search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225012"

    • பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி, ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
    • ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் ரூ.7 கோடி வரி பாக்கி நிலுவையில் உள்ளதாகவும்,கடை வாடகை உரிய காலத்திற்குள் செலுத்தாவிட்டால்,18 சதவீத தண்ட வட்டி சேர்த்து வசூலிக்கப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் வரி இனங்களை விரைவாக செலுத்தி,ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பல்லடம் நகராட்சி 18 வார்டுகளில் 15,664 குடியிருப்புகள் 1,263 வணிக கட்டடங்கள், 546 தொழிற்கூடங்கள் மற்றும் 25 கல்வி நிறுவனங்கள் உள்ளன. சொத்து வரி ரூ.2கோடியே99லட்சத்து 59 ஆயிரம், காலியிட வரி ரூ.5லட்சத்து65 ஆயிரம், தொழில் வரி ரூ.15லட்சத்து39 ஆயிரம், குடிநீர் கட்டணம் ரூ.1கோடியே63லட்சத்து12 ஆயிரம், கடை வாடகை ரூ.3கோடியே15லட்சத்து10 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.6 கோடியே 98 லட்சத்து 89 ஆயிரம் வரித்தொகையை பொதுமக்கள் செலுத்தாததால் நிலுவையில் இருக்கிறது.

    மேலும் பல்லடம் நகராட்சியில்,பஸ் நிலையம்,அண்ணா வணிகவளாகம் போன்றவற்றில் கடை வாடகைக்கு எடுத்துள்ளவர்கள் உரிய காலத்திற்குள் வாடகை செலுத்தாவிட்டால்,18 சதவீத தண்ட வட்டி சேர்த்து வசூலிக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவேபொதுமக்கள் வரி இனங்களை உடனடியாக செலுத்தி 18 சதவீத தண்ட வட்டி,குடிநீர் இணைப்பு துண்டிப்பு,ஜப்தி மற்றும் நீதி மன்ற நடவடிக்கையில் இருந்து தவிர்த்துக் கொள்ளவேண்டும். பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூல் மையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தங்களது இல்லத்தில் இருந்தே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிஎன் அர்பன் இ சேவை என்ற செயலியில் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்த தங்களது அலைபேசி எண்ணின் மூலமாக செலுத்தலாம். அதற்குரிய ரசீது உடனே வரும் .அதனை பதிவு இறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பின்னர் பல்லடம்,கடைவீதியில் உள்ள கடைகளில், நகராட்சி ஆணையாளர் விநாயகம் தலைமையிலான அதிகாரிகள் வசூலில் ஈடுபட்டனர்.

    • தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • அதனை தொடர்ந்து நகராட்சி மயானத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நகராட்சிக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் தனம், ஆணையாளர் முஸ்தப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகராட்சியின் 20-வது வார்டு கிழக்கு பாவடி தெரு பகுதியில் குப்பை அறைக்கும் கிடங்கு அமைக்க நகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டப்பட்டு அதற்கான பூமி பூஜை போடப்பட்ட போது அதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் விளைவாக நகராட்சி நிர்வாகம் இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு அதாவது மீண்டும் சின்னா–கவுண்டம்பட்டி பகுதியில் அமைப்பதாக உறுதி செய்து தீர்மானிக்கபட்டது.

    அதனை தொடர்ந்து நகராட்சி மயானத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நகராட்சிக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பேசிய 7-வது வார்டு உறுப்பினர் தேன்மொழி, 3-வது வார்டு உறுப்பினர் குமரேசன் ஆகியோர் நகராட்சி பகுதியில் சாக்கடை மற்றும் மழை நீர் அதிக அளவில் தேங்குவதால் கொசு, கிருமிகளால் வைரஸ் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளோம்.

    எனவே இந்த நிலைமை பொதுமக்களுக்கும் வந்து விட கூடாது என்பதால் சுகாதார பணிகளை தீவிர படுத்தவேண்டும் என்றனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் 4 பேரை தவிர மற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், மன்றத்தில் மொத்தம் 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மேலூர் நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
    • நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலூர்

    மேலூர் நகராட்சி கூட்டம் தலைவர் முகமது யாசின் தலைமையில் நடந்தது. இதில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலூர் நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மலம்பட்டி ஊரணியில் நடைபெற்று வரும் பூங்கா பணிக்கு கூடுதலாக நிதி ஒதுக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    2-வது வார்டு அ.ம.மு.க. உறுப்பினர் ஆனந்த் மேலூர் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்கள் வயர்லையன் பதிப்பதற்காக பள்ளங்களை தோண்டுவதால் குடிநீர் உடைப்பு ஏற்பட்டு ரோட்டில் பல இடங்களில் தண்ணீர் வீணாக செல்கிறது என்று தெரிவித்து, சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் நடமாடும் வண்டியினை வழங்கிடவும் கோரிக்கை விடுத்தார்.

    மதுரை எம்.பி. வெங்கடேசன் முயற்சியால் மேலூர் அரசு கலைக்கல்லூரியில் வருகிற 8-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த வாழ்வாதார முகாமை தங்கள் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளை பங்கேற்க வைத்து பயன்பெற செய்யுமாறு நகர் மன்ற தலைவர் முகமது யாசின் கவுன்சிலர்களை கேட்டுக்கொண்டார்.

    இந்த கூட்டத்தில் நகர்மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன், ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், சுகாதார ஆய்வாளர் சரவணன், நகர அமைப்பு ஆய்வாளர் சரவணகுமார், மேலாளர் தியாகராஜன், இளநிலை அலுவலர் ஜோதி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • நகரில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை அகற்றி, தரமான புதிய தார் சாலைகளை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
    • பணிகளையும் அலட்சியத்துடன் மேற்கொண்டு வரும் அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

    ஆறுமுகநேரி:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளையின் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காயல்பட்டினம் நகராட்சி மன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

    நகரில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை அகற்றி, தரமான புதிய தார் சாலைகளை அமைத்தல், செயல்படாமல் இருக்கும் பயோகாஸ் திட்டத்தை விரைவில் இயக்கி, அதன் மூலம் மின் உற்பத்தி செய்தல், குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல், வார்டு மறுவரையறையில் நிலவும் குளறுபடிகளைச் திருத்தி அமைத்தல், நகரின் மக்கள்தொகைக்கு ஏற்ப வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், 2-வது குடிநீர் திட்டத்தின் மூலம் சீரான குடிநீர் விநியோகத்தை ஏற்படுத்துதல். தெருவிளக்குகள் பராமரிப்பு, நகர்மன்றக் கூட்டங்களில் நகர பொதுமக்களைப் பார்வையாளர்களாக அனுமதித்தல், கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி சுகாதாரமாகவும் பராமரித்தல், பல்லாண்டு காலமாக வெறும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிக் கொண்டு அனைத்துப் பணிகளையும் அலட்சியத்துடன் மேற்கொண்டு வரும் அலுவலர்களை இடமாற்றம் செய்தல், எதிர்வரும் மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய கோரிக்கைகள் மனுவில் இடம்பெற்றிருந்தன. இந்த மனுவை முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் தலைமையில் நகர் மன்ற ஆணையாளர் சுகந்தி, நகர் மன்ற தலைவர் முத்து முகமது ஆகியோரிடம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் இப்ராஹீம் மக்கீ, மாவட்டச் செயலாளர் மஹ்மூதுல் ஹசன், நகர தலைவர் நூவு சாகிப், செயலாளர் அபூ சாலிஹ், பொருளாளர் சுலைமான், மாவட்ட நிர்வாகிகளான மன்னர் பாதுல் அஸ்ஹப், அம்பா ஜாபர், முகம்மத் இஸ்மாயில் புகாரீ, சித்தீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கொல்லங்கோடு நகராட்சியில் அவசர கூட்டம் நேற்று தொடங்கியது.
    • உள்ளிருப்பு போராட்டம் இரவிலும் நீடித்தது.

