search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224037"

    • வழக்கமான நாட்களை விட பண்டிகை மற்றும் திருவிழா நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும்.
    • நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 500-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 300 அதிகரித்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டிற்கு தினமும் வருகிறது. இங்கிருந்து வியாபாரிகளும், பொதுமக்களும் பூக்களை வாங்கி செல்வார்கள்.

    பூக்கள் விலை உயர்வு

    வழக்கமான நாட்களை விட பண்டிகை மற்றும் திருவிழா நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். அந்த வகையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று சந்திப்பு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

    நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 500-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 300 அதிகரித்து ரூ. 800-க்கு விற்கப்பட்டது.

    அதே போல் அரளிப்பூ நேற்று ரூ. 150-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரு. 50 உயர்ந்து ரூ. 200-க்கு விற்பனையானது. சம்பங்கி ரூ.200, வாடாமல்லி ரூ.200-க்கும் விற்பனையானது. எனினும் பொதுமக்களும், வியாபாரிகளும் பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    • வேலைகளுக்காக பகல் நேரங்களில் வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்
    • நகர கிராம நெடுஞ்சாலை ஓரங்களில் மர நிழல்களில் நுங்கு விற்பனை நடைபெற்று வருகிறது

    காங்கயம்

    காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு வேலைகளுக்காக பகல் நேரங்களில் வரும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.வழக்கமாக ஏப்ரல், மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஆனால் நடப்பாண்டில் கடந்த மாதம் முதலே வெயில் வாட்டி வதைக்கத் ெதாடங்கியுள்ளது.

    இந்த சூழ்நிலையில் வெப்பத்தை தணித்துக்கொள்ள தண்ணீரையும், நிழல் தரும் மரங்களையும் தேடிச்செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிக நீர்ச்சத்துள்ள மற்றும் முற்றிலும் கலப்படம் இல்லாத முழுமையான இயற்கை குணம் நிறைந்த, உடல் சூட்டை தணிக்கும் பனை நுங்கை தேடிச்சென்று சாப்பிடுகின்றனர்.அந்தவகையில் தற்போது திருப்பூர் மாவட்டம் காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. நகர, கிராம, நெடுஞ்சாலை ஓரங்களில் மர நிழல்களில் நுங்கு விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது பொதுமக்களிடம் இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளதாக நுங்கு வியாபாரிகள் தெரிவித்தனர். 3 கண் உள்ள ஒரு நுங்கு ரூ.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் நுங்கை வாங்கிச் சென்றனர்.

    • காடாம்புலியூரில் அனுமதி இன்றி கள் இறக்கியவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் போலீசார் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் வேலன் குப்பம் பகுதியில் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வேலன் குப்பம் வடக்கு தெருவை சேர்ந்த விக்ரம் (22) என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக விக்ரமை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தோவாளை பூச்சந்தைக்கு வந்து மாவட்டம் மற்றும், மாநிலம் முழுவதும் விற்பனை
    • மழை இல்லாத காரணத்தால் அடிக்கிற வெயிலுக்கு மல்லிகை பூ அதிகளவு பூக்கும்

    கன்னியாகுமரி :

    தோவாளையில் புகழ் பெற்ற பூ சந்தை உள்ளது.

    இங்கு ஆரல்வாய் மொழி, புதியம்புத்தூர், காவல் கிணறு, ராதாபுரம், பழவூர், மாடநாடார் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், கோவில்பட்டி, சங்கரன்கோவில், ராஜ பாளையம், மதுரை, மானாமதுரை, கொடை ரோடு, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூவும் வருகிறது.

    பெங்களூர், ஓசூர் ஆகிய பகுதியிலிருந்து மஞ்சள் கிரோந்தி பட்ட ரோஷும், சேலத்தில் இருந்து அரளி பூவும், திருக்கனங்குடி, தென் காசி, அம்பாசமுத்திரம், புளியங்குடி ஆகிய பகுதியிலிருந்து துளசியும், மரிக்கொழுந்தும், தோவாளை, மருங்கூர், செண்பகராமன்புதூர், தோப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து கோழி கொண்டையும், சம்பங்கி, அரளி உள்பட பல பூக்கள் தோவாளை பூச்சந்தைக்கு வந்து மாவட்டம் மற்றும், மாநிலம் முழுவதும் விற்பனையாகி வருகிறது.

