search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோ"

    • போக்சோ சட்டத்தில் மாணவன் மீது வழக்கு பதியப்பட்டது
    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்

    கரூர்:

    வரும் அரசு பள்ளியில், பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவர், கரூர் அருகே புரவிபாளையம் பகுதியில் உள்ள, சகோதரி வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு திருமணம் செய்து கொள்வதாக கூறி, முருகானந்தம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின்பேரில், கரூர் மகளிர் போலீசார், முருகானந்தம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.




    • மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    விருதுநகர்

    சாத்தூரை சேர்ந்தவர் பிளஸ்-2 மாணவி. இவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் அருகில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். அப்போது சாத்தூர் ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்த கார்த்தி (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் அடிக்கடி வாந்தி எடுத்ததால் பெற்றோர் மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில் சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை போக்சோவில் கைது செய்தனர்.

    இதேபோல் வ.புதுபட்டியை சேர்ந்தவர் 16 வயது பிளஸ்-2 மாணவி. இவரை அரசு மருத்துவமனைக்கு உடல்நல பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மாணவியிடம் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த அறிவரசன் மாணவியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து தாயார் அளித்த புகாரின்பேரில் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    • 5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்
    • ஜெயிலில் அடைப்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 60).

    இவர் வீட்டின் அருகே விளை யாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல்தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி அழுது கொண்டே வந்து தனது தாயிடம் தெரிவித்தாள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஆரோக்கியதாசை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    பின்னர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் ஆரோக்கியதாசை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறை யில் அடைத்தார்.

    • வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல் சீண்டல் செய்தார்.
    • தலைமறைவான சோழனை தேடி வருகின்றனர்.

    கடலூார்:

    பண்ருட்டி அருகே புலவன்குப்பத்தை சேர்ந்த 14 வயதுசிறுமி வீட்டில் தனியாக இருந்த போது இவரது தந்தையின் நண்பர் பக்கத்து ஊரானகாட்டுக்கூடலூரை சேர்ந்த சோழன்(32 என்பவர் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல் சீண்டல் செய்தார். அதிர்ச்ச்சி அடைந்த சிறுமி அவனை தள்ளிவிட்டு வெளியேஓடி வந்துள்ளார்.

    இது குறித்து சிறுமியின்தந்தை பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில்இன்ஸ்பெக்டர்(பெ) நந்தகுமார், மகளிர் சப் இன்ஸ்பெக்டர் சுடர்மதி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து தலைமறைவான சோழனை தேடி வருகின்றனர்

    • போதை பொருள் விற்பனை செய்வதும், வாங்கி பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
    • எதிர்கால மாணவ சமுதாயத்தை காப்பாற்ற மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

    தாராபுரம் :

    மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் பள்ளி மாணவர்களுக்கான போதை ஒழிப்பு மற்றும் போக்சோ குறித்த விழிப்புணர்வு முகாம் சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    முகாமிற்கு தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.தர்ம பிரபு மற்றும் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள். அப்போது பள்ளி மாணவர்களுக்கு போக்சோ சட்டம் மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்புகுறித்து விளக்கினார்கள்.

    போதை பொருள் விற்பனை செய்வதும், வாங்கி பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போதைப் பொருட்களின் பயன்பாட்டை தடுத்து நல்ல எதிர்கால மாணவ சமுதாயத்தை காப்பாற்ற மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.

    பிறகு முகாமில் பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நீதிபதிகள் பதிலளித்தனர். அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். அப்போது வழக்கறிஞர் சித்ராபாண்ட்ஸ், பள்ளி தலைமையாசிரியர் மோகன்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 17 வயது சிறுமி ஒருத்தி வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி வி.ஆண்டிக்கு ப்பம் ஜாகீர் உசைன் தெருவை சேர்ந்த முகமதீன் அன்சாரி (வயது 56) இவர் அதே பகுதியை சேர்ந்த சற்று மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருத்தி வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்க ப்பட்ட சிறுமியின் பெற்றோர்பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தனர். இதனை தொடர்ந்துபண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி இது குறித்து வழக்குபதிவு செய்து முகமதீன் அன்சாரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துபண்ருட்டி நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • சைல்டு லைன் டிரஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் சிறுமி திருமணம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் திருமணம் நடைபெற்றதை உறுதி செய்தனர்.
    • ராதாகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம் : 

    பல்லடம் அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது உறவினரான ராதாகிருஷ்ணன்(வயது 25) என்ற வாலிபர் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சைல்டு லைன் டிரஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் சிறுமி திருமணம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் திருமணம் நடைபெற்றதை உறுதி செய்தனர்.

