search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224691"

    • தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை
    • சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    கன்னியாகுமரி:

    சென்னை முதன்மை செயலாளர் மற்றும் தொழிலாளர் ஆணையர் கடைகள் மற்றும் நிறுவனங்களில் 2009-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் 2011-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டல பொருட்கள்) விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்டபிரபு தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அஞ்சுகிராமம் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் நியாய விலைக்கடைகள், கிடங்குகள் மற்றும் சுற்றுலா, வழிபாட்டு தலங்கள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாங்களில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதுபற்றி தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்ட பிரபு கூறுகையில், முத்திரை இடப்படாத எடையளவுகள் வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத பொட்டலப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் அதிகபட்சமாக சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், பொட்டலமிடுபவர் மற்றும் இறக்குமதியாளர் பதிவு சான்று பெறாதது, பொருட்களில் குறிப்பிட்டுள்ள எடை மற்றும் அளவுகள் இல்லாமை ஆகிய குற்றங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    • அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்து வருகிறது.
    • 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு அரசு, ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறம் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவ சிய பொருட்களை வினி யோகம் செய்து வருகிறது.

    இவற்றை சிலர் முறைகேடாக கடத்தி கள்ள சந்தையில் விற்று அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர். இவர்கள் பற்றியும், ரேசன் பொருட்கள் பதுக்கல் குறித்தும் பொதுமக்கள், 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ரகசியம் பாதுகாக்கப்படும்.

    இதற்காக மாநில உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் 24 மணி நேரமும் செயல்படும் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு ள்ளது. இது காவல்துறை தலைவரின் நேரடி கண்கா ணிப்பில் செயல்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.14 லட்சத்தில் புதிய பொது விநியோக கட்டிடம் கட்டப்பட்டது.
    • அத்தியாவசிய பொருட்களை வழங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அருந்தபுரம் ஊராட்சி உத்தமர்குடியில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சத்தில் புதியதாக பொதுவிநியோக கட்டிடம் கட்டப்பட்டு பொது பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஒன்றியக்குழு உறுப்பினர் குமார் தலைமை வகித்தார்.

    ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ண பிரியா விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

    அருந்தவபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதாஆசை த்தம்பி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதியதாக கட்டப்பட்ட பொதுவிநியோக கட்டிடத்தை திறந்து வைத்து அத்தியாவசிய பொருள்களை வழங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    இதில் மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் முஹமதுரிபாயி,

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, அருந்தபுரம் கூட்டுறவு சங்க செயலாளர் வரதராஜன், ஊராட்சி செயலாளர் காமராஜ், ஊராட்சி சங்க நிர்வாகிகள் ஜெகத்குரு, மாரிமுத்து மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரஷியா-உக்ரைன் போர் காரணமாக தமிழகத்தில் இருந்து ஏற்றுமதிக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • நுாற்பாலைகள் உற்பத்தியை குறைத்துள்ளன.

    ராஜபாளையம்

    தமிழகத்தில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டு சந்தைகளுக்கு ஆயத்த ஆடைகள், பேண்டேஜ் மருத்துவ துணி போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகிறது அதன்படி திருப்பூரில் இருந்து பின்னலாடைகள், ராஜபாளையத்தில் இருந்து பஞ்சு நூல் மற்றும் ராஜ பாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சம்சிகாபுரம் பகுதிகளில் இருந்து பாண்டேஜ் மருத்துவ துணி போன்ற பொருட்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஆனால் தற்போது தயாரிக்கப்பட்ட சரக்குகள், கிடங்குகளில் இருந்து எடுக்கப்படாமல் இருப்பு வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக அந்த நாட்டு மக்கள் சிக்கன நடவடிக்கையில் உள்ளனர். அதாவது ஆடம்பர செலவுகளை குறைத்து, எரிபொருள் உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு மட்டும் செலவிடுகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் கணிசமாக அளவு ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது.

    நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரல்) தோல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.2,680 கோடியாக குறைந்துள்ளது. 2022 ஏப்ரலில் ரூ.8,831 கோடியாக இருந்த பருத்தி நுால், துணி மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருள் ஏற்றுமதி, நடப்பாண்டில், ரூ. 7 ஆயிரத்து 282 கோடிக்கு மட்டுமே ஏற்றுமதி நடந்துள்ளது.