    கடந்த சில நாட்களாக அளவுக்கு அதிகமாக பூச்சந்தைக்கு மல்லிகைப்பூ வருவது கூடி உள்ளது. மேலும் தற்போது அதிக அளவு மல்லிகை பூவுக்கு கிராக்கி இல்லை. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ 400க்கு விற்பனை ஆகி வருகிறது .

    இதுபோல பிச்சிப்பூ ரூ.900, சம்பங்கி ரூ.70, மஞ்சள் கிரோந்தி ரூ.110, சிவப்பு கிரேந்தி ரூ.120, பட்டர் ரோஸ் ரூ.140, ரோஜா ரூ.20, தாமரை ரூ.6, அரளி ரூ.150, சேலத்து அரளி ரூ.120, கோழிப்பூ ரூ.100, கொழுந்து ரூ.70 விற்பனையாகி வருகிறது.

    மேலும் வியாபாரிகள் கூறும்போது மழை இல்லாத காரணத்தால் அடிக்கிற வெயிலுக்கு மல்லிகை பூ அதிகளவு பூக்கும். இதனால் வரத்து கூடுதல் எனவே மல்லிகை பூவுக்கு விலை இல்லை என்று கூறினார்.

    • மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.
    • ஒரு டன் ரூ.13 ஆயிரம் என்ற விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களில் அதிக அளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைக்கு மொத்த மாக மரவள்ளி கிழங்கு வாங்கி சென்று ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு போன்றவை உற்பத்தி செய்கின்றனர்.

    இவை தவிர கேரளா, புதுச்சேரி, தமிழகத்தில் பரவலாகவும் மரவள்ளி கிழங்கை உணவுக்காகவும் பயன்படுத்துகின்றனர். சிப்ஸ் உள்ளிட்ட தின்ப ண்டங்கள் தயாரி ப்புக்கும் பயன்படுத்து கின்றனர்.

    நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை சீசன் காலமாக இருந்தாலும் பிற காலங்களிலும் ஓரளவு மரவள்ளி கிழங்கு வரத்தாகும். தற்போது சீசன் முடிந்து பல பகுதிகளிலும் மரவள்ளி கிழங்கு நடவு செய்து வருகின்றனர்.

    இதுபற்றி தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு கூறியதாவது:-

    தற்போது சீசன் நிறை வடைவதால் 10 சதவீத த்துக்கும் குறைவாகவே மரவள்ளி கிழங்கு பயிர்கள் உள்ளன. அவற்றில் இருந்து அறுவடை செய்யப்படும் கிழங்கில் 70 சதவீதம் சேகோ ஆலைகள் ஒரு டன் ரூ.13 ஆயிரம் என்ற விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

    மறுபுறம் கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் உணவு பயன்பாடு, சிப்ஸ் போன்றவை தயாரிப்புக்காக ஒரு டன் ரூ.15 ஆயிரத்துக்கு வாங்கி செல்கின்றனர்.

    வரும் மாதங்களில் இதைவிட அறுவடையும், வரத்தும் குறையும். வரும் நவம்பர் மாதம் மீண்டும் சீசன் தொடங்கும்.

    தற்போது 90 கிலோ எடை கொண்ட ஜவ்வரிசி மூட்டை ரூ.5,750-க்கும், 90 கிலோ எடை கொண்ட ஸ்டார்ச் மாவு மூட்டை ரூ.4,800-க்கும் விற்பனையாகிறது.

