search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224333"

    • 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் அ.தி.ம.மு.க. நிர்வாகிகள் ஈரோட்டில் ஆலோசனை நடத்தினர்.
    • ஈரோடு மாவட்ட செயலாளர், உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் செந்தில்குமார் நன்றி கூறுகிறார்.

     மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்கள், உயர்மட்டசெயல்திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிலைய செயலா ளர்கள் கூட்டம் வருகிற 22-ந்தேதி ஈரோட்டில் நடக்கிறது.கூட்டத்துக்கு அவைத்தலைவர் தாஜீதீன் தலைமை தாங்குகிறார். பொருளாளர் பூங்கா பி.கே.மாரி முன்னிலை வகிக்கிறார். துணைப் பொதுச்செயலாளர், கழக தேர்தல் பிரிவு செயலாளர்

    நெல்லை முத்துக்குமார் வரவேற்று பேசுகிறார்.

    கழக வளர்ச்சிகப்பணிகள் மற்றும் பொருளாதார ரீதியிலான உயர்சாதி பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, தமிழக கவர்னரின் செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொ ன்பாண்டியன் பேசுகிறார்.

    ஈரோடு மாவட்ட செயலாளர், உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் செந்தில்குமார் நன்றி கூறுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது‌.

    • அரசு பள்ளிகளில் காது கேளாதோருக்கு சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும்.
    • சைகை மொழி பயிற்சிக்கென தனி பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்க தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வேளாங்கண்ணி குடும்ப சமுதாய கூடத்தில் நடைபெ ற்றது. கூட்டத்திற்கு சங்க த்தின் தலைவர் சுகுமாறன் தலைமை வகித்தார்.

    வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, துணைத் தலைவர் தாமஸ் ஆல்வாஎடிசன், தி.மு.க. செயலாளர் மரிய சார்லஸ், தமிழ்நாடு காதுகேளாளர் கூட்டமைப்புதலைவர் ரமேஷ்பாபு, பொதுச்செய லாளர் மோகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பாலாஜி, பொதுச் செயலாளர் பொன்னுசாமி, துணைத் தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு காது கேளாதோர் மகளிர் சங்கம் தலைவர் ரிஸ்கில்லா, பொதுச் செயலாளர் தேவ்தா சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியினை தமிழ்நாடு கலை பண்பாட்டு காது கேளாதோர் சங்க சைகை மொழி பெயர்ப்பாளர் கேசவன் தொகுத்து வழங்கினார்.

    இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான காது கேளாதோர் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அரசு பள்ளிகளில் காது கேளாதோருக்கு சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும், சைகை மொழி பயிற்சிக்கென தனி பயிற்சி மையம் தமிழக அரசு தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் நாகை மாவட்ட காதுகே ளாதோர் முன்னேற்ற சங்க தலைவராகசுகுமாரன், செயலாளராக ராஜேஷ், பொருளாளராக வைரமூ ர்த்தி, துணைத் தலைவராக லட்சுமணன், துணைச் செயலாளராக ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மாநில நிர்வாகிகள் பதவி யேற்பு செய்து வைத்தனர்.

    • கோட்டார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எம் .ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்திருந்தனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் செம்மங்குடி ரோட்டில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் மேயர் மகேஷ் பாரதிய ஜனதா கட்சியினரை விமர்சித்து பேசியதாக கூறி பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    மேயர் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோட்டார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எம் .ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நாகர்கோவில் மாநகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணை தலைவர் தேவ், மாநில செயலாளர் மீனாதேவ்,மாநகராட்சி கவுன்சி லர்கள் அய்யப்பன், சுனில் அரசு, வீரசூர பெருமாள்,ரோசிட்டாள், ரமேஷ் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகநாதன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பாரதிய ஜனதாவினரை விமர்சித்து பேசிய மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாளை 10-ந்தேதி நாகர்கோவில் செம்மங்குடி ரோட்டில் மாலை 5 மணிக்கு கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று மாவட்ட தலைவர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே மேயர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாரதிய ஜனதா கட்சியினர் எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்தனர்.

    • மாநில இளைஞரணி செய லாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் உத்தர வின் பேரில் குமரி கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் வருகிற 16-ந்தேதி சுசீந்திரம் செல்வம் திருமண மண்டபத் தில் காலை 9 மணிக்கும், குளச்சல் தொகுதிக்கு குளச் சல் எஸ்.எஸ்.ஆடிட்டோரி யத்தில் மாலை 4 மணிக்கும் திராவிட மாடல் பயிற்சி பாச றைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • இதில் நிர்வாகிகள் அனைவரும் ஏராளமான இளைஞர் அணியினரை பங் கேற்கச் செய்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நாகர்கோவில், அக்.13-

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க.மாநகர, நகர, ஒன்றிய,பேரூர், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை நாகர் கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் எப்.எம். ராஜரெத்தினம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம். எல்.ஏ. ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகர செயலாளர் ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரைபா ரதி, பார்த்தசாரதி, பொதுக் குழு உறுப்பினர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், பாபு, செல்வம், பிராங்கிளின், சுரேந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் பேசும்போது கூறியதா வது:-

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றவேண்டும். தனித்து நின்றாலும் தி.மு.க. வெற்றி பெறும் அளவுக்கு உங்களின் அனைவரது உழைப்பும் இருக்க வேண்டும். கட்சி நிர் வாகிகளுக்குள் என்ன பிரச் சினை இருந்தாலும் அவற்றை எல்லாம் மறந்து கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்றார்.

    நடந்து முடிந்த கட்சியின் 15-வது பொதுத்தேர்தலில் கட்சித் தலைவராக 2-வது முறையாக தேர்ந் தெடுக்கப்பட்ட, திராவிட மாடல் தத்துவம் மூலமாக தமிழகத்தில் பொற் கால ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கும், தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனை களை ஏழை, எளிய மக்களை சென்றடையும் வகையில் மாவட்டம், ஒன்றியம், மாநக ரம், நகரம், பேரூர், ஊராட்சி மற்றும் கிளைக்கழக பகுதி களில் சாதனை விளக்க பொதுக்கூட்டம், தெரு முனை கூட்டங்கள், கவிய ரங்கம், பட்டிமன்றம் நடத்த வேண்டும்.

    மாநில இளைஞரணி செய லாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் உத்தர வின் பேரில் குமரி கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட கன்னியாகுமரி தொகுதியில் வருகிற 16-ந்தேதி சுசீந்திரம் செல்வம் திருமண மண்டபத் தில் காலை 9 மணிக்கும், குளச்சல் தொகுதிக்கு குளச் சல் எஸ்.எஸ்.ஆடிட்டோரி யத்தில் மாலை 4 மணிக்கும் திராவிட மாடல் பயிற்சி பாச றைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் நிர்வாகிகள் அனைவரும் ஏராளமான இளைஞர் அணியினரை பங் கேற்கச் செய்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கைது செய்யப்பட்டவர்கள் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
    • அவர்கள் மாலையில் விடு விக்கப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த தேசிய நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், கிடப்பில் போடப் பட்டுள்ள 4 வழிச்சாலை பணியை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும். 4 வழிச்சாலை பணிக்காக தனியாரிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உடனடியாக மார்க்கெட் விலைப்படி பணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

    வில்லுக்குறி அருகே தோட்டியோடு பகுதி யில் நடந்த மறியல் போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி. உதயம் உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ் ராஜேஷ்குமார் உட்பட 395 காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடு விக்கப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உட்பட 395 பேர் மீது இரணியல் போலீசார் வழக் குப்பதிவு செய்து உள்ளனர்.

    • விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமத்துடன், பூர்வாங்க பூஜைகள், முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு யாகசாலையை வலம் வந்து கோவில் விமானத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி மணிக்கூண்டு அருகே தருமபுரம் ஆதீனம் சட்டைநாதர் சாமி தேவஸ்தானத்துடன் இணைந்த சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து

    சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமத்துடன், பூர்வாங்க பூஜைகள், முதல் கால யாக சாலை பூஜைகள் தொடங்கியது.

    விழா அன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி மகா தீபாராதணை நடைபெற்றது.

    பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு யாகசாலையை வலம் வந்து கோவில் விமானத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதில் திருஞானசம்பந்தர் தம்பிரான் சுவாமிகள், தம்பிராயன் சுவாமிகள், சிவசுப்பிரமணியன் நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, மன்ற உறுப்பினர்கள் முபாரக், ராஜேஸ், ஜெயந்தி பாபு, டாக்டர்.முத்துகுமார், சுபம் வித்யா மந்திர் பள்ளி செயலர் கியான் சந்த், தாளாளர் சுதேஷ் ரோட்டரி நிர்வாகிகள் சுசீந்திரன், சாமி செழியன், சுடர்.கல்யாணசுந்தரம், முன்னாள் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம் மற்றும் திரளான பக்தர்கள் உடனிருந்தனர்.

    • சிவகாசி தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • இதே போல் துணை தலைவர்கள், துணைச்செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு ள்ளனர்.

    விருதுநகர்

    சிவகாசி மாநகரத்துக்கான தி.மு.க. பகுதி கழக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

    1-வது பகுதி அவைத்தலைவராக நாகேந்திரன், செயலாளராக செல்வம், பொருளாளராக சீனிவாச பெருமாள், 2-வது பகுதி அவைத்தலைவராக ராஜய்யா, செயலாளராக கருணாநிதி பாண்டியன், பொருளாளராக அண்ணாதுரை தேர்ந்தெடு க்கப்பட்டுள்ளனர்.

