search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பம்"

    • வேப்பூர் அரசு கல்லூரியில் சேர மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது
    • இளங்கலை முதலாம் ஆண்டு மாணவியர் சேர்க்கைக்கு வருகிற 19-ந் தேதிக்குள் மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இளங்கலைப் பாடப்பிரிவில் பி.ஏ.-தமிழ், பி.ஏ.-ஆங்கிலம், பி.எஸ்சி.- உயிர் தொழில்நுட்பவியல், பி.எஸ்சி-வேதியியல், பி.எஸ்சி- கணினி அறிவியல், பி.எஸ்சி-கணிதவியல், பி.எஸ்சி-இயற்பியல், பி.காம், பி.பி.ஏ. ஆகிய 9 துறைக்கான பாட பிரிவுகள் உள்ளன.

    இக்கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளங்கலை பாட பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு மாணவியர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இனணயதள முகவரி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளங்கலை முதலாம் ஆண்டு மாணவியர் சேர்க்கைக்கு வருகிற 19-ந் தேதிக்குள் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி முதல்வர் மணிமேகலை ஜெயபால் தெரிவித்து உள்ளார்.

    • கல்வி அதிகாரிகள் பள்ளி வாரியாக பரிசீலனை செய்து பள்ளிகளில் சேர்ப்பதற்கான முன் ஏற்பாடுகளை செய்வார்கள்.
    • 25 சதவிகித இடங்களை விட கூடுதலாக குழந்தைகளை சேர்க்க முடியாது.

    சென்னை:

    இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியிலும் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

    இத்திட்டத்தில் சேர்ந்து படிக்கும் ஏழை மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது.

    தனியார் பள்ளிகளில் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க வேண்டும். தொடர்ந்து 12-ம் வகுப்பு வரை அந்த மாணவருக்கு ஆகும் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கிறது.

    தமிழகத்தில் 80 ஆயிரம் இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள்.

    வருகிற கல்வியாண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த கால அவகாசம் 18-ந் தேதியுடன் நிறைவு பெற உள்ள நிலையில் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. சேர்க்க 1 லட்சம் குழந்தைகளின் பெற்றோர் விண்ணப்பித்துள்ளனர்.

    வரும் கல்வியாண்டில் இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி குழந்தைகளை சேர்க்க இதுவரையில் 1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மாவட்டம் வாரியாக விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பெறப்பட்டுள்ளது. மொத்தம் இடங்களை விட விண்ணப்பங்கள் அதிகமாக வந்துள்ள பள்ளிகளில் குலுக்கல் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். கல்வி அதிகாரிகள் பெற்றோர் முன்னிலையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    பெரும்பாலானவர்கள் விண்ணப்பித்துவிட்டனர். அதனை கல்வி அதிகாரிகள் பள்ளி வாரியாக பரிசீலனை செய்து பள்ளிகளில் சேர்ப்பதற்கான முன் ஏற்பாடுகளை செய்வார்கள்.

    பள்ளி திறப்பதற்கு முன்னதாக இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு விடும். பள்ளி திறந்தவுடன் பெற்றோர்களை வரவழைத்து இடங்கள் ஒதுக்கப்படும். ஒரு சில பள்ளிகளில் அதிகளவு விண்ணப்பங்கள் வந்துள்ளன.

    25 சதவிகித இடங்களை விட கூடுதலாக குழந்தைகளை சேர்க்க முடியாது. அதனால் போட்டி உள்ள பள்ளிகளில் குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அரியலூர், ஜெயங்கொண்டம் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்
    • மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட்டுப் பிரிவில் சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க முடியும்.

