search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பம்"

    • நலநிதி செலுத்தும் தொழிலாளர்கள் கல்வி உதவித்தொகை
    • கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
    • தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

    கரூர், 

    கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    1972-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60 என கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கேற்ப தொழிலாளர் நல நிதி தொகையினை வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.

    அதன்படி நடப்பு 2023-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியினை 31.1.2024-க்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதில் ப்ரீ-கே.ஜி. முதல் பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ரூ. ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை, பாடநூல் வாங்க உதவித்தொகை, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ஆகிய திட்டங்களுக்கு தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    இந்த உதவித்தொகையினை பெற தொழிலாளரின் மாத ஊதியம் ரூ.25,000-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் வாரியத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.12.2023 ஆகும். விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு 31.12.2023-க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அமெரிக்காவில் தங்கி பணிபுரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
    • கிரீன் கார்டு விண்ணப்பம் நிலுவையில் இருக்கும்போது விண்ணப்பதாரர்கள் வேலை வாய்ப்பு அங்கீகார ஆவணத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

    அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெற இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் விண்ணப்பித்துள்ளனர். கிரீன் கார்டை பெற லட்சக்கணக்கானோர் காத்து இருக்கிறார்கள். கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அமெரிக்காவில் தங்கி பணிபுரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு பணி அனுமதி செல்லுபடியாகும் காலம் 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் அதிகபட்சம் செல்லுபடியாகும் காலத்தை 5 ஆண்டுகள் நீட்டிப்பதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடி வரவு சேவைகள் துறை அறிவித்துள்ளது. கிரீன் கார்டு விண்ணப்பம் நிலுவையில் இருக்கும்போது விண்ணப்பதாரர்கள் வேலை வாய்ப்பு அங்கீகார ஆவணத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அமெரிக்காவில் தொடர்ந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.

    கடந்த மாதம் 22-ந் தேதி அல்லது அதற்கு பிறகு நிலுவையில் உள்ள அல்லது தாக்கல் செய்யப்பட்ட தகுதியான வேலை வாய்ப்பு அங்கீகார ஆவண விண்ணப்பங்களுக்கு இந்த புதிய கொள்கை பொருத்தும்.

    இது அமெரிக்காவில் எச்.1பி.விசாவில் பணிபுரியும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினருக்கும் பயன் அளிக்கும்.

    • தமிழகத்தில் 9, 11 ம் வகுப்பு பயின்று வரும் 3093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
    • 30ஆயிரம் மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த நாடு முழுவதும் 30ஆயிரம் மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9, 11 ம் வகுப்பு பயின்று வரும் 3093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இத்திட்டதின் கீழ் பயன்பெறும் பயனாளிகள், தேசியத்தேர்வு முகமையால் 29.9.2023 அன்று நடத்தப்படவிருந்த YASASVI நுழைவுத்தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேற்படி எழுத்து தேர்வானது காலப்பற்றாமை காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசால் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் 8மற்றும் 10 ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள்பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகைத்தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயேஇந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகையானதுவழங்கப்படும் எனவும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National ScholarshipPortal (https://Scholarships.gov.in ) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும்அதிகாரமைளித்தல் துறையின் இணையதளத்தின் (https://socialjustice.gov.in ) என ,இணைய தளங்கள் தொடங்கிதொடர்ந்து நோக்கி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

    • இத்திட்டத்தின் கீழ் 2023-2024-ஆம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்து கொள்ள இயலாது.

    திருப்பூர்:

    உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன்பெற்ற பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,000 பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் 2023-2024-ஆம் ஆண்டிற்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன்பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள்எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப்பெயர்கள்,உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

    முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறிக்குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு திருப்பூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநரால் பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் கலந்து கொள்ள இயலாது.

    திருக்குறள் முற்றோதலுக்கான விண்ணப்பங்களை திருப்பூர் மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0421 – 2971183 என்ற அலுவலகத்தொலைபேசி எண் அல்லது 99405 90165 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15-12-2023-க்குள் மாவட்டத்தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம்,அறை எண்.608, 6-ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருப்பூர் என்றமுகவரிக்கோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • தகவல் தொழில்நுட்ப பணியாளர் பதவிக்கு டிப்ளமோ, ஐ.டி. துறையில் குறைந்தது 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    • விண்ணப்பிக்க வருகிற 15-ந் தேதி மாலை 5 மணி வரை கடைசியாகும்.

