search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224799"

    • கொடி புனிதம் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
    • மின் அலங்கார பெரிய தேர்பவனி வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த கோகூரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக, கொடி ஊர்வலம் ஆலயத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

    தொடர்ந்து, தஞ்சை மறை மாவட்ட பரிபாலர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர், கொடி புனிதம் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான மின் அலங்கார பெரிய தேர்பவனி வருகிற 17ந் தேதி நடைபெற உள்ளது.

    • பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் (மே) 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 6-ந் தேதி வெள்ளி ரத புறப்பாடு நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில்அமைந்துள்ளது.இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா,தங்க கருட சேவை, வெள்ளை சாத்தி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சௌரிராஜ பெருமாள்,பத்மினி தாயார் திருக்கல்யாண உற்சவம் நேற்று முதல் நாள் இரவு நடைபெற்றது.தொடர்ந்து நேற்று பெருமாள் உபநாச்சியார்கள் நால்வருடன் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.விழாவையொட்டி, வருகிற 6-ஆம் தேதி வெள்ளி ரத புறப்பாடும், 7-ஆம் தேதி விடையாற்றியும் நடைபெறு கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் முருகன்,செயல் அலுவலர் குணசேகரன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழா கொடியேற்றத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    • போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சுல்தான் செய்யது இபுராகிம் பாதுஷா ஷஹுது ஒலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஒருமைப்பாட்டு விழாவாக, ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள், ஹக்தார் கமிட்டியினர் நடத்தி வருகின்றனர்.

    இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்கப் பட்டது.

    உலமாக்கள், தர்கா ஹக்தார்கள் ஒன்றிணைந்து தர்கா மண்டபத்தில் மாவட்ட தலைமை அரசு காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் உலக அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் சிறப்பு துஆ ஓதினர். தொடர்ந்து கடந்த 30-ந் தேதி மாலையில் தர்கா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்பட்டது.

    கொடியேற்றம் நேற்று ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து மாலை 4 மணிக்கு கொட்டும் முழக்கங்களுடன் குதிரை நாட்டியத்துடன் யானை மீது கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்தது.

    இரவு 7 மணிக்குமேல் நாரே தக்பீர் என்ற முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 12-ந்தேதி மாலை மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 13-ந்தேதி அதிகாலை தர்காவுக்கு சந்தனக்கூடு வந்தடையும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.

    19-ந்தேதி கொடியிறக்கத்துடன், யாத்ரீகர்களுக்கு நேர்ச்சை வழங்கப்பட்டு விழா நிறைவு பெறும். இந்த விழாவில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பல்லாயி ரக்கணக்கானோர் கலந்து கொள்வதால் தர்கா பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.

    ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் எஸ்.முகம்மது பாக்கிர் சுல்தான் தலைமையில், செயலாளர் எஸ்.செய்யது சிராஜ்தீன், துணை தலைவர் ஜெ.சாதிக் பாட்சா மற்றும் ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.

    ஏர்வாடி தர்கா சந்தன கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகிற 13-ந்தேதி(செவ்வா ய்க்கிழமை) உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் வகையில் 24-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப் படுவதாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் நாளை கொடியேற்றம் நடக்கிறது.
    • வருகிற 12-ந்தேதி சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்ற னர். இந்த விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக் கணக்கானோர் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்கியது.

    உலமாக்கள், தர்கா ஹக்தார்கள் இணைந்து தர்கா மண்டபத்தில் ஓதுகிறார்கள். மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் ஆலிம் உலக மக்களின் அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் சிறப்பு பிராத்தனை நடத்துகிறார். இன்று (30-ந்தேதி) மாலையில் தர்கா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்படுகிறது.

    நாளை (31-ந்தேதி) ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து மாலை 3.30 மணிக்கு கொடி ஊர்வலம் புறப்படுகிறது. முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்து மாலை 6 மணியளவில் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்படுகிறது.

    விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஜூன் 12-ந்தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா தொடங்குகிறது. 13-ந்தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தனக்கூடு வந்தடையும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது. 19-ந்தேதி கொடி இறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் எஸ்.முகம்மது பாக்கிர் சுல்தான் தலைமையில் செயலாளர் எஸ். செய்யது சிராஜ்தீன், துணைத்தலைவர் ஜெ.சாதிக்பாட்சா மற்றும் ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.