    சீசன் நேரத்தில் இந்த விலை இருந்திருந்தால் விவசாயிகள் கூடுதல் பயன் பெற்றிருப்பா ர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.2.87 லட்சத்திற்கு மிளகாய் வத்தல் விற்பனை செய்யப்பட்டது.
    • உள்ளூர் வணிகர்களுடன் வெளியூர்களிலிருந்தும் வணிகர்களை வரவழைத்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் விற்பனைக்குழு கட்டுப்பாட்டில் உள்ள முதுகுளத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மிளகாய் வத்தல் ஏலம் நடந்தது. ஏலத்தில் முதுகுளத்தூர் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் 13 பேர் தாங்கள் கொண்டு வந்த 16.7 குவிண்டால் மிளகாய் வத்தலை ஏலத்திற்கு வைத்தனர். இதனை அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.19 ஆயிரத்து 200-க்கும், குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.16ஆயிரத்து 500-க்கும் ஒட்டுமொத்தமாக ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 598க்கு விற்றனர்.

    இந்த ஏலம் குறித்து ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா பேசுகையில், இனிவரும் காலங்களில் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு தங்கள் வேளாண் விளைபொருட்களை ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விற்க வரும் போது உள்ளூர் வணிகர்களுடன் வெளியூர்களிலிருந்தும் வணிகர்களை வரவழைத்து ஏலத்தில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

    இந்த வசதியை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி விளை பொருட்களை லாபகரமான விலைக்கு விற்று பயனடையலாம் என்றார்.

    முதுகுளத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் நூர்ஷிபா, இ-நாம் திட்ட பணியாளர்கள் இந்த ஏலத்தின் போது உடனிருந்தனர்.

    • உழவர் சந்தையில் 33 கடைகள் மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • நேரடியாக விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு கடை இலவசம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை உழவர் சந்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ. 28.06 லட்சம் செலவில் நடைபெற்றுவரும் மறுசீரமைக்கும் பணிகளை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    மயிலாடுதுறை உழவர் சந்தையில் 33 கடைகள் மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் புதிய கழிப்பறைகளும், புதிய பம்ப் செட் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.

    மின்னும் எடை எந்திரம் வைக்கப்படும். டிஜிட்டல் விளம்பர பலகை வைக்கப்படும்.

    இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்யலாம்.

    நேரடியாக விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு கடை இலவசம்.

    மின்னும் எடை எந்திரம், (இலவச தராசு) போக்குவரத்து வசதி இலவசம், நல்ல விலை கிடைக்க நிர்ணயம் செய்து தரப்படும். இப்பணிகள் இன்னும் 15 நாட்களில் புது பொலிவுடன் உழவர் சந்தை இயக்கப்படும் என்றார்.

    ஆய்வின்போது வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன், வேளாண்மை அலுவலர் கீர்த்திகா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை விற்பனையை செய்யப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது.
    • 5 பெண்களிடம் நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது உசிலம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த சின்னப்பாண்டி மனைவி பாண்டியம்மாள் (வயது60) என்பவர் பச்சிளம் பெண் குழந்தையுடன் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார்.

    போலீசார் அவரிடம், குழந்தை குறித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதனால் பாண்டி யம்மாள் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து பாண்டியம்மாளை போலீஸ் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது. இதற்கு அந்த குழந்தையின் தாய் மற்றும் மாலதி, கருப்பசாமி மனைவி அழகுபாண்டி, கரும்பாலை நாகராஜன் மனைவி பாண்டியம்மாள் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வறுமை அல்லது பெண் என்பதால் குழந்தையை விற்க முற்பட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் தயாரித்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
    • ரூ.38 ஆயிரத்து 640-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் துறையின் விரிவாக்கப்பணி சார்பில் சி.எஸ்.ஐ.மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி மாணவர்களின் சொந்த தயாரிப்புகளை விற்பனை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அவர்கள் தயாரித்த குளிர்பானங்கள், இனிப்பு வகைகள், பொம்மைகள், ஊறுகாய் மற்றும் எழுது பொருட்கள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட்டன. கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி விற்பனையை தொடங்கி வைத்தார். கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை ஆர்வமுடன் வாங்கினர்.

    இதன் மூலம் வருகின்ற நிதி சி.எஸ்.ஐ. மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி மாணவர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த கண்காட்சி மற்றும் விற்பனை மூலம் ரூ.38 ஆயிரத்து 640-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளையும் வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார்.