    இதையடுத்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், ராதாகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • திருப்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
    • பனியன் தொழிலாளியான ரியாஸ் அகமது என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். மாநகராட்சி பள்ளியில்,பிளஸ் 2 படித்து வருகிறார். இவரிடம் முதலிபாளையத்தை சேர்ந்த பனியன் தொழிலாளியானரியாஸ் அகமது(வயது 23) என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார்.

    இந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது ரியாஸ் அகமது, சிறுமியை மேட்டுப்பாளையத்துக்குஅழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. சிறுமியை மீட்ட போலீசார்,ரியாஸ் அகமதுவை 'போக்சோ' வழக்கில் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், சிறையில் அடைத்தனர்.

    • பண்ருட்டி அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • 15 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே தொரப்பாடியை சேர்ந்தவர் மணிகண்டன் (26) திருமணம் ஆனவர். மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்துவருகிறார்.இந்த நிலையில் கடந்த 17ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 10ம்வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறிகடத்தி சென்றார்.இதுகுறித்து மாணவியின் தாய் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

    புதுக் கோட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்த ப்பட்ட பள்ளி மாணவியை வலை வீசி தேடி வந்தனர். போலீசாரின்தீவிர தேடு தல் வேட்டையில் மணி கண்டனை மடக்கி பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட பள்ளி மாணவியை கடலூர் மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    • மங்கலம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளியின் 12 வயது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று முன்தினம் மங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி சென்றுள்ளார்.
    • சிறுமியை அமர வைத்துவிட்டு, அருகே உள்ள கடைக்குச் சென்று வருவதாக தந்தை சென்றுள்ளார்

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மங்கலம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளியின் 12 வயது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால், நேற்று முன்தினம் மங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவம னைக்கு தந்தையுடன் சிறுமி சென்றுள்ளார். மருத்து வமனையில் சிறுமியை அமர வைத்துவிட்டு, அருகே உள்ள கடைக்குச் சென்று வருவதாக தந்தை சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சிறுமி அழுது கொண்டே மருத்துவமனையை விட்டு வெளியே வந்துள்ளார். இதனைப் பார்த்த தந்தை வந்து விசாரித்த போது, மருத்துவமனையில் சிறுமி அருகே உட்கார்ந்து இருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கூறினாள்.

    இதையடுத்து அவர் மருத்துவமனைக்குள் சென்று பார்த்தபோது, அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதை அடுத்து சிறுமியின் தந்தை பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், மேற்கண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மதன் பிரசாத் மகன் மகேஷ் பிரசாத், (44) என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மாணவர் புல் கட்டுகளை தலையில் தூக்கி விட மாணவியை உதவிக்கு அழைத்தார்.
    • கடந்த 3- ந்தேதி திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார்.

     கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி, அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அதே கிராமத்தில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த 19-வயது என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் புல் கட்டுகளை தலையில் தூக்கி விட மாணவியை உதவிக்கு அழைத்தார். உடனே மாணவி அருகில் வந்ததும் அவரை மாணவர் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் மாணவி சோர்வுடன் இருந்து வந்தார். கடந்த 3- ந்தேதி திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் மாணவி கர்ப்ப மாக இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து என்ஜினியரிங் படித்துவரும் மாணவரை வலைவீசி தேடி வருகி ன்றனர்.

    • சிறுமிக்கு சிதம்பரம் அருகே உள்ள ஒரு திருமணம் மண்டபம் ஒன்றில் கடந்த 5-ந் தேதி திருமணம் நடைபெற்றது.
    • சிறுமியின் தந்தை சங்கர் மற்றும் சிறுமியின் தாய் தாமரை செல்வி உள்ளிட்டோர்) 5 பேர் மீது வழக்கு குழந்தை தடுப்பு திருமண சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஆலம்பாடி அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கார்மேகம் (வயது. 30) இவருக்கு விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு சிதம்பரம் அருகே உள்ள ஒரு திருமணம் மண்டபம் ஒன்றில் கடந்த 5-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இது குறித்து கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் மகளிர் ஊர் நல அலுவலர் சுமதி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் அளித்தார். இதனையடுத்து (கார்மேகம் தந்தை சுப்பிரமணியன், இவரது மனைவி விஜயகுமாரி சிறுமியின் தந்தை சங்கர் மற்றும் சிறுமியின் தாய் தாமரை செல்வி உள்ளிட்டோர்) 5 பேர் மீது வழக்கு குழந்தை தடுப்பு திருமண சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×