search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடுகள்"

    • சாலையில் கால்நடைகளை சுற்றவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
    • இருசக்கர வாகன ஓட்டிகள் மாட்டின் மீது மோதி படுகாயம் அடையும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    சாலையில் சுற்றும் மாடுகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக சாலையில் கால்நடைகளை சுற்றவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பொன்னேரி, மீஞ்சூர், நாலூர், பட்டமந்திரி, காட்டூர், உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் மாடுகள் ஹாயாக கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன.

    இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மாடுகள் சாலையின் ஓரத்தில் படுத்துக் கொள்வதால் கனரக வாகனங்களில் மாடுகள் அடிபட்டு இறக்கும் சம்பவமும், இருசக்கர வாகன ஓட்டிகள் மாட்டின் மீது மோதி படுகாயம் அடையும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    எனவே பொன்னேரி, மீஞ்சூர் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கவும், அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கடந்த ஆண்டு, திருவல்லிக்கேணி பகுதியில் முதியவர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார்.
    • சாலையில் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளருக்கு அபராதம் விதித்தாலும் அவர்கள் மாடுகளை பராமரிப்பது இல்லை.

    சென்னை:

    திருவொற்றியூரை சேர்ந்த மதுமதி என்பவர் சில தினங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற போது எருமை மாடு அவரை முட்டி சுமார் 50 அடி தூரத்திற்கு இழுத்து சென்றது. அவரை காப்பாற்ற வந்தவரையும் மாடு முட்டி தள்ளியது. இந்த சம்பவத்தில், இருவருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    கடந்த ஆண்டு, திருவல்லிக்கேணி பகுதியில் முதியவர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். அரும்பாக்கத்தில் பள்ளி முடிந்து தாயுடன் வீட்டிற்கு வந்த சிறுமியையும் மாடு முட்டியது.

    ஆவடியில் வீட்டு வாசலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிய பெண்ணை மாடு முட்டியது. திருவல்லிக்கேணி டி.பி.தெருவில் கஸ்தூரி ரங்கன் என்பவரும் மாடு முட்டி காயமடைந்தார். குன்றத்தூர் அருகே நேற்று சாலையின் குறுக்கே மாடு வந்ததால் மோட்டார் சைக்கிள் மோதி கீழே விழுந்த பூந்தமல்லியை சேர்ந்த மோகன் என்பவர் உயிரிழந்தார்.

    மாடு முட்டி பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகம் நடந்து வருகின்றன. மாடுகளை பிடித்து அபராதம் விதித்தாலும், அதன் உரிமையாளர்கள் மீண்டும் வழக்கம் போல் மாடுகளை சாலையில் திரியவிடுகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னையில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் மாடுகள் திரிவதற்கும், வளர்க்கவும் தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளது.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சியில் மாடுகளை வளர்க்க, 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பின்னர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, அதற்கு தடை பெறப்பட்டு உள்ளது. தற்போது, மாடுகளால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் மாடுகளை வளர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சாலையில் திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளருக்கு அபராதம் விதித்தாலும் அவர்கள் மாடுகளை பராமரிப்பது இல்லை. எனவே, மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மாடுகளை வளர்க்கவோ, சாலையில் விடவோ தடை விதிக்க, அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

    அதன்படி சந்தை பகுதிகள், கோவில்கள், பள்ளிகள், கல்லூரி வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் திரிவதற்கு தடை விதிக்கப்படும். அதையும் மீறி திரியும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாடுகள் வளர்ப்போர் தங்களுக்கு சொந்தமான இடங்களில் கட்டாயம் குறிப்பிட்ட அளவு காலியிடம் வைத்திருப்பது அவசியம். அவ்வாறு இடம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே மாடுகள் வளர்க்க அனுமதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • விதிகளை மீறி, விலங்குகள் கொண்டு செல்லப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • இந்த வழக்கு தொடர்பாக இந்திய நலவாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் யாரும் ஆஜராகவில்லை.

    வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்திருந்தார்

    அந்த மனுவில், உரிய சான்றிதழ்கள் இல்லாமல், அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளை மீறி, விலங்குகள் கொண்டு செல்லப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஜி.பி. தரப்பில் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, தனி நபர்கள் அளிக்கும் புகார்கள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    சந்தேகத்துக்கு இடமான வகையில் மாடுகள் கொண்டு செல்லப்படுவதை கண்டறிந்தால், சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக இந்திய நலவாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் யாரும் ஆஜராகவில்லை.

    ஆதலால் இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக ஜூன் 27ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

    அந்த நாளில் இந்திய விலங்குகள் நல வாரியம் தரப்பில் எவரும் ஆஜராகாவிட்டால், விலங்குகள் நல வாரிய செயலாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாடுகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பொதுமக்கள் பூங்கா முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது என பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

    இதனை தடுக்கும் விதமாக மாநகர பகுதியில் சுற்றித்தெரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் உத்தரவிட்டார். அதன் பேரில் 4 மண்டலங்களிலும் மாடுகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட சிந்து பூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவில் சுற்றி திரிந்த மாடுகளை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையிலான குழுவினர் பிடித்து மேகலிங்கபுரம் ரேஷன் கடை எதிரே அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் அடைத்தனர்.

    இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பூங்கா முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்காமல் வீடுகளில் நின்ற மாடுகளை பிடித்து வந்து அடைத்து உள்ளதாகவும், உடனடியாக அனைத்து மாடுகளையும் விடுவிக்கும்படியும் கூறினர்.

    அப்போது சுகாதார ஆய்வாளர் முருகன் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை மட்டுமே பிடித்துள்ளோம். உரிய அபராதமாக ஆயிரம் ரூபாய் செலுத்திவிட்டு மாடுகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறும், இனிமேல் சாலைகளில் மாடுகளை சுற்றி திரிய விடமாட்டோம் என எழுதி தரும்படியும் அறிவுறுத்தினார்.

    எனினும் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • மதுரை சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் விபத்து நடக்கும் அபாயம் ஏற்படுகிறது.
    • உயிர்பலி ஏற்படும் முன் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

    மதுரை

    தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகளின் ஆக்கிரமிப்பால் அடிக்கடி உயிர் இழப்புகள் ஏற்படுவதாக நாள்தோறும் செய்திகள் வெளி யாகி வருகிறது. சென்னையில் மட்டும் கடந்த மாதம் மாடுகள் முட்டியதில் பெண்கள் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். நாகப்பட்டினத்தில் நேற்று சாலையில் சுற்றிதிரிந்த மாடு முட்டியதில் கீழே விழுந்த ஒருவர் அரசு பஸ்சின் டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    2-வது பெரிய மாநகராட்சி யாக உள்ள மதுரையில் சாலை கள் படுமோசமாக உள்ளது. தற்போது மழை காரணமாக இருப்பதால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் சாலைகள் காணப்படுகிறது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்து வருகின்றனர்.

    இதுபோதாதென்று சாலைகளில் கால்நடைகளின் ஆக்கிரமிப்பும்நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மதுரை நகரில் மாடுகள் வளர்ப்போர் தங்களது இஷ்டத்துக்கு மாடுகளை முக்கிய சாலைகள், தெருக்களில் அவிழ்த்து விடு கின்றனர்.

    அவைகள் சர்வ சாதாரணமாக சாலைகளில் அமர்ந்தும், குறுக்கே இடைமறித்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் செல்லமுடியாமல் அவதி அடைகின்றனர்.

    பெரியார் பஸ் நிலையம், 4 மாசி வீதிகள், 4 வெளிவீதிகள், காமராஜர் சாலை, வில்லா புரம்-அவனியாபுரம் ரோடு, திருப்ப ரங்குன்றம், கைத்தறி நகர், காளவாசல், பை-பாஸ் ரோடு களில் மாடுகள் அணிவகுத்து செல்வதை அடிக்கடி பார்க்க முடியும்.

