search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சலுகைகள்"

    • ஆப்பிள் நிறுவன வலைதளத்தில் இதன் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
    • ஐபோன் 13 மாடலுக்கு எக்சேன்ஜ் சலுகைகள் மற்றும் வங்கி சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடலுக்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் புதிய ஐபோன் 13 மாடலை ரூ. 58 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இத்துடன் எக்சேன்ஜ் சலுகைகள் மற்றும் வங்கி சார்ந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    தற்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஐபோன் 13 மாடலின் 128 ஜிபி விலை ரூ. 58 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் நிறுவன வலைதளத்தில் இதன் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 மாடலின் விலை ரூ. 10 ஆயிரத்து 901 குறைந்துள்ளது.

    இத்துடன் எஸ்.பி.ஐ. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது பத்து சதவீதம் (அதிகபட்சம் ரூ. 750) வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 35 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் ஐபோன் 13 மாடலை மிக குறைந்த விலையில் வாங்கிட முடியும். இதில் எக்சேன்ஜ் தொகை, பயனர்கள் கொடுக்கும் ஸ்மார்ட்போனின் நிலையை பொருத்து வேறுப்படும்.

    ப்ளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் விலை குறைப்பு குறுகிய கால சலுகையா அல்லது நீண்ட காலத்திற்கு வழங்கப்படுமா என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், இது ஐபோன் வாங்க சரியான காலம் ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், 12MP+12MP பிரைமரி கேமரா, 12MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி, 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி, வைபை 6, ப்ளூடூத் 5 போன்ற வசதிகள் உள்ளன.

    • சிறப்பு சலுகை பலன்கள் அனைத்தும் ஸ்டோர் கிரெடிட் ஆக சேர்க்கப்பட்டு விடும்.
    • இந்த சலுகைகள் அனைத்தும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும்.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு குறுகிய காலத்திற்கு சிறப்பு சலுகைகள் அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் 10-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி டுகாட்டி ஃபிளாக்ஷிப் அட்வென்ச்சர் டூரர் மாடலான, மல்டிஸ்டிராடா வி4 மற்றும் பனிகேல் வி4 சார்ந்த ரோட்ஸ்டர் மாடல், ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 மாடல்களுக்கு ரூ. 4 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர மான்ஸ்டர், ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 மற்றும் மல்டிஸ்டிராடா வி2 போன்ற மாடல்களுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

     

    இத்தாலி நாட்டை சேர்ந்த இருசக்கர வாகன உற்பத்தியாளர் டுகாட்டி, இந்த பலன்கள் அனைத்தும் ஸ்டோர் கிரெடிட் ஆக சேர்க்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில், பயனர்கள் இந்த தொகையை கொண்டு டுகாட்டி ஆடை, பயனர் வாங்கும் மோட்டார்சைக்கிளுக்கான அக்சஸரீக்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த சலுகைகள் அனைத்தும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என்று டுகாட்டி இந்தியா அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் தான் டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது மான்ஸ்டர் எஸ்பி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 15 லட்சத்து 95 ஆயிரம் என்று துவங்குகிறது. இது அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 3 லட்சம் வரை அதிகம் ஆகும்.

    • அரசு பள்ளியில் மாணவர்கள் சேருவதால் ஏற்படும் நன்மைகள்.
    • மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே இனாம் கிளியூர் ஊராட்சியில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று வலங்கைமான் ஒன்றிய அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அரசு பள்ளியில் மாணவர்கள் சேருவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்ப டும் சலுகைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்.

    இதில் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் சுகந்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், ஆசிரியர் பயிற்றுனர் புனிதா, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசித்ரா, ஆசிரியை பூங்கொடி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், வானவில் மன்றத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என விழிப்புணர்வு.
    • அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    பிரச்சாரத்தை பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    பள்ளி அருகிலிருந்து புறப்பட்ட பிரசார பயணம் சுற்றுப்பகுதியில் உள்ள வீடு, வீடாக சென்று அப்பகுதி மக்களிடம் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் நேரடியாகவும், துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • அபிராமம் சுற்றியுள்ள பகுதியில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி இல்லை.
    • சலுகைகள் கிடைக்காமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 125-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் கூலி வேலை செய்து பிழைத்து வரு கின்றனர். இவர்களின் குழந்தைகள் உயர்கல்வி படிக்க முடியாத நிலை உள்ளது. இதற்கு காரணம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உயர்நிலை, மேல்நிலை படிக்க அரசுப்பள்ளி கிடையாது.