    திருப்பூர்:

    உடுமலை தாலுகாவில் புதிதாக தொடங்கப்பட உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், களப்பணியாளர், பல்நோக்கு உதவியாளர், காவலர், ஓட்டுனர் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர் பதவிக்கு முதுகலை பட்டதாரி சமூக பணிகள்சட்டம் படித்தவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்பு மற்றும் ஆலோசனை வழங்குதல் தொடர்பான பணியில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.தகவல் தொழில்நுட்ப பணியாளர் பதவிக்கு டிப்ளமோ, ஐ.டி. துறையில் குறைந்தது 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், அறை எண்.35,36, கலெக்டர் அலுவலகம், திருப்பூர் 641604 என்ற முகவரில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வருகிற 15-ந் தேதி மாலை 5 மணி வரை கடைசியாகும்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • 40 சதவீத மானியத்துடன் மீன் அங்காடி அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • 60 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

    சிவகங்கை

    பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத்திட்டம் 2021-22-ன் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் மீன் விற்பனை அங்காடி அலங்கார மீன் வளர்ப்பு நிலையங்கள் அமைக்கலாம். இந்த திட்டத்தில் 1 அலகுகள் ரூ.10 லட்சம் திட்ட மதிப்பீட்டில், 60 சதவீத மானியத்துடன் மீன் அங்காடிகள் அமைக்கலாம்.

    மேலும் சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளர்ப்பு செய்வதற்கு ரூ.7.50 லட்சம் திட்ட மதிப்பீட்டுடன் அமைக்க லாம். இதில் பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியமும், பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 60 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் இந்தத் திட்டம் செயல்ப டுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப் பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 5/3 யூனியன் வங்கி மாடி, பெருமாள் கோவில் தெரு, சிவகங்கை என்ற முகவரியிலும், 9384824553, 9384824273 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு

    கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ஆராய்ச்சிக்கான நிதியுதவியை மாநில உயர்கல்வி மன்றம் வழங்குகிறது.
    • எம்.எஸ்சி., பயோ வேதியியல், லைப் சயின்ஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்:

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ், பயோ வேதியியல் துறை சார்பில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு சார்ந்த ஆராய்ச்சிகளில் பங்கேற்க, ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இந்த ஆராய்ச்சிக்கான நிதியுதவியை மாநில உயர்கல்வி மன்றம் வழங்குகிறது. எம்.எஸ்சி., பயோ வேதியியல், லைப் சயின்ஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    உரிய தகுதியுடையவர்கள், டாக்டர் சாரதாதேவி, உதவி பேராசிரியர், பயோ வேதியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை- 641046 என்ற முகவரிக்கு, கல்வித்தகுதிக்கான சான்றிதழ், பிற தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும்.

    தேவையான சான்றிதழ்கள், பிற விபரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அக்டோபர் 6-ந்தேதி மாலை, 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பிறகு கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எம்.ஐ.எஸ்.அனலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
    • 6-ந் தேதிக்குள் பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் எம்.ஐ.எஸ். அனாலிஸ்ட் ஒரு பணியிடத்திற்கு வெளிப்பணி மூலம் நிரப்பப்பட உள்ளது.

    இதற்கு 30 வயதிற்குட்பட்ட மற்றும் 3 ஆண்டுகள் கணிணி இயக்கவியலில் முன் அனுபவமுள்ள, தகுதி வாய்ந்த பி.இ., (கணிப்பொறி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்), பி.டெக்., (கணிப்பொறி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம்) எம்.சி.ஏ., (கணிப்பொறி அறிவியல்), எம்.எஸ்.சி., (கணிப்பொறி அறிவியல் அல்லது தகவல் தொழில் நுட்பத்தில் சிறப்பினம்) பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களி டமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் 5.45 மணி வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர் அஞ்சல்-626 002, விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ வருகிற 6-ந் தேதிக்குள் பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண்களை மீண்டும் விண்ணப்பிக்க சொல்வது ஏமாற்று வேலை என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.
    • பூர்த்தி செய்யப்படாத அல்லது பூர்த்தி செய்யப்பட்டு தகுதி இல்லாத மனுக்களை எல்லாம் மேல்முறையீடு செய்யலாம் என்று சொல்லி வருகிறது.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேலக்கால் கச்சராயிருப்பு, தென்கரை ஆகிய பகுதிகளில் இளைஞர் பாசறை உறுப்பி னர் சேர்க்கை முகாம் நடை பெற்றது. ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முகாமை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தொடங்கி வைத்தார்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அவை தலைவர் முருகன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் சிவசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்குவோம் என்று கூறியது. ஆட்சிக்கு வந்த பிறகு மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 2 கோடியே 20 லட்சம் மனுக்கள் விநியோகிக்கப் பட்டதாக செய்திகள் சொல்லப்படுகிறது. அதிலே பூர்த்தி செய்யப்பட்ட ஒரு கோடியே 60 லட்சம் மனுக்க ளில் ஏறத்தாழ 60 லட்சம் அரசின் சார்பிலே தள்ளு படி செய்யப்பட்டிருக்கிறது.

