search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சித்ரவதை"

    • குறவைய்யாவை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், தாடி பத்திரி, சி.பி.ஐ காலனியை சேர்ந்தவர் ராம குறவைய்யா. கடந்த மாதம் 25-ந் தேதி ராம குறவைய்யாவுக்கும் அவரது நண்பருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் காயம் அடைந்த நண்பர் இது குறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அமீத்கான் வழக்கு பதிவு செய்து குறவைய்யாவை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தார்.

    பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து குறவைய்யாவின் மூக்கு மற்றும் காதில் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்தார். இதில் குறவைய்யாவின் மூக்கு மற்றும் காதில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து குறவைய்யாவை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து குறவைய்யா அனந்தபூர் போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜனிடம் புகார் செய்தார். மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது சம்பந்தமாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

    விசாரணையில் இன்ஸ்பெக்டர் அமித்கான் என்பவர் மின்சாரம் பாய்ச்சி சித்ரவதை செய்தது தெரிய வந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பு ராஜன் தெரிவித்தார்.

    • சேலம் அழகாபுரம் எல்.ஐ.சி காலனியில் மன வளர்ச்சி குன்றிய காப்பகம் நடத்தி வருகிறார். இங்கு 9 வயது சிறுவன் பயிற்சி பெற்று வருகிறான்.
    • சிறுவனின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பூசாரி பாளையத்தை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 40). இவர் சேலம் அழகாபுரம் எல்.ஐ.சி காலனியில் மன வளர்ச்சி குன்றிய காப்பகம் நடத்தி வருகிறார். இங்கு 9 வயது சிறுவன் பயிற்சி பெற்று வருகிறான்.

    கடந்து 5-ம் தேதி சிறுவனின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது. இது குறித்து அவரது தாய் காப்பகத்திற்கு சென்று கேட்டார். அதற்கு சிறுவன் விளையாடிய போது கீழே விழுந்து காயமடைந்ததாக காப்பக நிர்வாகிகள் கூறினர்.

    இதில் சந்தேகம் அடைந்த சிறுவனின் தாய் காப்பகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில் பயிற்சி நிலைய பிசி யோதெரபிஸ்ட் நங்கவள்ளி பாலாஜி (வயது 25), தாத காப்பட்டி ஜான்பீட்டர் என்ப வரின் மனைவி அந்தோணி சகாயம் (28) ஆகியோர் சிறுவனை கம்பால் அடித்த காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இந்த சம்பவத்தை தடுக்காமல் அழகாபுரம் பாத்திமாநகரை சேர்ந்த பயிற்சியாளர் திருப்பதி (29) வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இது குறித்து அழகா புரம் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி 3 பேரையும் கைது செய்தனர்.

    • பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது
    • புகாரில் தன்னை சிறை வைத்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

    நாகர்கோவில் :

    கடியப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 55).

    இவர், நாகர்கோவில் அருகே இறச்சகுளத்தில் உணவுப்பொருள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். தனது நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளுக்கு காய்கறி மீன் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகிறார். இவருக்கும் மதுரை மேலூரைச் சேர்ந்த சக்திவேல் (52) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. ஜெயபால் பணம் கொடுக்காததையடுத்து சக்திவேல் தனது நண்பர்களுடன் மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு வந்தார்.

    நாகர்கோவிலில் தனது நண்பர்கள் உதவியுடன் ஜெயபாலை தேடினார். அப்போது ஜெயபால் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள லாட்ஜுல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சக்திவேல் தனது நண்பர்களுடன் அந்த லாட்ஜுக்கு சென்றார். அங்கு அறையில் இருந்த ஜெயபாலுக்கும் சக்திவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயபால், சக்திவேல் மற்றும் அவருடன் வந்த வர்களை பிடித்தனர். பிடிபட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப் போது சக்திவேல் தனக்கு ஜெயபால் பணம் தர வேண்டும் என்றும் அவர் நீண்ட நாட்களாக பணம் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் இரு தரப்பினரையும் வட சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஜெயபால் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரில் தன்னை சிறை வைத்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

    ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல் மற்றும் மதுரை மேலூரை சேர்ந்த சுரேஷ் (33), ஜாபர் அலி (35), ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த விவேக் (26), பள்ளி விளையைச் சேர்ந்த ஜான் (26), மதுரை மேலூரைச் சேர்ந்த கார்த்திக் (38), நாகர்கோவில் புது குடியிருப்பைச் சேர்ந்த அனீஸ் (28), ராணித் தோட்டம் வடக்கு தெருவை சேர்ந்த பிரபாகர் (33) கார்த்திக் (29) ஆகிய 9 பேர் மீதும் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 9 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • பெயிண்டரான மகா விஷ்ணு, பொங்கல் பண்டிகை முடிந்து மும்பை சென்ற மகேஸ்வரியிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
    • மகா விஷ்ணு மற்றும் அவரது குடும்பத்தினர், மகேஸ்வரியை ஒரு வீட்டினுள் அடைத்து வைத்து கருவை அழிக்க வேண்டி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகள் மகேஸ்வரி (வயது 22). இவர் சிறு வயது முதலே மும்பையில் சித்தி வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மகாவிஷ்ணு (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    பெயிண்டரான மகா விஷ்ணு, பொங்கல் பண்டிகை முடிந்து மும்பை சென்ற மகேஸ்வரியிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட முத்தம்பட்டிக்கு மகேஸ்வரி வந்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை மகா விஷ்ணு, மகேஸ்வரியுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் மகேஸ்வரி கர்ப்பம் தரித்தார்.

    இதை அறிந்த மகா விஷ்ணு மற்றும் அவரது குடும்பத்தினர், மகேஸ்வரியை ஒரு வீட்டினுள் அடைத்து வைத்து கருவை அழிக்க வேண்டி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. அங்கிருந்து தப்பி வந்த மகேஸ்வரி வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், மகாவிஷ்ணு அவருடைய தந்தை ரவிச்சந்திரன், தாயார் சிவகாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • திருமங்கலம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டார்.
    • இது தொடர்பாக ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    திருமங்கலம்,

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எட்டுநாழி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சங்கீதா (வயது31). இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2009-ம் ஆண்டு எனக்கும், சோழவந்தானை சேர்ந்த சின்னதுரை மகன் கவியரசு என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது 35 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன. எனது கணவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    கடந்த சில மாதங்களாக கூடுதல் பணம், நகை கேட்டு கவியரசு துன்புறுத்தி வருகிறார். இதற்கு உடந்தை யாக அவரது தாயார் காளியம்மாள் உள்ளார். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப் படையில் ராணுவ வீரர், அவரது தாயார் மீது போலீ சார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

    • கடந்த 6 மாதத்துக்கு முன்பு சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
    • சுமித்ரா தனக்கு குழந்தை பிறந்தது குறித்து பெருந்துறையில் உள்ள பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை பாலக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர் ராஜ். இவரது மகள் சுமித்ரா (22). இவர் கடந்த 2017-ம் ஆண்டு பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த மேற்கு வங்க மாநிலம் கலான்பூர் அம்தோப் பகுதியைச் சேர்ந்த சுப்ரததாஸ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் கொல்கத்தாவுக்கு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் மகளை காணாத அவர்கள் பல இடங்களில் தேடினர். அப்போது சுமித்ரா தனது பெற்றோருக்கு போன் செய்து தான் காதல் திருமணம் செய்து கொண்டு கொல்கத்தாவில் வசித்து வருவதாகவும், தன்னை தேட வேண்டாம் எனவும் கூறி உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து அவர் பெருந்துறையில் உள்ள தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுமித்ராவை அவரது கணவர் குடித்து விட்டு வந்து வீட்டில் அடைத்து வைத்து சூடு போட்டு சித்ரவதை செய்வதாகவும், சாப்பாட்டில் எச்சில் துப்பி கொடுப்பதாகவும், தனது பெற்றோரிடம் வீடியோ காலில் பேசி கதறி அழுதார். மேலும் தன்னையும், குழந்தையும் மீட்க வேண்டும் என்றும் கதறினார்.

