என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடுகள்"

    • போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான மாடுகள் திரிகின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ஏராளமான மாடுகள் திரிகின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி பலர் விவசாயப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆடு, மாடுகள் வயல் வெளிகளில் மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் கிழக்கு கடற்கரை சாலையிலேயே இரவு, பகலாக திரிகின்றன. பெரும்பாலும் மாடுகளே அதிகளவில் கிழக்கு கடற்கரை சாலையை ஆக்கிரமித்துக்கொள்கிறது.

    நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளும், குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் இந்த மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகிறார்கள். இது குறித்து தொண்டி முதல் நிலை பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மாடுகளின் உரிமையாளர்கள் நாளை (10-ந் தேதி)-க்குள் தங்களது மாடுகளை பிடித்து கட்ட வேண்டும். தவறினால் 11-ந் தேதி முதல் சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    • மாடுகள் மேய்ந்ததில் 75 ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகின.
    • கடந்த ஆண்டும் இதேபோன்று மாடுகளால் விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காவல்துறைக்கு புகார் செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா பனிக்கனேந்தல் 3 கண்மாய் பாசனத்தில் உள்ள 75 ஏக்கர் விவசாயத்தில் 50 மாடுகள் மேய்ந்து நாசமானது. இது தொடர்பாக கிராம மக்களும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொறுப்பாளர்களும் வட்டாட்சியர் சாந்தியிடம் புகார் செய்தனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மானாமதுரை ஒன்றிய செயலாளர் ஆண்டி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி மற்றும் விவசாயிகள் இரவு நேரங்களில் மாடுகள் விவசாய நிலங்களில் புகுந்து நெற்பயிர்களை அழித்ததை விவசாயிகள் சுட்டிக் காண்பித்தனர்.

    இந்த கிராமத்தில் 3 கண்மாய்கள் உள்ளது. 3 கண்மாய்கள் மூலம் மொத்தம் 100 ஏக்கர் பாசன பாசனம் பெறுகிறது. வைகை கரையோரம் இருந்தாலும் வைகை தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

    கண்மாயை நம்பித்தான் விவசாயம் நடைபெற்று வருகிறது. கண்மாயில் மழை தண்ணீர் நிரம்பி விவசாயம் நடைபெறுகிறது. இங்கு நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. 3 மாத காலம் நெல் விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் விவசாயிகளிடம் உள்ளது.

    பூச்சிகளில் இருந்து பாதுகாப்பு செய்ய வேண்டி உள்ளது. பன்றிகளால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டி உள்ளது. அதுபோக கடந்த 3 ஆண்டு காலமாக மானாமதுரை நகர் அழகர் கோவில் தெருவில் உள்ள சுமார் 75 மாடுகளால் விவசாயம் அழிக்கப்பட்டு வருகிறது.

    மாடுகள் வளர்ப்போர் மாலையில் அவிழ்த்து விடுகிறார்கள். இந்த மாடுகள் வைகை கரை ஓரம் செல்கிற பாதையில் நல்ல நிலையில் இருக்கும் நெற்பயிர்களை மேய்ந்து அழித்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் மானாமதுரை வட்டாட்சியர் சாந்தியிடம் புகார் தெரிவித்தனர் . கடந்த ஆண்டும் இதேபோன்று மாடுகளால் விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காவல்துறைக்கு புகார் செய்தனர். அதன் பின்பு ஓரளவுக்கு மாட்டின் உரிமையாளர்கள் கட்டுப்பட்டு இருந்தனர். தற்போது மீண்டும் மாடுகள் அவிழ்த்து விடப்படுகிறது.

    அந்த மாடுகள் கடந்த 4 நாட்களாக நெற்பயிர்களை அழித்து 75 ஏக்கர் விவசாயத்தை மேய்ந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.தற்போது விவசாயிகள் மும்முரமாக பாசன பணிகளில் இரவு, பகல் பாராமல்பணி செய்து வருகின்றனர்.

    ஆனால் கால்நடைகளில் இருந்து விவசாயத்தை காப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மானாமதுரை ஒன்றிய செயலாளர் ஆண்டி மற்றும் விவசாயிகள் வட்டாட்சியரிடம் கேட்டுக் கொண்டனர்.

    • மாடுகளுக்கு ஏற்படும் இலம்பி தோல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி.
    • நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம், பேங்க் ஆப் பரோடா, மன்னார்குடி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டையில் வருகிற 29-ந் தேதி கால்நடை மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் கால்நடை மருத்துவ முகாம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மன்னார்குடி கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது.

    இதில் திருவாரூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் (பொ) டாக்டர் ராமலிங்கம், ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன், பேங்க் ஆப் பரோடா மேலாளர் சிவின்டு சட்டர்ஜி , பேங்க் ஆப் பரோடா விவசாய அதிகாரி மோனிகா, பேங்க் ஆப் பரோடா ராஜ்குமார், மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் டி.ரெங்கையன், செயலாளர் வி. கோபாலகிருஷ்ணன், உள்ளிக்கோட்டை கால்நடை மருத்துவர் கார்த்திக், ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குனர் டாக்டர் டி.தமிழ்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

    இந்த கால்நடை மருத்துவ முகாமில் மாடுகளுக்கு ஏற்படும் இலம்பி தோல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? மாடு, ஆடுகளைத் தாக்கும் அம்மை நோய் பரவாமல் தடுப்பது எப்படி? கோழிகளுக்கு நோய் வராமல் தடுப்பது எப்படி ? என்பது உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல்களில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பது குறித்து விளக்கம் அளிக்கப்ப டுகிறது.