    அபிராமத்தில் 1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அதுவும் முறையாக செயல்படுவதில்லை. மேலும் 2 தனியார் பள்ளி மட்டுமே உள்ளது. இதனால் அரசின் சலுகைகள் இன்று வரை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் அருணாசலம் கூறியதாவது:-

    அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர்.

    இவர்களது பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்க்கு குறிப்பாக உயர்நிலை, மேல்நிலைபள்ளியில் படிக்க அரசு பள்ளி கிடையாது. 8-வது வரை மட்டுமே படிக்க அரசு பள்ளி உள்ளது. தமிழக அரசின் சலுகைகளான மருத்துவம், பொறியல் படிப்பவர்களுக்கு 7.5 சதவீத மாணவ- மாணவிகள் படிக்க அரசே முழு செலவையும் ஏற்கும் என்ற திட்டம், கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் ஆகியவை அபிராமம் அதனை சுற்றியுள்ள மாணவர்களுக்கு கிடைக்க வாய்பில்லை.

    இந்த சலுகைகளை பெற 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்குதான் கிடைக்கும் என்ற நிலை நிலை உள்ளது. எனவே இனிவரும் காலங்களிலாவது அபிராமம் பகுதி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மூலகாரணமாக அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அரசு உயர்நிலை, மேல்நிலைபள்ளி தொடங்க கலெக்டரும், பள்ளி கல்வி துறையினரும் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வி ரூ. 549 சலுகை பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டா, 180 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
    • வி ரூ. 368 மற்றும் ரூ. 369 விலை சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், பிரீபெயிட் சலுகை பலன்களில் அதிகளவு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதுதவிர புதிய பிரீபெயிட் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்த வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வி ரூ. 549 சலுகை மொத்தத்தில் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது.

    அதிக பலன்களுக்கு மாற்றாக நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வகையில், இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் தான் வி நிறுவனம் ரூ. 368 மற்றும் ரூ. 369 விலையில் சலுகைகளை அறிவித்தது. இதைத் தொடர்ந்து தற்போது நீண்ட கால வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    வி ரூ. 549 சலுகை பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டா, 180 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. 1 ஜிபி தவிர்த்து கூடுதல் டேட்டா வேண்டுமெனில் பயனர்கள் மற்ற டேட்டா வவுச்சர்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் பலன்கள் வழங்கப்படவில்லை என்பதால், அழைப்புகளுக்கான கட்டணம் நொடிக்கு 2.5 பைசா என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இவைதவிர இந்த சலுகையில் எஸ்எம்எஸ் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. வி சிம் கார்டை இரண்டாவது இணைப்பாக பயன்படுத்துவோருக்கு இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும். முந்தைய ரூ. 368 மற்றும் ரூ. 369 விலை சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இவை தவிர ஒடிடி பலன்களும் வழங்கப்படுகிறது.

    தொல். திருமாவளவன் பேச்சானது அம்பேத்கா் இயற்றிய இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பானது.

    திருப்பூர்:

    மதம் மாறியவா்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகைகள் வழங்கக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கிறிஸ்தவா்களாக மதம் மாறியவா்களுக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் மக்களவையில் பேசியிருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. அவரது பேச்சானது அம்பேத்கா் இயற்றிய இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பானது.

    இட ஒதுக்கீடு சலுகைகள் என்பது சமூகநீதிக்கானது என்றும், மற்ற மதங்களுக்கு இது பொருந்தாது என்றும் அரசியல் சாசன சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே, அவரது கோரிக்கை இந்து சமூகத்தை சீரழிக்கும் என்பதால் மதம் மாறியவா்களுக்கு இட ஒதுக்கீட்டு சலுகைகள் வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சியோமி நிறுவனத்தின் புது ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
    • ரெட்மி நோட் 12 சீரிசில் - நோட் 12 5ஜி, நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி என மூன்று மாடல்கள் கிடைக்கின்றன.