    • திருப்பூர் விஸ்–வேஸ்வரர், வீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்தி–ருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கோவில்களில் வருடந்தோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    திருப்பூர்:

    திருப்பூர் விஸ்வேஸ்வரர், வீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்–திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பூர் அரிசி கடை வீதியில் பிரசித்தி பெற்ற விஸ்வேஸ்வரர், வீரராகவப் பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளது. கோவில்களில் வருடந்தோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தேர்த்திருவிழா வருகிற ஜூன் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் வருகிற 2-ந் தேதி விஸ்வேஸ்வர சாமி தேரும், 3-ந் தேதி வீரராகவப் பெருமாள் தேரும் இழுக்கப்படுகிறது. தேர்த்திருவிழாவிற்கான கொடியேற்று விழா நேற்று கோவிலில் நடைபெற்றது. முதலாவதாக விஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்த கொடியேற்று விழாவில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, பக்தர்களின் நமச்சிவாய கோஷத்துடன் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து வீரராகவப் பெருமாள் கோவிலில் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கொடியேற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து சாமி திருவீதி உலா நடைபெற்றது.

    • கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடந்தது.
    • தீபாரதனை காட்டப்பட்டது.

    மதுரை

    மதுரை நகரின் மத்தியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று (26-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு பெருமாள், ஸ்ரீதேவி -பூதேவிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கோவில் முன்புள்ள கொடிமரம் பூக்களால் அலங்கரிக் கப்பட்டது. காலை 9 மணியளவில் சுவாமி-அம்மாள் கொடிமரம் முன்பு எழுந்தருள பட்டர்கள் மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.

    அதனை தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா வருகிறார். வருகிற 8-ந் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் தினமும் இரவு சுவாமி பல்வேறு வாக னங்களில் எழுந்தருளுகிறார். வருகிற 3-ந் தேதி தேரோட்டம் நடைபெறு கிறது.

    5-ந் தேதி கோவில் இருந்து சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வைகை ஆற்றங்கரையில் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அங்கு தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் 6-ந் தேதி காலை மீண்டும் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலுக்கு திரும்புகிறார்.

    8-ந் தேதி உற்சவ சாந்தி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.

    • நாளை மாலை 6மணிக்கு கொடியேற்றம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
    • 2-ந் தேதி மதியம் 3-30மணிக்கு ஈஸ்வரன் கோவில் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.

    திருப்பூர்  :

    திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவ பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேர் திருவிழா இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி இன்று 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6மணிக்கு கிராமசாந்தி அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. நாளை 27-ந்தேதி(சனிக்கிழமை) மாலை 6மணிக்கு கொடியேற்றம், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நாளை முதல் 1-ந்தேதி வரை காலை 10 மணி மற்றும் மாலை 6-30மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.

    நாளை 27-ந்தேதி கற்பக விருட்ஷ வாகனம், சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 2-ம் நாளான 28-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) பூத வாகனம், அன்ன வாகனத்திலும், 3-ம் நாளான 29-ந்தேதி(திங்கட்கிழமை) ராவணேஸ்வரர் வாகனம், காமதேனு, சேஷ வாகனத்திலும், 4-ம் நாளான 30-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) கற்பக விருட்சம், அதிகார வாகனம், யாழி வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 5-ம் நாளான 31-ந்தேதி(புதன்கிழமை) பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, கருட சேவை புறப்பாடு நடக்கிறது.

    6-ம் நாளான 1-ந்தேதி(வியாழக்கிழமை) திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை வாகனம், அம்மன் பல்லக்கு சேவை, அனுமன் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 7-ம் நாள் 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3-30மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. காலை 5மணியில் இருந்து 6மணிக்குள் சுவாமி ரதத்திற்கு எழுந்தருளல் நடக்கிறது. மதியம் 3-30மணிக்கு ஈஸ்வரன் கோவில் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது.

    8-ம்நாளான 3-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் 3-30மணிக்கு பெருமாள் கோவில் தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 9-ம் நாளான 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை பரிவேட்ைட, குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 10-ம்நாளான 5-ந்தேதி (திங்கட்கிழமை) தெப்பத்திருவிழா (பெருமாள் கோவில் ) நடக்கிறது.