    குப்பை தொட்டிகளை தேடி செல்லும் மாடுகள் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும் நடுரோட்டி லேயே மாடுகள் சண்டையிடு வதும், சில நேரங்களில் மிரள் கின்றன.இதனால் வாகனங்கள் மீது மாடுகள் மோதி விபத்தை ஏற்படுத்துகின்றன. மதுரைமாவட்ட நீதிமன்றத்தில் இருந்து மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலை யில் ஆயிரக்கணக்கான வாக னங்கள் சென்று வருகின்றன. வாகன நெரிசல் மிகுந்த இந்த சாலையில் மாடுகள் முகாமிடு கின்றன. பல மணிநேரம் சாலை யில் அசைபோட்டவாறு நிற்கின்றன. இதனால் வாகன ஒட்டிகள் தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக பூமார்க்கெட், சிக்னல் பகுதிகளில் மாடுகளின் தொல்லையால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. வேகமாக வரும் வாகனங்கள் மாடுகளின் இடையூறால் நிலைகுலைந்து தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சென்னையில் மாடுகளை சாலைகளில் அவிழ்த்து விடுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால் மதுரை மாநகராட்சியில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கா மல் மெத்தனம் காட்டி வரு கின்றனர். சாலைகள் மற்றும் பொது இடங்களில் மாடுகளில் பால் கறந்து விற்பனை செய்யும் உரிமையாளர்கள் அதனை கொட்டகையில் அடைக்காமல் ரோட்டில் விடுகின்றனர். அவைகள் சிறிய தெருக்கள் முதல் முக்கிய சாலை வரை ஆக்கிரமித்து பொதுமக்க ளுக்கு தொல்லை ஏற்படுத்தி வருகிறது. எனவே மதுரை நகரில் மாடுகள் வளர்ப்போரை கணக்கெடுத்து அவர்கள் மாடுகளை ரோட்டில் விடுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனையும் மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகளை வெளியே விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, மாடுகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றனர்.

    பை-பாஸ் ரோட்டில் மாட்டு கொட்டகைகள்

    மதுரை பை-பாஸ் ரோடு பொன்மேனி சர்வீஸ் சாலைகளை மாடு வளர்ப்போர் சிலர் கொட்டகையாக பயன்படுத்தி மாடுகளுக்கு தீணிகள் மற்றும் தண்ணீர் வைத்து அங்கேயே பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் மழை காலங்களில் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி சாலைகளில் மாடுகளை வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காங்கயம், லம்பாடி காளைகள் அதிகளவில் பங்கேற்பு
    • வெற்றி பெற்ற காளையின் உரிமையாளருக்கு தங்கக்காசு, கோப்பை பரிசு

    பொள்ளாச்சி,

    நாட்டு மாடுகள் குறித்து விவசாயிகளிடமும், கால்நடை வளர்ப்பவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆனைமலை அருகே நடைபெற்ற ரேக்ளா போட்டியில் தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து 400-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன.

    பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே உள்ள அங்கல குறிச்சி கிராமத்தில் விவசாய நண்பர்கள் சார்பில் 3-ம் ஆண்டு ரேக்ளா பந்தயம் நடை பெற்றது. இதில் கோவை மாவட்டத்தின் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், நெகமம், கிணத்துக்கிடவு, திருப்பூர் மாவட்டம், உடுமலை, தாராபுரம், செஞ்சேரி மலை, பல்லடம், திண்டுக்கல் மாவட்டத்தின் பழநி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தின் கொழிஞ்சாம்பாறை, சித்தூர், பகுதிகளில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகளில் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    200 மீ, 300 மீ என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. காங்கயம் இன காளைகள் மற்றும் லம்பாடி காளைகள் அதிகளவில் பங்கேற்றன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கக் காசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

    போட்டியில் இலக்கு நோக்கி சீறிப் பாய்ந்த காளைகளை, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