    • பூ வரத்து அதிகரிப்பால் விலை குறைவு
    • குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, புதியம்புத்தூர், ராதாபுரம், பழவூர் ஆகிய ஊர்களில் இருந்து பிச்சிப் பூ, சங்கரன்கோவில், கோவில்பட்டி, மதுரை, மானாமதுரை, வத்தலகுண்டு, கொடை ரோடு, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூவும். பெங்களூர், ஓசூர் ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சள் கேந்தி , பட்டர் ரோஸ், தென்காசி, அம்பாசமுத்திரம், புளியங்குடி, திருக்கனங்குடி ஆகிய பகுதியில் இருந்து பச்சையும் துளசியும் தோவாளை ஆவரை சுற்றியுள்ள பகுதியில் இருந்து கனகாம்பரம், அரளி, கோழி கொண்டை, தாமரை உள்ளிட்ட பூக்கள் தோவாளை பூச்சந்தைக்கு வந்து மாவட்டம் முழுவதும், மாநிலம் முழுவதும் விற்பனைநடைபெறுகிறது.

    தற்போது மல்லிகைப்பூ அதிக அளவில் தோவாளை பூச்சந்தைக்கு வருவதால் பூக்கள் விலை குறைந்து காணப்படுகிறது. மற்ற பூக்களும் பிச்சிப்பூ ரூ.1200, அரளி ரூ. 200, சம்பங்கி ரூ. 125, பட்டர் ரோஸ் ரூ. 220, பாக்கெட் ரோஸ் ரூ. 40, கேந்தி ரூ. 80, சேலத்து அரளி ரூ. 100, மரிக்கொழுந்து ரூ.100, பச்சை ரூ.7, தாமரை ரூ.5, கனகாம்பரம் ரூ. 500 விற்பனையாகி வருகிறது.

    மல்லிகைப்பூ விலை குறைந்து காணப்படுவதால் சில்லறை வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் விவசாயிகள், பறிப்பு கூலி கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

    • கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் நடந்தது.
    • ரூ.15 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகி இருந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் முதலாவது புத்தக திருவிழா கண்காட்சி கடந்த 5-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடந்தது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவ- மாணவிகள், பழங்குடியினர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் நடந்தது.

    புத்தக திருவிழாவில் பல்வேறு புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மிகவும் பழமை வாய்ந்த புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. இது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாபயணிகளிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

    புத்தக திருவிழா கடந்த 14-ந் தேதி நிறைவு பெறுவதாக இருந்தது. புத்தக ஆர்வலர்கள், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று 19-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. கடந்த 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 33,257 பார்வையாளர்கள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு இருந்தனர். இதில் ரூ.15 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை ஆகி இருந்தது.

    பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் இனி ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.

    • அரகண்டநல்லூர் அருகே கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மது பான விற்பனை தொடர்ந்து நடைபெறு வதாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் பில்ராம் பட்டு அந்திலி மற்றும் கொல்லூர் ஆகிய கிராமங் களில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் விற்பனையை தொடங்கும் முன்னரே அருகிலுள்ள தனியார் பார்களில் புதுச்சேரி, கர்நாடக மாநி லத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை நடப்பதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் கலி வரதன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். மேலும் இரவு 10 மணிக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடிய பின்னரும் கள்ள மார்க்கெட்டில் மது பான விற்பனை தொடர்ந்து நடைபெறு வதாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.

    அதனை தொடர்ந்து விரைந்து சென்ற அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பில்ராம்பட்டு, அந்திலி மற்றும் கொல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையின் அருகில் உள்ள பார்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது டாஸ்மாக் மதுபான கடைகளில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்து அதனை சில்லறை விற்பனை செய்து வந்த வடகரை தாழனூர் கிராமத்தைச் சேர்ந்த வல்லாளன் மகன் இன்பராஜ் (வயது 38), எஸ்.கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகர் மகன் பிரபு (43). அரகண்டநல்லூர் பன்னீர்செல்வம் மகன் வினோத் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ×