search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏர்டெல்"

    • இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தவரை உதவிகளை செய்து வருகின்றனர்.

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி இரவில் கனமழை கொட்டியது.

    அதனால் வயநாட்டில் உள்ள முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடன் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், வாகனங்கள் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டன.

    அதிகாலை நேரம் என்பதால் அங்கு வசித்து வந்தவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அவர்கள் நடக்க போகும் விபரீதத்தை உணராத நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். பலர், மண்ணோடு மண்ணாக புதைந்தும் போயினர். இதுவரை நிலச்சரிவில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்று 3-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இடையிடையே பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    இதனிடையே, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்தவரை உதவிகளை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள எர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

    அதாவது, வேலிடிட்டி நிறைவடைந்து ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு 3 நாட்களுக்கு 1ஜிபி மொபைல் டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களுக்கு நீட்டிப்பு எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    • டேட்டா பூஸ்டர் பேக் சலுகைகள் அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா வழங்குகின்றன.
    • அதிக டேட்டா வழங்கும் சலுகைகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    ஏர்டெல் நிறுவனம் புதிதாக டேட்டா பூஸ்டர் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை பயனர்களுக்கு அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா வழங்குகிறது.

    ஏற்கனவே 5ஜி டேட்டா சலுகையை பெறாதவர்கள் கூட அன்லிமிட்டெட் 5ஜி கனெக்டிவிட்டி பெற செய்யும் வகையில், இந்த பூஸ்டர் பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. புது டேட்டா பூஸ்டர் பேக் சலுகைகள் 5ஜி மட்டுமின்றி கூடுதலாக 4ஜி டேட்டா வழங்குகின்றன.

    சமீபத்தில் ஏர்டெல் நிறுவன சலுகைகளின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், புதிய டேட்டா பூஸ்டர் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விலை உயர்வு காரணமாக ஏர்டெல் அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா தினமும் 2 ஜிபி மற்றும் அதற்கும் அதிக டேட்டா வழங்கும் சலுகைகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    புதிய டேட்டா பேக் மூலம், தினமும் 1 ஜிபி அல்லது 1.5 ஜிபி டேட்டா வழங்கும் சலுகைகளில் ரீசார்ஜ் செய்துள்ளவர்கள் ரூ. 51 விலையில் துவங்கும் டேட்டா பூஸ்டர் சலுகைகளை ரீசார்ஜ் செய்து அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா பெறலாம். புதிய சலுகைகளின் விலை ரூ. 51, ரூ. 101 மற்றும் ரூ. 151 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

    இவற்றில் கூடுதலாக 3ஜிபி, 6ஜிபி மற்றும் 9ஜிபி வரை 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த பூஸ்டர் பேக் சலுகைகளின் வேலிடிட்டி, பயனர்கள் ஏற்கனவே ரீசார்ஜ் செய்துள்ள சலுகைகள் முடியும் வரை பொருந்தும். 

    • 1999 ரூபாய் பிரீபெய்டு ரிசார்ஜ் பிளான்- 365 நாள் வேலிடிட்டி கொண்டதாகும்.
    • 509 ரூபாய் பிரீபெய்டு பிளான்- 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும்.

    ஏர்டெல் உள்ளிட்ட செல்போன் சேவை நிறுவனங்கள் விலையை அதிரடியாக உயர்த்தின. இதனால் டேட்டா உபயோகிப்பவர்கள் முதல் பேசுவதற்காக மட்டும் போன் பயன்படுத்துபவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பெரும்பாலானோர் இரண்டு சிம் கார்டு வைத்திருப்பார்கள். ஒரு சிம் கார்டை டேட்டா, போன் பேச வைத்திருப்பார்கள். மற்றொரு சிம் கார்டை மாற்றபாக பயன்படுத்த வைத்திருப்பார்கள்.

    தற்போது விலை உயர்வு காரணமாக இரண்டிற்கும் அதிகமான தொகையை செலவிட வேண்டியுள்ளது. இந்த நிலையில் ஏர்டெல் சில திட்டங்களை அறிவித்துள்ளது.

    1999 ரூபாய் ப்ரீபெய்டு ரிசார்ஜ் பிளான்

    365 நாள் வேலிடிட்டி கொண்டதாகும். அத்துடன் 24GB டேட்டா வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்.

    509 ரூபாய் ப்ரீபெய்டு பிளான்

    84 நாட்கள் வேலிடிட்டி. 6GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்

    355 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    30 நாட்கள் வேலிடிட்டி. 25GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்.