    தகுதி இல்லை என்கிற காரணத்தினால் தள்ளுபடி செய்திருப்பது பெண்களுடைய வேத னையை இந்த அரசு சம்பாதித்திருக்கிறது. தகுதி உள்ள மனுக்கள் என்று அரசால் ஏற்றுக்கொள்ளப் பட்டு அதில் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு இன்னும் முழுமையாக 100 சதவீதம் கொடுக்கப்படவில்லை என்கிற உண்மை தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போது 1 கோடியே 20 லட்சம் மனுக்கள் பூர்த்தி செய்யப்படாத அல்லது பூர்த்தி செய்யப்பட்டு தகுதி இல்லாத மனுக்களை எல்லாம் மேல்முறையீடு செய்யலாம் என்று சொல்லி வருகிறது.

    பொதுவாக ஏற்கனவே நிர்ணயித்த வருமானம், சொத்து, மின் கட்டணம் இவைகளில் எதாவது விதியை தளர்த்தினால் அதிலே பயனாளிகளை உள்ளே கொண்டு வரலாம்.ஏற்கனவே அரசு தகுதி இல்லை என்று அரசே தள்ளுபடி செய்துவிட்டு, தற்போது முழுக்க முழுக்க ஒரு மோசடியாக ஏமாற்று வேலையாக மக்களை அலைக்கழிப்பு செய்கிறது. இன்றைக்கு ஒரு கோடி ரூ.20 லட்சம் குடும்பங்கள் மட்டுமல்ல, 2 கோடி 20 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை திட்டத்தை தி.மு.க. அரசு வழங்க முடியும்.

    தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஒரு கோடி பேருக்கு தான் வழங்குவோம் என்று ஏன் கூறவில்லை? தற்போது முதலமைச்சர் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமை தொகை திட்டத்தை வழங்கி உள்ளோம் என்று கூறி யுள்ளார். ஆனால் இதில் 50 சதவீத மக்களுக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது முழுமையாக வழங்கப் பட்டது என்று முதலமைச்சர் கூறினால் மாவட்ட வாரியாக பட்டியலை வெளியிட தயாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேல்முறையீட்டு மனுவை ஆர்.டி.ஓ. ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.
    • உரிமைத் தொகை மறுக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு விண்ணப்பம் செய்ததில் 57 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை மறுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்ன காரணத்துக்காக உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து விண்ணப்பதாரர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.

    அதில் கார் வைத்திருப்பது, சொத்து அதிகம் இருப்பது, மின்சாரம் அதிகம் பயன்படுத்தியது போன்ற காரணங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

    உரிமைத் தொகை மறுக்கப்பட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    இ-சேவை மையம் வழியாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதில் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் பெண்கள் கூட்டம் அலை மோத தொடங்கி உள்ளது.

    இ-சேவை மையம் திறப்பதற்கு பல மணி நேரத்துக்கு முன்பே பெண்கள் காத்து நிற்கின்றனர். வருகிற 30-ந் தேதிக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று தேதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால் அரசு நடத்தும் இ-சேவை மையங்கள், தனியார் இ-சேவை மையங்கள், இண்டர்நெட் மையங்களிலும் பெண்கள் கூட்டம் தினமும் அதிகரித்து வருகிறது.

    நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டு விடுவதால் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. மணலி மண்டல அலுவலகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் அங்கிருந்த கதவு கண்ணாடி உடைந்தது. இ-சேவை மையத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களும் கீழே விழுந்து உடைந்துவிட்டது.

    இ-சேவை மைய ஊழியர் கீதாவை பெண்கள் நெருக்கியதால் அவர் மயங்கி விழுந்துவிட்டார். இப்போது அவர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இப்படி ஒவ்வொரு இ-சேவை மையங்களிலும் பெண்கள் பொறுமை இழந்து வாக்குவாதம் செய்யும் சம்பவங்கள் தினமும் அரங்கேறி வருகிறது.

    மேல்முறையீடு செய்ய வரும் பெண்கள் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் செல்போனில் வந்துள்ள குறுஞ்செய்தியை காண்பித்து விண்ணப்பித்து விட்டு செல்கின்றனர்.

    இந்த மேல்முறையீட்டு மனுவை ஆர்.டி.ஓ. ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த விண்ணப்பங்களை தேர்வு செய்ய அவர்களது வீடுகளுக்கு சென்று விசாரிக்க தேவையான ஊழியர்களை தாசில்தார் ஏற்பாடு செய்து வருகிறார்.

    இதன் அடிப்படையில் கள ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆய்வுக்கு பிறகு தகுதியான பயனாளிகள் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.