    • போக்குவரத்திற்கு இடையூராக சாலைகளில் சுற்றிதிரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டது.
    • மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்,

    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையா் மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி, தெற்கு வீதி, பழைய பஸ் நிலையம், திலகா் திடல் உள்ளிட்ட பகுதிகளில் 5 மாடுகளையும், மகா்நோன்புசாவடி பழைய ராமேஸ்வரம் சாலையில் தலா ஒரு மாடு, கன்றையும், யாகப்பா நகரில் 2 மாடுகளையும், சிவகங்கை பூங்கா, மேல அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 5 மாடுகளையும்,

    மருத்துவக் கல்லூரி சாலையில் 4 மாடுகளையும், புதிய வீட்டு வசதி வாரிய பகுதியில் தலா ஒரு மாடு, கன்றையும் என மொத்தம் 18 மாடுகளையும், 2 கன்றுகளையும் மாநகா் நல அலுவலா் சுபாஷ்காந்தி தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் பிடித்து, காப்பகத்துக்கு கொண்டு சென்று, அவற்றின் உரிமையா ளா்களுக்கு அபராதம் விதித்தனா்.

    மாநகரில் இதுவரை 71 மாடுகளையும், 44 கன்றுகளையும் பிடித்து அபராதம் விதித்துள்ள தாகவும், சாலைகளில் இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள் பிடிக்கும் பணி தொடா்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் எனவும் மாநகா் நல அலுவலா் தெரிவித்தாா்.

    • ருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் கால்நடை வளர்ப்பில் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
    • விவசாயிகள் கூறுகையில், சோளம் சாகுபடி பரப்பு குறைந்ததால் மாடுகளுக்கான தீவனப்பற்றாக்குறை ஏற்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் கால்நடை வளர்ப்பில் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இச்சமயத்தில் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் சோளம் விதைப்பில் ஈடுபடுவர்.அதற்கேற்றாற் போல் பருவமழையும் பெய்யும். ஆனால் இம்முறை பருவமழை பொய்த்ததால், சோளம் சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. மாவட்டத்தில் கணிசமான அளவில் சோளம் சாகுபடி குறைந்திருக்கிறது என கூறப்படுகிறது.

    விவசாயிகள் கூறுகையில், சோளம் சாகுபடி பரப்பு குறைந்ததால் மாடுகளுக்கான தீவனப்பற்றாக்குறை ஏற்படும். இதற்கு பயந்து பலரும் தங்களிடம் உள்ள கறவை மாடுகளை விற்க துவங்கியுள்ளனர்.இதுபோன்ற வறட்சி சமயங்களில், விவசாய நிலங்களில் மேற்கொள்ள வேண்டி பயிர் சாகுபடி முறை, நீர் மேலாண்மை, பண்ணைக்குட்டை அமைப்பது போன்ற விஷயங்கள் தொடர்பான பயிற்சி, விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர்.

    • 14 மாடுகள் பிடித்து அடைக்கப்பட்டு வைக்கோல் ஆகியவை இடப்படுகிறது.
    • மாடுகளின் உரிமையாளர் மீது காவல்துறையில் வழக்குபதிவு செய்திட அறிவுறுத்தப்படும்.

    சீர்காழி:

    சீர்காழியில் பிரதான சாலைகள் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் மாடுகள் சுற்றி திரிந்து வருகிறது.

    இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுதோடு சில நேரங்களில் மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் விபத்துக்களும் ஏற்பட்டது.

    சாலையில் சுற்றிதிரியும் மாடுகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் உத்தரவின்படி நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

    இதுவரை சுமார் 14 மாடுகள் பிடிக்கப்பட்டு நகராட்சி குடிநீர் மேல்நிலைநீர் தேக்கதொட்டி அமைந்துள்ள வளாகத்தில் அடைக்கப்பட்டு வைக்கோல் ஆகியவை இடப்படுகிறது.