    இதேபோல் செயற்கை நுாலிழை 'பேப்ரிக்' மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி 2022 ஏப்ரலில் ரூ. 3 ஆயிரத்து 477 கோடியாக இருந்தது. இந்தாண்டில், ரூ.3ஆயிரத்து 223 கோடிக்கு மட்டும் ஏற்றுமதி நடந்துள்ளது

    இதேபோல் சணல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.348 கோடியாக இருந்த நிலையில் தற்போது, ரூ.274 கோடியாக குறைந்துள்ளது. 'கார்பெட்' ஏற்றுமதி 2022 ஏப்ரலில் ரூ.952 கோடியாக இருந்து, ரூ. 862 கோடியாக குறைந்துள்ளது.

    கைத்தறி ஜவுளி மற்றும் கைத்தறிகளில் உற்பத்தி யாகும் கார்பெட் ஏற்றுமதி ரூ.1,182 கோடியாக இருந்தது. ஆனால் நடப்பாண்டில் ரூ.989 கோடியாக குறைந்துள்ளது. உள்நாட்டு, அனைத்து வகை கட்டமைப்புகளுடன் சீரான பஞ்சு-நுால் விலையுடன் தயார்நிலையில் இருந்தும், ஏற்றுமதி வர்த்தகத்தில் ஒருவித சுணக்கம் ஏற்பட்டு ள்ளது. நுாற்பாலைகளும், உற்பத்தியை குறைத்து உள்ளன.

    ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வராமல், இயல்புநிலை திரும்பாது. போர் முடிவுக்கு வந்தால் மட்டுமே ஏற்றுமதி வர்த்தகம் சீராக வளர்ச்சிப்பாதைக்கு திரும்ப முடியும்.

    இதேபோல் பல்வேறு நாடுகளும் பாதிப்பை சந்தித்துள்ளன. இருவேறு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் பல்வேறு நாடுகளை பாதிக்கிறது. எனவே அனைத்து தரப்பி னரும் போர் நிறுத்தத்துக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது ஏற்றுமதி தொழில்து றையினரின் அதிகபட்ச எதிர்பார்ப்பு ஆகும்.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • மொத்தம் ரூ. 71 லட்சத்து 55 ஆயிரத்து 181-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசா யிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இந்த ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    தேங்காய்

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் 72.16½ குவிண்டால் எடை கொண்ட 19 ஆயிரத்து 852 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.25.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.19-க்கும், சராசரி விலையாக ரூ.23.51-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 965-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 189.49½ குவிண்டால் எடை கொண்ட 408 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.06-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.74.30-க்கும், சராசரி விலையாக ரூ.82.69-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.77.86-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.58.39-க்கும், சராசரி விலையாக ரூ.73.16-க்கும் என மொத்தம் ரூ.13 லட்சத்து 57 ஆயிரத்து 532-க்கு விற்பனையானது.

    எள்

    அதேபோல் 388.31 குவிண்டால் எடை கொண்ட 518 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது.

    இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.157.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.139.99-க்கும், சராசரி விலையாக ரூ.152.99-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.155.00-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.140.99-க்கும், சராசரி விலையாக ரூ.151.99-க்கும் விலைபோனது.

    வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலை யாக ரூ.158.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.158.99-க்கும், சராசரி விலையாக ரூ.158.99-க்கும் என மொத்தம் ரூ.56 லட்சத்து 42 ஆயிரத்து 684-க்கு விற்பனையானது.

    இதன்படி, சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 71 லட்சத்து 55 ஆயிரத்து 181-க்கு விற்பனையானது.

    • வீடு உள்பட 3 இடங்களில் நகை-பொருட்கள் கொள்ளைபோனது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சை கனி (வயது 35). இவர் சம்ப வத்தன்று வீட்டின் கதவை சாத்தி விட்டு வெளியே சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.27 ஆயிரம் ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து பிச்சைகனி வத்திராயிருப்பு போலீசில் புகார் செய்தார். அதில், அம்பேத்கர் தெருவை சேர்ந்த தர்மராஜ், பால்பாண்டி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் அம்பேத்கர் தெருைவ சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் மாவூத்து பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்துள்ளர்.

    சம்பவத்தன்று வெல்டிங் பட்டறையில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள குத்து விளக்கை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (33). இவரது வீட்டில் இருந்த 1.4 பவுன் நகை திருடுபோனது.

