search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடராஜன்"

    • விளையாடும் அனைத்து அணிகளுமே பலமானவை என்பதால் சவால் நிறைந்ததாகவே இருக்கும்.
    • இருப்பினும் நம் மண்ணில் நடப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன் பட்டியில் நடைபெற்ற தனியார் விழாவில் கலந்து கொண்ட வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தாண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும். விளையாடும் அனைத்து அணிகளுமே பலமானவை என்பதால் சவால் நிறைந்ததாகவே இருக்கும். இருப்பினும் நம் மண்ணில் நடப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அதேவேளையில் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இடம்பெறாதது மற்றவர்களை போலவே எனக்கும் பெரும் வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • மாரத்தான் உடல் ஆரோக்கியத்தையும் மனவலிமையையும் கொடுக்கும்.

    வேகப்பந்து வீச்சாளர் நடராஜ் சேலத்தில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாரத்தான் என்பது விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் அல்ல. அனைவரும் ஓடலாம். மாரத்தான் உடல் ஆரோக்கியத்தையும் மனவலிமையையும் கொடுக்கும். அனைத்து விளையாட்டுக்கும் ரன்னிங் தேவைப்படுகிறது.

    நடராஜன் அடுத்த ஆண்டு வரும் ஐபிஎல் தொடரில் நான் நன்றாக விளையாடுவேன் என நம்புகிறேன் என்றும் அதில் நான் நன்றாக விளையாடும் பட்சத்தில் எனக்கு மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்த பேட்டியை அடுத்து அவர் விரைவில் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தற்போது ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியில் இருக்கும் அவர் நடராஜன் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

    • கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் தெண்டுல்கர், கபில்தேவ் வாழ்க்கை படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.
    • தற்போது கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக குறப்படுகிறது.

    விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் வாழ்க்கை படங்கள் இந்தியில் தொடர்ந்து தயாராகி வருகின்றன. கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை 83 என்ற பெயரில் வந்தது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் வாழ்க்கை கதையில் டாப்சி நடித்துள்ளார்.

     

    நடராஜன் - சிவகார்த்திகேயன்

    நடராஜன் - சிவகார்த்திகேயன்

    இந்நிலையில் பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை கதையை சினிமா படமாக எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதில் நடராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுடன் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சேலம் சின்னப்பம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த நடராஜன் தமிழ்நாடு பிரீமியர் லீக் மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார். ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றார். நடராஜன் ஆட்டத்தை ஏற்கனவே சிவகார்த்திகேயன் பாராட்டி உள்ளார். எனவே அவரது வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×