    மேலும் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தடுப்பூசி செலுத்த ப்படுகிறது. இந்த முகாமில் சிறந்த கால்நடைகன்றுகளை பராமரிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்ப டுகின்றன.

    • 56 மாடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாயின.
    • ரூ.76 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    காங்கயம் : 

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், பசு மாடுகள், இளங்கன்றுகள் என 117 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 56 மாடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாயின.இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.76 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    • சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்.
    • ரூ.1600 கோடியில் புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வேதாரண்யம் நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்.

    கடைவீதிகளிலில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து மயிலாடுதுறை கோசாலை பகுதிக்கு கொண்டுவிட்டு, அதன் செலவையும் வசூலித்து அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இதற்கு பதிலளித்து நகர மன்ற தலைவர் பேசுகையில்:-

    வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தற்போது தமிழக அரசால் தலைஞாயிறு பகுதிக்கு ரூ.1600 கோடியில் புதிதாக கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

    இதில் வேதாரண்யம் நகராட்சியையும் இணைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் வரும் 2 ஆண்டுகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்படும்.

    மேலும் தற்போது உள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டமும் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மாடுகள் 2-வது முறையாக பூட்டை உடைத்து விடுவிக்கப்பட்டன.
    • நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போக்குவரத்து நிறைந்த ரோடுகளில் மாடுகள் திரிவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். கால்நடைகள் வளர்ப்பதை முறைப்படுத்த முன்வராத அதிகாரிகளால் இப்பிரச்சினைகள் தொடர்கிறது.

    தடையற்ற போக்கு வரத்திற்காக உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் விதிகள் ஏற்படுத்தப்ப ட்டுள்ளன. அதன்படி ரோட்டில் கால்நடைகள் திரியவிடாமல் அதற்கான பட்டிகள் மற்றும் கொட்டகை களில் அடைத்து வைத்து பராமரிக்க வேண்டும். கேட்பாரற்று திரியும் மாடுகள் மெயின் ரோட்டின் போக்குவரத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

    பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப நிலத்தின் மதிப்பு கூடியதால் கால் நடைகளுக்கு என்று ஒதுக்க ப்பட்டிருந்த இடங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறி விட்டன. அரசு சார்பில் இலவச கறவை மாடுகள், ஆடுகள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலானவர்கள் இவற்றை இடப்பற்றாக்குறை மற்றும் தீவன செலவுகளை கணக்கிட்டு வெளியே மேய விடுகின்றனர்.

    பால் கறக்கும் நேரத்தில் மட்டும் பிடித்து வருகின்றனர்.அதன்பின் ரோட்டில் விட்டு விடுகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை, மாலை, இரவில் ரோட்டில் நடமாடும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

    மாடுகள் ரோட்டினை கடக்கும் போது வாகன ஓட்டிகள் அடிக்கும் 'ஹாரன்' சத்தத்தில் மிரண்டு ஓடுகின்றன. இதனால் டூ வீலர் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள்விபத்துக்குள்ளாகின்றனர்.

    ஒரு சில மாடுகள் அப்படியே நின்று போக்குவரத்திற்கு இடை யூறினை ஏற்படுத்துகிறது. தேசிய நெடுஞ்சாலையில் சில மாடுகள் நிரந்தர தங்கும் இடமாக மாற்றியுள்ளது. இவை திடீரென குறுக்கே கடந்து உயிர்பலியை ஏற்ப டுத்துவதுடன் அவற்றிற்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    இதுகுறித்து கீழக்கரை நகராட்சி 20-வது வார்டு கவுன்சிலர் சேக் உசேன் கூறியதாவது:-

    சட்டவிதிகளை பின்பற்றாமல் கால்நடைகளை ரோடுகளில் விடும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கீழக்கரை நகராட்சி தூய்மை பணியா ளர்கள் சாலையில் திரிந்த மாடுகளை பிடித்து அடைத்தனர். கேட்டின் பூட்டை உடை த்து அடைக்கப்பட்ட மாடுகளை 2 முறை விடுவித்துள்ளனர்.

    இது குறித்து நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதிப்பதால் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மீது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதன் சந்தையில் நேற்று காலை 5 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை மாட்டுச்சந்தை நடந்தது.
    • மொத்தம் ரூ. 2 கோடிக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த புதன் சந்தையில் நேற்று காலை 5 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை மாட்டுச்சந்தை நடந்தது.

    மாடுகளை வாங்கவும், விற்கவும் கேரளா, கர்நாடகா மாநிலம் மற்றும் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.

