search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையம்"

    • கனரக வாகனங்களால் பள்ளி குழந்தைகள் சாலையில் பயணிக்கவே அச்சப்படுகின்றனர்.
    • டாரஸ் வாகனத்தை குமரேசபுரம் காலனி பொதுமக்கள் சிறைபிடித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் தகவல் தெரிவித்தனர்.

    கடையம்:

    அம்பை மற்றும் தென்காசி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிஅருணன், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடையம் ஒன்றியம், கீழக்கடையம் ரெயில் நிலையம் முன்பு ரெயில்வே பீடர் ரோடு செல்கிறது. அது ரெயில்வே துறைக்கு சொந்தமான சாலையாகும்.

    இந்த சாலையில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி சுமார் 80 டன் வரை கனிம வளங்கள் சாலை பாதுகாப்பு விதிகளை மீறி அதிகனரக வாகனங்களில் கொண்டு செல்கின்றனர்.

    இதனால் சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.

    இதனால் அவ்வழியாக கேளையாப்பிள்ளையூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் அடிக்கடி சேதமடைகின்றன.

    சாலையின் அருகே உள்ள குமரேசபுரம் காலனி பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் கனரக வாகனங்களால் சாலையில் பயணிக்கவே அச்சப்படுகின்றனர்.

    தற்போது கடையம் ஊராட்சி ஒன்றியத்தின் மூலமாக நமக்கு நாமே திட்டத்தில் அச்சாலையை சீர் செய்ய கீழக்கடையம் ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் இயற்றி ஊராட்சி மன்றத்தலைவர் பூமிநாத் ரெயில்வே அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    அச்சாலையை மேற்படி திட்டத்தில் சீரமைத்தாலும், மீண்டும் அளவுக்கு அதிகமாக எடை ஏற்றி வரும் டாரஸ் கனரக வாகனங்களை அச்சாலையில் அனுமதித்தால் மீண்டும் ஒரு மாத காலத்தில் சாலை பழுதாகி விடும்.

    கடந்த 7-ந் தேதி அன்று அந்த ரெயில்வே சாலையில் சுமார் 80 டன் பாரம் ஏற்றி வந்த கனிம வள டாரஸ் வாகனத்தை குமரேசபுரம் காலனி பொதுமக்கள் சிறைபிடித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் தகவல் தெரிவித்தனர்.

    ஊராட்சி மன்றதலைவர் காவல்துறைக்கு தெரிவித்தார். உடனே கடையம் போலீசார், அந்த இடத்திற்கு வந்து ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்களால் சிறை பிடிக்கப்பட்ட வாகனத்தை, ரெயில்வே துறைக்கு தெரிவிக்காமலேயே அந்த வாகனத்தை மீட்டு ஒவர்லோடுக்கு எடை போடாமல் வாகனத்தை திரும்ப சாலையில் பயணிக்க அனுப்பி வைத்துள்ளனர்.

    எனவே இனி வரும் காலங்களில் சாலை பாதுகாப்பு விதிகளை மீறி பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்துகின்ற வகையில் ரெயில்வே பீடர் சாலையில் பயணிக்கின்ற வாகனங்களை ரெயில்வே காவலர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வாகனத்தை எடைபோட்டு ஆர்.டி.ஓ.விடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • கல்யாணிபுரம் சமுதாய நலக்கூடம் அருகில் கிராமிய சேவைத் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது
    • விழாவில் மத நல்லிணக்கம், சமுதாய விழிப்புணர்வு குறித்து பேசப்பட்டது.

    கடையம்:

    கீழக்கடையம் ஊராட்சிக்குட்பட்ட கல்யாணிபுரம் சமுதாய நலக்கூடம் அருகில் உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் சோகோ நிறுவனம் இணைந்து நடத்திய கிராமிய சேவைத் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. நெல்லை மண்டல தலைவர் அண்ணாமலையார் தலைமை தாங்கினார். சோகோ நிறுவனத்தை சேர்ந்த கீர்த்தி வாசன், ராச சுடலைமுத்து, பாலமுருகன், முத்து, அரசு ஈஸ்வரன், பூமிபாலகன், சுடலையாண்டி பிள்ளை ,கோவிந்த பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன், கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத், துணைத் தலைவர் விக்டர் சேவியர் துரைசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் கிராமிய சேவைத்திட்டத்தின் நோக்கமாக நோயற்ற வாழ்வு, கல்வியில் மேன்மை சுற்றுப்புற தூய்மை, முதியோரை பாதுகாத்தல், மகளிர் மேம்பாடு குடும்ப அமைதி, கர்ம யோக வாழ்க்கை நெறி, மனிதநேயம், மத நல்லிணக்கம், சமுதாய விழிப்புணர்வு போன்றவை குறித்து பேசப்பட்டது. இதில் சமூக ஆர்வ லர் சந்திரசேகர், வார்டு உறுப்பினர்கள் வீரசுமதி, ஏஞ்சல் மேரி, வசந்த், கவிதா மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • குவாரிகளில் இருந்து பாறைகளை வெட்டி எடுத்து கேரளாவிற்கு கொண்டு செல்கின்றனர்.
    • கல்குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு அடைந்ததாக கூறப்படுகிறது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்து பாறைகளை வெட்டி எடுத்து 10 வீல் முதல் 20 வீல் டாரஸ் லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்கின்றனர்.

    மேலும் இவ்வகையான லாரிகள் ஆலங்குளம் முதல் கடையம் வரை உள்ள பிரதான சாலையை அதிகமாக பயன்படுத்து கின்றனர்.

    இந்த லாரிகள் அதிக எடை உள்ள கனிம வளங்களை எடுத்து வருவதால் கீழ கடையம் ரெயில்வே சாலை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு மண் சாலை போல குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகப் பெரிய பாதிப்படைந்துள்ளனர்.

    மேலும் இப்பகுதியில் உள்ள கல்குவாரிகளால் விவசாய நிலங்கள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் மிகப் பெரிய பாதிப்பு அடைந்ததாக கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக கடையம் அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக குவாரியை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றியும், கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் வைத்தும், உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லாத காரணத்தினால் நேற்று கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் பொதுமக்கள் சிலருடன் சேர்ந்து ஜே.சி.பி.யை கொண்டு கடையம் ெரயில்வே சாலையில் 5 அடி தூரம் க பள்ளம் தோண்டி கனிம வளங்களை கொண்டு வரும் டாரஸ் லாரிகள் இச் சாலையை பயன்படுத்த முடியாதவாறு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் இன்று காலையும் வழக்கம்போல இச்சாலை வழியே டாரஸ் லாரிகள் கற்களை ஏற்றிச் சென்றன. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் தலைவர் பூமிநாத் தலைமையில் அவ்வழியே கற்களை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி பிடித்து சிறைபிடித்து போராட்டம் நடடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா ரவி தலைமை தாங்கினார்.
    • பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி நெல்லையப்பபுரத்தில் இலவச மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா ரவி தலைமையில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சித்ரா பாபு முன்னிலையில் நடைபெற்றது.

    முகாமில் தென்காசி மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் முரளி சங்கர் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். மேலும் நெல்லையப்பபுரம் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் பழனிகுமார், வட்டார மேற்பார்வையாளர் ஆனந்தன், சுகாதார ஆய்வாளர் சண்முகம், நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் முகமது முபாரக் மற்றும் செவிலியர்கள், பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டனர். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மருத்துவ முகாமை கடையம் ஒன்றிய தி.மு.க.செயலாளர் ஜெயக்குமார் தொடங்கிவைத்தார்.
    • முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    கடையம்:

    சிவசைலம் அவ்வை ஆசிரம டாக்டர் சவுந்தரம் சிறப்பு பள்ளி , நண்பர்கள் ரத்ததான கழகம் மற்றும் சென்னை ரெப்கோ ஹோம் பைனான்ஸ் சார்பில் இயன்முறை சிகிச்சை நிபுணர்களைக் கொண்டு இலவச இயன்முறை மருத்துவ முகாம் கடையம் எஸ்.டி.சி. கிளை தொடக்க பள்ளியில் நடைபெற்றது.

    அவ்வை ஆசிரம துணைத்தாளாளர் பாலமுருகன் வரவேற்றார். கடையம் நண்பர்கள் ரத்ததான கழகத் தலைவர் யாசர் அரபாத் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட ஜக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக பொருளாளர் ஹயாத் அன்சர், நண்பர்கள் ரத்ததான கழக உறுப்பினர் ஹமீது ஹம்சத் அலி, பொட்டல் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையம் ஒன்றிய தி.மு.க.செயலாளர் ஜெயக்குமார் மருத்துவ முகாமை தொடங்கிவைத்தார்.

