search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223471"

    • இருவரும் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    கோவை

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் பிரதீபன் (வயது 33). பெயிண்டர். இவர் கடந்த 2006-ம் ஆண்டு இலங்கை அகதியாக வந்தார்.

    அதே முகாமுக்கு பவித்ரா (27) என்பவரும் வந்தார். அப்போது இருவருக்கும் இடைேய பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தினர். 3 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் பிரதீபனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று பிரதீபன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்ேபாது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரதீபன் தனது மனைவி பவித்ராவிடம் நீ இறந்தால் தான், நான் நிம்மதியாக வாழ முடியும் என திட்டினார்.

    இதனால் பவித்ரா மனவேதனையுடன் இருந்து வந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ அடத்துக்கு வந்து பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து பவித்ராவின் தந்தை நடராஜன் கோட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரதீபனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மோட்டார் சைக்கிள் ஓர்க்சாப்பில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.
    • முத்துகுமார் சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் அதிப்பட்டு வந்தார்.

    கோவை

    கோவை மலுமிச்சம்பட்டி உடையார் வீதியை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 33). இவர் அங்குள்ள மோட்டார் சைக்கிள் ஓர்க்சாப்பில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.


    இவருக்கும் காவியா (27) என்பருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. காவியா தற்போது 2 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் முத்துகுமார் சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் அதிப்பட்டு வந்தார்.

    இதனால் அவருக்கு வேலையில் சரியாக கவணம் செலுத்த முடியவில்லை. இதனை நினைத்து அவர் மனவேதனை அடைந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.


    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 8 மாதத்தில் புதுமாப்பிள்ளை 2 மாதம் கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விஷம் அருந்தி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தார்
    • மனைவி வாணி அளித்த புகாரின் பேரில் இரணியல் சப்இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே தலக்குளம் கீழவிளை என்ற இடத்தை சேர்ந்த வர் சுபாஷ் (வயது 35). வாடகைக்கு வேன் ஓட்டி வந்தார்.

    இவர் கடந்த சில நாட்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று தெரிகிறது. இதனை அவரது மனைவி வாணி மற்றும் உறவினர்கள் கண்டித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர் மருத்துவர் கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

    இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி வாணி அளித்த புகாரின் பேரில் இரணியல் சப்இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ராமநாதபுரம் அருகே திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

    ராமநாதபுரம்

    கடலாடி அருகே கருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் கவுசல்யா என்பவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த தங்கவேலுவுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்தநிலையில் கணவர்-மனைவி இருவரும் பனைக்குளம் கிராமத்தில் நடந்த அய்யனார்கோவில் திருவிழாவிற்கு சென்றனர். அப்போது கவுசல்யா குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்துவிட்டார். அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து உத்தரகோசமங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவன் கோவில் அருகில் விஷம் அருந்திய நிலையில் ஒருவர் கிடப்பதாக கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது
    • விசாரணை செய்ததில் குடும்ப பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே முட்டைக்காடு பண்ணிபாகம் சிவன் கோவில் அருகில் விஷம் அருந்திய நிலையில் ஒருவர் கிடப்பதாக கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று பார்த்த போது அந்த நபர் இறந்து கிடப்பதை உறுதி செய்தனர்.

    பின்னர் உடலை கைபற்றி தக்கலை அரசுமருத்துவமனை யில் பிரேத பரிசோதனை செய்ய ஒப்படைத்தனர். பின்னர் இவர் யார் என விசாரணை செய்ததில் முளகுமூடு முப்பதாங்கல் பகுதியை சேர்ந்த அமலராஜேஷ் (வயது 34) கிறிஸ்தவ மத போதகராக உள்ளார் என தெரியவந்தது. இது குறித்து விசாரணை செய்ததில் குடும்ப பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    • இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால், குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.
    • அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள கீரனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது48). விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால், குடும்ப பிரச்சினை ஏற்பட்டது.

    இதில் மன வேதனை அடைந்த பாலசுப்பிரமணியன் வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டார். இதில் மயங்கி கிடந்த பாலசுப்பிரமணியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • கார் டிரைவராக பணிபுரிந்து வந்த வாலிபருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அழகாபுரம் ஏடிசி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 38) இவருக்கு ஜீவிதா (வயது 34) என்ற மனைவி உள்ளார்.வினோத்குமார் சேலம் போக்சோ கோர்ட் நீதிபதியின் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த வினோத்குமாருக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.பின்னர் கோரிமேடு பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வினோத்குமார் சென்றுவிட்டார்.ஜீவிதா அவரது பெற்றோர்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளார், பின்னர் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் வினோத்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அருகில் விஷ பாட்டில் இருந்துள்ளது.உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வினோத்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த தகவலின் பேரில் அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முத்துலட்சுமி தெரு தெருவாக சென்று இட்லி வியாபாரம் செய்து வந்தார்.
    • காலையில் இட்லி விற்க சென்ற முத்துலட்சுமி மாலையில் மிகவும் தள்ளாடிய நிலையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் சேதுராஜா தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 60). பிளம்பர்.