    அரியலூர்,

    அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர்கள் சேர்க்கைக்கு இணையவழியில் வரும் 19-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அக்கல்லூரிகளின் பொறுப்பு முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சல் முகவரி, விண்ணப்பதாரர் அல்லது பெற்றோர்களின் கைப்பேசி எண்கள் போன்ற விபரங்களை பதிவு செய்து, கல்லூரியில் உள்ள தகுதியான பாடப்பிரிவு அனைத்துக்கும் விண்ணப்பிக்கலாம்.தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

    மாற்றுத்திறனாளி, விளையாட்டுப் பிரிவு மற்றும் முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் மற்றும் தேசிய மாணவர்படை ஏ சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.இந்த சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் மாணவ, மாணவிகள் அதற்கான தரவுகளை பதிவேற்றம் செய்யவேண்டும். மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட்டுப் பிரிவில் சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பித்தவர்களின் தர வரிசை பட்டியல் தயார் செய்த பின் மாணவ, மாணவிகளின் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட கல்லூரி அலுவலகத்தை அணுக வேண்டும் என தெரிவித்தனர்.

    • பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற விண்ணப்பிக்கலாம்.
    • மேலும் விவரங்களுக்கு 04575-242025 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கைகள், 2 கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மின்கலத்தினால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் (Battery Operated Wheel Chair) பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தசைச்சிதைவு நோய், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கைகள் மற்றும் 2 கால்களும் செயலிழந்த

    60 வயதிற்குட்டபட்ட ஆண் மாற்றுத்திறனாளிகளுக்கும், 55 வயதிற்குட்டபட்ட பெண் மாற்றுத்திறனாளிகளுக்கும் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் மேற்கண்ட குறைபாடுகள் உடைய மாற்றுத் திறனா ளிகள் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்,

    மேலும் கல்வி பயிலும், பணிபுரியும், சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளி களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேற்கண்ட சான்றுகளுடன் வருகிற

    16-ந் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், சிவகங்கை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு 04575-242025 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விண்ணப்பித்தும் பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட உள்ளது.
    • இணையதளத்தின் வாயிலாக இன்று முதல் வரும் மே.19-ந் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.

    பல்லடம்:

    தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவு இன்று வெளியாகியது. இதையடுத்து அரசு கல்லூரியில் பட்டப்படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான, இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட உள்ளது.

    தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், அரசியல் அறிவியல், பிகாம்.சி.ஏ, மற்றும் பல்வேறு பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.இந்தப் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.tngasa.in என்ற இணையதளத்தின் வாயிலாக இன்று முதல் வரும் மே.19-ந் தேதிவரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 48, பதிவுக்கட்டணம் ரூ 2 என மொத்தம் ரூ.50யை இணையவழியில் செலுத்தலாம். எஸ்.டி., எஸ்டி., எஸ்.சி.ஏ. பிரிவினருக்கு பதிவுக்கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது.

    விண்ணப்பத்தை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின்னர் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கல்லூரி வளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தினை அணுகலாம். மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசியமாணவர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்தச் சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் சேர விரும்புபவர்கள் அதற்கான ஆதாரச் சான்றிதழ் நகல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    மாவட்ட, மாநில அளவிலான சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட்டுப் பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க முடியும். (கல்வி மாவட்டத்தில் மட்டும்சிறப்பிடம் பெற்றவர்களை ஏற்க இயலாது ) மாவட்ட விளையாட்டு அலுவலரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

    கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டியல் www.gacudpt.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியில் மே 26-ந் தேதி காலை வெளியிடப்படும். மே 29-ந் தேதி சிறப்புப் பிரிவிற்கான கலந்தாய்வு நடைபெறும். மே 30-ந்தேதி முதல் பிற பிரிவினருக்கான முதல் கட்டக் கலந்தாய்வு அடுத்த மாதம் ஜூன் 2-ந் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வேலைவழிகாட்டித் துறை சார்பில், இலவச உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை வழங்கப்படுகிறது.
    • பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 8-ந் தேதி ரிசல்ட் வெளியாகிறது.

    திருப்பூர்:

    மே 8-ந்தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில் மறுநாள் 9-ந்தேதி முதல் அரசு கல்லூரிகளில் பட்டப்படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் துவங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு முடிவை அறியும் மாணவர்கள் உடனடியாக கலைக் கல்லூரிகளில் விண்ணப்பம் பெற படையெடுப்பர் என்பதால் கல்லூரிகளில் விண்ணப்பம் வழங்கும் தேதியை உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அவ்வகையில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் மே 9ந்தேதி முதல் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.

