search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224562"

    • பரமத்தி வேலூர் பகுதிகளில் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்தி வேலூர்:

    ஆனி மாத சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தேரடி வீதியில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் ஆலயத்தில் உள்ள வல்லப விநா யகருக்கு பால் தயிர் பன்னீர் இளநீர் சந்தனம் மஞ்சள் திருமஞ்சனம் பஞ்சாமிர்தம் தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி வேலூர் ஹேரம்ப பஞ்சமுக விநாயகர் கோவில், நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகர், திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர், மகாமாரியம்மன் கோவில் உள்ள விநா யகர், பொத்தனூர், பாண்ட மங்கலம், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், வடகரையா த்தூர், ஜேடர்பாளையம், மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் சாமி திருவீதி உலா நடந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள விட்டோபா சமேத பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேக விழா, ராஜ மன்னார்குடி மணவாள மாமுனிகள் பீடம் 4-வது பட்டம், செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

    இதனையொட்டி பாண்டுரங்கர், விடோபா தாயார், மகாலட்சுமி தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க, கருட வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர் பகுதிகளில் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனையும் நடந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை ஹேரம்ப பஞ்சமுக விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பஞ்சமுக விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து பஞ்சமுக விநாயகர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பஞ்சமுக விநாயகரை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகர், திருவேலீஸ்வரர் கோவிலிலுள்ள விநாயகர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ராமர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    நவமி தினத்தையொட்டி குமாரபாளையம் ராமர் கோவிலில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. பக்தர்களால் ராமபிரானின் பக்தி பஜனை பாடல்கள் பாடப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

    ×