    ரவணசமுத்திரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் புகாரி மீரா சாகிப், அண்ணாத்துரை, சசிகுமார், அர்ஜுனன், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பக்க விளைவற்ற இயன்முறை மருத்துவம் மற்றும் பயன்கள் குறித்த விழிப்புணர்வுடன் முகாம் நடைபெற்றது. முகாமில் உடலில் உள்ள நரம்பு, தசை, நீண்டகால வலிகள், முதுகு தண்டுவட பாதிப்பு, கழுத்துவலி, முதுகு வலி, தோள்பட்டை வலி, மூட்டுவலி, பாதவலி, பாத எரிச்சல், உடல் எடை குறைத்தல், முழங்கை வலி, குழந்தையின் வளர்ச்சி நிலையில் தாமதம், பக்கவாதம், சுளுக்கு மற்றும் தசைப்பிடிப்பிற்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மருத்துவர்கள் ஷியாம் சுந்தர் மற்றும் வினிதா சிகிச்சை அளித்தனர். முகாமில் சிகிச்சை பெற்ற பயனாளிகள் அவ்வை ஆசிரம செல்வன் சுவாமிநாதன் ஆரோக்கிய மையத்தில் செயல்படும் இயன்முறை மருத்துவ பிரிவில் இலவச தொடர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

    • கொடைவிழாவையொட்டி காலை ,மாலை தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
    • முப்புடாதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 24-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது.

    கடையம்:

    கீழக்கடையம் 18 பட்டி நாடார்களுக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கோவிலில் கடந்த 24-ந்தேதி இரவு திருக்கால் நாட்டுதலுடன் விழா தொடங்கியது.

    பின்னர் தினமும் அம்மனுக்கு காலை ,மாலை தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி காலையில் வடக்கு உடையார் பிள்ளையார் கோவிலிருந்து, 18 பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக பால்குடம் மற்றும் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை சிறப்பு பூஜை நடைபெற்றது.இதையடுத்து இரவு திரளான பக்தர்களின் காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.இதைத்தொடர்ந்து ஒவ்வொரு மண் டக படிதாரர்கள் சார்பாக விழா நடைபெற்றது. விழாவில் கலை நிகழ்ச்சிகள், பூந்தட்டு ஊர்வலம், மாவிளக்கு ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், காலை ,மாலை தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருத்தேர் கால்நாட்டுதல், 5-ந்தேதி இரவு அம்மன் கண் திறப்பு, நேற்று (6-ந்தேதி) காலை 18 பட்டிகளுக்கு அம்மன் ஊர் விளையாடல் நடைபெற்றது. இன்று காலை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மதியம் அல தீர்த்தம், அம்மன் ஊர் விளையாடல் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து இரவில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், நள்ளிரவில் அலதீர்த்தம், நையாண்டி மேளம், வாணவேடிக்கையுடன் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பின்னர் அம்மன் பூ பல்லக்கில் வீதி உலா நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் அம்மன் திருத்தேரில் எழுந்தருளி மேலக் கோவிலுக்கு மூலஸ்தானம் சென்றடைதல் நடைபெறுகிறது. பின்னர் அன்னதானம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து படப்பு தீபாராதனை, கொடைவிழா சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடு களை கொடைவிழா நடத்தும் 4-ம் திருநாள் மண்டகபடிதாரர்கள், கீழக்கடையம் வரிதாரர்கள் மற்றும் 18 பட்டி ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    இதே போல் கடையம் முப்புடாதி அம்மன் கோவில் திருவிழா கடந்த

    24-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு தீபாராதனை, சிறப்பு பூஜை மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் கடந்த 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலையில் தீர்த்த குடம், பால்குடம் எடுத்து வருதல், மதியம் அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பாக கலை நிகழ்ச்சிகள் மற்றும் பால்குடம் திருவிளக்கு பூஜை ,அன்னதானம் நடைபெற்றது.

