search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்சரிக்கை"

    • கடந்த 11-ந்தேதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம் என 10-ந்தேதி இரவு மீன்வளத்துறை அதிகாரிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது‌.
    • சில தினங்களுக்கு முன்பு மாண்டஸ் புயல் உருவாகி மாமல்லபுரம் பகுதியில் கரையை கடந்தது.

    கடலூர்:

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது‌. இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும், புயலாக மாறினால் தமிழகத்தை யொட்டி கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துக் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாண்டஸ் புயல் உருவாகி மாமல்லபுரம் பகுதியில் கரையை கடந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று மற்றும் மழை பெய்து வந்த நிலையில் கடும் குளிரும் நிலவி வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் கடந்த 6-ந்தேதி முதல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஆனால் கடந்த 11-ந்தேதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம் என 10-ந்தேதி இரவு மீன்வளத்துறை அதிகாரிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது‌.

    இதனை தொடர்ந்து மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற நிலையில் 11-ந்தேதி காலையில் திடீரென்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என தெரிவித்ததால் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியும் குழப்பமும் நிலவி வந்தது. இந்த நிலையில் 12-ந்தேதி முதல் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க செல்லலாம் என மீண்டும் மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் புயல் ஓய்ந்த நிலையில் கடலில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. ஆனால் திங்கட்கிழமை மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று 15 ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தங்கு கடல் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் . மேலும் வங்க கடல் பகுதிகளில் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள ஆழ்கடல் மற்றும் தங்கு கடல் படகுகள் அனைத்தும் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு உடனடியாக கரைத்திரும்ப வேண்டும். மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 

    • வழிபறியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் மாநகர ஆணையர் தெரிவித்துள்ளார்
    • திருச்சி மாநகரில் கத்திைய காட்டி மிரட்டி

    திருச்சி:

    திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் கத்தியை காண்பித்து கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை திருச்சியை சேர்ந்த ரத்தினவேல் (வயது 20) என்ற ரவுடி பரித்து சென்றார்.

    பின்னர் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, எடமலைபட்டிபுதூர் காவல்நிலைய ஆய்வாளரின் அறிக்கையின்படி ரத்தினவேலை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர் படுத்தினர். அப்போது ஒரு வருட காலத்துக்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காமல், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை ரத்தினவேல் தாக்கல் செய்துள்ளார்.

    பின்னர் ரத்தினவேல் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து மீண்டும், நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ரத்னவேல் ஆஜர் படுத்தப்பட்டார். இதையடுத்து நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்றசெயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 317 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவர் உத்தரவு பிறப்பித்தார்.

    இதைத்தொடர்ந்து ரத்தினவேல் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இது குறித்து திருச்சி காவல் மாநகர ஆணையர் கார்த்திகேயன் தெரிவிக்கையில்,

    திருச்சி மாநகரில் இதுபோன்ற கத்தியை காண்பித்து பணம், நகை கொள்யைடுக்கும் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தி தெரிவித்துள்ளார்.

    • வங்க கடலில் உருவாகி யுள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • இதன் காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்தால் உடனடியாக அகற்ற மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்களை தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    ராசிபுரம்:

    வங்க கடலில் உருவாகி யுள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், கொல்லிமலை, புதுச்சத்திரன் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள ராசிபுரம் தீயணைப்பு துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்குழு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ரப்பர் படகுகள், கயிறு, லைப் ஜாக்கெட்கள், வீடு களுக்குள் வெள்ளம் புகுந்தால் உடனடியாக அகற்ற மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்களை தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    மேலும் பெரு வெள்ளம் சமயத்தில் மக்களை பாது காப்பாக தங்க வைக்க திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ள அபாயம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவன முடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • சுமார் 5 ஆயிரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லமால் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
    • 30-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் கரைக்கு திரும்பாத நிலையில் வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை.

    வேதாரண்யம்:

    வங்க கடலில்குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள காரணத்தினால் மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்குசெல்ல வேண்டாம் என 4-ம் தேதி மீன்வளத்துறை மூலம் அறிவிக்கப்பட்டது.

    இதனால் நாகை மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லமால் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

    கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைபடகு மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பி விட்டனர்.

    கடலில் தங்கி மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற நாகை மாவட்டத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் கரைக்கு திரும்பாத நிலையில் கோடி யக்கரை மீன்வளத்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்கி டாக்கி மூலம் மீனவர்களுக்கு புயல் உருவாகி இருப்பதால் கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

    ஆகையால் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என தொடர்ந்துஎச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    • ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கிருந்து வெளியேறின.
    • வனத்துறை, வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தமிழக எல்லையான ஜவளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் பல்வேறு குழுக்ககளாக பிரிந்து சுற்றித்திரிகின்றன.

    மேலும் விவசாய நிலங்களில் புகுந்து நெல், ராகி, உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக மாநில எல்லையான ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கிருந்து வெளியேறின.