    3-வது பகுதி அவைத்தலைவர் சிவனேசன், செயலாளர் மாரீஸ்வரன், பொருளாளர் சின்னத்துரை, 4-வது பகுதி அவைத்தலைவராக மாரியப்பன், செயலாளராக அப்துல் முத்தலீப், பொருளாளராக சிவராம்குமார், 5-வது பகுதி அவைத்தலைவராக செல்வராஜ், செயலாளராக காளீராஜன், பொருளாளராக கார்த்திஸ்வரன், 6-வது பகுதி அவைத்தலைவராக கருப்பசாமி, செயலாளராக ஞானசேகரன், பொரு ளாளராக விஜ யகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதே போல் துணை தலைவர்கள், துணைச்செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட அறிவிப்பை தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ளது.

    • அனைவரும் பேரணியாக சென்று ஊரணிபுரம் கடைத்தெருவில் சங்க கொடியினை ஏற்றினார்.
    • மாவட்ட அளவில் செயல்பட தீர்மானிக்கப்பட்டு அதன் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்கத்தின் 2 வது வட்டார மாநாடு மற்றும் பேரணி ஊரணிபுரத்தில் நடைபெற்றது.

    வட்டார விவசாய நல சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ், தலைமை தாங்கினார். மேலும் சங்க செயலாளர் வி.கே.சின்னத்துரை வரவேற்று ஸ்தாபனம் வேலை அறிக்கையினை முன்மொழிந்து பேசினார். பொருளாளர் துரைராஜ், நிர்வாகிகள் வ.பெ.தங்கராசு, அன்பழகன், பெரியசாமி, சி.துரைராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் திருச்சி (பொ.ப.து) நீர்வளத்துறையின் செயற்பொறியாளர் முருகேசன், மாநாட்டு பேரணியை துவக்கி வைத்து பேரணியாக சென்று ஊரணிபுரம் கடைத்தெருவில் சங்க கொடியினை ஏற்றினார். தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர், ஜெஷ்டின், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் இளங்கண்ணன், வழக்க றிஞர் அ.ராமகிரு ஷ்ணன், அகில இந்திய எல்.ஐ.சி.முகவர் சங்க பட்டுக்கோட்டை கிளை செயலாளர் பஞ்சாட்சரம், மற்றும் நிர்வாகி தர்மராஜ், மாவட்ட கவுன்சிலர் திருஞானசம்பந்தம், பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பாரதி, அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர். ஆர், கண்ணையன், டெல்டா இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் முத்துராசு, மற்றும் அதன் நிர்வாகிகள் சரவணன், முத்து, முருகேசன்.

    தஞ்சை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் போராட்டக்குழு தலைவர் செங்குட்டுவன், திருவோணம் வட்டார வாடகை பாத்திர சங்கத்தின் தலைவர் செல்வம், சிபிஐ மாவட்ட க்குழு உறுப்பினர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் கருப்பையா, விவசாயிகள் சங்க தலைவர் சவுந்தர்ராஜன், தங்கராஜ், சாமி.மனோகரன், சீனிவா சன், கே.ஆர்.முருகே சன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.

    மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருவோணம் வட்டார அளவில் செயல்பட்டு வந்த இச்சங்கத்தினை தஞ்சை மாவட்ட அளவில் செயல்பட தீர்மானிக்கப்பட்டு அதன் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக வி.கே.சின்ன துரை நன்றி கூறினார்.

    • அ.தி.மு.கவின் நீடாமங்கலம் ஒன்றியம், மன்னார்குடி நகர கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் அ.தி.மு.கவின் நீடாமங்கலம் ஒன்றியம், மன்னார்குடி நகர கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும் அமைப்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.

    கூட்டத்தில்அமைப்பு செயலாளர்சிவாராஜ மாணிக்கம், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செ ல்வன்,நீடாம ங்கலம் ஒன்றிய செயலா ளர்கள் ஜவகர் மற்றும் ராஜே ந்திரன், மன்னார்குடி நகர செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்க ப்பட்டது. பொதுமக்களின் தேவைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிமுக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என இரா.காமராஜ் எம்.எல்.ஏ கேட்டுக் கொண்டார்.

    கூட்டத்தில் நீடாமங்கலம் ஒன்றியம் மற்றும் மன்னார்குடி நகர கழகங்களின் நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்த கூட்டத்தில் பொருளாளர் ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ., எம்.பி.கள் விஜய்வசந்த், ஜோதிமணி, செல்லகுமார், ஜெயக்குமார், மாணிக் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி, அசன், கணேஷ், மாவட்டத் தலைவர்கள் நவீன்குமார், கே.டி.உதயம், பினுலால் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • சுசீந்திரத்திலிருந்து பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி நாகர்கோவில் தக்கலை குழித்துறை வழியாக களியக்காவிளை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அவர் செல்லும் பாதைகளில் நிர்வாகிகள் வரவேற்பு அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

    நாகர்கோவில், ஆக.12-

    ராகுல் காந்தி இந்தியா முழுவதும் பாத யாத்திரை செல்கிறார்.

    பாதயாத்திரையை கன்னியாகுமரி மாவட்டத் தில் இருந்து தொடங்குவதற்கு அவர் திட்டமிட்டு உள்ளார். அடுத்த மாதம் 7-ந் தேதி சுசீந்திரத்தில் இருந்து பாதயாத்திரை புறப்படுகிறார். சுசீந்திரத்தில் இருந்து களியக்காவிளைக்கு சுமார் 65 கிலோ மீட்டர் தூரம் எனவே 3 நாட்கள் பாதயாத்திரை செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    களியக்காவிளையில் இருந்து கேரள மாநிலத்திற்கு பாத யாத்திரை செல்கிறார்.பின்னர் அவரது தொகுதி யான வயநாட்டிலும் பாத யாத்திரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. 16 மாநிலங்களில் 3500 கிலோமீட்டர் தூரம் ராகுல் காந்தி பாதயாத்திரை செல் லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    ராகுல் காந்தி பாத யாத்திரை முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவிலில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத் தில் அகில இந்திய பொதுச் செயலாளர் வேணு கோபால், மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங்,அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ஆகியோர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பொருளாளர் ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ., எம்.பி.கள் விஜய்வசந்த், ஜோதிமணி, செல்லகுமார், ஜெயக்குமார், மாணிக் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி, அசன், கணேஷ், மாவட்டத் தலைவர்கள் நவீன்குமார், கே.டி.உதயம், பினுலால் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாத யாத்திரையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர். சுசீந்திரத்திலிருந்து பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி நாகர்கோவில் தக்கலை குழித்துறை வழியாக களியக்காவிளை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அவர் செல்லும் பாதைகளில் நிர்வாகிகள் வரவேற்பு அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்

    • குமாரபாளையம் விழாவில் தி.மு.க. நிர்வாகிகள் திடீர் மோதலில் ஈடுப்பட்டனர்.
    • அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

    குமாரபாளையம்:

    கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022 -2023-ன்படி குமார பாளையம் சின்னப்ப நாயக்கன்பாளையம் வாரச்சந்தை வளாகத்தில் ரூ.1.92 கோடி மதிப்பில் நூலகம், அறிவுசார் மையம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அந்த இடத்தில் தி.மு.க. நகர செயலாளர் செல்வம் மற்றும் அவ ரது ஆதரவாளர்கள் வந்தி ருந்தனர்.

    அப்போது அங்கு வந்த விஜய்கண்ணன், இது நகராட்சி சார்பில் நடத்தப்படும் பூமி பூஜை, இதில் அரசியல் கட்சியினர் பங்கேற்க அனுமதி இல்லை, கவுன்சிலர்கள் மட்டும் பங்கேற்கலாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

    இதனால் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இது பற்றி நகர செயலாளர் செல்வம் கூறியதாவது:-

    இது தமிழக அரசு ஒதுக்கிய நிதி, அதுவுமின்றி பொது நிகழ்ச்சி. நாங்கள் பங்கேற்போம்.

    அமைச்சர் நேரு 2 நாட்க ளுக்கு முன்பு வந்த போது, காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க சிறப்பாக பணி யாற்றியதற்காக, சால்வை அணிவித்து பாராட்டினார்.

    மேலும் நகராட்சி சார்பில் நடக்கும் அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகளில் நகர செயலாளர் பங்கேற்க வேண்டும் எனவும் கூறி சென்றார். எனவே அரசு விழாக்களில் நாங்கள் பங்கேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    • கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டு உள்ளார்.
    • ராகுல்காந்தி நடை பயணம் மேற்கொள்ள உள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்கள் ஆய்வு செய்தனர்

    நாகர்கோவில் :

    2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அரசை வீழ்த்தும் வகையில் ராகுல் காந்தி 150 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டு உள்ளார். செப்டம்பர் 7-ம் தேதி நடை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்குகிறார். கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில், தக்கலை, களியக்காவிளை வழியாக கேரளாவிற்கு செல்லும் அவர் நாடு முழுவதும் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

    கன்னியாகுமரியில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை காங்கிரசார் மேற்கொண்டு வருகிறார் கள். இதையடுத்து இன்று காலை அகில இந்திய செயலாளர் ஸ்ரீவள்ள பிரசாத், தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ஜோதிமணி எம்.பி., செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ராகுல்காந்தி நடை பயணம் மேற்கொள்ள உள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்கள் ஆய்வு செய்தனர். அதற்காக என்னென்ன முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

    ×