    விழாவில் இன்று 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 8-ந்திருநாளில் காலையில் அபிஷேகம் மற்றும் அலகு தீர்த்தம் எடுத்து வருதல், வில்லிசை, மதியம் கொடை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து இரவு அலகு தீர்த்தம் எடுத்தல் நடைபெறுகிறது. பின்னர் முப்புடாதி அம்மனுக்கும் உற்சவருக்கும் பேச்சியம்மாளுக்கும் திருநாண் பூட்டுதல், அம்பாள் திருத்தேர்க்கு எழுந்தருளல், அதிகாலையில் திருத்தேர் வடம்பிடித்தல் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை 3-ம் திருநாள் மண்டகப்படிதாரர்கள் மனு மயா சமுதாயத்தினர் மற்றும் கொடை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

    • கபடி போட்டியினை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார்.
    • வெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றி கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் அருகேயுள்ள கானாவூரில் கபடி போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. போட்டியினை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார். போட்டியில் கருத்தப்பிள்ளையூர், கானாவூர், வெய்க்கால்பட்டி, புலவனூர், குறும்பலாப்பேரி, ஆவுடையானூர் உள்பட பல்வேறு பகுதியை சார்ந்த 70-க்கும் மேற்படட கபடி அணியை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

    போட்டியில் வெற்றி பெற்ற எட்டு அணியினருக்கு வெற்றி கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கருத்தப்பிள்ளையூரை சேர்ந்த வீரத்தமிழன் அணியினர் முதல் பரிசை பெற்றனர். இரண்டாவது பரிசை 7 கிங்ஸ் அணியினர் பெற்றனர். பரிசு கோப்பையை கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகியும், தொழிலதிபருமான பரமசிவன் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தாமஸ், ஆசீர், துரை மற்றும் 7 கிங்ஸ் கபடி குழு, 7 டிரைவர்ஸ் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

    • வியாபாரிகளும், பொதுமக்களும் கேரளா செல்ல இந்த பாலருவி ரெயில் உபயோகமாக இருந்து வந்தது.
    • 6 மாதத்தில் 2.34 லட்சம் பயணிகளை பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் கையாண்டுள்ளது.

    சங்கரன்கோவில்:

    ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ராஜா எம்.எல்.ஏ., மத்திய ரெயில்வே மந்திரிக்கு ஒரு கடிதம் எழுதி யுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம் தென்காசி, கொல்லம் வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு (வண்டி எண் 16791/16792) பாலருவி எக்ஸ்பிரஸ் கொரோனா ஊரடங்கிற்கு முன் கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ரெயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று சென்றது.

    இந்நிலையில் பாலக்காடு செல்லும்போது பாவூர்சத்தி ரத்திலும், பாலக்காட்டில் இருந்து வரும் போது கடை யத்திலும் நிற்காமல் செல்கிறது. இந்த ரெயில் மூலம் தமிழகத்தில் இருந்து வணிக ரீதியாக கடையம், பாவூர் சத்திரம் சுற்று வட்டார பொது மக்களும், வியாபாரிகளும் கேரளாவில் உள்ள புனலூர், கொட்டாரக்கரை, கொல்லம், கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் செல்ல இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி வந்தனர்.

    கேரளா செல்ல இந்த பாலருவி ரெயில் உபயோகமாக இருந்து வந்தது. வர்த்தக ரீதியாக லாபம் தரும் நிலையங்களாக கணக்கி டப்பட்டு கடையம், பாவூர் சத்திரம் ரெயில் நிலையங்களுக்கு மீண்டும் நிறுத்தங்கள் வழங்குவதற்கு வர்த்தக ரீதியாகவும், இயக்கு தல் ரீதியாகவும் சாத்தியக் கூறுகள் உள்ளது என்று 4.10.21 அன்று மதுரை ரெயில்வே கோட்ட மூத்த இயக்குதல் பிரிவு மேலாளர், தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் உள்ள தலைமை பயணி கள் போக்குவரத்து மேலாள ருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும் கொரோ னாவுக்கு முன்பு கடையம், பாவூர் சத்திரம் ரெயில் நிலை யங்களில் பாலருவி எக்ஸ்பிரஸ் நின்று சென்ற நிலையில், அக்டோபர் 2019 முதல் மார்ச் 2020 வரை 6 மாத காலகட்டங்களில், 23.4 லட்சம் வருமானத்துடன் 2.34 லட்சம் பயணிகளை பாவூர்சத்திரம் ரெயில் நிலையமும், 15.7 லட்சம் வருமானத்துடன் 1.31 லட்சம் பயணிகளை கடையம் ரெயில் நிலையமும் கையாண்டுள்ளது.