    பின்னர் பல்வேறு கிராமங்கள் வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் புகுந்து யானைகள் முகாமி ட்டுள்ளன. முன்னதாக இந்த காட்டு யானைகள் கூட்டமாக தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலையில் மரக்கட்டா வனப்பகுதியில் சாலையை கடந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை நிறுத்தி காட்டு யானைகள் வனப்பகுதிக்கு செல்ல வழிவகை செய்தனர். அதன் பிறகு அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது.

    தற்போது 40 காட்டு யானைகளும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளன. இதனால் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம்.

    காட்டு யானைகள் தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கிராம மக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

    தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறை, வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அனைத்து தரப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.
    • மாடுகளை மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் பன்றிகள், ஆடுகள் மற்றும் மாடுகள் அதிக அளவில் வெளியில் சுற்றுவதால் அடிக்கடி வாகன விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அனைத்து தரப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் பன்றிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் இன்று மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாநகராட் சிக்குட்பட்ட 45 வார்டு பகுதிகளில் தெருக்களில் கட்டி இருக்கும் மற்றும் சுற்றுத் திரியும் பன்றிகள், ஆடுகள் மற்றும் மாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் உடனடியாக பிடித்து செல்ல வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் தெருக்களில் கட்டியிருக்கும் மற்றும் சுற்றித்திரியும் பன்றிகள், ஆடுகள் மற்றும் மாடுகளை மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் உரிமை யாளர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகின்றது. ஆகையால் கால்நடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    • கடந்த 7-ம் தேதி முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது.
    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    நாகப்பட்டினம்:

    தென்கிழக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி காற்றழு த்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த. இதையடுத்து கடந்த 7ம் தேதி முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதையடுத்து மீன்வளத்துறை சார்பில் நாகப்பட்டினம் மீனவர்கள் ஆழ்கடல் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் புயல் சின்னம் வழுவிழந்ததை தொடர்ந்து15 நாட்களுக்குப் பிறகு நேற்று மீன்வளத்துறை மீனவர்கள் கடலில் மீன்பிடி க்க செல்லலாம் என்று அனுமதி வழங்கியது.இதைத் தொடர்ந்து இன்று அதிகாலைமுதல் நாகப்பட்டினம் மாவட்ட த்தில் உள்ள 700 விசைப்ப டகுகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்பி டிக்க செல்லும் மீனவர்கள் அதிக அளவு மீன் கிடைக்கும் என நம்பிக்கையில் சென்று ள்ளனர்.இதை போன்று வேதார ண்யம் தாலுகாவை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க பிடிக்க சென்றுள்ளனர்.

    • அவிநாசி சோலை நகரில் 448 வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
    • குடிநீர் வினியோகிக்க பேரூராட்சிக்கு வாரியம் சார்பில் 40 லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்தப்பட்டுள்ளது.

    அவிநாசி : 

    நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் அவிநாசி சோலை நகரில் 448 வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 173 வீடுகள் பூட்டியிருப்பதாகவும், பலரும் வாடகைக்கு விட்டு வெளியில் தங்கியிருப்பதாகவும் புகார்கள் வந்தன.

    இதையடுத்து வாழ்வாதார மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சரவணபிரபு, குடியிருப்புவாசிகளுக்கு அறிவுரை, ஆலோசனை வழங்கி கூறியதாவது:- நம் குடியிருப்பு, நம் பொறுப்பு என்ற திட்டத்தில், குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஏற்படுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். குடியிருப்புகளை சுத்தம், சுகாதாரமாக பராமரிப்பது, குடிநீர் திறந்து விடும் பணி மேற்கொள்வதற்கு பணியாட்களை நியமிப்பது, அவர்களுக்கு சம்பளம் வழங்குவது, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்துவது, சுற்றுச்சுவர் எழுப்புவது, 'சிசிடிவி' கேமரா பொருத்துவது உள்ளிட்ட பணிகளை, குடியிருப்போர் நலச்சங்கங்கள் மூலமே மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஒவ்வொரு குடியிருப்புவாசிகளிடம் இருந்தும் மாதம் 250 ரூபாய் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம்.

    இந்த வீடுகள் யார் பெயரிலும் பதிவு செய்யப் படவில்லை. மாறாக 10 ஆண்டுகள் அதில் குடியிருந்த பிறகு வீடுகளை விற்றுக் கொள்ள விற்பனை சான்றிதழ் வழங்கப்படும். குடியிருப்போர் நலச்சங்கத்துக்கு சந்தா வழங்காமல் சங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது வீடுகளை வாடகை, போக்கியத்துக்கு விட்டு வெளியில் வசிப்பது, டம்மி பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டு, பிறருக்கு வீடுகளை விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படும்.