    கன்னியாகுமரி:

    கொல்லங்கோடு நகராட்சியில் அவசர கூட்டம் நேற்று தொடங்கியது.இதில் நகராட்சித் தலைவர் ராணி ஸ்டீபன் மற்றும் ஆணையர், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் ஆணையர் மீது பல்வேறு புகார்களை கூறினர்.

    குறிப்பாக பல்வேறு வளர்ச்சி பணிகள் கிடப்பில் உள்ளதாகவும் தற்காலிக ஊழியர்களை மிரட்டுவதாகவும் கூறினர்.இதனால் கோபமடைந்த ஆணையர் ஒரு கட்டத்தில் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியே சென்றார். இதனால் ஆத்திரமடைந்த தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தின் முன்பக்கத்தில் வரிசையாக அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து நகராட்சி தலைவர் ராணி ஸ்டீபன் கூறியதாவது:-

    நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பல மாதங் களாக டெண்டர் விடப்பட்ட வளர்ச்சிப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதற்கான ஆணை பிறப்பிக்காமல் உள்ளது. ஆணையர் நகராட்சி சம்பந்தமான பணிகள் தொடர்பாக தலைவரிடம் எந்த கலந்தா லோசனையும் செய்வதில்லை.சுமார் 20 ஆண்டுகளாக கலெக்டர் வழிகாட்டுதல் படி தற்காலிக ஊழியராக செயல்பட்டு வருபவர்களை வேலையை விட்டு நீக்குவேன் என மிரட்டுகிறார்.

    இவை குறித்து பேச அவசர கூட்டம் கூட்டப்பட்டது.ஆனால் கூட்டத்திற்கு வந்த ஆணையர் உடனடியாக புறக்கணிப்பு செய்து விட்டார். இதனை கண்டித்து அனைத்து கட்சியை சேர்ந்த 33 கவுன்சிலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரவிலும் இந்த போராட்டம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.நேரமாகியும் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை இதனால் உள்ளிருப்பு போராட்டம் இரவிலும் நீடித்தது. இன்றும் 2-வது நாளாக போராட்டம் நடக்கிறது.

    • கலை சிறப்புகள் மிகுந்த சலங்கையாட்டமும், வள்ளி கும்மியாட்டமும் நடந்தது.
    • சலங்கையாட்டம், வள்ளி கும்மியாட்ட நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    காங்கயம் :

    காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் சார்பில் என்.எஸ்.என். திருமண மகாலில் தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் கலை சிறப்புகள் மிகுந்த சலங்கையாட்டமும், வள்ளி கும்மியாட்டமும் நடந்தது.

    அப்போது கலந்து கொண்ட காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்ற நிர்வாகிகளில் ஒருவரும், காங்கயம் பஞ்சாயத்து யூனியன் சேர்மனுமான மகேஸ்குமார் தனது மன்ற நிர்வாகிகளுடன் (ஆண்கள் மற்றும் பெண்களுடன்) சலங்கையாட்டம் ஆடினார். தொடர்ந்து கொடுவாய் வெற்றிவேலன் கலைக்குழுவின் தலைவர் குருவேலன் தங்கவேலன் தங்களது குழுவின் உறுப்பினர்களுடன் வள்ளி கும்மியாட்டம் ஆடினார்.

    அப்போது கலந்து கெரண்ட காங்கயம் நகராட்சி சேர்மன் சூர்யபிரகாஷ், காங்கயம் தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் என்.எஸ்.என்.தனபால் , செயலாளர் கங்கா சக்திவேல், பொருளாளர் பாலாஜி ரவிச்சந்திரன், காங்கயம் நகர , ஒன்றிய, வட்டார பகுதிகளின் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள் , சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்கள் சலங்கையாட்டம், வள்ளி கும்மியாட்ட நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.   

