என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 224333"
- ராகுல்காந்தியின் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
ராகுல்காந்தியின் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு கடை தெருவில் காங்கிரஸ் கட்சியினர் மபநில பொதுச் செயலாளர் விவசாய பிரிவு சுர்ஜித் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர் அருண்சோரி முன்னிலை வகித்தார். நாகை மாவட்ட தலைவர் அமிர்தராஜா சிறப்புரை ஆற்றினார். தி.மு.க ஒன்றிள செயலாளர் மகாகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், இந்திய கம்யூஸ்ட் கட்சி முன்னாள்மாவட்ட செயலாளர் சம்பந்தம் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தை தொகுதி அமைப்பாளர் இளையராஜா, காங்கிரஸ் கட்சி மாவட்ட இணை செயலாளர் பாரதிராஜா ,வட்டார தலைவர் கனகராஜ் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடேசன் நன்றி கூறினார் .
- வத்திராயிருப்பு அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
- செயலாளர் விஜய் ஆனந்த், சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உடனிருந்தனர்.
சிவகாசி
வத்திராயிருப்பு ஒன்றிய அ.ம.மு.க. செயலாளரும், வத்திராயிருப்பு முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான அழகர்சாமி, மாவட்ட அ.ம.மு.க. துணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காந்திமதி முருகேசன், தி.மு.க.வை சேர்ந்த கனகராஜ் ஆகியோர் அந்த கட்சியில் இருந்து விலகினர்.
அவர்கள் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர்-முன்னாள் அமைச்சர் கே.டி .ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.எஸ்.ஆர். ராஜ வர்மன், வத்திராயிருப்பு வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு பேரூர் செயலாளர் வைகுண்ட மூர்த்தி, பேரூர் பொருளாளர் கனகராஜ், வத்திராயிருப்பு முன்னாள் பேரூர் செயலாளர் நெல்லை யப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் சக்தி நடேசன், மாவட்ட மருத்துவரணி செயலாளர் விஜய் ஆனந்த், சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உடனிருந்தனர்.
- அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
- மதுரை பனகல் சாலையில் உள்ள மதுரை மாவட்ட அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட அ.திமு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
அ.திமு.க. இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11-ந் தேதி சிவகங்கை வருவதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட அ.திமு.க. சார்பில் மதுரை பனகல் சாலையில் உள்ள மதுரை மாவட்ட அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், கட்சியின் எதிர்கால வளர்ச்சிப்பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
எனவே இந்த கூட்டத்தில் இன்னாள்-முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் இல்ல திருமண விழாவை டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்தார்.
- ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன்-லெட்சுமி ஆகியோரின் மகள் டாக்டர் மு.நிவேதிதாவுக்கும், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் வேல் மகாராஜன்-சுந்தரி ஆகியோரின் மகன் டாக்டர் வே.முருகனுக்கும் மதுரை கருப்பாயூரணி எம்.பி. மகாலில் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்
டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்து பேசும்போது, முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. பதினெட்டாம்ப டியான் குடும்பத்தினர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் விசுவாசிகள். அவர்கள் அ.ம.மு.க.வில் உள்ளனர். இந்த திருமணத்தை நடத்தி வைத்த தில் மட்டற்ற மகிழ்ச்சி யடைகிறேன் என்றார்.
பின்னர் அவர் அ.ம.மு.க. பெண் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
திருமண விழாவில் முன்னாள் ஆப்பநாடு மறவர் சங்க தலைவர் ராமையா தேவர். வக்கீல்புலிகேசி மாவட்ட மருத்துவ அணி செயலாளர்டாக்டர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் கடலாடி வெள்ளத்துரை, கமுதி வி.கே.ஜி. முத்துராமலிங்கம், புளியங்குடி முத்துராம லிங்கம், செல்வநாயகபுரம் முருகன், வெங்கலகுறிச்சி சேதுபதி, முதுகுளத்தூர் நகர செயலாளர் சுந்தரமூர்த்தி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மன்னார்குடியில் தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்எம்பி.துரை வேலன் தலைமை வகித்தார். மன்னார்குடி நகர காங்கிரஸ் தலைவர் கனகவேல் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல செயலாளர் சண்முகசுந்தரம், மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்றத்துக்கு எதிராக செயல்படுகின்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
- நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
- முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தனது குடும்பத்தினர் தொகுதி மக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்.
நாகப்பட்டினம்:
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தனது குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொகுதி மக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்.
அப்போது தமிழ்நாடு வாழ்க என்று முழக்கம் எழுப்பப்பட்டது.
பின்னர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ கூறியதாவது,
இப்போது தமிழ்நாடு என்ற பெயரையே மாற்றத் துடிக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசின் இலச்சினை, தமிழ் ஆண்டு ஆகியவற்றை திட்டமிட்டு தவிர்க்கிறார்கள். தமிழர் திருநாள் அன்று 13000 பேர் எஸ்.பி.ஐ வங்கி தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு எம்.பி.க்கள் எவ்வளவோ போராடிய பிறகும் ஒன்றிய அரசு விடாப்பிடியாக தேர்வை நடத்துகிறது.
இப்படி ஓணம் பண்டிகையின் போதோ, தசரா பண்டிகையின் போதோ நடத்த முடியுமா. அப்படியிருக்க பொங்கல் நாளில் நடத்துகிறார்கள் என்றால் இது தமிழர் பண்பாட்டின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் நடத்தப்படுகிற தாக்குதலாகும். இதற்கு நாம் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றார்.
- தஞ்சை அருளானந்த நகரில் உள்ள மாநகர தி.மு.க. அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் நல்லிணக்க திருவிழா நடைபெற்றது.
- பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கட்சி நிர்வாகிகளுக்கு இலவசமாக வேட்டிகளை மேயர் சண். ராமநாதன் வழங்கினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருளானந்த நகரில் உள்ள மாநகர தி.மு.க. அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் நல்லிணக்க திருவிழா நடைபெற்றது. மாநகரச் செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண் ராமநாதன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் இலவசமாக வேட்டிகளை மேயர் சண். ராமநாதன் வழங்கினார்.
தொடர்ந்து பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, மாநில மகளிர் அணி ஆலோசனை குழு உறுப்பினர் காரல் மார்க்ஸ், மாவட்ட துணை செயலாளர்கள் மணிமாறன், கனகவள்ளி பாலாஜி, பொதுக்குழு உறுப்பினர் புண்ணியமூர்த்தி, பகுதி செயலாளர்கள் மேத்தா, சதாசிவம், கார்த்திகேயன், நீலகண்டன், மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன், கலையரசன், மாநகர பொருளாளர் காளையார் சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கே. பி. முனுசாமி முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
- 50-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர பொருளாளர் சரவண வேல் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்க நிர்வாகி அன்பழகன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வின் இணை பொதுச் செயலாளரும், வேப்பனபள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே. பி. முனுசாமி முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ் செல்வம், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது,மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் இளையராஜா, நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் வேங்கன்,வேடி, முன்னாள் ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், அவைத்தலைவர் கிருஷ்ணன், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், நகர செயலாளர் விமல் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- நிரந்தர வருமானத்துக்கான வழிகள், வங்கிகடன் பெறுவது, அதனை திரும்ப செலுத்துவது எப்படி.
- 50-க்கும் மேற்பட்ட மகளிர் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா, கோவி ல்தேவராயன்பேட்டையில் மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகளுக்கு தலைமை பண்பு பயிற்சி மற்றும் பள்ளிக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடராஜா அரசு உதவிபெறும்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விவேகானந்தா சமூக கல்வி சங்க தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் மணிமொழிதமிழ்வாணன், தலைமை ஆசிரியர் சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உறுப்பினர் புனிதா அனைவரையும் வரவேற்றார்.
இதில் விவேகானந்தா சமூக கல்வி சங்க செயலாளர் தங்க.கண்ணதாசன், கலந்து கொண்டு மகளிர் சுய உதவிகுழு நிர்வாகிகளுக்கு ஆளுமை திறன், நிதிமேலாண்மை நிர்வாகம், மக்கள் தொடர்பு, தொழில் வேலைவாய்ப்பு , நிரந்தர வருமானத்துக்கான வழிகள், வங்கிகடன் பெறுவது, அதனை திரும்ப செலுத்துவது எப்படி , இன்சுரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு, வீடு,வாகனம்.
கால்நடைகள், தனிநபர் காப்பீடு செய்வது எப்படி என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் முன்னோடி குழு நிர்வாகிகள் விஜி, வளர்மதி, கவிதேவி, தமிழரசி, சிவகாமசுந்தரி, கலா, ரமணி உள்பட 50 -க்கும் மேற்பட்ட மகளிர் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சியில் நடராஜா உதவிபெறும்பள்ளி வளர்ச்சிக்கு விவேகானந்தா சமூக கல்விசங்கம் சார்பில் நிதிஉதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளிமேலாண்மை குழு உறுப்பினர்கள் காசிராமன்,ராஜாங்கம்,களப்பணியாளர்கள் புனிதா, செல்வி,மணி. ராதிகா, லெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க நிர்வாக குழு உறுப்பினர் சிவகுமார் நன்றி கூறினார்.
- புதிய இளைஞர்களை கட்சியில் இணைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
- கூட்டத்தில் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
காங்கயம் :
காங்கயம் - சென்னிமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கயம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைப்பது, இளைஞர் இளம்பெண்கள் பாசறை அமைப்பது, நாடாளுமன்ற தேர்தலில் கட்சி நிர்வாகிகளின் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும், புதிய இளைஞர்களை கட்சியில் இணைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதே போல் காங்கயம் நகர அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் அ.தி.மு.க. நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை தாங்கினார். பொருளாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகள் தேர்தல் நடை பெற்றது.
- தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியலை மாநில காங்கிரஸ் கமிட்டி ஒப்புதலுடன் தேர்தல் அலுவலர்கள் வெளியிட்டனர்
கன்னியாகுமரி:
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிபுதிய நிர்வாகிகள் தேர்தல் நடை பெற்றது. இதில் தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியலை மாநில காங்கிரஸ் கமிட்டி ஒப்புதலுடன் தேர்தல் அலுவலர்கள் வெளியிட்டனர்.
நகர தலைவர்களாக ஹனுகுமார் (பத்மநாப புரம்), வக்கீல் சுரேஷ்(குழித்துறை), வட்டார தலைவர்களாக வினுட்ராய் (திருவட்டார்மேற்கு), ராஜசேகர் (கிள்ளியூர் கிழக்கு), ரகுபதி (முஞ்சிறை கிழக்கு), விஜயகுமார் (முஞ்சிறை மேற்கு), கிங்ஸிலி சாலமன் (மேல்புறம் கிழக்கு), ரவிசங்கர்(மேல்புறம் மேற்கு),பிரேம்குமார் ( தக்கலை) ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.
- நகர அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- பூத் கமிட்டி அமைப்பது மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர் நியமனம் ஆகியவற்றை குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது.
காங்கயம் :
காங்கயத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க. காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான, அனைத்து பூத்களிலும் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர் நியமனம் ஆகியவற்றை குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகள், கட்சியின் 18 வார்டு செயலாளர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்