search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224003"

    • தமிழகத்தில் இந்தத் தேர்வினை 1.47 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
    • பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு 5.20 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    கரூர்:

    இந்தியாவில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த அடிப்படையில் நாடு முழுவதும் 490-க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்று மதியம் நீட் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் இந்தத் தேர்வினை 1.47 லட்சம் பேர் எழுதுகிறார்கள். கரூர் மாவட்டத்தில், வெண்ணைமலையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லுாரி, காக்காவாடி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி ஆகிய இரண்டு மையங்களில், இன்று நீட் தேர்வு நடக்கிறது.

    அதில் 1,700 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக அங்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு 5.20 மணிக்கு நிறைவு பெறுகிறது. இதற்காக தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. ஆகவே காலை 10 மணி முதலே தேர்வு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் வரத் தொடங்கி விட்டனர்.

    செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை மையத்துக்குள் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிப்படையாக தெரியும் தண்ணீர் பாட்டிலை தேர்வர்கள் எடுத்து வரலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    • 14 மையங்களில் நீட் தேர்வு
    • முழுக்கை சட்டை, பெல்ட், தோடு அணிய அனுமதி மறுப்பு

    திருச்சி,

    இந்தியாவில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த அடிப்படையில் நாடு முழுவதும் 490-க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்று மதியம் நீட் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் இந்தத் தேர்வினை 1.47 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.திருச்சி மாவட்டத்தில் பூலாங்குளத்துப்பட்டி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி, தொட்டியம் தோளூர்பட்டி கொங்குநாடு பொறியியல் கல்லூரி, பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரி, புத்தூர் பாரதிநகர் காவேரி குளோபல் பள்ளி, திருச்சி கமலா நிகேதன் பள்ளி, துறையூர் மகாலட்சுமி பொறியியல் கல்லூரி, சிறுகனூர் எம்.ஏ.எம்.பொறியியல் கல்லூரி, பெல் டவுன்ஷிப் ஆர்.எஸ்.கே. பள்ளி, ஏர்போர்ட் எஸ். பி.ஐ.ஓ.ஏ. பள்ளி, திருச்சி கேந்திர வித்யாலயா, தோளூர்பட்டி கொங்குநாடு பாலிடெக்னிக்,காஜா நகர் சமது மேல்நிலைப்பள்ளி ஆகிய மொத்தம் 12 மையங்களில் 7,799 மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு 5.20 மணிக்கு நிறைவு பெறுகிறது. இதற்காக தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. ஆகவே காலை 10 மணி முதலே தேர்வு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் வரத் தொடங்கி விட்டனர்.செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை மையத்துக்குள் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிப்படையாக தெரியும் தண்ணீர் பாட்டிலை தேர்வர்கள் எடுத்து வரலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    கரூரில் இரு மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. கரூர் மாவட்டத்தில், வெண்ணைமலையில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லுாரி, காக்காவாடி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி ஆகிய இரண்டு மையங்களில், இன்று நீட் தேர்வு நடக்கிறது. அதில் 1,700 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக அங்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்.எஸ்.சி.). மத்திய அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தி ஆட்களை நியமனம் செய்து வருகிறது.
    • இதில் கடந்த தேர்வுகளின்ேபாது ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட இரு மொழிகளில் கணினி வழியாக தேர்வு நடத்த ப்பட்டது.

    சேலம்:

    மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்.எஸ்.சி.). மத்திய அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தி ஆட்களை நியமனம் செய்து வருகிறது. இதில் கடந்த தேர்வுகளின்ேபாது ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட இரு மொழிகளில் கணினி வழியாக தேர்வு நடத்த ப்பட்டது.

    இந்த நிலையில் இந்திய அரசு, இனிமேல் தேர்வு களை மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என உத்த ரவிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான நட வடிக்கைகள் எடுத்துள்ளது.

    அதன்படி மல்டி-டாஸ்கிங் அல்லாத டெக்னிக்கல் அலுவலர் மற்றும் ஹவில்தார் பணியிடங்களுக்கான தேர்வு -2022 அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த தேர்வுக்கு பலர் விண்ணப்பித்துள்ளனர்.

    தற்போது இது ெதாடர்பாக ஒரு அறிக்கை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில், தேர்வர் தங்களது பிராந்திய மொழியைத் தேர்ந்தெடுத்திருந்தால், அவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பிராந்திய மொழியில் கேள்விகளைப் கணினியில் பார்ப்பார். அதாவது தேர்வர் தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்றால் அவர் இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக தமிழ் மொழியில் கேள்விகளைப் பார்க்க முடியும் என்பது ஆகும்.

    ஒரு வேளை தேர்வர் எந்த பிராந்திய மொழியும் தேர்ந்தெடுக்க வில்லை என்றால், அவர்களுக்கு கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே தோன்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு
    • 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன.

    சேலம்:

    தமிழக தொடக்கக் கல்வித்துறையில் வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன.

    அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பதவி உயர்வு மூலமாக வட்டார கல்வி அதிகாரி ஆகின்றனர். நேரடி நியமனத்துக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு நடத்துகிறது.

    தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில் பட்டப்படிப்பு, பி.எட் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம்.

    நேரடியாக இப்பணிக்கு வருபவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளில் அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுகின்றனர். அதன் பிறகு மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்.

    இந்த நிலையில் வட்டார கல்வி அதிகாரி நியமனத்தில் 23 காலியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பு 2023 பிப்ரவரியில் வெளியிடப்பட்டு, மே மாதம் போட்டித் தேர்வு நடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையில் கூறப்பட்டிருந்தது.

    ஆனால் பிப்ரவரி கடந்து 2 மாதங்கள் ஆகியும் தேர்வுக்கான அறிவிப்பை வாரியம் வெளியிடவில்லை. கடந்த 2020 பிப்ரவரியில் நடத்தப்பட்ட வட்டார கல்வி அதிகாரி தேர்வின் முடிவுகள் கடந்த 2022 பிப்ரவரியில் வெளியிடப்பட்டன.

    அத்தேர்வில் நூலிழையில் வாய்ப்பை இழந்தவர்களும், கடந்த ஆண்டு பி.எட். முடித்தவர்களும் புதிய தேர்வை எதிர்நோக்கி தயாராகி வரும் நிலையில், தேர்வு அறிவப்பை வெளியிடாமல் வாரியம் தாமதம் செய்வது பி.எட். பட்டதாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே பதவி உயர்வு மூலம் 40 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளராக வி.கே.சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
    • நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகளுக் கான அமைப்பு தேர்தல் நடந்தது. தேர்தல் ஆணை யாளர் மகபூப்ஜான், பார்வையாளர்கள் வக்கீல் ஆசைத் தம்பி, பாஸ்கர சேதுபதி ஆகியோர் தேர்தலை நடத்தினர்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக வி.கே.சுரேஷ் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பேட்ரிக், ஆலோசனை குழு உறுப்பினர் குணா, மாநில இளைஞரணி துணை செயலாளர் கராத்தே பழனிச்சாமி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர் வாகிகள் சால்வை அணி வித்து வாழ்த்து தெரி வித்தனர்.

    ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக தேர்வு செய் யப்பட்டுள்ள வி.கே.சுரேஷ் ம.தி.மு.க. தொடங்கப் பட்ட காலத்தில் இருந்தே அந்த கட்சியில் இணைந்து தீவிர களப்பணியாற்றி வருகிறார். இவர் மாவட்ட இளைஞரணி செய லாளர், மாவட்ட துணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் பெருவாரியான இளைஞர்கள் ம.தி.மு.க. வில் இணைவதற்கு முக்கிய பங்கு வகித்த வர்களில் இவர் குறிப்பி டத்தக்கவர். இவரது திருமண விழாவில் வைகோ கலந்து கொண்டு தலை மையேற்று நடத்தி வைத்தார்.

    இவர் கட்சி பணியை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருவதால் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பல முறை இவரை பாராட்டி யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளராக வி.கே.சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
    • துரை வைகோவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. புதிய மாவட்ட பொறுப்பாளர்களுக்கான தேர்தல், ஒழுங்கு நடவ டிக்கை குழு உறுப்பினர் மகப்பூப்ஜான் தலைமையில் நடந்தது. நிர்வாகிகளாக தேர்வு பெற்றவர்களை முன்னாள் மாவட்ட செயலாளர் பேட்ரிக் முன்னிலையில் அறிவித்தனர்.

    மாவட்ட அவைத் தலைவராக பிரகாசம், மாவட்ட செயலாளராக வி.கே.சுரேஷ், பொரு ளாளராக ராஜ்குமார், மாவட்ட துணைச் செயலா ளர்கள் மங்களேசுவரி, சரவணன், பிச்சை, குகநாதன், பாஸ்கரன், மாவட்ட தலைமை உறுப்பி னர்களான சுபாஷ், செந்தில், நித்தியானந்தம், சத்தியேந்திரன், மனோகரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இவர்களை ஒருமனதாக தேர்வு செய்த தொண்டர்க ளுக்கும், நிர்வாகிகளுக்கும் ம.தி.மு.க. தலைவர் வைகோவுக்கும், தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    • நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு மாதிரி தேர்வு நடைபெற்றது.
    • 7-ந்தேதி 'நீட்' தேர்வு நடைபெறுகிறது

    அரியலூர்:

    மருத்துவ படிப்பிற்கான 'நீட்' தேர்வு வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்காக நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளும் 'நீட்' தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகள் பயிற்சி மையங்களில் சேர்ந்து 'நீட்' தேர்வுக்கான பயிற்சி பெற்று வருகின்றனர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளுக்கு 'நீட்' தேர்வு எழுத தமிழக அரசின் பள்ளக்கல்வித்துறை மூலம் அந்தந்த மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஏற்பாட்டில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 7-ந்தேதி 'நீட்' தேர்வு நடைபெறுவதால், நேற்று அந்த மாணவ-மாணவிகளுக்கு 'நீட்' மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

    • வேலை வாய்ப்பு முகாம் வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கி ழமை) திருச்சி சாலையில் பழைய நீதிமன்ற வளா கத்தில் அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவல கத்தில் நடைபெற உள்ளது.
    • ( 12-ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்)

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான அவசரகால மருத்துவ உதவியாளர் பணி யிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கி ழமை) திருச்சி சாலையில் பழைய நீதிமன்ற வளா கத்தில் அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவல கத்தில் நடைபெற உள்ளது.