    199 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    28 நாட்கள் வேலிடிட்டி. 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்

    219 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    30 நாட்கள் வேலிடிட்டி. 3GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்.

    609 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    ஒரு மாதம் வேலிடிட்டி. 60GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 300 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்.

    589 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    30 நாட்கள் வேலிடிட்டி. 50GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 300 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்.

    489 ரூபாய் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளான்

    77 நாட்கள் வேலிடிட்டி. 6GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 600 எஸ்எம்எஸ் ப்ரீயாக அனுப்பலாம்

    • பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
    • இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு.

    ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது செல்போன் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கட்டண உயர்வுக்கு மத்தியில், பிஎஸ்என்எல் விலையை குறைத்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணமாக உள்ளது.

    அதன் நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி, வரம்பற்ற அழைப்பு மற்றும் தாராளமான டேட்டா அலவன்ஸ் ஆகியவற்றுடன், அதிக மதிப்பு மற்றும் குறைந்த செலவை எதிர்பார்க்கும் பயனர்களை ஈர்க்கும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

    தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் கட்டணங்களின் விலையை சுமார் 26 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது வரும் ஜூலை 3, 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    ஜியோ மற்றும் ஏர்டெல்: விலை உயர்வுகள் ஜூலை 3, 2024 முதல் அமலுக்கு வருகிறது.

    வோடபோன் ஐடியா: புதிய விலைகள் ஜூலை 4, 2024 முதல் அமலுக்கு வருகிறது.

    பிஎஸ்என்எல் திட்டத்தின் சலுகை பற்றிய விவரங்கள் இதோ:

    புதிய திட்டம் 45 நாட்களுக்கு நீடிக்கும். இது வழக்கமான திட்டங்களை விட நீண்டது.

    இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு.

    மொத்தம் 90ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 2ஜிபிக்கு சமம்.

    ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்.

    இத்தகைய விரிவான திட்டத்தை குறைந்த விலையில் வழங்குவதற்கான பிஎஸ்என்எல்-ன் நடவடிக்கை சிறந்த மதிப்பை வழங்கும் அதே வேளையில், பயனர்கள் மீதான நிதிச்சுமையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 21% வரை உயர்த்தியுள்ளது.
    • இந்த விலை உயர்வு ஜூலை 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இந்தியாவில் ஜூலை மாதம் முதல் டெலிகாம் சேவை கட்டணங்கள் உயரத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த வகையில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

    வோடபோன் ஐடியா நிறுவனம் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 21% வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ஜூலை 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    அந்த வகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 299 -ல் இருந்து (தினம் 1.5 GB) ரூ. 349 -ஆக உயர்கிறது.

    365 நாள்களுக்கு ரூ.2,899 (தினம் 1.5 GB) என்ற வருடாந்திரக் கட்டணம் ரூ.3,449 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

     

    • நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில் ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
    • அடுத்த வாரம் முதல், ஏர்டெல் நிறுவனம் திருத்தப்பட்ட புதிய பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதன் இணையதளத்தில் காண்பிக்கும்.

    இந்தியாவில் ஜூலை மாதம் முதல் டெலிகாம் சேவை கட்டணங்கள் உயரத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த வகையில் நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது. இதனை தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனமும் தனது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

    ஏர்டெல் பிரீபெயிட் மாதாந்திர சலுகை, இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் மற்றும் ஓராண்டு வேலிடிட்டி வழஹ்கும் பிரீபெயிட் சலுகைகளின் கட்டணங்களை ஏர்டெல் உயர்த்துகிறது. அடுத்த வாரம் புதிய விலை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களுக்கான புதிய கட்டணங்கள் ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் என்று ஏர்டெல் தெரிவித்து இருக்கிறது. அடுத்த வாரம் முதல், ஏர்டெல் நிறுவனம் திருத்தப்பட்ட புதிய பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதன் இணையதளத்தில் காண்பிக்கும்.

    இதேபோல், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் புதிய திட்டங்களின்படி மாதாந்திர கட்டணம் அதிகரிப்பதைக் காண முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அந்த வகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 179-ல் இருந்து ரூ. 199-ஆக உயர்கிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 455-ல் இருந்து ரூ. 509 ஆக உயர்கிறது. அதிகபட்சமாக ஒரு வருட வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 2999-ல் இருந்து ரூ. 3599-ஆக உயர்ந்துள்ளது.

