search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224037"

    • 30 விவசாயிகள் 2 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கை க்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். நேற்று 30 விவசாயிகள் 2 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபா ரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.90 முதல் 100 வரைக்கும், மரம் முருங்கை ரூ.95முதல் 100 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.115முதல் 120 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும். சில வாரங்களுக்கு முன்பு முருங்கை பூ பூத்த நிலையில் மழை பெய்ததால் முருங்கைக்காய் வரத்து தற்போது மிகவும் குறைந்துள்ளதாகவும். இன்னும் இரண்டு வாரத்திற்கு வரத்து குறைவாக தான் இருக்கும், தற்போது தென் மாவட்டங்களில் இருந்து தான் மார்க்கெட் மற்றும் ஓட்டல்களுக்கு முருங்கைகாய் வந்து கொண்டு உள்ளது அதானல் விலை உயர்ந்துள்ளது என்று முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    • அவரிடமிருந்து 6 மதுபான பாட்டில்களும் ரூ.200 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    பல்லடம்:

    காமநாயக்கன்பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட எம்.ஊத்துக்குளி பகுதியில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த, அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் முருகன் (27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 மதுபான பாட்டில்களும் ரூ.200 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல புளியம்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்த பெட்டிக்கடைக்காரர்கள், முத்துக்குமாரசாமி (50) காமராஜ் (52) மணிகண்டன் (26) ஆகியோரிடமிருந்து 17 பொட்டலம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தகவல்
    • பள்ளி, கல்லூரிகளில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தி உள்ளதாக திருவனந்தபுரம் எஸ்.பி. ஷில்பா தியாவையா தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தினமும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.அவர்களிடம் விசாரணை நடத்திய போது அதிகமானோர் கேரளாவில் இருந்து குட்கா மற்றும் கஞ்சாவை வாங்கி வருவதாக தெரிவித்தனர்.

    இதை யடுத்து மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். எல்லை பகுதியிலுள்ள ஊரம்பு, களியக்காவிளை சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு போதை பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதி யாக அந்த பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் திருவனந்தபுரம் போலீஸ் சூப்பி ரண்டு ஷில்பா தியா வையா ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆட்டோக்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.கொரியர் நிறுவனங்களுக்கும் போலீசார் அறிவுரைகளை வழங்கினார்கள்.

    வெளியூர்களிலிருந்து இரண்டு கிலோவுக்கு மேல் வரும் பார்சல்களை ஒப்படைக்கும் போது அதை திறந்து பார்த்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. போதை பொருட்கள் குறித்து தகவல் தெரிந்தால்

    7010363173 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத் தரவுப்படி தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத் தில் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ள னர். இதன் அடுத்த கட்ட மாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் போதை பொருட்களை தடுப்பது தொடர்பான நடவடிக்கை தொடங்கி உள்ளோம்.

    குமரி மாவட்டம் கேரளா அருகில் உள்ள தால், தற்போது கேரள போலீசாருடன் இணைந்து போதை பொருட்கள் விற்ப னையை தடுத்தல் மற்றும் இது தொடர்பான குற்ற வாளிகளை கைது செய் தல் நடவடிக்கைகளை பரி மாற்றம் செய்து கொள் ளுதல் போன்றவை மேற் கொள்ளப்பட உள்ளது. இது தொடர்பாக தற்போது திரு வனந்தபுரம் மாவட்ட எஸ். பி.யுடன் இணைந்து முதற் கட்டமாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற் கொண்டு உள்ளோம். தக வல்களை பரிமாற்றம் செய் யும்போது குற்றவாளிகளை விரைந்து கைது செய்யமுடி யும். கொரியர் சர்வீஸ் சென் டர்களையும் கண்காணித்து வருகிறோம்.

    பெரும்பாலும் தற்போது கொரியர் மூலம் கஞ்சா பார்சல்கள் வருவது தெரிய வந்துள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கஞ்சா, போதை பொருட் கள் விற்பனை மட்டுமின்றி செயின் பறிப்பு குற்றவா ளிகளையும் கைது செய்ய இரு மாநில போலீசாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வார் கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவனந்தபுரம் எஸ்.பி. ஷில்பா தியாவையா கூறு கையில், கேரள முதலமைச் சர் உத்தரவின்படி போதை பொருள் விற்பனையை தடுக்கவும், இதில் பாதிக் கப்பட்டவர்களை மீட்கவும் நடவடிக்கைமேற்கொண்டு வருகிறோம். பள்ளி, கல்லூ ரிகளில் இது தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்ப டுத்தி உள்ளோம். போதை பழக்கத்துக்கு அடிமை யானவர்களை கண்டறிந்து அவர்களை அதில் இருந்து மீட்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

    பொதுமக்கள், வியா பாரிகள் ஒத்துழைப்பு அவசியம், கேரள எல் லையில் உள்ள அமா விளை சோதனை சாவ டியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இருமாநில போலீசாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொள் ளும் போது குற்றவாளி களை எளிதில் கைது செய்ய முடியும் என்றார்.

    • குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிர்ணயம்
    • மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகை விற்பனை தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடந்தது.

    கலெக்டர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி விற்பனையை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் கூறியதாவது:-

    தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள் முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவா ளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது.

    தற்போதைய காலத்திற் கேற்ற வகையில் புதிய யுக்தி களை கையாண்டு பல வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

    கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில், குமரி மாவட்டத்தில் உள்ள 4 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் ரூ.2.25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி பண்டிகைக்கு ரூ.4.10 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கனவு நனவு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல் படுத்தி வருகிறது. இதில் மாத சந்தா தொகை வாடிக்கையாளர்களி டம் இருந்து பெறப்பட்டு 11-வது மற்றும் 12-வது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    நிகழ்ச்சியில் கோ-ஆப் டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் ராஜேஷ்குமார், முதுநிலை மேலாளர்(தணிக்கை) இசக்கிமுத்து, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலாவாணி, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்ட னர். விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் பத்மராஜ் செய்திருந்தார்.

    • ஆயுத பூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
    • காலை முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டத்துடன் மார்க்கெட் களை கட்டியது

    திருப்பூர் :

    ஆயுத பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நேற்று பூ மற்றும் அலங்கார பொருட்களின் விற்பனை மும்முரமாக நடந்தது.

    ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் பூ மார்க்கெட்டில் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயுத பூஜைக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும் செவ்வந்தி பூ அதிக அளவில் உள்ளன. நாளை ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் மார்க்கெட்டில் பூக்கள் வாங்குவதற்காக நேற்று காலை முதல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வந்தனர். இதனால் மார்க்கெட் மக்கள் கூட்டத்துடன் களை கட்டியது. பூக்களின் விலையும் அதிகமாக காணப்பட்டது. வழக்கமாக ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் நேற்று கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், முல்லை ரூ.600, ஜாதிமல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.300 முதல் ரூ.400 வரைக்கும், சம்பங்கி ரூ.300, செண்டுமல்லி ரூ.160, பட்டு பூ ரூ.100, அரளி ரூ.400 முதல் ரூ.600 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொரு பூக்களின் விலையும் அதன் தரத்திற்கு தகுந்தவாறு ஏற்ற இறக்கமாக இருந்தது.

    பழங்கள் விற்பனை

    இதேபோல் பூஜைக்கு தேவையான பழங்களின் விற்பனையும் அதிகமாக இருந்தது. ஒரு கிலோ ஆப்பிள் பழம் அதன் தரத்திற்கு தகுந்தவாறு ரூ.100 முதல் ரூ.140 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஆரஞ்சு ரூ.100, மாதுளை ரூ.200 முதல் ரூ.300 வரைக்கும், சாத்துக்குடி ரூ.80, திராட்சை ரூ.120, அண்ணாச்சி பழம் ரூ.80, வாழைப்பழம் அதிகபட்சமாக ரூ.60 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. இவற்றை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர். இதேபோல் பூஜைக்கு பயன்படுத்தப்படும் அலங்கார தோரணங்களும் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் புத்தம் புது வடிவில் வைக்கப்பட்டுள்ள பல அலங்கார ெபாருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும், வெண் பூசணி, எலுமிச்சம்பழம், தேங்காய் மற்றும் அவல், பொரி, கடலை உள்ளிட்ட பூஜை பொருட்களும் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனால் மார்க்கெட் மற்றும் கடை வீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

    • ஒரு வாரத்துக்கு முன்பாகவே பூஜைகளுக்கு தேவையான பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வந்தது.
    • புதிதாக முளைத்த மஞ்சள் கொத்து, வாழைக்கன்று, மாவிலை தோரணங்கள் அதிக அளவில் விற்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுகிறது.

    ஆயுத பூஜை அன்று சிறிய கடைகள் முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை கடவுள் படங்கள் முன்பு பொறி, அவல், சுண்டல், தேங்காய் பல்வேறு வகையான பழங்கள் வைத்து படையல் செய்யப்படும்.

    பூசணிக்காய் உடைத்து வாழை, மாவிலை தோரணங்கள் கட்டப்படும்.