    சியோமியின் துணை பிராண்டு ரெட்மி இந்திய சந்தையில் தனது ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் (ஜனவரி 5) அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களுக்கான விற்பனை இன்று (ஜனவரி 11) துவங்கியது. இந்திய சந்தையில் ரோட்மி நோட் 12 சீரிசில் ரெட்மி நோட் 12 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    இதில் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிஸ்கிட் பிளாக், மேட் பிளாக் மற்றும் ஃபிராஸ்டெட் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் அப்சிடியன் பிளாக், ஆர்க்டிக் வைட் மற்றும் ஐஸ்பெர்க் புளூ என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இவை தவிர மூன்று ஸ்மார்ட்போன்களும் Mi வலைதளம், Mi ஸ்டூடியோ மற்றும் Mi பார்ட்னர் ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    புது ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போதும், எக்சேன்ஜ் சலுகையின் கீழ் சிறப்பு தள்ளுபடி பெற முடியும். ரெட்மி நோட் 12 வாங்குவோருக்கு ரூ. 1500, நோட் 12 ப்ரோ மற்றும் நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல்களுக்கு ரூ. 3 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய சியோமி/Mi அல்லது ரெட்மி ஸ்மார்ட்போன் வாங்கும் போது ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    விலை விவரங்கள்:

    ரெட்மி நோட் 12 5ஜி 4 ஜிபி ரேம், 128 ஜிபி ரூ. 17 ஆயிரத்து 999

    ரெட்மி நோட் 12 5ஜி 6 ஜிபி ரேம், 128 ஜிபி ரூ. 19 ஆயிரத்து 999

    வங்கி தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளை பெறும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனினை முறையே ரூ. 15 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 17 ஆயிரத்து 499 விலையில் வாங்கிட முடியும்.

    ரெட்மி நோட் 12 ப்ரோ 6 ஜிபி, 128 ஜிபி ரூ. 24 ஆயிரத்து 999

    ரெட்மி நோட் 12 ப்ரோ 8 ஜிபி, 128 ஜிபி ரூ. 26 ஆயிரத்து 999

    ரெட்மி நோட் 12 ப்ரோ 8 ஜிபி, 256 ஜிபி ரூ. 27 ஆயிரத்து 999

    ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 8 ஜிபி, 256 ஜிபி ரூ. 29 ஆயிரத்து 999

    ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 12 ஜிபி, 256 ஜிபி ரூ. 32 ஆயிரத்து 999

    அறிமுக சலுகையாக ஐசிஐசிஐ வங்கி கார்டு மற்றும் மாத தவணை முறைக்கு ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி மற்றும் ரூ. 3 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய சியோமி, Mi அல்லது ரெட்மி ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது கூடுதலாக ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • உரிய ஜாதி சான்றிதழ் வழங்கப்படாததால் இவர்களின் பிள்ளைகள் பள்ளி கல்வியை முடித்து உயர்கல்வி பெறமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
    • எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு அரசிடமிருந்து கிடைக்ககூடிய சலுகைகள் பெற முடியாத நிலை உள்ளது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா நொச்சியூர் கிராமத்தில் "இந்து மலைக்குறவர்" இனத்தை சேர்ந்த 38 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு உரிய ஜாதி சான்றிதழ் வழங்கப்படாததால் இவர்களின் பிள்ளைகள் பள்ளி கல்வியை முடித்து உயர் கல்வி பெறமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஜாதி சான்றிதழ் கேட்டு அதிகாரிகளிடம் முறையிட்டால் நடவடிக்கை எடுக்கவில்லை எனகூறுகின்றனர்.

    கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் கடந்த 11 வருடங்களாக ஜாதி சான்றிதழ் கேட்டு போராடி வருகின்றனர்.

    தங்கள் ஜாதியை தவிர்த்து பொய்யாக பிற ஜாதி பெயரை தங்களின் அடையாளமாக சான்றிதழ் பெற்றால் எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு அரசிடமிருந்து கிடைக்ககூடிய சலுகைகள் பெற முடியாத நிலை உள்ளது.

    அந்த காலத்தில் படிக்க வாய்ப்பு கிடைக்காததால் தங்களின் முன்னோர்களுக்கு ஜாதி சான்றிதழ் இல்லை.

    ஆனால் தற்போது எங்கள் பிள்ளைகளும் பள்ளிகளுக்கு செல்வதால் சாதி,மத, இருப்பிட சான்றிதழ்கள் தேவை கட்டயாமாக உள்ளது.