    அதன் விவரம் பின்வருமாறு:-


    பழைய விலை

    புதிய விலை

    டேட்டா

    செல்லுபடியாகும் காலம் (நாட்கள்)

    179

    199

    2ஜிபி

    28

    455

    509

    6ஜிபி

    84

    1799

    1999

    24 ஜிபி

    365

    265

    299

    ஒரு நாளைக்கு 1ஜிபி

    28

    299

    349

    ஒரு நாளைக்கு 1.5 ஜிபி

    28

    359

    409

    ஒரு நாளைக்கு 2.5 ஜிபி

    28

    399

    449

    ஒரு நாளைக்கு 3 ஜிபி

    28

    479

    579

    ஒரு நாளைக்கு 1.5 ஜிபி

    56

    549

    649

    ஒரு நாளைக்கு 2 ஜிபி

    56

    719

    859

    ஒரு நாளைக்கு 1.5 ஜிபி

    84

    839

    979

    ஒரு நாளைக்கு 2 ஜிபி

    84

    2999

    3599

    ஒரு நாளைக்கு 2ஜிபி

    365


    • 5ஜி சேவையில் அளவற்ற இலவச 5ஜி சேவைகளை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    • 2019-இல் கட்டண உயர்வு 20 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்தது.

    புதுடெல்லி:

    ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம், தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தையும் உயர்த்துகிறது. 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை கட்டணம் உயர்கிறது. ஜூலை 3-ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

     

    மேலும், 5ஜி சேவையில் அளவற்ற இலவச 5ஜி சேவைகளை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, முதல்முறையாக செல்போன் சேவை கட்டணங்களை ஜியோ உயர்த்துகிறது. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து பாரத் ஏர்டெல் நிறுவனம் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனம் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2021 டிசம்பரில் டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் 20 சதவீதம் வரை தங்களின் கட்டணத்தை உயர்த்தின. அதற்கு முன்பு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிசம்பர் 2019-ல் கட்டணங்களை உயர்த்தின. 2016-ல் ஜியோ தனது சேவையை அறிமுகப்படுத்திய பிறகு முதல் முறை உயர்த்தியது.

    2019-இல் கட்டண உயர்வு 20 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்தது. அதே நேரத்தில் 2021 உயர்வு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நான்கு காலாண்டுகளில் ஏர்டெல் ஒரு பயனரிடம் இருந்து பெறும் லாபத்தில் ரூ. 30 மற்றும் 36 உயர்வை வழங்குகிறது.

    கட்டண உயர்வால் வரும் காலாண்டுகளில் தொழில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • 14.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இன்போசிஸ் நிறுவனம் 2-ம் இடம் பிடித்துள்ளது.
    • 4-ம் இடத்தில் எல்.ஐ.சி.யும் 5-ம் இடத்தில ரிலையன்ஸ் நிறுவனமும் உள்ளது.

    2024ம் ஆண்டின் மிகவும் மதிப்புமிக்க டாப் 10 இந்திய பிராண்டுகளை பிராண்ட் பைனான்ஸ் இந்தியா பட்டியலிட்டுள்ளது.

    அதில் 2023 ஆம் ஆண்டு முதலிடம் பிடித்த டாடா நிறுவனமே இந்தாண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கடந்தாண்டை விட 9% வளர்ச்சியுடன் 28.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் முதலிடத்தை டாடா நிறுவனம் தக்க வைத்துள்ளது.

    கடந்தாண்டை விட 9% வளர்ச்சி மற்றும் 14.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இன்போசிஸ் நிறுவனம் 2-ம் இடம் பிடித்துள்ளது.

    கடந்தாண்டை விட 38% அபார வளர்ச்சியுடன் எச்.டி.எப்.சி குழுமம் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. 4-ம் இடத்தில் எல்.ஐ.சி.யும் 5-ம் இடத்தில ரிலையன்ஸ் நிறுவனமும் உள்ளது.

    6-ம் இடத்தில் எஸ்.பி.ஐ.யும், 7-ம் இடத்தில் ஏர்டெல்லும் 8-ம் இடத்தில் எச்.சி.எல். டெக்னாலஜியும் 9-ம் இடத்தில் லார்சன் & டர்போ நிறுவனமும் 10-ம் இடத்தில் மகேந்திரா நிறுவனமும் உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீங்கள் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திவிட்டால், ஏர்டெல் வழங்கும் டேட்டா வவுச்சர்களைப் பெறலாம்.
    • டேட்டாவை அதிகம் பயன்படுத்தாத மற்றும் குறைந்த செலவில் போன் நம்பரை செயலில் வைத்திருக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும்.