    மாடுகளை மீட்கவரும் கால்நடை உரிமையாளர்களுக்கு ரூ .2ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்படும் எனவும் அடுத்தமுறை மீண்டும் மாடுகளை சாலையில் விடும் உரிமையாளர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்திட அறிவுறு த்தப்படும் என நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் தெரிவித்தார்.

    • ஆயிரம் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்கி கொடுக்க வேண்டும்.
    • இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை உணவை முதன்மைப்படுத்த வேண்டும்.

    மன்னார்குடி:

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் ஜெயகணபதி தலைமையில் மன்னார்குடியில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் பிரேம்குமார் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து திட்ட செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இதில் இளம் தொழில் வல்லுனர் சிவலிங்கம், மன்னார்குடி ஹெச்.டி.எப்.சி. வங்கியின் கிளை மேலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆடு வளர்ப்பு உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் லட்சுமி வரவு செலவு தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்தார். கூட்டமைப்பின் துணை தலைவர் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.

    திட்டத்தின் நோக்கம் குறித்து கூத்தாநல்லூர் நிர்வாக இயக்குனர் முருகையன், முதன்மை செயல் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.

    நிகழ்ச்சியில் இயக்குனர் இடையூர் மாலா, விளக்குடி உஷா, கமலாபுரம் ஆரோக்யராஜ், சாந்தா, நீடாமங்கலம் சங்கீதா உள்பட 600-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆடு வளர்ப்பு உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் அலுவலர் அஸ்வின் அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் திருவாரூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் அலுவலர் அறிவழகன் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் தொழில் முனைவோரை உருவா க்குவது, பாரதி மூலங்குடி, தில்லைவிளாகம், ஆலங்குடி ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்குவது, ஆயிரம் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்கி கொடுப்பது, இயற்கை விவசா யம் மற்றும் இயற்கை உணவை முதன்மைப்படுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பொது இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ஏலம் விடப்படும் என அதிகாரி எச்சரித்துள்ளார்.
    • தொண்டி முதல் நிலை பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் திரியும் கால் நடைகளால் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

    காய்கனி, உணவுப் பொருட்களை வாங்கி வாகனங்களில் வைத்து விட்டு அடுத்த கடைக்கு செல்வதற்குள் மாடுகள் அத்துமீறி வாகனத்தில் வைத்துள்ள பொட்ட லங்களை கடித்து சாலையில் வீசி மேய்ந்து விடுகிறது.மேலும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நீண்ட தூரம் செல்லும் பயணம் செய்யும் பயணிகள் பேருந்து மற்றும் சுற்றுலா வாக னங்களும் சாலையின் குறுக்கே செல்லும் கால்ந டைகளால் விபத்தில் சிக்குகிறது. மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் மாட்டு உரிமை யாளர்கள் பொது சாலையில் போக்கு வரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக திரியும் தங்களது கால்நடை களை அக்டோபர் மாதம் 8-ந் தேதிக்குள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் 9-ந் தேதி முதல் சாலையில் திரியும் கால்நடைகளை பிடித்து அடைக்கப்பட்டு, மீட்க வரும் கால்நடை உரிமை யாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    மேலும் 3 தினங்களுக்குள் மீட்கப்படாத கால்நடை களை பொது ஏலம் விடப்படும் என தொண்டி முதல் நிலை பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
    • நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் பலர் திரளாக கலந்துகொண்டனர்

    காங்கயம்,

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகள் மட்டுமே விற்பதும், வாங்குவதும் நடைபெறும்.

    இதன்படி சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள் வளர்ப்போர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.

    இதனை தொடர்ந்து மாட்டு சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த காங்கயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

    சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் உள்ள 68 காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகளில் மொத்தம் 36 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் நேரடியாக விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.சந்தையில் அதிகபட்சமாக 9 மாத சினையுடன், 2 பல் கொண்ட காங்கயம் இன மயிலை பசுமாடு ரூ.71 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

    மொத்தம் ரூ.14 லட்சத்திற்கு காங்கயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    ×