    இதில் இறைச்சி மாடு ரூ.15,000-க்கும், கன்று குட்டி ரூ. 8000-க்கும், பசு மாடு ரூ.20,000-க்கும், எருமை மாடு ரூ.25,000-க்கும் விற்பனை

    செய்யப்பட்டது. மொத்தம் ரூ. 2 கோடிக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரூ.66 ஆயிரத்துக்கு காங்கேயம் இன செவலை வகைப் பசு விற்பனையானது.
    • ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 60 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

    காங்கயம் : 

    திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூா்- பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 60 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

    இதில் 40 மாடுகள் மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு விற்பனையாயின.இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.66 ஆயிரத்துக்கு காங்கேயம் இன செவலை வகைப் பசு விற்பனையானது.

    • சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
    • நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி உட்பட்ட பகுதியில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து நகராட்சி அலுவலகத்தில் கட்டி வைத்தனர்.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள் தங்களது மாடுகளை சாலையில் சுற்றி திரியாமல் தங்களது வீடுகளில் கட்டி வளர்க்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி உட்பட்ட பகுதியில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து நகராட்சி அலுவலகத்தில் கட்டி வைத்தனர்.

    பிடிக்கப்பட்ட மாடுகளை 24 மணி நேரத்தில் மாட்டின் உரிமையாளர்கள் மீட்கவில்லை என்றால் பொது ஏலம் விடப்படும் என்று ஏற்கனவே நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பகுதியில் நேற்று காலை 5 மணிக்கு கூடிய மாட்டு சந்தை மாலை 3 மணி வரை நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.2 கோடிக்கு நேற்று ஒரே நாளில் வர்த்தகம் நடந்ததாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பகுதியில் நேற்று காலை 5 மணிக்கு கூடிய மாட்டு சந்தை மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதில் இறைச்சி மாடுகள், வளர்ப்பு மாடுகளை வியாபாரிகள், விவசாயிகள் விற்பனை கொண்டு வந்தனர்.

    கேரளா, கர்நாடக மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் மாடுகளை வாங்க வந்திருந்தனர். இவர்கள் மாடுகளை வாங்கி கேரள மாநிலத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றனர். மேலும் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடுகளை வாங்க, விற்க வியாபாரிகள், விவசாயிகள் வந்திருந்தனர்.

    இறைச்சி மாடுகள் ரூ.19 ஆயிரம், எருமை மாடுகள் ரூ.25 ஆயிரம், கன்று குட்டிகள் ரூ.10 ஆயிரம் என விலை போனது. கறவை மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், வளர்ப்பு கன்று குட்டிகள் ரூ.11 ஆயிரம் முதல் விற்பனையானது. மொத்தம் ரூ.2 கோடிக்கு நேற்று ஒரே நாளில் வர்த்தகம் நடந்ததாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து சாலைகளிலும் மாடுகள் சுற்றித்திரிவது தொடர் கதையாக உள்ளது.
    • கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் நடுவில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பலமுறை எச்சரிக்கை விடுத்தும் இதனை சிறிதளவும் கண்டுகொள்ளாமல் மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள் நடந்து கொள்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து சாலைகளிலும் மாடுகள் சுற்றித்திரிவது தொடர் கதையாக உள்ளது.

    உள்ளாட்சி நிர்வாகங்கள் ஏதோ கலெக்டர் உத்தரவு போட்ட காரணத்தால் ஒரு சில இடங்களில் மட்டும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை உள்ளாட்சி அமைப்புகள் பிடித்து அபராதம் விதித்து வருகிறது. ஆனால் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதும் கிடையாது. இதனால் தொடர்ந்து மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள் அலட்சிய போக்கு காட்டி வருவதாலும் உள்ளாட்சி அமைப்புகள் அதனை கண்டும் காணாமல் இருப்பதால் மாடுகளை வளர்க்கும் நபர்கள் தங்களது மாடுகளை வீட்டில் கட்டி வைத்து வளர்ப்பது இல்லை என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் நடுவில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. அங்கேயே படுத்து கொள்கிறது. அதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் உத்தரவுகளை உள்ளாட்சி அமைப்புகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஒரு ஆண்டில் ரூ5.45 லட்சம் மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது.
    • சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறாக உள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொது மக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறாக உள்ளது. இதனால் அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

    மாநகராட்சியின் மூலமாக அவ்வப்போது மாடுகளின் உரிமையாளர்களுக்கு மாடுகளை சாலைகளில் விடுவதை தவிர்க்க முறையாக எச்சரிக்கை செய்யப்பட்டும் வருகிறது. மேலும் மதுரை மாநகராட்சி மற்றும் புளுகிராஸ் அமைப்பின் மூலமாக தகுதி வாய்ந்த மாடிபிடி வீரர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு சாலைகளில் மாடுகளை விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை சுமார் 364 மாடுகள் பிடிக்கப்பட்டு மொத்தம் ரூ.5 லட்சத்து 45 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் வளர்ப்பவர்கள் தங்களு டைய சொந்த இடத்தில் வைத்து மாடுகளை பராமரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    மேலும் பொது மக்களுக்கும் மற்றும் போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சியின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×