    எனவே நொச்சியூர் கிராமத்தில் வசிக்கும் இந்து மலைவாழ் மக்களுக்கு உரிய ஜாதி சான்றிதழை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும்.
    • விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளானது, பெற்றோர் பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவ-மாணவியர்க–ளுக்காக பள்ளி விடுதிகள் 15, கல்லூரி விடுதிகள் 4 என மொத்தம் 19 விடுதிகள் செயல்படுகின்றன. இந்த 4 கல்லூரி விடுதிகளில் 3 மாணவியர்கள் விடுதி, 1 மாணவர் விடுதி, மேலும் 15 பள்ளி விடுதிகளில் 8 மாணவியர்கள் விடுதி, 7 மாணவர்கள் விடுதி ஆகும்.

    பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவியர்களும். அதற்கு மேல் படிக்கும் மாணவ-மாணவிளுக்கு கல்லூரி விடுதிகளில் சேர தகுதியுடைவர்கள் ஆவர். அனைத்து வகுப்பைச்சார்ந்த மாணவ-மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து–க்கொள்ள–ப்படுவார்கள். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ-மாணவி களுக்கும்உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும்.

    10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளானது, பெற்றோர் பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்கவேண்டும். இந்த தூர விதி மாணவியர்களுக்கு பொருந்தாது.

    தகுதியுடைய மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்த–ப்பட்ட விடுதிகாப்பாளர்கள், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொ ள்ளலாம்பூர்த்தி செய்ய ப்பட்ட விண்ணப்பங்கள்கல்லூரி மற்றும் பள்ளிவிடுதிகா ப்பாளர், காப்பாளினி களிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகின்ற 15.7.22க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் போது, சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

    தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைக ளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும்வரை விடுதிகளில் தங்கி பயிலவும் அனுமதிக்க ப்படுகின்றனர். எனவே மாணவ-மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையவாம். இவ்வாறு கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

    • தேங்காய் விலை குறைந்து வருவதை கட்டுப்படுத்த பேராவூரணி பகுதியில் தேங்காய் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தி தர வேண்டும்.
    • கூலி தொழிலாளர்களுக்கு அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் குடும்ப அட்டைகளை மாற்றி தர வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் கிராம கணக்குகளை ஆய்வு செய்து ஜமாபந்தி நிறைவு குடிகள் மாநாடு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. அசோக்குமார் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். முன்னதாக தாசில்தார் சுகுமார் வரவேற்றார்.

    கடைமடை பகுதி ஏரி, குளங்கள் நிரப்பி தர வேண்டும். தேங்காய் விலை குறைந்து வருவதை கட்டுப்படுத்த பேராவூரணி பகுதியில் தேங்காய் கொள்முதல் நிலையம் ஏற்படுத்தி தர வேண்டும். அரசு மருத்துவமனையில் ஸ்கேன் வசதி செய்து தரப்பட வேண்டும். தடையில்லா பேருந்து சேவை செய்து தர வேண்டும். கூலித் தொழிலாளர்களுக்கு அரசின் சலுகைகள் அனை த்தும் கிடைக்கும் வகையில் குடும்ப அட்டைகளை மாற்றி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் சார்பாக கருப்பையா, நைனா முகமது, சீனிவாசன் ஆகியோர் கூட்டத்தில் தெரிவித்தனர்.

    இதில் மாற்றுத்தி றனாளிகள், முதியோர், விதவை உதவித்தொகைகள், பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவு, குடும்ப அட்டை 112 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கலெக்டர்பேசியதாவது,

    கடந்த 23 ந்தேதி முதல் நான்கு நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் பெருமகளூர் உள்வட்டம், குருவிக்கரம்பை உள் வட்டம், ஆவணம் உள் வட்டம், பேராவூரணி உள் வட்டத்திற்குள் 800 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றில் 120 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. குடும்ப அட்டைகளை மாற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தையும் 10 நாட்களில் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராவூரணி தவமணி, சேதுபாவாசத்திரம் கிருஷ்ணமூர்த்தி, பேரூரா ட்சி செயல் அலுவலர்கள் பேராவூரணி பழனிவேல், பெருமகளூர் புனிதவதி, மண்டல துணை வட்டாட்சி யர்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் தரணிகா நன்றி கூறினார்.

    ×