    இதுகுறித்து எம்.கூமாபட்டி போலீசில் சுப்பிரமணியன் புகார் செய்தார். அதில், நகை திருடு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமசாமி, சிவா, குட்டி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • கண்ணந்தகுடியில் அடுத்தடுத்து 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது.
    • ரூ.10 ஆயிரம் மற்றும் சமையலுக்கு தேவையான பாத்திரங்களும் வழங்கினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கள்ளிக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தது.

    அதேபோல், தண்டலச்சேரி அருகே கண்ணந்தகுடியில் அடுத்தடுத்து 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது.

    இந்நிலையில், திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு அரிமா சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் லயன் முகம்மது இக்பால்தீன், செயலாளர் தங்கமணி, மாதவன், செல்வ முத்துக்குமரன், துரை ராயப்பன், சீனிவாச பாபு, ராஜ் மோகன் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் சமையலுக்கு தேவையான பாத்திரங்களும் வழங்கினர்.

    இதில் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • முகமூடி கொள்ளையன் அட்டகாசம்
    • கொள்ளையன் உருவம் காமிரா பதிவில் சிக்கி இருப்பது தெரியவந்தது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கேப் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஏபிமோசஸ் (வயது 44). இவரது மனைவி மெர்சி. ஹோமியோபதி டாக்டரான இவர் கேப் ரோடு பகுதியில் கிளினிக் வைத்துள்ளார்.

    டாக்டர் மெர்சி தினமும் கிளினிக்கில் நோயாளிகளை பார்ப்பது உண்டு. அதன்படி கிளினிக் வந்த அவர், பணிகள் முடிந்ததும் வழக்கம்போல் கிளினிக்கை பூட்டிவிட்டு சென்றார்.

    நேற்று காலையில் மெர்சி கிளினிக்கிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. எனவே யாரோ மர்ம மனிதன், உள்ளே புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

    இது பற்றி கோட்டார் போலீசில் ஏபிமோசஸ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கிளினிக்கில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் மென்பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் ஏபிமோசஸ் தெரிவித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளையன் உருவம் காமிரா பதிவில் சிக்கி இருப்பது தெரியவந்தது. கொள்ளை யன் ஒருவன் முகமூடி அணிந்து செல்வது போன்ற காட்சி அதில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதனை தொடர்ந்து கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே குமரி மாவட்டத்தில் நடந்த சில திருட்டு சம்பவங்களிலும் கொள்ளையர்கள் முகமூடி அணிந்து கைவரிசையில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே இந்த கொள்ளையிலும் அவர்கள் தான் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கிறார்கள். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தரமற்ற உணவு பொருட்களை கண்டுபி டித்து நடவடிக்கை எடுக்கின்ற னர்.
    • மேலும் இது தொடர்பாக, சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமையாள ருக்கு அபராதமும் விதிக்கப்ப டுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவ லர் கதிரவன் தலைமையி லான குழுவினர் ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதி களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தரமற்ற உணவு பொருட்களை கண்டுபி டித்து நடவடிக்கை எடுக்கின்ற னர். மேலும் இது தொடர்பாக, சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமையாள ருக்கு அபராதமும் விதிக்கப்ப டுகிறது.

    அதன்படி கடந்த மாதத்தில் மட்டும் 13 வழக்கு களில் ரூ.1.27 லட்சம் அபராதம் விதித்து வருவாய் அலுவ லர் மேனகா உத்தரவிட்டார். அதில், தரமற்ற உணவு பொருள் விற்றது, தரமற்ற ஜவ்வரிசி விற்றது, கலப்பட ஆயில் விற்றது உள்ளட்ட 13 வழக்குகளில் ரூ.1.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்களில் கலப்படம் செய்து, விற்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கடைகளில் ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றனர்.

    • தூய்மை பணியாளர்களுக்கு சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டது.
    • பேரூராட்சி தலைவர் தலைமை தாங்கினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல் நிலை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் குளியல் சோப், சலவை சோப், பற்பசை, பல் துலக்கும் பிரஷ், தலைக்கு எண்ணெய், நாப்கின் அடங்கிய 'ஹெல்த் கிட்' எனப்படும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் சுந்தரம், செயலாளர் ரமேஷ், யூத் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வள்ளி விநாயகம், தொண்டி பகுதி மேலாண்மைக்குழு உறுப்பினர் கமாலுதீன், கவுன்சிலர் அபுதாகிர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதாரப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

    • 4 வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
    • நோட்டு புத்தகம், பாத்திரங்கள், மளிகை பொருட்கள், துணிகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளுர் கண்ணந்தங்குடியில் நான்கு வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

    இதில் பணம், நகை, மாணவர்களின் சான்றிதழ், நோட்டு புத்தகம், பாத்திரங்கள், மளிகை பொருட்கள், துணிகள் சாம்பலானது.