    11-ம்நாளான 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மகா தரிசனம் , 12-ம்நாளான 7-ந்தேதி (புதன்கிழமை) மஞ்சள் நீரரட்டு விழா, மலர் பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 13-ம் நாளான 8-ந்தேதி (வியாழக்கிழமை) விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை காலை 10மணி, மாலை 7மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    விழாவையொட்டி நாளை 27-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை மாைல 6மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன்படி நாளை 27-ந்தேதி மாலை 6மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந்தேதி ஜெயந்தி ஸ்ரீதரின் தெய்வீக பாடல் நிகழ்ச்சி,29-ந்தேதி திருப்பூர் கம்பன் கழகம் சார்பில் சிறப்பு பட்டிமன்றம், 30-ந்தேதி சவிதா ஸ்ரீராமின் நாம சங்கீர்த்தனம், 31-ந்தேதி நவீன் பிரபஞ்ச நடன குழுவின் கொங்கு நாட்டு பாரம்பரிய ஒயில் கும்மி நடனம் நிகழ்ச்சி, 1-ந்தேதி பரத நாட்டிய நிகழ்ச்சி, 2-ந்தேதி பரத நாட்டிய நிகழ்ச்சி, 3-ந்தேதி நரசிம்மர் தரண்டகம் என்ற தலைப்பில் நாட்டிய நாடகம், 4-ந்தேதி வீரமணி ராஜூ, அபிஷேக் ராஜூ குழுவினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி, 5-ந்தேதி மணிகண்டனின் மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ,6-ந்தேதி தெய்வீக பாடல்கள் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

    • நாளை சந்திரபிரபை, 27-ந்தேதி பூத வாகனம் நடைபெற உள்ளது.
    • வருகிற 5-ந் தேதி ஏழூர் கண்ணாடி பல்லக்கில் உள்ள இறைவனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் கரந்தை சன்னதி தெருவில் புகழ்பெற்ற கருணாசாமி கோவில் அமைந்துள்ளது.

    வசிஷ்டர் பூஜை செய்து வழிபட்டதால் வசிஷ்டே ஸ்வரர் கோவில் எனவும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.

    இங்குள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர் என்றும், கருணாசாமி என்றும், இறைவி பெரியநாயகி என்றும், திருபுரசுந்தரி என்றும் அழைப்பது உண்டு.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் வைகாசி விசாக பெருவிழா மற்றும் ஏழூர் பல்லக்கு விழா தொடங்கியது.

    இவ்விழா வருகின்ற ஜூன் 5-ம்தேதி வரை நடக்கிறது.

    விழாவில் இன்று சூரிய பிரபை நடைபெற்றது.

    நாளை சந்திரபிரபை, 27-ம்தேதி பூத வாகனம், 28-ம்தேதி ரிஷப வாகனம் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 29-ம்தேதி யானை வாகனம், 30-ம்தேதி கைலாச வாகனம், 31-ம்தேதி குதிரை வாகனம், ஜுன் 1-ம்தேதி திருத்தேர், 2-ம்தேதி காலை வைகாசி தீர்த்தவாரி, மாலை பந்தற்காட்சி, 3-ம்தேதி காலை பிக்ஷாண்டவர், 4-ம்தேதி காலை 5 மணிக்கு சப்தஸ்தான விழா ஏமூர் கண்ணாடி பல்லக்கு புறப்படுதல், 5-ம் தேதி இரவு 7 மணிக்கு ஏழூர் கண்ணாடி பல்லக்கில் உள்ள இறைவனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன், கோவில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றார்கள்.

    • 365 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
    • வருகிற 30-ந்தேதி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள கொங்கணேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவரை கொங்கண சித்தர் பிரதிஷ்டை செய்தார் என்கிறது தலபுராணம். இங்கு கொங்கண சித்தருக்கு என தனி சன்னதி உள்ளது.

    அதன் அருகில் சப்தரிஷிகளும் உள்ளனர். இங்கு 11 அடுக்கு தீபமேடையில் 365 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பிரார்த்தனை களையும் நிறைவேறும் என்பது ஐதீகம். தலவிருட்சமாக மகிழ மரம் இருப்பது தனிச்சிறப்பு.

    இக்கோவிலில் பல்லாண்டுகளாக வைகாசி விசாகப் பெருவிழா சிறப்பாக கொண்டாட ப்படுகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இன்று காலை 9 மணிக்கு வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக நேற்று மாலை பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. இவ்விழா வருகின்ற ஜுன் 3-ம்தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலை 10 மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகமும் மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் 7 மணிக்கு சிறப்பு அலங்காரமும் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.

