search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224799"

    • வேளாங்கண்ணி மாதா ரத பவனி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது .
    • விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பால்ராஜ் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. நிறைவு நாளான நேற்று மறை மாநில அருட்தந்தை பன்னீர்செல்வம் சிறப்பு திருப்பலியை நடத்தி வைத்தார்.

    அலங்கரிக்கப்பட்ட மின்னொளி ரதத்தில் வேளாங்கண்ணி மாதா சொரூபம் ஏற்றப்பட்டு பங்கு மக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜை நடந்தது. லாரன்ஸ் போஸ் ஆசீர்வாதத்துடன் சிறப்பு பூஜைகள் நிறைவு பெற்று சப்பரபவனி தொடங்கியது.

    நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ரத பவனியில் அருட்சகோதரிகள் வழிபாடு பாடல்களை பாடி வந்தனர். 43-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவில் நெற்குப்பை, சிங்கம்புணரி, மாதா நகர், காரையூர் இலங்கை முகாம் மக்கள் திரளாக பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பால்ராஜ் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குதந்தை வளன் தலைமையில் இறக்கப்பட்டு நன்றிதிருப்பலியுடன் விழா நிறைவுபெறுகிறது.

    வாடிப்பட்டி

    தென்னகத்து வேளாங்கன்னி என்று போற்றப்படும் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா நேற்று (29ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாள் நேற்று மாலை 6 மணிக்கு மதுரை மறைமாவட்டபேராயர் அந்தோணிபாப்புசாமி தலைமையில் கொடியே ற்றமும், சிறப்பு திருப்பலியும் நடந்தது.

    முக்கியவிழாவான செப்டம்பர் 8-ந்தேதி (வியாழக்கிழமை)ஆரோக்கிய அன்னையின் பிறப்புப்பெருவிழா, இறைவார்த்தை சபை 147-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவஊற்று இயேசுவின் அருமருந்து 22-வதுஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடக்கிறது. அன்றுமாலை 5மணிக்கு நற்கருணை ஆராதனையும், 6 மணிக்கு முப்பெரும் விழாகூட்டு திருப்பலியையும் சேலம்மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் நடத்துகிறார். இரவு 7மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் வண்ணவிளக்குகள் மலர்க ளால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர்பவ னியும் நடக்கிறது.

    9-ந்தேதி (வெள்ளிக்கி ழமை ) காலை 6.30 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குதந்தை வளன் தலைமையில் இறக்கப்பட்டு நன்றிதிருப்பலியுடன் விழா நிறைவுபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை எஸ்.வி.டி.அதிபர் அந்தோணி ஜோசப்அடிகளார், பங்குத்தந்தை வளன், உதவி பங்குதந்தை குழந்தையேசுதாஸ் அடிகளார் மற்றும் இருபால் துறவியர்கள், பங்குமக்கள் செய்துவருகின்றனர்.

    இதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ்இன்ஸ்பெக்டர் கனகசபாபதி தலைமையில் போலீசார்செய்திருந்தனர்.

    • திருக்கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்து பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு பெருவிழாவை தொடங்கி வைக்கிறார்.
    • நவநாட்கள் எனப்படும் விழா நாட்களில் தினமும் மாலையில் சிறுதேர்பவனியும் சிறப்பு திருப்பலியும் நடைபெறும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் அமைந்துள்ளது பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா பேராலயம்.

    பூண்டி புதுமை மாதா பேராலயத்தில் மாதா பிறப்பு பெருவிழா நாளை (செவ்வாய்) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது.

    நாளை மாலை பூண்டி மாதாவின் உருவம் வரையப்பட்ட திருக்கொடியை பக்தர்கள் ஏந்தி வர பூண்டி மாதா பேராலயத்தின் முன்புறமுள்ள கொடி மரத்தில் கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் திருக் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்து பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு பெரு விழாவை தொடங்கி வைக்கிறார்.

    கொடியேற்றத்தினை தொடர்ந்து மரியாள்-புதுமைகளின் அன்னை என்ற தலைப்பில் கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படும்.

    நவநாட்கள் எனப்படும் விழா நாட்களில்தினமும் மாலையில் சிறுதேர்ப வனியும் சிறப்பு திருப்பலி அருட்தந்தையர்கள் பீட்டர் பிரான்சிஸ், ஜான்சன், சேவியர் டெரன்ஸ், அடைக்கலம், ஆல்பர்ட், அகிலன் சர்பிரசாதம், பெர்க்மான்ஸ் அருள்தாஸ், சூசை மாணிக்கம், இன்ன சென்ட் ஆகியோரால் நிறைவேற்றப்படும்.

    பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு நாளாக கருதப்படும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ம் தேதி மாலை மரியாள் -எளிமையின் எடுத்துக்காட்டு இன்று மையக்கருத்தை வைத்து சிறப்பு திருப்பலியை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் நிறைவேற்றுவார்.

    அதனை தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் மல்லிகை மலர்களாலும் சிறப்பு மின் விளக்கு அலங்காரத்திலும் பூண்டி அன்னை யின் சொரூபம் வைக்க ப்படும்.

    அலங்காரத் தேர்ப வனியை பிஷப் அந்தோ ணிசாமி புனிதம் செய்து தொடங்கி வைப்பார்.

    தேர்பவனி நிறைவடைந்த உடன் (செப்டம்பர்) 9-ம்தேதி காலை மரியாள் -தாய்மையின் தலைப்பேறு என்ற பொருளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    அதன் பின்னர் கொடி இறக்கப்பட்டு பூண்டி மாதா திருத்தல பேராலயத்தில்பூண்டி புதுவை மாதாவின் பிறப்பு பெருவிழா நிறைவு பெறும்.

    விழா ஏற்பாடுகளை அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தையர்அருளானந்தம், ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    பூண்டி மாதாவின் பிறப்பு பெரு விழாவை ஒட்டி கோயில் வளாகத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை பூண்டி பேராலய அதிபர் சாம்சன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

    • ஆயர் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. தமிழ்மைய இயக்குனர் ஜெகத் கஸ்பார் ராஜ் மறையுரையாற்றுகிறார்.
    • 4-ந்தேதி காலை திருப்பலியும், அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு அன்பு விருந்து நடைபெறுகிறது. 7-ந்தேதி இரவு 7 மணிக்கு சகாய மாதா நவநாள் தேர் பவனி நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலய திருவிழா 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    குமரிமாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களில் முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் திருவிழா வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 11-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    2-ந் தேதி மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இதற்கு தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை தாங்கி, கொடியை ஏற்றிவைக்கிறார். பசிலிக்கா அதிபர் டோமினிக் எம்.கடாட்சதாஸ் முன்னிலை வகிக்கிறார். அதைத்தொடர்ந்து ஆயர் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. தமிழ்மைய இயக்குனர் ஜெகத் கஸ்பார் ராஜ் மறையுரையாற்றுகிறார்.

    4-ந்தேதி காலை திருப்பலியும், அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு அன்பு விருந்து நடைபெறுகிறது. 7-ந்தேதி இரவு 7 மணிக்கு சகாய மாதா நவநாள் தேர் பவனி நடக்கிறது. 8-ந்தேதி மாலை 6 மணிக்கு ஜெப மாலை, திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் இயேசுரத்தினம் தலைைம தாங்குகிறார்.

    9-ந்தேதி காலை திரு முழுக்கு திருப்பலி நடைபெ கிறது. இதில் அருட்பணியா ளர் ஜோஸ் ராபின்சன் மறை யுரையாற்றுகிறார். 10-ந் தேதி முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு குழித்துறை மறை மாவட்ட பொறுப்பு ஆயர் ஆன்றனி பாப்புசாமி தலைமை தாங்குகிறார். மாலை 6 மணி திருப்பலிக்கு மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்குகிறார். மனித உரிமை வக்கீல் அருட்பணியாளர் எம்.சி. ராஜன் மறையுரை யாற்றுகிறார்.

    அதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது. 11-ந் தேதி காலை 9 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட பொருளாளர் அகஸ்டின் தலைமை தாங்குகிறார். நாஞ்சில் பால் இயக் குனர் அருட்பணியாளர் ஜெரால்டு ஜஸ்டின் மறை ரையாற்றுகிறார். 11 மணிக்கு மற்றும் இரவு 8 மணிக்கு அன் னையின் அலங்காரத் தேர் பவனி நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பசிலிக்கா அதிபர் டோமினிக் எம் கடாட்சதாஸ், இணை அதிபர் ஜெயக்குமார். பங்கு பேரவை துணைத் தலைவர் ஆண்டனி வால்ஜின், செயலாளர் புஷ்பலதா, துணை செயலாளர் பெலிக்ஸ் ஆண்டனி ஜார்ஜ், பொருளாளர் ஏசுதாஸ் மற்றும் பங்கு மக்கள், இல்ல அருட் பணியாளர்கள், பக்த சபைகள் அருட் சகோதரிகள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • வருகிற 27-ந் தேதி உறியடி திருவிழா
    • பத்தாம் திருவிழா ஆராட்டு நிகழ்ச்சியோடு முடிவடைகிறது.

    கன்னியாகுமரி:

    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தோவாளை கிருஷ்ணசுவாமி கோவிலில் கொடியேற்று விழா நடை பெற்றது.

    வருகிற 27-ந் தேதி உறியடித் திருவிழா நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் நேற்று காலையில் கணபதி ஹோமம், கலச பூஜை, அலங்காரம் பல்லக்கில் வீதி உலா வருதல், கொடி பூசை திரு கொடியேற்று விழா நடைபெற்றது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் அறநிலைய துறை கண்கா ணிப்பாளர் ஆனந்தன் ஸ்ரீகாரியம் சேர்மராஜ், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், பஞ்சாயத்து தலைவர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் தாணு, பக்தர் சங்க நிர்வாகிகள் கண்ணன், சிதம்பரதாணு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    7-வது திருவிழா அன்று விநாயகப் பெருமான், முருகப்பெருமான், அம்மை யப்பர் கிருஷ்ண சாமி வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெறும். 9-ம் திருவிழா அன்று உறியடி மகா உற்சவம் நடைபெறும். பத்தாம் திருவிழா ஆராட்டு நிகழ்ச்சியோடு முடிவடைகிறது.

    • விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் 22-ந் தேதி தொடங்குகிறது.
    • வருகிற 30-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த விழா பல்வேறு கட்டுப்பாடு களுடன் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 22-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த ஆண்டு விழாவை விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விழா நாட்களில் இரவு கற்பகவிநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். முதல் நாள் இரவு மூஷிக வாகனத்திலும், 2-ம் நாள் சிம்ம வாகனத்திலும், 3-ம் நாள் பூத வாகனத்திலும், 4-ம் நாள் கமல வாகனத்திலும், 5-ம் நாள் ரிஷிப வாகனத்திலும் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.

    6-ம் நாள் விழாவான வரும் 27-ந் தேதி மாலை 4.30 மணிக்கு கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ம் நாள் திருவிழாவில் மயில் வாகனத்திலும், 8-ம் நாள் திருவிழா அன்று குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.

    9-ம் நாள் திருவிழா வான 30-ந் தேதி காலை திருத்தேருக்கு கற்பகவிநாயகர் எழுந்த ருளல் நிகழ்ச்சியும், மாலை தேரோட்டமும் நடக்கிறது.

    • மானாமதுரை அருகே முளைப்பாரி திருவிழா நடந்தது.
    • இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பெரிய கோட்டை அருகே உள்ள தெக்கூரில் உலகுடைய அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமிகள் முளைப்பாரிகளை வளர்க்க தொடங்கினர்.

    தினந்தோறும் இரவு தெக்கூரில் உள்ள முளைக்கொட்டு திண்ணையில், பாரம்பரிய முறைப்படி பெண்கள் மற்றும் சிறுமிகள் கும்மிபாட்டு பாடி ஆடியபடியும், சிறுவர்கள் சிலம்பாட்டம் ஆடியும், கும்மி கொட்டி அம்மனை வழிபட்டனர்.

    மழை பெய்து, விவசாயம் செழிக்கவும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறவும், கிராம மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று மாலை முளைப்பாரிகளை பெண்கள் மற்றும் சிறுமிகள் புத்தாடைகள், நகைகள் அணிந்து ஊர்வலமாக சுமந்து கொண்டு கைலாசநாதர் கோமதி அம்மன், உலகுடைய அம்மன் கோவில்களில் இறக்கி வைத்து வழிபாடு செய்த பின்னர் அருகில் உள்ள உப்பாற்றில் சென்று கரைத்தனர்.

    • பாளை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் கொடியை ஆசீர்வதிக்க, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
    • கொடியேற்று விழாவையொட்டி, கோவில்பட்டி செஞ்சுரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப் பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலத்தின் விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது.

    கொடியேற்றம்

    வீரமாமுனிவர் பங்கு குருவாகப் பணியாற்றிய இந்த ஆலயத்தின் விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றத்தையொட்டி, நேற்று மாலை 6 மணிக்கு மிக்கேல் அதிதூதரின் திருவுருவப் பவனி நடந்தது.

    தொடர்ந்து, 6.30 மணிக்கு கொடிமரம் நடப்பட்டது. பின்னர், கொடிமரத்தில் முதலாவதாக திருத்தலக் கொடியும், அதைத் தொடர்ந்து இறைமக்கள் கொண்டு வந்திருந்த வண்ணக் கொடிகள் அணிவகுப்பாகக் கட்டப்பட்டன.

    பாளை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் கொடியை ஆசீர்வதிக்க, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, வட்டார அதிபர் அருட்திரு சார்லஸ், பாளையங்கோட்டை புனித அந்தோணியார் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.எஸ்.அந்தோணிசாமி ஆகியோர் திருப்பலி மற்றும் மறையுரை நிகழ்த்தினர்.

    இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றம் நிகழ்ச்சியை முன்னிட்டு, நேற்று மாலை 5.30 மணி முதல் அசன விருந்து நடந்தது.

    கொடியேற்று விழாவை யொட்டி, கோவில்பட்டி செஞ்சுரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப் பட்டது. திருவிழாவின் 2-ம் திருநாளான இன்று காலை 8.30 மணிக்கு புதுநன்மை விழா, 8-ம் திருநாளான 13-ந்தேதி காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடு, 9-ம் திருநாளான 14-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை மற்றும் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.

    10-ம் திருநாளான 15-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயர் எஸ்.அந்தோணிசாமி தலைமையில் தேரடித் திருப்பலி நடைபெறும். அதைத் தொடர்ந்து, கும்பிடு சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அந்தோணி அ.குரூஸ், உதவி பங்குதந்தை ஜெனால்டு அ.ரீகன், மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் மற்றும் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி பகுதி இறைமக்கள் செய்து வருகின்றனர். காமநாயக்கன்பட்டி திருவிழாவையொட்டி, மாவட்ட காவல் எஸ்.பி, பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், கோவில்பட்டி டி.எஸ்.பி., வெங்கடேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    • ஆடிப்பூர நாயகி ஆண்டாள் ஐக்கியமான விஷ்ணுவின் அம்சத்தில் அருள்பாலிப்பவர் என்பதும், உற்சவர் ஆடிப்பூர அம்மன் என்பதும் சிறப்புடையது.
    • திருவையாறு புஷ்யமண்டபத்துறை காவிரி ஆற்றில் ஆடிப்பூர அம்மனின் தீர்த்தவாரியும், வீதியுலாவும் நடைபெற்றது.

    திருவையாறு:

    தருமையா தீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9-ம் நாளில் நேற்று பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்த தேரோட்டம் நடைபெற்றது.

    10-ம் நாளான இன்று ஆடிப்பூர திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அறம்வளர்த்த நாயகி உடனாகிய அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த அம்மன் ஆடிப்பூர நாயகி ஸ்ரீஆண்டாள் ஐக்கியமான விஷ்ணுவின் அம்சத்தில் அருள்பாலிப்பவர் என்பதும், உற்சவர் ஆடிப்பூர அம்மன் என்பதும் சிறப்புடையது.இதையடுத்து திருவையாறு புஷ்யமண்டபத்துறை காவிரி ஆற்றில் ஆடிப்பூர அம்மனின் தீர்த்த வாரியும், திருவீதி உலாவும் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்றிரவு சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் திருமுறைகள் பாடியவாறும், தவில், நாதஸ்வர இசையுடனும், கயிலை வாத்திய இசை முழக்குடனும், பரதநாட்டியக் கலை இசை நிகழ்ச்சியுடனும் அம்மன் கோயில் வெளிப்பிரகாரத்தை பக்தர்கள் ஏழு முறை சுற்றி வரும் சப்தப்பிரதட்சணம் நடக்கிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி செப்டம்பர் 7-ந்தேதி நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்,:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை இந்த பேராலயம் பெற்று விளங்குகிறது.

    இந்த பேராலயம் வங்க கடலோரம் அமைந்திருப்பதால் மேலும் சிறப்பு பெற்றுள்ளது. இந்த ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டு பெருவிழா பல்வேறு சிறப்பு பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி செப்டம்பர் 7-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த விழாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்காக பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆண்டு பெருவிழாவை முன்னிட்ட பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெறுகிறது. இதற்காக பேராலயத்தில் சாரம் அமைக்கப்பட்டு வருகிறது.

    • கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலும் இருந்து வருகிறது.
    • பக்தர்கள் அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலும் இருந்து வருகிறது.கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

    அதேபோல் ஆடிக்கு ண்டம் திருவிழா இக்கோவிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். கடந்த 19-ந் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் ஆடிக்குண்டம் திருவிழா ெதாடங்கியது. இதையடுத்து இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.தொடர்ந்து நாளை பொங்கல் வைத்து திருக்குண்டம் திறத்தல்,அதை தொடர்ந்து ஆடி 10-ம் நாள் செவ்வாய்கிழமை அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, காலை 6மணிக்கு திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து ஆடி 11-ம் நாள் மாவிளக்கு, பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, ஆடி 12-ம் நாள் ஆடி அமாவாசை பரிவேட்டை, ஆடி 13-ம் நாள் மகா அபுஷேகம் மஞ்சள் நீராடல், ஆடி 16-ம் நாள் 108 குத்துவிளக்கு பூஜை,ஆடி 17-ம் நாள் மறுபூஜை உடன் ஆடிக்குண்டம் திருவிழா நிறைவடையும்.ஆடிக்குண்டம் திருவிழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தாசம்பத்,உதவி ஆணையர் செயல் அலுவலர் கைலசாமூர்த்தி செய்து வருகின்றனர்.

    மேலும் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில், மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் (பொறுப்பு),போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், முருகநாதன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • ராமேசுவரம் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இந்த விழா 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

    ஆடித் திருவிழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று கோவில் திருக்கல்யாணம் மண்டபத்தில் வாஸ்து ஜெயந்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதனைதொடர்ந்து இன்று தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை ஒட்டி ராமநாத சுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜை கள், தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணை யர் மாரியப்பன் மற்றும் அலுவலர்கள், பணி ணயாளர்கள் கலந்து கொண்டனர்.

    முக்கிய திருவிழாவான தேரோட்ட நிகழ்ச்சி வருகிற 31-ந்தேதி நடக்கிறது. ஆகஸ்டு 2-ந் தேதி மாலை மாற்றும் நிகழ்ச்சியும், 3-ந் தேதி பர்வதவர்தனி அம்மன்-ராமநாதசாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி யும் நடைபெற உள்ளது. 8-ந் தேதி மண்டகப்படி நிகழ்ச்சியும் நடைபெறுவதோடு திருவிழா முடிவடைகிறது.

    ஆடித்திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு 17 நாட்களில் தினசரி சுவாமி-அம்மன் அலங்காரத்துடன் புறப்பாடாகி கோவிலை சுற்றி 4 ரத வீதியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    ×