    நாளை சரஸ்வதி பூஜையும் வருவதால் பெரும்பாலான வீடுகளில் சரஸ்வதி படம் முன்பு பூஜை பொருட்கள் வைத்து தீபாராதனை காண்பித்து சாமி கும்பிடுவர்.

    மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது புத்தகங்களை சரஸ்வதி படம் முன்பு வைத்து நன்றாக படிக்க வேண்டும் என்று வழிபாடு செய்வது வழக்கம்.

    இதனால் தஞ்சையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைகளுக்கு தேவையான பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வந்தது.

    இன்று தஞ்சையில் கீழவாசல், மானம்புசாவடி, தொல்காப்பியர் சதுக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் பூஜை பொருட்கள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியது.‌ சாலை ஓரங்களில் ஏராளமான கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்தது.

    புதிதாக முளைத்த கடைகளில் மஞ்சள் கொத்து, வாழைக்கன்று, மாவிலை தோரணங்கள் அதிக அளவில் விற்கப்பட்டது.

    இதைவிட மற்ள கடைகளில் பொறி, சுண்டல், அவல், பூசணிக்காய், வாழை இலை, பழங்கள், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    காலையில் மிதமான அளவில் இருந்த பொதுமக்கள் கூட்டம் நேரம் செல்ல செல்ல அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் தஞ்சையில் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. குறிப்பாக கீழவாசலில் கூட்டம் அதிகரித்தது.

    இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஆங்காங்கே ஏற்பட்டது.

    இது தவிர பெரும்பாலான கடைகளில் சரஸ்வதி சாமி படமும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    அவற்றையும் பொதுமக்கள் வாங்கி சென்றனர். பூஜை பொருள்கள் தேவை அதிகம் இருந்ததால் அவற்றின் விலையும் சற்று அதிகரித்தது. 

    • மழை பெய்யும் போது சாலையில் மழைநீர் தேங்கி சாலை குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது.
    • பஞ்சு மூட்டைகளை விற்பனைக்காக வெளியே எடுத்து செல்ல முடியாமல் சிரமமடைந்துள்ளனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எருக்கூர் மெயின் ரோட்டிலிருந்து அக்ரஹாரம் மற்றும் மேலத்தெருவு ஆகிய இடங்களுக்கு செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூர மண் சாலை மேம்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக உள்ளது.

    மழை பெய்யும் போது சாலையில் மழைநீர் தேங்கி சாலை குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. இதனால் மழைக்காலங்களில் அச்சாலையை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இந்த தெருக்களில் சுமார் 150குடும்பத்தினர்கள் வசித்துவருகின்றனர். ஆனால் அங்கு செல்லும் சாலை இதுவரை மன்சாலையாகவே இருந்து வருகிறது.

    இதனால் விவசாயிகள் எருக்கூர் கிராமத்திலிருந்து நெல் மூட்டைகள், பஞ்சு மூட்டைகள் மற்றும் வைக்கோல் உள்ளிட்டவைகளை விற்பனைக்காக வெளியே எடுத்துச் செல்லும் போது சிரமம் அடைந்து வருகின்றனர்.

    மழை பெய்து விட்டால் இந்த சாலையில் நடந்து செல்ல கூட முடியாத நிலை ஏற்படுகிறது. அவசர காலத்தில் ஆட்டோ மற்றும் 108 ஆம்புலன்ஸ் கூட வந்து செல்வதில் சிரமம் உள்ளது.

    எனவே இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் நலன் கருதி மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ஜிகினா அலங்கார தோரணங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.
    • சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.


    சேலம்:


    ஆயுத பூைஜயை முன்னிட்டு வீடு மற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் சுத்தம் செய்து, தோரணங்கள் கட்டுவது வழக்கம். நடப்பாண்டு ஆயுதப்பூைஜ வருகிற 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் செவ்வாய்ப்பேட்ைட, பால்மார்க்கெட், கடைவீதி உள்பட பல்வேறு பகுதிகளில் அலங்கரிக்கப்படும் ஜிகினா அலங்கார தோரணங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.


    இந்த ஜிகினா அலங்கார தோரணங்கள் சென்னை, சிவகாசி, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதை சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். ஒரு ஜிகினா அலங்கார தோரணம் ரூ.10 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது.


    • சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
    • ஆலைகளில் நாள் ஒன்றுக்கு 100 டன் அளவில் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.


    சேலம்:


    தமிழகத்தில் சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கரும்பு அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும், இதைத்தவிர தனியார் சர்க்கரை ஆலைகளுக்கும், கரும்பு வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கும் விவசாயிகள் அனுப்புகின்றனர்.


    சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் நாள் ஒன்றுக்கு 100 டன் அளவில் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகையின்போது வெல்லம் தேவை அதிகரிக்கும்.


