க துவங்கிவிட்டனர்."

    "எனினும், இரசாயன பொருட்களால் பதப்படுத்தப்படும் உணவு வகைகளே தற்போது அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சொந்த உற்பத்தி, தரக்கட்டுப்பாடு மற்றும் பதப்படுத்தும் இந்தியாவின் முதல் உணவகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உணவை சாப்பிட்டால், மக்கள் வித்தியாசத்தை உணர்ந்து பின் இதற்கான தேவை அதிகரிக்கும்," என்று பசுமை உணவக உரிமையாளர் சைலேந்திர சிங் தெரிவித்தார்.

    • கடலாடி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • மாடுகளின் உரிமையாளர்களிடம் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தில் அரிய நாச்சி அம்மன் கோவில் திரு விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு பந்தயத்திற்கு 12 மைல் தூரமும், சின்ன மாடு பந்தயத்திற்கு 8 மைல் தூரமும் போட்டி நடந்தது. பெரிய மாடு மற்றும் சின்ன மாடு பந்தயத்தில் 33 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

    இதில் பெரிய மாடு பந்தயத்தில் முதல் பரிசை விளாத்திகுளம் வீர ஜோதி என்பவரது மாடும், 2-வது பரிசை மதுரை மாவட்டம் திருப்பாலை விஷால் என்பவரது மாடும், 3-ம் பரிசை கே.வேப்பங்குளம் நல்லதேவர் என்பவரது மாடும், 4-ம் பரிசை சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடும் வென்றது.

    சின்ன மாடு பந்தயத்தில் முதல் பரிசை சுரேஷ்குமார் என்பவரது மாடும், 2-ம் பரிசை ராஜேந்திரன் என்பவரது மாடும், 3-ம் பரிசை பூலாங்கல் மந்திரமூர்த்தி என்பவரது மாடும், 4-ம் பரிசை மேலச் செல்வனூர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி மாடும் பெற்றன.

    மாடுகளின் உரிமை யாளர்களிடம் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர். விழா ஏற்பாடு களை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • துறையூர் அருகே அரசு கால்நடை மருத்துவரின் அலட்சியத்தால் விவசாயி பசு மாடுகளை பறிகொடுத்தார்
    • மர்ம நோய் தாக்குதலுக்கு உரிய சிகிச்சை அளிக்க கோரிக்கை

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறை–யூர் அருகே உள்ள வாலீஸ்புரம் கிராமத்தை சேர்ந்த–வர் வீரமணி (வயது 35). இவர் அப்பகுதியில ஆடு, மாடு வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வருகி–றார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த பசு மாட்டிற்கு மர்ம நோய் தாக்கி–யதில் உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து மாட்டினை, கால்நடை மருத்துவமனைக்கு அழைத் துச் செல்ல முடியாத–தால், விவசாயி வீரமணி தனது கிராமத்திற்கு உட்பட்ட குன்னுப்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு சென்று விவரத்தை கூறியுள்ளார். அங்கு பணிபுரிந்து வரும் அரசு கால்நடை மருத்துவர், தனக்கு வேலை உள்ளதால், என்னால் நேரில் வந்து மாட்டிற்கு சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறியுள் ளார்.

    பின்னர் அவர் முசிறி உட்கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனரிடம் வீரமணி புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கா–ததால், விவசாயி வீரம–ணியின் பசுமாடு பரிதா–ப–மாக உயிரிழந்தது. இதே–போன்று கடந்த ஆறுமாத காலத்தில், விவசாயி வீர–மணியின் ஐந்து மாடு–கள் மர்ம நோய் தாக்கி உயி–ரிழந்துள்ளது என்பது குறிப்பி–டத்தக்கது.

    துறையூர் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மர்ம நோய் தாக்குதலுக்கு உள்ளாகி பல பசுமாடுகள் இறந்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரி–விக்கின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகமோ அல்லது கால்நடை பராம–ரிப்பு துறை மண்டல இணை இயக்குனரோ அல்லது கால்நடை பரா–மரிப்பு துறையில் பிரத்யேமாக செயல்பட்டு வரும் நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனரோ எவ்வித நடவடிக்கையும் எடுக்க–வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் ஒவ் வொரு வருவாய் மாவட்டத் திற்கும் கால்நடைகளுக்கான பிரத்யோக ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டு, இலவச அழைப்பு எண்ணாக 1962 அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் பொது–மக்களுக்கு முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தா–ததால், இதுபோன்ற ஏரா–ளமான கால்நடைகள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்துள்ள–தாகவும் விவசாயிகள் தெரி–வித்துள்ளனர்.

    இனி வரும் காலங்களில் இது போன்ற கால்நடை இறப்புகள் ஏற்படாத வண் ணம், ஒவ்வொரு வட்டார அளவில் சுழற்சி முறையில் கால்நடை மருத்துவர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் விதத் தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது–மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் பிடிக்கபட்டது
    • சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் நகரின் முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் நகராட்சி ஆணையர் லீமாசைமன் உத்தரவுபடி நகராட்சிப் பணியாளர்கள் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த 50 க்கும் மேற்பட்ட மாடுகளைப் பிடித்து சட்டமன்ற அலுவலகம் எதிரே உள்ள வளாகத்தில் பூட்டி வைத்தனர். மேலும் சிறைபிடிக்கப்பட்ட மாடுகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை கொடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் மாடுகளை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாட்டின் உரிமையாளர்கள் தங்களுடைய மாட்டின் அடையாளத்தை கூறி ரூ 2 ஆயிரம் அபராதம் செலுத்தி மாடுகளை கூட்டிச் செல்லுமாறு நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


    ×