    நாகர்கோவில், ஆக. 12-

    கன்னியாகுமரி மாவட் டத்திற்குட்பட்ட அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பான முன் னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர் களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்டகலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் அனைத்து துறை அலுவலர் களுடனான கலந்தாய்வு மேற்கொ ண்டார் . பின்னர் அவர் கூறியதாவது:-

    மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின் படி 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவினை வெகுசிறப்பாக கொண் டாடுவது குறித்தும், சுதந் திர போராட்ட வீரர்களின் தியாகத்தினை பொதுமக்க ளிடையே எடுத்து கூறுவது மற்றும் விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் விதமாகவும், தேச பக்தியினை உணர்த்தும் விதமாகவும் நாளை 13-ந்தேதி காலை முதல் 15-ந்தேதி சூரியன் மறையும் வரை (மாலை 6 மணி) கன்னியாகு மரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறு வன கட்டிடங்களின் முகப் பில் முழு மரியாதையுடன் தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத் திற்குட்பட்ட ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 2 லட்சத்து 25 ஆயிரம் தேசிய கொடிகள், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகு திகளில் 70 ஆயிரம் தேசிய கொடிகள், கொல்லங்கோடு நகராட்சியில் 15 ஆயிரம் தேசிய கொடிகள் , பத்ம நாபபுரம் நகராட்சியில் 5 ஆயிரம் குழித்துறை நகராட்சியில் 6 ஆயிரம் தேசிய கொடிகள்.

    குளச்சல் நகராட்சியில் 6 ஆயிரம் தேசிய கொடிகளை வீடுகளின் முகப்பில் முழு மரி யாதையுடன் ஏற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நாளை 13-ந்தேதி அன்று அரசு அலுவலகங்கள் , பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறு வன கட்டிடங்களின் முகப் பில் முழு மரியாதையுடன் தேசிய கொடியினை ஏற் றுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    மாவட்டத் திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி களில் தேர்ந் தெடுக்கப்பட்ட உள்ளாட் சித் தலைவர்கள் ஆகஸ்ட் 15-ந் தேதி அன்று தேசிய கொடி யேற்றுவதை உறுதிப்படுத் திடதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    13-ந் தேதி அன்று காலை முதல் 15 ம் தேதி அன்று சூரி யன் மறையும் நேரத்தில் தேசிய கொடியினை , முழு மரியாதையுடன் கீழே இறக்கி பத்திரப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப் படுகிறது.

    இவ்வாறு அவர் தெரி வித்தார்.

    • இதனால் பொதுமக்கள் தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் அப்பகுதி பரபரப்பு நிலவியது.

    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சி 14 வார்டுக்கு உட்பட்ட காடம்பாடி சவேரியார் கோவில் தெரு பகுதியில் சுமார் 1000 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள 5-ம் எண் அரசு நியாய விலைக்கடையில் வழங்கபடும் அரிசி தரமற்று உணவிற்கு பயன்படுத்த முடியாத நிலையில் வழங்கபடுவதாக கூறப்படுகிறது.

    மேலும் பழுத்த சிவப்பு நிற கலர்களில் வண்டுகள் மொய்த்து துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் சமைத்து உண்ணும் போதும் துர்நாற்றம் வீசுவதாகவும் தங்கள் குழந்தைகள் உணவை சாப்பிட முடியவில்லை என்றும் இந்தஅரிசியை வாங்க வேண்டும் என ஊழியர்கள் பொதுமக்களை நிர்பந்தி பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதனால் பொதுமக்கள் தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பு நிலவியது.