    இந்த நிலையில் வருகிற 4-ம் தேதி ஆயுதபூைஜ விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது பெரும்பாலான வீடுகளில் சாமிக்கு படையலிட்டு பூஜை ெசய்து வழிபடுவார்கள். இதையொட்டி வெல்லத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வழக்கமாக நடக்கும் விற்பனையில் இருந்து 30 சதவீதம் வெல்லத்தின் விற்பனை அதிகரித்துள்ளது.


    சேலத்தில் தற்போது 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.1300 முதல் ரூ.1350 என விற்பனை செய்யப்பட்டது. வருகிற தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு தயாரிக்க வெல்லத்தின் தேவை அதிகரிக்கக்கூடும் என்பதால் உற்பத்தியாளர்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளனர்.


    • ஏற்காடு மேல் அழகாபுரம் பகுதியில் அரசு மது பாட்டில்களை அரசுக்கு புறம்பாக விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பக்கோடா பாயிண்ட் சாலையில் சோதனை செய்ததில் சுமார் 33 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ராமச்சந்திரன் மற்றும் சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காவல் ஆய்வாளராக செந்தில் ராஜ் மோகன்பொறுப்பேற்றார் அதன் தொடர்ச்சியாக ஏள்காடு பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பபோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு இது வரை 30 க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் வழக்கு பதிந்து குற்றவாளிகளை சிறையில் அடைத்துள்ளார்.

    மேலும் வளரும் சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா, விற்பனை செய்வோர். தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா பேதை பொருள் விற்பனை செய்தவர்கள் என 50 மேற்பட்ட வழக்குகள் பதிந்து குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று

    ஏற்காடு மேல் அழகாபுரம் பகுதியில் அரசு மது பாட்டில்களை அரசுக்கு புறம்பாக விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    மேலும் ஏற்காடு போட்டுக்காடு கிராமத்தில் உள்ள அரசு மது கடையில் இருந்து ஆட்டோவில் மதுபாட்டில்கள் ஏற்றி வருவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    சோதனையில் முருகன் நகர் பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் மகன் ராமச்சந்திரன் (வயது 55) என்பார் அரசுக்கு புறம்பாக மது பாட்டில்கள் ஆட்டோவில் ஏற்றி வந்தது தெரியவந்தது இதை தொடர்ந்து மேல் அழகாபுரம் பகுதியை சேர்ந்த ரவி மகன் சதீஷ் (40) விற்பதாக தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து பக்கோடா பாயிண்ட் சாலையில் சோதனை செய்ததில் சுமார் 33 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ராமச்சந்திரன் மற்றும் சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சதீஷ் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் போலீ–சார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.28லட்சத்து 67 ஆயிரத்து 146-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 20.54குவிண்டால் எடை கொண்ட 6 ஆயிரத்து92தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.23.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.17.66-க்கும், சராசரி விலையாக ரூ.23.15-க்கும் என மொத்தம் ரூ.45ஆயிரத்து 149-க்கு விற்பனையானது.

    அதேபோல் 264.44½ குவிண்டால் எடை கொண்ட 527 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.99-க்கும், சராசரி விலையாக ரூ.78.40-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.11-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.11-க்கும், சராசரி விலையாக ரூ.73.79-க்கும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 93 ஆயிரத்து 581-க்கு விற்பனையானது.

    அதேபோல் 131.77½வரை குவின்டால் எடை கொண்ட430 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கடலைக்காய் அதிக விலையாக ரூ73.90-க்கும், குறைந்த விலையாக 63.40 -க்கும், சராசரி விலையாக 72.20 -க்கும் என ரூ8 லட்சத்து 73 ஆயிரத்து 565 க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.28லட்சத்து 67 ஆயிரத்து 146-க்கு விற்பனையானது.

    • பாஜக நிா்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
    • காவல்துறையினரும் பெட்ரோல் குண்டு வீசிய நபா்களை கைது செய்து வருகின்றனா்.

    தாராபுரம் :

    கோவை உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பாரதிய ஜனதா கட்சி நிா்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. திருப்பூரில் பா.ஜ.க. நிா்வாகியின் வீடு என நினைத்து மில் அதிபரின் வீட்டில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. காவல்துறையினரும் பெட்ரோல் குண்டு வீசிய நபா்களைக் கைது செய்து வருகின்றனா்.

    மேலும் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நிகழாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது என காவல்துறை தரப்பில் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனா்.

    இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பிக் கொடுக்க மறுத்து வருவதோடு, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என விழிப்புணா்வு நோட்டீசும் ஒட்டி வைத்துள்ளனா்.

    ×