search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணவாளக்குறிச்சி"

    • படுகாயமடைந்த பேபி ஜாய் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதி
    • மணவாளக்குறிச்சி போலீசார் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே பெரியவிளையை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 41). கடலில் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பேபி ஜாய் (25). ஆனந்த் கடந்த 3-ந்தேதி குடும்ப தகராறில் மது அருந்திவிட்டு கையால் மனைவி பேபி ஜாயை கன்னத்தில் அறைந்தாராம். பின்னர் இரும்பி கம்பியை காட்டி மிரட்டல் விடுத்தாராம்.

    இதில் படுகாயமடைந்த பேபி ஜாய் குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
    • மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே கல்லடிவிளையை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் சிவகுமார் (வயது 32). மீன்பிடி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த டேவிட் ராஜா டேனியலுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அம்மாண்டிவிளையில் செல்லும்போது அங்கு வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர்.அப்பகுதியினர் இருவரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டேவிட் ராஜா டேனியல் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி கோடிமுனையை சேர்ந்த ஆன்றனிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • மணவாளக்குறிச்சி அருகே நாய் குறுக்கே பாய்ந்ததில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து கணவன் - மனைவி படுகாயம் அடந்தனர்
    • இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:


    வெள்ளிச்சந்தை அருகே சாந்தபுரம் மேலசங்கரன்குழியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவர் முட்டம் தனியார் மீன்பிடித் துறைமுகத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இவர் தன் மனைவி சித்ராவை (27) மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அம்மாண்டிவிளை - இரணியல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    கருங்காலிவிளை சந்திப்பு அருகில் செல்லும்போது இவரது மோட்டார் சைக்கிளின் முன்பு நாய் குறுக்கே பாய்ந்தது. இதில் சுரேஷின் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அருகில் உள்ள காம்பவுண்டு சுவரில் மோதி விழுந்தது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.அப்பகுதியினர் இருவரையும் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×