    இதையடுத்து சுமித்ராவின் பெற்றோர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் புகார் செய்தனர். அவர் இது குறித்து விசாரணை நடத்த பெருந்துறை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கடந்த 17-ந் தேதி கொல்கத்தாவுக்கு புறப்பட்டனர். பின்னர் உள்ளூர் போலீசார் உதவியுடன் அவர்கள் சுமித்ராவை தேடினர். அப்போது அவர் இடத்தை கண்டுபிடித்து சுமித்ராவையும், அவரது குழந்தையையும் தனிப்படை போலீசார் மீட்டு மங்கள் கோட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் அம்மாநில போலீசார் நடத்திய விசாரணையில் சுமித்ராவை அவரது கணவர் சுப்ரததாஸ் சித்ரவதை செய்தது உண்மை என தெரிய வந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் சுமித்ரா மற்றும் அவரது குழந்தையை மீட்டு பெருந்துறைக்கு புறப்பட்டனர். அவர்கள் பெருந்துறைக்கு வந்ததும் சுமித்ரா மற்றும் அவரது குழந்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே சுமித்ராவின் கணவரிடம் அம்மாநில போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுபானி மனைவியை வயிற்றில் எட்டி உதைத்து கருவை சிதைக்க முயன்றார்.
    • காதல் மனைவி என்ற ஈவு இரக்கம் பார்க்காமல் லட்சுமி பிரசன்னாவின் தலைமுடியைப் பிடித்து சுவற்றில் தலையை மோதியதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    திருமலை:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், போனகே பள்ளியை சேர்ந்தவர் சுபானி. இவர் நெல்லூர் டவுன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார்.

    அதே போலீஸ் நிலையத்தில் நெல்லூர் அடுத்த பித்ர குண்டவை சேர்ந்த லட்சுமி பிரசன்னா பெண் போலீசாக வேலை செய்து வருகிறார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சுபானி லட்சுமி பிரசன்னாவை காதலிப்பதாகவும், நீ இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது என ஆசைவார்த்தை கூறி மயக்கினார். இதை உண்மை என நம்பிய லட்சுமி பிரசன்னாவும் அவரை காதலிக்க தொடங்கினார்.

    இதையடுத்து இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2 மாதங்கள் இன்பமாக ஓடிய தாம்பத்திய வாழ்க்கை அதன் பிறகு காதல் கசக்க ஆரம்பித்ததால் லட்சுமி பிரசன்னாவை சுபானி அடித்து துன்புறுத்த தொடங்கினார்.

    சில மாதங்களில் கணவர் திருந்தி விடுவார் என எண்ணி அவரது கொடுமைகளை தாங்கிக் கொண்டு லட்சுமி பிரசன்னா அவருடன் குடும்பம் நடத்தினார்.

    இந்த நிலையில் லட்சுமி பிரசன்னா கர்ப்பமானார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சுபானி மனைவியை வயிற்றில் எட்டி உதைத்து கருவை சிதைக்க முயன்றார். மேலும் காதல் மனைவி என்ற ஈவு இரக்கம் பார்க்காமல் லட்சுமி பிரசன்னாவின் தலைமுடியைப் பிடித்து சுவற்றில் தலையை மோதியதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து லட்சுமி பிரசன்னா அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் பிறகு இது குறித்து நெல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் லட்சுமி பிரசன்னாவை அலை கழித்தனர்.

    இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் நெல்லூர் போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுபானியை தேடி வருகின்றனர்.

    • வேலை வாய்ப்பு நிறுவனம் சட்ட விரோதமாக மியான்மருக்கு கடத்தி சென்று ஏமாற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
    • இந்த வாலிபர்கள் அங்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி குடும்பத்திற்கு கண்ணீர் மல்க வீடியோ அனுப்பி உள்ளனர்.

    சுவாமிமலை:

    மியான்மர் நாட்டின் கிழக்கு எல்லையில் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபடும் ஐ.டி நிறுவனங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்கு ஆட்களை எடுப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இது போன்ற நிறுவனங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளதாக இணையதளத்தில்வெளி யான தகவலின்அடிப்படை யில் 60-க்கும்மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பி த்தனர்.

    தற்போது வேலைவாங்கி தருவதாக கூறியதை நம்பி சென்ற இந்தியர்கள், தாய்லா ந்து அழைத்து செல்வதாக கூறி சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு நிறுவனம் சட்ட விரோதமாக மியான்மருக்கு கடத்தி சென்று ஏமாற்றப்ப ட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    பின்னர் அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்த ராமல் பணத்தை பெற்று க்கொண்டு மோசடி செய்து ள்ளனர். தற்போது தென்கிழக்கு மியான்மரின் கயின்மாகாணம், மியாவடி பகுதியில் அங்குள்ள இந்தியர்கள் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகின்றனர்.

    இது மியான்மர் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதி என்றும், பூர்வகுடியை சேர்ந்த ஆயுதம் ஏந்திய குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதும் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கீழக்கோட்டையூர் மேலதெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராகுல் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ஹரிஹரன் (21) மற்றும் கும்பகோணம் பாணாதுறை கள்ளர் தெருவை சேர்ந்த கருப்பையன் மகன் விக்னேஷ் (22) ஆகிய 3 பேர் மியான்மரில் சிக்கி தவிப்பது தற்போது தெரியவந்துள்ளது.

    இது குறித்து இந்த வாலிபர்கள் அங்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி குடும்பத்திற்கு கண்ணீர் மல்க வீடியோ அனுப்பி உள்ளனர். அதில் எங்களை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள். இங்கு நடக்கும் கொடுமைகளை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை. தினம் தினம் அதிக நேரத்துக்கு வேலை வாங்கி சித்ரவதை செய்கின்றனர். உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எங்களை போல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் சித்ரவதைக்கு உள்ளாகி உள்ளனர் என்று குறிப்பிடப்ப ட்டிருந்தது.இந்த வீடியோவை பார்த்த அவர்களது பெற்றோர் உடனடியாக தங்களது பிள்ளைகளை மீட்டு பத்திரமாக கொண்டு வர வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொடர்ந்து மியான்மர் நாட்டில் இந்தியாவை சேர்ந்த குறிப்பாக தமிழக வாலிபர்கள் சிக்கி சித்ரவதை செய்யப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து வருவதால் அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது,

    • மனைவி-குழந்தையை அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்த கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே ஆதன் கொத்தன்குடியைச் சேர்ந்தவர் கயல்விழி (வயது22). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் நாகராஜனுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது 30 பவுன் நகையும், 5 பவுன் நகையும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும், இருசக்கர வாகனம் வாங்க ரூ.1 லட்சம் பெண்ணின் பெற்றோரால் கொடுக்கப்பட்டுள்ளது.

    திருமணத்திற்கு பின்பு கயல்விழி அவரது கணவருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நாகராஜன் குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் கயல்விழிக்கு திருமணத்தின்போது போட்ட நகைகள் குறைவு என்றும், எனவே மேலும் 20 பவுன் நகை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் வரதட்சனை கொடுக்க வில்லை என்றால் நாகராஜனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்து விடுவோம் என்று மிரட்டியதாகவும், கயல்விழி மற்றும் அவரது குழந்தையையும் அடித்து கொடுமைப்படுத்தி தனியறையில் வைத்து பூட்டி சாப்பாடு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி கயல்விழி தனது கணவர் நாகராஜன், அவரது தாய்லட்சுமி (59), உறவினர்கள் வேல்முருகன், அவரது மனைவி செல்வி (30) மற்றும் மேகலா (30), நவநீதகிருஷ்ணன், ஆனந்தராஜ், ரேணுகா ஆகிய 7 பேர் மீது மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் உத்தரவின்படி கீழக்கரை அனைத்து மகளிர் போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×