    மருத்துவ உதவியாளர்க ளுக்கு பி.எஸ்.சி. நர்சிங், அல்லது ஜி.என்.எம், ஏ.என்.எம், டி.எம்.எல்.டி, அல்லது ( 12-ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) லைப் சையின்ஸ் பட்டதாரி, பிஎஸ்சி ஜுவாலஜி, பாட்டனி பையோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். ஆண் பெண் இரு பலரும் கலந்து கொள்ளலாம்.

    மருத்துவ உதவியா ளர்கான பணிக்கு எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முக உடற்கூரியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பான தேர்வு, மனிதவளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். ஊதியம் ரூ.15,435 மொத்த ஊதியமாக வழங்கப்படும்.

    தேர்வு செய்யப்பட்ட வர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை அனைத்தையும் நேரில் கொண்டு வர வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் ஜுடோ தேர்வு போட்டி 21-ந் தேதி நடக்கிறது.
    • மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக விளையாடு இந்தியா (கேலோ இந்தியா) திட்ட நிதியுதவியில் துவக்க நிலை ஜுடோ பயிற்சிக்கான விளையாடு இந்தியா மாவட்ட மையம் ராமநாத புரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் சேருவதற்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு போட்டிகள் வருகிற 21-ந் ேததி (வெள்ளிக் கிழமை) காலை 8 மணிக்கு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

    இந்த தேர்வுப் போட்டி யில் கலந்து கொள்பவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆதார் அட்டை நகல், பிறப்புச் சான்றிதழ், நன்னடத்தைச் சான்றிதழ், சான்றளிப்பு கையொப்பத்துடன் சமர்ப்பித்தால் மட்டுமே தேர்வுப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    இதில் தேர்ந்தெடுக் கப்படும் மாணவ, மாணவி களுக்கு பயிற்சியாளர் வாயிலாக தினசரி காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் ஜுடோ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்கள் மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் வீரர், வீராங்கனைகளாக உருவாக்கப்பட உள்ளனர்.

    தேர்வு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்படமாட்டாது. இந்த வாய்ப்பில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டன.
    • ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று தேர்வில் கலந்து கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. சேவை மனப்பான்மையுடைய ஆண்கள்,பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வருகிற 20-ந் தேதி முதல்

    22-ந் தேதி வரை 3 நாட்கள் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.மதுரை ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலரும் தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வுக்கு வருபவர்கள் கல்வி, வயது, ஒரிஜினல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வரவேண்டும். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று தேர்வில் கலந்து கொள்ளலாம் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாட்டில் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
    • கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு-2023 தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் , துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் , சட்டப்பூர்வ அமைப்புகள் தீர்ப்பாயங்கள் போன்ற வற்றில் உள்ள குரூப் பி மற்றும் குரூப் சி நிலையில், 7,500-ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது.

    இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதா ரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

    பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவே ண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்ப ட்டுள்ளது.

    இப்பணி காலியிடங்களு க்கு www.ssc.nic.in என்ற பணியா ளர் தேர்வாணை யத்தின் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

    கணினி அடிப்படையி லான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ண ப்பிக்க கடைசி நாள் 3.05.2023.

    மேலும் ஆன்லைனில் கட்டணம் செலுத்து வதற்கான கடைசி நாள் 04.05.2023 ஆகும்.

    எனவே இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் இந்த வாரம் ஆண்டு இறுதித்தேர்வு தொடங்கி 20-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளன.
    • அடுத்த வாரம் இறுதியில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் 11, 12 பொதுத்தேர்வு நடந்து முடிந்து உள்ளன. அதனை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வு வருகிற 20-ந் தேதி முடிகிறது.

    1 முதல் 9-ம் வகுப்பு தவிர பிற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடியும் நிலையில் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வருகிற 18-ந் தேதி ஆண்டு இறுதித்தேர்வு தொடங்குகிறது.

    அரசு, உதவிபெறும் பள்ளிகள் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் 28-ந் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.

    காலை 10 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் வகுப்பு வாரியாக பிரித்து தேர்வு நடத்தப்படுகிறது.

    தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் இந்த வாரம் ஆண்டு இறுதித்தேர்வு தொடங்கி 20-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளன.

    அடுத்த வாரம் இறுதியில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.

    இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதால் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் திட்டமிட்டப்படி எவ்வித மாற்றமும் இல்லாமல் இறுதித்தேர்வு நடைபெறுகிறது.

    அரசு பள்ளிகளுக்கு 28-ந்தேதி கடைசி வேலை நாளாகும். 29-ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒரு மாதம் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் ஜூன் 1-ந்தேதி திறக்க கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. கோடை வெப்பம் அப்போது அதிகமாக இருக்கும் பட்சத்தில் பள்ளி திறப்பதை தள்ளி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

    கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு 220 வேலை நாட்கள் இந்த ஆண்டில் பள்ளிகள் நடத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×