    இதையடுத்து தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு பாலம் தொண்டு நிறுவனம் மூலம் செயலாளர் செந்தில்குமார், நிவாரணமாக தார்பாய் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பன்னீர்செல்வம், பிரைட் பீப்புள்ஸ் நிறுவனர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • ரூ.51 லட்சத்து 91 ஆயிரத்து 272-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
    • சுய உதவிக்குழு பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றை மையப்படுத்தி இந்த பணி நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சிறந்த ஒரு விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் மதி அங்காடி என்ற சிறப்பு அடையாளத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு கூடுதல் விற்பனை வாய்ப்பும், கூடுதல் வருவாயும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் முதல் கட்டமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தஞ்சாவூர் மாநகராட்சி பூ மாலை வணிக வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் மகளிர் சுய உதவி குழு விற்பனை மதி அங்காடியை திறந்து வைத்தார்.

    இந்த விற்பனை அங்காடியின் செயல்பாடுகள் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி மனதார பாராட்டினார்.

    இதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் மேலும் 4 இடங்களில் தஞ்சை தாரகைகள் விற்பனை அங்காடி தொடங்கப்பட்டது.

    தற்போது இந்த 5 தஞ்சை தாரகைகள் மூலம் இதுவரை ரூ.51 லட்சத்து 91 ஆயிரத்து 272-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.

    இதையடுத்து இன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பூ மாலை வணிக வளாகத்தில் செயல்படும் தஞ்சை தாரகைகள் விற்பனை அங்காடிக்கு சென்றார்.

    அங்கு பணிபுரியும் மகளிர் சுய உதவிக் குழுவினரை பாராட்டினார். மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி மாநகராட்சியில் பூ மாலை வணிக வளாகத்தில் முதன்முதலாக தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் விற்பனை மதி அங்காடி தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.25,94,106-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து இரண்டாம் கட்டமாக புவிசார் குறியீடு பெற்றுள்ள உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக இந்திய ரயில்வே அமைச்சகம் முக்கிய ரயில் நிலையங்களில் ஒரு ரயில் நிலையம் ஒரு உற்பத்தி பொருள் என்ற திட்டத்தின் கீழ் தற்காலிக அங்காடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.

    இந்த அங்காடி மூலம் தற்போது வரை ரூ.11,26,130 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

    மூன்றாம் குட்டமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பழமையான கல்லணையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தஞ்சை தாரகைகள் மதி அங்காடி தொடங்கி வைக்கப்பட்டது.

    தற்போது வரை ரூ.6,11,619 வரை மகளிர் சுய உதவி குழு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    நான்காம் கட்டமாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மதி அங்காடியை பழுது நீக்கம் செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி புதுப்புலியுடன் தஞ்சை தாரகைகள் மதி அங்காடி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது வரை ரூ.7,60,807-க்கான மகளிர் சுய உதவிக் குழு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    5-ம் கட்டமாக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் கடந்த ஜனவரி 14-ம் தேதி புதிய விற்பனை மையம் தொடங்கப்பட்டது.

    இன்று வரை அதில் ரூ.98,610-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இப்படி 5 தஞ்சை தாரகைகள் மூலம் இதுவரை ரூ.51 லட்சத்து 91 ஆயிரத்து 272-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . தொடர்ந்து இவற்றின் மதிப்பு அதிகரிக்கும்.

    மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அவர்களாலேயே சந்தை செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் விதவைப் பெண்கள், கணவரால் கைவிட்ட பெண்கள் உள்ளிட்ட பல பெண்கள் வாழ்வில் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது.

    அடுத்த கட்டமாக கைவினை பொருட்கள் விற்பனை அங்காடி தொடங்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. சந்தை வாய்ப்பு, சுய உதவி குழு பெண்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் மையப்படுத்தி இந்த பணி நடந்து வருகிறது.

    ரூ.51 லட்சத்தை தாண்டி பொருட்கள் விற்பனை செய்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பாராட்டுக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், உதவி திட்ட அலுவலர் ஆசீர்வாதம், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள், சுய உதவி குழு பெண்கள் கலந்து கொண்டனர்.

    ×