என் மலர்
நீங்கள் தேடியது "விபத்து பலி"
- தகவல் அறிந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே உள்ள குருவிநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அமாவாசை. இவரது மகன் சக்தி (வயது14).
இவர் மேல் கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மகாராஜா கடை அருகே உள்ள கொத்தூர் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் பேரரசு (20). இவர் குருவிநாயன பள்ளியில் பாட்டி வீட்டில் இருந்து கொண்டு கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் மாதவன் (15), இவர்கள் மூன்று பேரும் உறவினர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று இரவு குருவிநாயனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டிற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை பேரரசு ஓட்டினார். சக்தி, மாதவன் பின்னால் அமர்ந்து சென்றனர்.
அப்போது கிருஷ்ண கிரி-குப்பம் சாலையில் குருவி நாயனப்பள்ளி மசூதி அருகே வந்த போது கர்நாடக மாநிலம், குல்பர் காவில் இருந்து மக்காச் சோளம் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்ற பிக்கப் வேன் எதிர்பாரா தவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பேரரசு, சக்தி, மாதவன், 3 பேரும் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிக்கப் வாகன ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
- இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- தலையில் பலத்த காயம் அடைந்த ஷ்ரேயாஸ் பரிதாபமாக இறந்தார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு பேகூர் சாலையின் விஸ்வபிரியநகரை சேர்ந்தவர் சிவானந்தா பாட்டீல். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் ஷ்ரேயாஸ் பாட்டீல் (வயது 19). பி.காம் மாணவர். இவர் இன்று அதிகாலை 3.45 மணியளவில், அக்ஷய் நகரை சேர்ந்த நண்பர் கே. சேத்தனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள் ரிச்மண்ட் சர்க்கிள் ரெசிடென்சி சாலையை நோக்கி செல்லும் மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச் சுவரில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியது. இதில் இருவரும் 25 அடியரத்தில் இருந்து பாலத்தின் கீழே உள்ள சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தலையில் பலத்த காயம் அடைந்த ஷ்ரேயாஸ் பரிதாபமாக இறந்தார். சேத்தனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
- சிகிச்சை பலன் இன்றி சிறுமி பவினா பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள எடையூரை சேர்ந்தவர் மோகன்ராஜ் . இவரது மகள் பவினா (வயது 8 ). இவர் விருத்தாச்சலம் புதுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று விளங்காட்டூர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டின் முன்பு கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் திடீரென்று கற்கள் சரிந்து கீழே விழுந்ததில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த பவினா தலையில் விழுந்தது. இதில் சிறுமி பவினாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறுமி பவினா இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து விருத்தாச்சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையோரம் நின்று கொண்டு இருந்த மயில்சாமி, மகேந்திரன் ஆகியோர் மீது லாரி மோதி விபத்தானது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஏமப்பள்ளி அக்கம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (42), இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு உதயா என்ற ஒரு மகன் உள்ளார்.
இதே போல் திருச்செங்கோடு அருகே உள்ள பொம்மக்கல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (36). இவரது மனைவி சுதா. இவர்களுக்கு சக்தி என்ற மகனும், யசோதா என்ற மகளும் உள்ளனர்.
விசைத்தறி தொழிலாளர்களான மயில்சாமியும், மகேந்திரனும் உறவினர்கள் ஆவர். இவர்கள் 2 பேரும் நேற்று அனிமூர் பிரிவு என்ற இடத்தில் வெள்ளரிக்காய் வாங்கி கொண்டு சாலையோரம் இருந்த புளிய மரத்தின் கீழ் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (42) என்பவர் திருச்செங்கோட்டில் இருந்து கொக்கராயன்பேட்டை நோக்கி லாரி ஓட்டி சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டு இருந்த மயில்சாமி, மகேந்திரன் ஆகியோர் மீது லாரி மோதி விபத்தானது. இதில் சம்பவ இடத்திலேயே மயில்சாமி பலியானார். இதில் மகேந்திரன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மகேந்திரனை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மகேந்திரனும் பலியானார்.
இதுப்பற்றி தெரியவந்ததும் திருச்செங்கோடு ரூரல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான லாரி டிரைவர் கார்த்திகேயனை தேடி வருகிறார்கள்.
- விபத்தில் இறந்த உமாராணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கல்லாவி ரோடு பகுதியை சேர்ந்தவர் உமாராணி (வயது65). இவரது மகன் கோபிநாத் (வயது40). இவரது மனைவி ஜீவிதா (35). கோபிநாத் சகோதரிகள் 2 பேர் மற்றும் இரு குழந்தைகள் என மொத்தம் 7 பேர் காரில் கர்நாடகாவில் பல்வேறு வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் சுற்றுலா முடித்து விட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மத்தூர் அடுத்த கண்ணண்டஹள்ளி என்ற இடத்தில் வந்த போது தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியை நோக்கி சென்ற மினிலாரி எதிர் பாராதவிதமாக கார் மீது மோதியது.
இதில் காரில் இருந்த உமாராணி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த கோபிநாத் உடன் இருந்த குழந்தைகள் உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்து இடிபாடுகளில் சிக்கிய சூழலில் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் அருகே இருந்த ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு சுமார் அரை மணி நேரம் போராடி அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் விபத்தில் இறந்த உமாராணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை என்பதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
- அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற தன்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ராசி குமரிபாளையம் காந்தமலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (29). இவரது மனைவி தன்யா (25), இவரது மாமியார் கோகிலா (45). இவர்கள் 3 பேரும் நேற்றிரவு மோகனூரில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
இதேபோல் அணியாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே உள்ள பிள்ள விடுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (19), கள்ளக்குறிச்சி மாவட்டம் கொசப்பாடி பகுதியை சேர்ந்த இளவரசன் (18) ஆகிய 2 பேர் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நாமக்கல்-மோகனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை பாலகிருஷ்ணன் ஓட்டி வந்தார். அவருக்கு பின்னால் இளவரசன் அமர்ந்திருந்தார்.
இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நாமக்கல்-மோகனூர் சாலையில் எதிர் எதிரே சென்றபோது நேருக்கு நேர் மோதி விபத்தானது. இதில் நவீன், தன்யா, கோகிலா ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தனர். இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தன்யாவை சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், நவீனை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், கோகிலாவை அங்கிருந்து மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
அதேபோல் இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் பாலகிருஷ்ணன், இளவரசன் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலகிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இளவரசனை சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற தன்யாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நவீன் மற்றும் அவரது மாமியார் கோகிலா ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே கொள்ளிடம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ரங்கநாதன் மகன் புவனேஷ் (வயது23). இவரது நண்பர் சிதம்பரம் கவரப்பட்டு வீரன் கோவில் திட்டு பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் செல்வம் (20).
இவர்கள் 2 பேரும் புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் புவனேஷ் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வேகமாக வந்த லாரி மோதியது.
இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த புவனேஷ் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போரூரை சேர்ந்தவர் ஷோபனா(வயது22) சாப்ட்வேர் என்ஜினீயர்.
- பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பூந்தமல்லி:
போரூரை சேர்ந்தவர் ஷோபனா(வயது22) சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் நேற்று காலை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் தனது தம்பியை பள்ளியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். நொளம்பூர் அருகே மதுரவாயல் பைபாஸ் சாலை, சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது வேன் உரசியதால் அவர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி ஷோபனா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்த நிலையில் விபத்துக்கு காரணமான வேன் மற்றும் லாரி டிரைவர்கள் மோகன், பார்த்திபன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தயாகரன்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தயாகரன் (வயது60). ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவரது மனைவி சசி மாலா (57). இவர்களுக்கு சரத் பாபு (34), ஆலின் பிரசாத் (24) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இவர்களுக்கு சொந்தமாக ஓசூர் பகுதியில் நிலம் ஒன்று உள்ளது. அதனை விற்பதற்காக இன்று காலை குடும்பத்தோடு காரில் சென்னையில் இருந்து ஓசூருக்கு புறப்பட்டனர். காரை சரத் பாபு ஓட்டி சென்றார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வட புதுப்பட்டு சர்க்கரை ஆலை அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி காரில் இருந்த வங்கி மேலாளர் தயாகரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த சசிமாலா, சரத்பாபு, ஆலின் பிரசாத்தை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தயாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜேஷ் மோட்டார் சைக்கிளுடன் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்பத்தூர்:
விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது25). புதூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று இரவு அவர் பணி முடிந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். கொரட்டூர் கருக்கு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி முந்தி செல்ல முயன்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறிய ராஜேஷ் மோட்டார் சைக்கிளுடன் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
விபத்தில் சிக்கி ராஜேஷ் பலியாகி கிடந்த போது அவரது செல்போனை அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் திருடி சென்றதாக தெரிகிறது.
இதனால் அவரை அடையாளம் காண்பதிலும், உறவினர்களுக்கு தகவல் கொடுப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தறி கெட்டு ஓடிய அந்த பஸ் எதிரே வேகமாக வந்த மற்றொரு பஸ் மீது மோதியது.
- விபத்தில் 2 பஸ்களும் பலத்த சேதம் அடைந்தது.
காப்ரீன்:
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டில் உள்ள காப்ரீன் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சின் டயர் பஞ்சரானது. இதனால் தறி கெட்டு ஓடிய அந்த பஸ் எதிரே வேகமாக வந்த மற்றொரு பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 2 பஸ்களும் பலத்த சேதம் அடைந்தது. இதில் 40 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு செனகல் நாட்டு அதிபர் மேக்கிசால் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். விபத்தில் 40 பேர் இறந்தது வருத்தம் அளிக்கிறது. காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய வேண்டுகிறேன். இன்று முதல் 3 நாட்கள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கபடும் என அவர் கூறினார்.
செனகல் நாட்டில் மோசமான சாலைகளாலும், போக்குவரத்து விதிமுறைகளை டிரைவர்கள் சரியாக கடைபிடிக்காததாலும் இது போன்று விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- கார் திடீரென ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது.
- ஷேர் ஆட்டோ பலத்த சேதம் அடைந்து தலைகுப்புற கவிழ்ந்தது
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தில் இருந்து வாயலூர் நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டு இருந்தது.
அதில் கல்பாக்கம் அருகே உள்ள அணைக்கட்டு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர் (வயது.60), வாயலூர் பொம்ம ராஜபுரம் பகுதியை சேர்ந்த பட்டு (59) உள்ளிட்ட 7 பேர் பயணம் செய்தனர்.
வாயலூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டு இருந்த போது சென்னை நோக்கி வந்த கார் திடீரென ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஷேர் ஆட்டோ பலத்த சேதம் அடைந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த சேகர், பட்டு உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர். காரில் இருந்த 4 பேர் காயமின்றி தப்பினர். காரின் முன்பகுதி மட்டும் சேதம் அடைந்து இருந்தது.
இதுபற்றி அறிந்ததும் சதுரங்கபட்டிணம் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சேகர்,பட்டு ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தால் சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.