    அடுத்த மாதம் வாரியத்தின் எஸ்டேட் அலுவலர், வீடு தோறும் ஆய்வு மேற்கொண்டு உறுதிபடுத்திய பின் இந்நடவடிக்கை எடுக்கப்படும். 10 ஆண்டுகளுக்கு பின், வீடுகளை விற்க விற்பனை சான்றிதழ் பெற வேண்டுமானால் குடியிருப்போர் நலச்சங்கத்தின் தடையில்லா சான்று கட்டாயம் பெற வேண்டும்.

    குடிநீர் வினியோகிக்க பேரூராட்சிக்கு வாரியம் சார்பில் 40 லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தடையின்றி கிடைப்பதால், பலர் தண்ணீரை விரயமாக்குகின்றனர்.அனாவசியமாக செலவழிக்கின்றனர். எனவே காலை, மாலையில் தலா ஒரு மணி நேரம் மட்டும் குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போர்வெல் தண்ணீர் தடையின்றி வினியோகிக்கப்படும் என்றார்.

    • வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என கீழக்கரை நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • பொதுமக்கள் நலன் கருதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி கமிஷ னர் செல்வராஜ் கூறியதா வது:-

    கீழக்கரை நகராட்சியில் பொது மக்களுக்கு தேவை யான பல்வேறு அடிப்படை வசதிகளை நகராட்சி நிதியில் இருந்து செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து வரி செலுத்த அறிவிப்பு கொடுத்தும், பணியா ளர்களும் நேரடியாக சென்று வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் பலரும் அதிக பாக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட குடி யிருப்பு கட்டிடங்கள், வணிக கட்டிடங்களின் உரிமையாளர்கள் சிலர் செலுத்த வேண்டிய வரி இனங்களை முறையாக செலுத்தப்படாத காரணத்தி னால், பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சேவைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    நகராட்சி சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் முதல் அரை யாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் மாதம் 31-ந் தேதிக்குள்ளும், 2-வது அரையாண்டு வரியை அக்டோபர் மாதம் 30-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். தொடர்ந்து வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் பகிரங்கமாக பொது வெளியில் மக்களின் பார்வைக்கும் வைக்கப்படும். மேலும் வரி வசூல் 100 சதவீதம் இருந்தால் மட்டுமே திட்ட பணிகள் மேற்கொள்ள முடியும்.

    எனவே வரி பாக்கி வைத்துள்ளவர்கள் நகராட்சி யில் செலுத்த முன்வர வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும். கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் அல்லது tnurbanepay.tn.gov.in என்ற இணையதள வாயிலாகவோ செலுத்த லாம்.தங்களது வரிகளை செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி, ஜப்தி நடவடிக்கையினை தவிர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • சின்னசேலம் அருகே லாரியில் கடத்திய 13.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • காட்டுமன்னார்குடி அருகே குமராட்சியை சேர்ந்த முத்துகுமாரசாமி கடத்தி வந்து உள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி, ரேசன் அரிசி கடத்தல் மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாக்குறிச்சி டோல்கேட்டில் கீழ்குப்பம் போலீஸ் தனிப்பிரிவுசப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையில் இன்று அதிகாலை செம்பாக்குறிச்சி டோல்கேட் அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தனர். அந்த லாரியில் 13.5 டன் ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இந்த ரேசன் அரிசியினை காட்டுமன்னார்குடி அருகே குமராட்சியை சேர்ந்த முத்துகுமாரசாமி கடத்தி வந்து உள்ளார். பின்னர் அவரை கைது செய்து, அரிசி மற்றும் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்து விழுப்புரம் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் கடத்தப்பட்ட ரேசன் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும், ராஜேந்திரனையும் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கூறுகையில் கள்ள க்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோத ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • 38 தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 410-ஐ பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின் பேரிலும் கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரனின் அறிவுறுத்தலின்படியும், கோவை தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி வழிகாட்டுதல்படியும், திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் ஆர்.மலர்க்கொடி தலைமையில் திருப்பூர் நகர்புறம், தாராபுரம், உடுமலை மற்றும் காங்கயம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் தொழில் சம்பந்தமான நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா என 19 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படாதது கண்டறியப்பட்டு கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 38 தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்து 410-ஐ பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா என்பது குறித்து மாதந்தோறும் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த ஆய்வின் போது குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆர்.மலர்கொடி தெரிவித்தார். 

    • ஆடு, கோழி, மீன் போன்றவற்றில் மீதமாகும் இறைச்சிக் கழிவுகளை நகராட்சி வாகனம் மூலம் தினமும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
    • இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    காங்கயம் :

    திறந்த வெளியில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படுவதோடு, கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்று காங்கயம் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் நகராட்சி பகுதியில் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் இறைச்சிக்காகப் பயன்படுத்தும் ஆடு, கோழி, மீன் போன்றவற்றில் மீதமாகும் இறைச்சிக் கழிவுகளை நகராட்சி வாகனம் மூலம் தினமும் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது ஒரு சில இறைச்சிக் கடைகளில் இறைச்சிக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.எனவே இது போன்று திறந்த வெளியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவது கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். அத்துடன், கடையின் உரிமமும் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×