    எனவே தங்கள் பகுதிக்கு தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காசநோய் விழிப்புணர்வு முகாமிற்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.
    • தமிழக அரசால் காச நோயை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்திற்கு அனைத்து ஆய்வு வசதிகளுடன் கூடிய வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கவுன்சிலர்களுக்கான காசநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், மாவட்ட நல கல்வி அலுவலர் மாரிமுத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட மாவட்டதுணை இயக்குனர் காசநோய் பிரிவு டாக்டர் வெள்ளைச்சாமி பேசியபோது,

    தற்போது தமிழக அரசால் காச நோயை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்திற்கு அனைத்து ஆய்வு வசதிகளுடன் கூடிய வாகனம் வழங்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வுக்கூடங்களில் சென்று ஆய்வு செய்தால் மிகப்பெரிய செலவினங்களால் பொதுமக்கள் பாதித்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அரசின் சார்பிலேயே அனைத்து பரிசோதனைகளும் செய்வதற்காக இந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளது. எனவே நகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் காச நோய் இருப்பதாக தெரிந்தால் உடனடியாக எங்களை தொடர்பு கொண்டு அந்த வாகனத்துடன் வந்து காசநோய் பரிசோதனை செய்யப்படும் எனவும், பரிசோதனை முடிவின்படி காசநோய் இருப்பது தென்பட்டால் அரசு மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளித்து காசநோயிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும் எனவும், இதற்கு நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பேசினார்.தொடர்ந்து காசநோய் குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.இதில் திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் உதயகுமார், முதல் நிலை காச நோய் மேற்பார்வையாளர் செல்வகுமார், சுகாதார பார்வையாளர் ராம்திவ்யா, கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்பட வேண்டும்.
    • வரும் 28-ந் தேதி டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்த கோவை கருமத்தம்பட்டி, உளுந்தூர் பேட்டை, பேட்டை, திருக்கோவிலுார், சோளிங்கர், திருப்பூர் திருமுருகன்பூண்டி, மாங்காடு, திட்டக்குடி, தாரமங்கலம், பள்ளப்பட்டு, திருச்செந்தூர், முசிறி ஆகியவை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டன.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

    நகராட்சி கட்டமைப்பில் நிர்வாக அலுவலகம், நகரமைப்பு பிரிவு, பொறியியல் பிரிவு, சுகாதாரப்பிரிவு, பிறப்பு, இறப்பு சான்று வழங்கும் பிரிவு, வரி வசூல் மையம் என பல்வேறு பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும்.கமிஷனர் தலைமையில், ஒவ்வொரு பிரிவுக்கும் அதிகாரிகள் மற்றும் அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்பட வேண்டும்.

    அதற்கான பணிகள் படிப்படியாக நடந்து வரும் நிலையில் தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளுக்கு புதிய அலுவலகம் கட்ட அரசின் சார்பில் தலா ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிதியின் மூலம் புதிய அலுவலகத்துக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. வரும் 28-ந் தேதி டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் நடைபெறும் பணிகளை நிர்வாக ஆணையர் ஆய்வு செய்தார்.
    • குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, திருப்பாற்கடலில் நடைபாதை அமைக்கும் பணி, உரக்கிடங்கில் மக்கும் குப்பைகள் உரமாக்கும் பணி, சக்கரை குளம் தெருவில் புதிதாக மேற்கொள்ள இருக்கும் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா ஆய்வு செய்தார்.

    அப்போது நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன், நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி, நிர்வாகப்பொறியாளர் சேர்மக்கனி, ஆணையாளர் ராஜமாணிக்கம், பொறியாளர் தங்கபாண்டியன், நகர் நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளர் சந்திரா ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்பு நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் பணிகள் சம்பந்தமான ஆய்வுகளை ஆைணயர் மேற்கொண்டார். இதில் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நகராட்சியில் நடந்து வரும் குப்பைகள் சேகரிக்கும் பணிகளை நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆய்வின் போது ஆணையாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    களக்காடு:

    களக்காடு நகராட்சியில் நேற்று நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.

    அவர் நகராட்சியில் நடந்து வரும் குப்பைகள் சேகரிக்கும் பணி, உரகிடங்கு பணிகள், மாணிக்கம் குளத்தில் தூர்வாரப்பட வேண்டிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அவருடன் ஆணையாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு உள்பட பலர் சென்றனர்

    ×