    முக்கிய நிகழ்வாக நாளை சூரிய பிரபை, 26-ம்தேதி சந்திரபிரபை, 27-ம்தேதி பூத வாகனம், 28-ம்தேதி திருக்கல்யாணம், 29-ம்தேதி யானை வாகனம், 30-ம்தேதி ரிஷப வாகனம் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா, 31-ம் தேதி கைலாச வாகனம்,
    ஜுன்1-ம்தேதி காலை திருத்தேர் , 2-ம்தேதி காலை தீர்த்தவாரி மாலை குதிரை வாகனம், 3-ம்தேதி விடையாற்றி நடக்கிறது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா , கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
    • திருவிழாக்களில் வைகாசி விசாகத் திருவிழா முக்கியமானதாகும்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் இது முக்கியமான கோவிலாகும். இந்தக் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகாசி விசாகத் திருவிழா முக்கியமான தாகும். இந்த ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா நாளை (25-ந் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலையில் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வாக வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணி அளவில் வெள்ளி ரதமும், 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    தினமும் மாலையில் ஆன்மீக இலக்கிய நிகழ்ச்சிகள், சிறப்புநாதசுவர கச்சேரிகள், பட்டிமன்றம் நடைபெறும்.வைகாசி விசாக விழா ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்தரவின்பேரில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு வைகாசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும். திருவிழா 17 நாட்கள் நடக்கிறது.

    இந்த ஆண்டுக்கான கொடியேற்றம் நடந்தது. அர்ச்சகர் சண்முகவேல் கொடி மற்றும் பொருட்களுடன் மேளதாளம் முழங்க 4 ரத வீதிகளில் வலம் வந்தார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் திருவிழா கொடியேற்றும் விழா நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

    திருவிழா கொடியேற்ற உபயதாரர் சிங்கம் என்ற மந்தையன் சேர்வை குடும்பத்தினர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். கொடியேற்ற விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கோவில் செயல்அலுவலர் இளமதி, தக்கார் சங்கரேசுவரி, பணியாளர்கள் பூபதி, கவிதா, வசந்த், பெருமாள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.

    சுகாதாரப்பணி, குடிநீர்வசதி, கூடுதல் தெரு விளக்கு ஏற்பாடுகளை சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பால்குடம், அக்னிச் சட்டி, பூக்குழி இறங்குதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினர்.

    • வருகிற 25-ந்தேதி காலை 8 மணிக்கு வைகாசி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • வருகிற 31-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வெண்ணாற்ற ங்கரை அருகில் நீலமேகப்பெ ருமாள், மணிக்குன்றப் பெருமாள், வீரநரசிம்மர் என மூன்று வடிவங்களில் பெருமாள் தனித்தனி கோவில்களில் அருள்பாலி க்கிறார். பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மூன்று கோவில்களையும் சேர்த்து மங்களாசாசனம் செய்ததால் மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது. இவை தஞ்சை மாமணிகோவில் என அழைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் மூலவரான

    நீலமேகப்பெருமாள் அமர்ந்த திருகோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

    இறைவி செங்கமலவல்லி. இந்த பெருமாளுக்கு தைல காப்பு சாற்றி வழிபாடு நடக்கிறது.

    இக்கோவிலில் உற்சவர்க ளுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி பிரமோற்சவம் 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி பிரமோற்சவம் வருகின்ற 25-ம்தேதி (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 2-ம்தேதி வரை நடக்கிறது.

    மேற்கண்ட தினங்களில் காலை உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், தீபாராதனையும், மாலை 6 மணிக்கு உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி புறப்பாடு கோவில் உட்பிரகாரத்தில் நடக்கிறது.

    தொடக்க நாளான 25-ம்தேதி காலை 8 மணிக்கு தஞ்சாவூர் வெண்ணா ற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவம் கொடியே ற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வாக 25-ம் தேதி அன்னப்பட்சி வாகனமும், 28-ம்தேதி கருடசேவை, 29-ம்தேதி சேஷ வாகனம், 30-ம்தேதி யானை வாகனம் , 31-ம்தேதி திருக்கல்யாணம், ஜூன்1-ம்தேதி குதிரை வாகனம், 2-ம்தேதி காலையில் திருத்தேர் தொடர்ந்து தீர்த்தவாரி நடக்கிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா , கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    ×