search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் பூக்கள்  விலை உயர்வு-மல்லிகை கிலோ ரூ. 800-க்கு விற்கப்படுகிறது
    X

    நெல்லை சந்திப்பு மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்ற காட்சி.

    நெல்லையில் பூக்கள் விலை உயர்வு-மல்லிகை கிலோ ரூ. 800-க்கு விற்கப்படுகிறது

    • வழக்கமான நாட்களை விட பண்டிகை மற்றும் திருவிழா நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும்.
    • நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 500-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 300 அதிகரித்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக நெல்லை சந்திப்பு பூ மார்க்கெட்டிற்கு தினமும் வருகிறது. இங்கிருந்து வியாபாரிகளும், பொதுமக்களும் பூக்களை வாங்கி செல்வார்கள்.

    பூக்கள் விலை உயர்வு

    வழக்கமான நாட்களை விட பண்டிகை மற்றும் திருவிழா நாட்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். அந்த வகையில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று சந்திப்பு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.

    நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 500-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 300 அதிகரித்து ரூ. 800-க்கு விற்கப்பட்டது.

    அதே போல் அரளிப்பூ நேற்று ரூ. 150-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரு. 50 உயர்ந்து ரூ. 200-க்கு விற்பனையானது. சம்பங்கி ரூ.200, வாடாமல்லி ரூ.200-க்கும் விற்பனையானது. எனினும் பொதுமக்களும், வியாபாரிகளும் பூக்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    Next Story
    ×