    இட்லி வியாபாரம்

    இவரது மனைவி முத்துலட்சுமி (55). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். முத்துலட்சுமி தெரு தெருவாக சென்று இட்லி வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் கடந்த ஒரு வாரமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் இட்லி வியாபாரத்திற்கு சென்று வந்துள்ளார். இதனால் அவரது மகனும், மகளும், இப்படிப்பட்ட நிலையில் ஏன் வியாபாரம் செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர்.

    விஷம் மருந்து தின்றார்

    இருந்தபோதும் முத்துலட்சுமி தொடர்ந்து இட்லி விற்க சென்றுள்ளார். கடந்த 6-ந் தேதி காலையில் இட்லி விற்க சென்றவர் மாலையில் மிகவும் தள்ளாடிய நிலையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது அவரது கணவர், எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு முத்துலட்சுமி, நான் இத்தனை நாள் இட்லி வியாபாரம் செய்து உழைத்து வந்தேன்.

    இப்போது நோய்வாய்ப்பட்டு யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. அதனால் காலையிலேயே விஷ மருந்தை தின்றுவிட்டு தான் இட்லி விற்க சென்றேன்.

    இப்போது எனக்கு மயக்கமாக வருகிறது என்று கூறியுள்ளார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் உடனடியாக முத்துலட்சுமியை காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பரிதாப சாவு

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முத்துலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் பற்றி ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அருகே கணவர் இறந்த சோகத்தில் விஷம் குடித்த இளம் பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அடுத்த பகுத்தம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி வளர்மதி (28). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடத்த விபத்தில் தர்மராஜ் இறந்து விட்டார். கணவர் இறந்ததால் வளர்மதி சோகத்தில் இருந்து வந்தார். மேலும் கணவரை நினைத்து கொண்டு அவரின் படத்தை பார்த்து வளர்மதி அழுது கொண்டே இருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் சமாதானம் படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் வளர்மதி வீட்டில் சானி பவுடர் (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். அவரை பார்த்து அவரது மகன் அழுது கொண்டு இருந்தார். இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அவரது வீட்டுக்கு வந்து பார்த்தனர்.

    அப்போது வளர்மதி மயங்கி கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாகர்கோவில் வடசேரி புது குடியிருப்பு கவிமணி தெருவை சேர்ந்தவர்.
    • வடசேரி பகுதியில் உடற்பயிற்சி கூடம் வைத்துள்ளார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி புது குடியிருப்பு கவிமணி தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 42).

    இவர் வடசேரி பகுதியில் உடற்பயிற்சி கூடம் வைத்துள்ளார்.இங்கு ஏராளமான வாலிபர்கள் காலை மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்து வருகிறார்கள். ஜெயக்குமார் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.இதையடுத்து அவரது மனைவி தங்க பாய் அவரை சமாதானம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டிலிருந்து உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதாக கூறிவிட்டு ஜெயக்குமார் சென்றார். உடற்பயிற்சி கூடத்தில் இருந்த ஜெயக்குமார் மாலையில் வாந்தி எடுத்துள்ளார்.இதையடுத்து அவரது சகோதரர் ஜெயக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஜெயக்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் விஷம் குடித்திருப்பதாக தெரிவித்தனர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் ஜெயக்குமாரின் மனைவி தங்கபாய் மற்றும் குழந்தைகளும் அங்கு வந்து பார்த்தனர். சிகிச்சையில் இருந்த ஜெயக்குமார் இரவு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தங்கபாய் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை ஆசா ரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடப்பதை யடுத்து அவரது உறவினர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடத்திற்கு வந்து செல்பவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர். உடற்பயிற்சிகூட உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மீனாட்சி (வயது 60). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
    • இந்த நிலையில் வீட்டில் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை விஷம் குடித்த பெண் சாவுஅன்னவாசல் அருகே உள்ள காந்துப்பட்டியை சேர்ந்தவர் பொன்னையா. இவரது மனைவி மீனாட்சி (வயது 60). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவதன்று வீட்டில் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்.

    இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனாட்சி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை செய்யும் கம்பெனியில் கணக்கு எழுதுவதில் தவறு செய்துவிட்டதால் மனம் உடைந்து விரக்தியில் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • இதுகுறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீவலூர் திருப்பூண்டி, மன்மதன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரிமளா (28). இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சசிகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பரிமளா கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் பரிமளா தனது தங்கையுடன் ஈரோடு மாவட்டம் ஈங்கூர் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு கம்பெனியில் 3 வருடங்களாக தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பரிமளா திடீரென எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டார். இது குறித்து அவரை தங்கைக்கு தெரிய வந்ததும் அக்கா பரிமளாவை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அப்போது பரிமளா தான் வேலை செய்யும் கம்பெனியில் கணக்கு எழுதுவதில் தவறு செய்துவிட்டதால் மனம் உடைந்து விரக்தியில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பரிமளா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா வெங்கம்பூர் அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அளவுதீன். அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது தாய் ஆயிஷா பீவி (63). மகன் வீடு அருகே தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஆயிஷா பீவி கடந்த ஒரு வருடமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவ த்தன்று வயிற்றுவலியால் துடித்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்து அரளி விதையை அரைத்து குடித்து விட்டு மயங்கி னார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆயிஷா பீவி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    ×