    கலை, அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., உள்ளிட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகினாலும் சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியான பின் தேதி அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 8-ந் தேதி ரிசல்ட் வெளியாகிறது. உயர்கல்வியில் சேர எந்த துறையை தேர்வு செய்வது, வேலைவாய்ப்பு தரும் படிப்புகள் எவை என்பது குறித்த ஆலோசனை பெற பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்கம் மற்றும் வேலைவழிகாட்டித் துறை சார்பில், இலவச உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை வழங்கப்படுகிறது.இதில் பத்தாம் வகுப்புக்கு பின் எந்த குரூப் தேர்வு செய்தால் உயர்கல்வியில் எந்த துறையை தேர்வு செய்யலாம் என்ற ஆலோசனை வழங்கப்படுகிறது.

    பிளஸ் 2 முடித்தோருக்கு, இளங்கலையில் வேளாண், சட்டம், பொறியியல், மருத்துவம், பாராமெடிக்கல், கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகள் குறித்து எடுத்துரைக்கப்படும்.நுழைவுத்தேர்வுகள், சேர்க்கை முறை குறித்து விளக்கப்படும். துறை வல்லுநர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மூலம் சந்தேகங்களுக்கு தீர்வளிக்கப்படும்.

    ஆலோசனை பெற விரும்புவோர் பாரதியார் பல்கலை விரிவாக்கம் மற்றும் வேலை வழிகாட்டித் துறையை நேரிலோ அல்லது 0422 2428 237/ 2428 239 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சிமெண்டு விற்பனை ஏஜெண்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர்அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபும் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு சிமெண்டு விற்பனை முகவர் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராகவும் மற்றும் இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக வயது வரம்பு 18 முதல் 65 -க்குள் இருக்க வேண்டும். திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியம் அளிக்கப்படும். இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர்அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • வரும் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    புதுக்கோட்டை:

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டிற்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் . விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.இணையதளம் மூலம் வரும் 31-ந் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களுடைய சான்றிதழ்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரிடம் சான்றிதழ் சரிபார்ப்பதற்காக ஒப்படைக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலைபேசி எண் 7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு கல்லூரிகளில் மே 9-ந்தேதி முதல் கிடைக்கும்.
    • மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தனியார் கல்லூரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பம் வினியோகம் வருகிற மே 1-ந் தேதி தொடங்குகிறது.

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகளில் மே 9-ந் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 8-ந்தேதி வெளியாகும் நிலையில் இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தனியார் கல்லூரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு உரிய மதிப்பெண் சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள 633 தனியார் கல்லூரிகள் மற்றும் 163 அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட உள்ளன.

    • இளம் தொழில் முனைவோர் ‘டெட்கோ’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இதற்கான விழா சிக்கந்தர்சாவடியில் நடக்கிறது.

    மதுரை

    தமிழ்நாடு பொருளாதார முன்னேற்ற கழகம் சார்பில் நடப்பாண்டு தொழில்துறையில் சாதனை படைத்த 22 பேருக்கு டெட்கோ விருதுகள் வழங்கப்படுகிறது.

    இதற்கான விழா சிக்கந்தர்சாவடி ஏ.எப்.டி.சி வளாகம், சிற்றவை அரங்கில் அடுத்த மாதம் 14-ந் தேதி நடக்கிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் https://forms.gle/xomKBGpcLiQRsnG67, tedco.org.in என்ற இணைய தளங்களில் மேற்கண்ட விருதுக்கு விண்ணப் பிக்கலாம்.

    22 விருதுகளின் தலைப்புகள், விண்ணப்பிக்கும் விவரங்கள் பற்றி அறிந்து கொள்ள 98657 55880 அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று டெட்கோ விருது குழு தலைவர் ஜே.கே.முத்து, துணைத் தலைவர் ராஜமூர்த்தி, பொருளாளர் வேணுகோபால், நிர்வாகிகள் காசிராஜன், பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்தனர்.