    மேலும் இந்த நெல்லை- தென்காசி வழித்தடத்தில் இயங்கும் ஒரே தினசரி விரைவு ரெயில் இதுவா கும். தமிழக அரசால் நியம னம் செய்யப்பட்ட ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் என்ற முறையில், கடையம் மற்றும் பாவூர்சத்திரத்தில் இரு மார்க்கங்களிலும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும். இதனை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர்.
    • சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

    கடையம்:

    தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

    மழை வேண்டியும், விவசாயம் தழைக்கவும் வருண கலச பூஜை மற்றும் வேல் பூஜை ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமையும் நடைபெறும். மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமை பூஜை இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிசேகம், வருண கலச பூஜை, வேல்பூஜை நடைபெற்றது. முன்னதாக மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது.

    மேலும் கோவில் வளாகத்தில் பொங்கலை யொட்டி பக்தர்கள் பலர் பொங்கலிட்டு வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

    • வெங்கடாம்பட்டி ஊராட்சி தேரிகுடியிருப்பில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவை ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தொடங்கி வைத்தார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி தேரிகுடியிருப்பில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது. வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை தாங்கினார். முகாமில் சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வெங்கடாம்பட்டி கால்நடை மருத்துவர், விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    வெங்கடாம்பட்டி ஊராட்சி கோவிலூற்று ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவுக்கு வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். கூட்டுறவு சங்க தலைவர் செல்லையா நாடார், கூட்டுறவு சங்க செயலாளர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரேஷன் கடை ஊழியர் மணிகண்டன், கோவிலூற்று தி.மு.க. கிளை செயலாளர் ஜெயராஜ், தொழில் அதிபர் அரவிந்த் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • குட்டிக்குளத்தின் கரைப்பகுதியில் நூற்றுக்கணக்கான பனை விதைகள் நடுகை செய்யப்பட்டன.
    • நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் வயல்காட்டு பகுதிகளில் உள்ள குளக்கரைகளை பனைமரக்கரை களாக்கி வலிமையாக்கிடும் பணியில் குட்டிக்குளத்தின் மேற்கு மற்றும் தெற்கு கரைப்பகுதியில் நூற்றுக்க ணக்கான பனை விதைகள் நடுகை செய்யப்பட்டன.

    தென் பத்து குளத்திற்கும் குட்டிக்குளத்திற்கும் நடுவில் செல்லும் பாதையின் இருபகுதியிலும் பனை விதைகள் மீள் நடுகை செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி மாண வர்கள் ஜெப்வின், விஷ்ணு, செர்வின், அலோசியஸ், நாவினி, சிலம்ப கலைஞர் முத்தரசன் மற்றும் சுரண்டை காமராஜர் கல்லூரி வேதி யியல் பேராசிரியர் ராஜா சிங் ஆகியோர் பங்கேற் றனர். நிகழ்ச்சியை பனை யாண்மை மற்றும் சூழலியல் ஆய்வாளர் பேராசிரியர் பாமோ ஒருங்கிணைத்தார்.

    • 120 விவசாயிகளுக்கு 240 இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் செல்லம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் வட்டாரம் சேர்வைக்காரன்பட்டி ஊராட்சியில் வேளாண்மை -உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்-அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இலவச தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் முதல் கட்டமாக 120 விவசாயிகளுக்கு 240 இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தலைமை தாங்கினார். . யூனியன் சேர்மன் செல்லம்மாள், ஒன்றிய கவுன்சிலர் புளிகணேசன், ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை அலுவலர் அபிராமி தென்னங் கன்றுகளை நடவு செய்யும் முறை மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமாக கூறினார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராசம்மாள், வார்டு உறுப்பினர் சந்தனரோஜா, வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற செயலாளர் கதிரேசன் , விவசாயிகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர் .மேலும் கடையம் வட்டாரத்தில் கலைஞர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யபட்டுள்ள தெற்குகடையம், ரவணசமுத்திரம், வீரா சமுத்திரம், அடைச்சாணி ஊராட்சிகளிலும் முதல் கட்டமாக இலவச தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

    ×