    இதற்கிடையே மேல் முறையீடு செய்த பெண்கள், எம்.எல்.ஏ.க்களை அணுகி எனக்கு பணம் வரவில்லை. பணம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சிபாரிசுக்கு வந்து செல்கின்றனர்.

    இதே போல் கவுன்சிலர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களிடமும் நிலைமையை எடுத்து கூறி ரூ.1000 பணம் கிடைக்க உதவிடுமாறு கேட்டு வருகின்றனர்.

    • அங்கக கழிவுகளை நன்றாக மக்க செய்து அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகளை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்துக் கொள்ள உதவுகின்றன.
    • குறைந்தபட்சம் 3ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    அங்கக வேளாண்மை என்பது செயற்கை ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப்படுவதோடு மண்வளத்தையும் பாதுகாப்பதே ஆகும். அங்கக வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அங்கக கழிவுகளை நன்றாக மக்க செய்து அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகளை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்துக் கொள்ள உதவுகின்றன.

    நுண்ணுயிர்கள் ஊட்டச்சத்துகளை மெதுவாகவும், சீராகவும் வெளியிடுகின்றன. இதனால் மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதனால் நஞ்சற்ற விளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.

    வேளாண்மைத்துறை மூலம் நடப்பாண்டில், அங்கக வேளாண் நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும் தன்னார்வ விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ் நெட் வலைதளத்தில்நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் https://www.tnagrisnet.tn.gov.in பதிவுக்கட்டணம்ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

    பங்கேற்பதற்கான தகுதிகள்:குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்தல் வேண்டும். முழுநேர அங்கக விவசாயியாக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 3ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். அங்கக வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.மதிப்பீட்டுக்குழு:-

    மாவட்ட அளவிலான மதிப்பீட்டுக்குழு மற்றும் மாநில அளவிலான தேர்வுக்குழு மூலம் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவர். பரிசுத் தொகை:-வெற்றி பெறும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில்ரொக்கப் பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் தமிழ்நாடு முதலமைச்சரால் குடியரசுதினத்தன்று வழங்கப்படும்.

    முதல் பரிசு ரூ.2.5 லட்சம் மற்றும் ரூ.10,000மதிப்புடைய பதக்கம், இரண்டாம்பரிசு ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.7,000மதிப்புடைய பதக்கம், மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5,000 மதிப்புடைய பதக்கம். மேலும், நம்மாழ்வார் விருதுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களைஅணுகி பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • அலுவலக நாட்களில் உதவி முகாம்கள் நடைபெற உள்ளது.
    • இ-சேவை மையம் வழியாக கட்டணம் ஏதுமின்றி வருவாய் கோட்ட அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள அறி க்கையில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் குடும்பத்திற்காக வாழ்நாள் எல்லாம் ஓயாமல் உழைத்து கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பு க்கு கொடுக்கும் அங்கீகாரமாகும்.

    இந்த முதன்மையான திட்டத்தின் மூலம் மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் திட்டமானது 15.9.23 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 தொகையானது வரவு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் விண்ணப்பி க்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதார ர்களுக்கான குறுஞ்செய்தி 18.09.2023 முதல் இந்த மாத இறுதி வரை அவர்களுடைய கைபேசி எண்ணிற்கு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    தகுதியான விண்ணப்பதாரராக இருந்து நிராகரிக்கப்பட்டதாக கருதும் விண்ணப்பதாரர்கள் தங்கள் மேல்முறையீட்டினை அருகில் உள்ள இ-சேவை மையம் வழியாக கட்டணம் ஏதுமின்றி வருவாய் கோட்ட அலுவலருக்கு விண்ணப்பிக்கலம்.

    இந்நிலையில் தகுதியான விண்ணப்பதார்களின் நிராகரிப்பிற்கான காரணம் தெளிவாக, அறிந்து கொள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அல்லது அறிவிக்கப்படாத விண்ணப்பதார ர்களுக்கென உதவி முகாம்கள் நடைபெறும் இடங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை, தொலைபேசி எண்: 04364 - 222588, மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலகம், தொலைபேசி எண்: 04364 - 222033, சீர்காழி வருவாய் கோட்ட அலுவலகம், தொலைபேசி எண்: 04364 - 270222, மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம், தொலைபேசி எண்: 04364 - 222456, குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகம், கைப்பேசி எண்: 9943506139, சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம், தொலைபேசி எண்: 04364 - 270527, தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம், தொலைபேசி எண்: 04364 - 289439, ஆகிய இடங்களில் அலுவலக நாட்களில் உதவி முகாம்கள் நடைபெற உள்ளது.

    எனவே, பொதுமக்கள் தங்கள் விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்கள், மேல்முறையீடு விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை நேரடியாக அல்லது தொலைபேசி மூலம் தெரிந்துக்கொண்டு மேல்முறையீடு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×