    • அடுத்த மாதம் 18-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • அறிவிப்பு பலகையில் அடுத்த மாதம் 21-ம் தேதி பிற்பகல் 5 மணிக்கு தெரிவிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம்-2009 பிரிவு 12(1) ன்படி சிறுபான்மையற்ற தனியார் கயநிதி பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் (எல்.கே.ஜி) 25 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக வருவாய் ஈட்டும் நலிவடைந்த பிரிவினர் ஆகியோருக்கு சேர்க்கை வழங்கப்படுகிறது.

    வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டு உள்ள ஆதரவற்றோர் , எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர் , மூன்றாம் பாலினத்தவர் , துப்புரவுத் தொழிலாளியின் குழந்தை , மாற்றுத் திறனாளியாக இருக்கும் குழந்தை ஆகிய சிறப்பு பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் அரசாணை நிலை எண்.60 பள்ளிக்கல்வித்துறை நாள்.01.04.2013-ன்படி உரிய அலுவலரால் வழங்கப்பட்ட சான்றினை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

    தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள்-2011 விதி எண்.4(1) இன் படி பள்ளியிலிருந்து 1 கி.மீட்டருக்குள் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் அதிக பட்சமாக 5 பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் rte.tnschools.gov.in என்றஇணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகள், வட்டாரக்கல்வி அலுவலகங்கள், வட்டார வள மையங்கள், மாவட்ட க்கல்வி அலுவலகங்கள், தஞ்சாவூர் முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும்இ-சேவை மையங்களில் பெற்றோர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.ஒன்றுக்கும் பேற்பட்ட பள்ளிகளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவற்றில் ஏதேனும் ஒரு பள்ளியில் மட்டும் சேர்ந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, 2023- 24 ஆம் கல்வியாண்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின்படி நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி. , முதல் வகுப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழ் கண்டுள்ள அட்டவணை களின் படி மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 சதவீதத்தின் கீழ் 92 மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 1468 இடங்களும் 159 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் 1454 இடங்களும் என மொத்தம் தஞ்சை மாவட்டத்தில் 251 பள்ளிகளில் 2922 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சிறுபான்மைச்ச தனியார் சுயநிதி பள்ளிகள் தங்கள் பள்ளியில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும். பெற்றோர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் பணி தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் 18ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இணையதளம் வழியாக விண்ணப்பித்த மாணவர்களில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின்படி தகுதி உடைய மற்றும் தகுதியற்ற மாணவர்கள் விபரம் பள்ளி அறிவிப்பு பலகையில் அடுத்த மாதம் 21 ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்கு தெரிவிக்கப்படும்.பள்ளியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் விண்ணப்பம் பெறப்பட்டிருந்தால் குலுக்கல் முறையில் 23-5-23 அன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
    • rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ள தாவது:-

    2023-24-ம் கல்வியாண்டிற்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 சட்டத்தின்படி 2023-24-ம் கல்வியாண்டிற்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பிலும், 1-ம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் 1-ம் வகுப்பிலும் சேர்க்கைக்கு வருகிற 20-ந்தேதி முதல் மே 18-ந்தேதி வரை rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகையிலும் மே 21-ந்தேதி அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.இத்திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி. வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2019 முதல் 31.7.2020-க்குள்ளாகவும், 1-ம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2017 முதல் 31.7.2018-க்குள்ளாகவும் பிறந்திருக்க வேண்டும். பெற்றோர், விண்ணப்பதாரர்கள் பிறப்புச்சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்க சாதிச்சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ், நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் கீழ் உள்ள வருமான சான்றிதழ், இருப்பிடச்சான்று ஆகியவைகளை உரிய அலுவலரிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    மேலும், முதன்மை கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை), மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை), வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 12 வட்டார வள மைய அலுவலங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளியில் 23.5.2023 அன்று குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தெரிவு செய்யப்படுவர். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் 24.5.2023 அன்று இணைய தளத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். சோ்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை 29.05.2023-க்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சோ்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×