    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு ரூ.279 விலையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஏர்டெல் இணையதளம் மற்றும் மொபைல் ஆப்-பிலும் வழங்கப்படுகிறது.

    இது ஒரு வித்தியாசமான திட்டமாகும், ஏனெனில் இது குறைந்த செலவில் கிடைக்கும். ஆனால் மற்ற வகையான நன்மைகளை நீக்குகிறது.

    சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ.395 பிளானை 70 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகப்படுத்தியது. இப்போது ரூ.279 விலையில் கிடைக்கும் திட்டம் 45 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. ஏர்டெல் பயனர்களுக்கு குறைந்த விலையில் நீண்ட வேலிடிட்டி வழங்கும் இந்த பிளான், அதிக டேட்டாவை வழங்கவில்லை. பயனர்கள் அதிக டேட்டாவை பயன்படுத்த விரும்பினால் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

    பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.279 திட்டத்தில் 2GB டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் 600 SMS என்று மொத்தமாக 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பயன்படுத்துவதற்கான சராசரி தினசரி செலவு ரூ.6.2 ஆகும்.

    இருப்பினும், நீங்கள் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திவிட்டால், ஏர்டெல் வழங்கும் டேட்டா வவுச்சர்களைப் பெறலாம். இவற்றின் விலை 1 நாளுக்கு ரூ. 19 இல் தொடங்குகிறது. டேட்டா வவுச்சர்களைப் பெற நீங்கள் தொடர்ந்து அதிகமாகச் செலவிட வேண்டியிருக்கும்.

    டேட்டாவை அதிகம் பயன்படுத்தாத மற்றும் குறைந்த செலவில் போன் நம்பரை செயலில் வைத்திருக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும். வரம்பற்ற வாய்ஸ் கால் இருப்பதால், அழைப்பின் பலன் எப்போதும் நாள் முடிவில் உதவியாக இருக்கும்.

    இதே சலுகையில் ஏர்டெல் தேங்ஸ் பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் அப்போலோ 24/7, இலவச ஹெலோ டியூன்கள், வின்க் மியூசிக் உள்ளிட்ட பலன்கள் அடங்கும்.

    • ஏர்டெல் நிறுவனம் 7.35 லட்சம் புதிய பயனாளர்களை இணைந்துள்ளது.
    • புதிய இணைப்புகளுடன், ஜியோவின் சந்தைப் பங்கு 40.48 சதவீதமாகும்.

    முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், ஏர்டெல் நிறுவனத்தை ஒப்பிடும்போது 2024 ஏப்ரல் மாதத்தில் 26.87 லட்சத்துக்கும் அதிகமான புதிய மொபைல் சந்தாதாரர்களை இணைத்துள்ளது. இதுவே, ஏர்டெல் நிறுவனம் 7.35 லட்சம் புதிய பயனாளர்களை மட்டுமே இணைந்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை மார்ச் மாத இறுதியில் 1,199.28 மில்லியனிலிருந்து 24, ஏப்ரல் இறுதியில் 1,201.22 மில்லியனாக உயர்ந்துள்ளது, இதன் மூலம் மாதாந்திர வளர்ச்சி விகிதம் 0.16 சதவீதமாக உள்ளது.

    நகர்ப்புற தொலைபேசி சந்தா மார்ச் இறுதியில் 665.38 மில்லியனில் இருந்து ஏப்ரல் இறுதியில் 664.89 மில்லியனாக குறைந்துள்ளது.

    இருப்பினும் அதே காலகட்டத்தில் கிராமப்புற சந்தா 533.90 மில்லியனில் இருந்து 536.33 மில்லியனாக அதிகரித்துள்ளது.

    ஏப்ரல் மாதத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொலைபேசி சந்தாக்களின் மாதாந்திர வளர்ச்சி விகிதம் முறையே 0.07 சதவீதம் மற்றும் 0.45 சதவீதமாக இருந்தது.

    எவ்வாறாயினும், வோடபோன் ஐடியா இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கூடுதலா 7.35 லட்ச சந்தாதாரர்களை இழந்ததால் தொடர்ந்து வீழ்ச்சியில் இருந்து வருவதாக டிராய் தெரிவித்துள்ளது.

    இந்த புதிய இணைப்புகளுடன், ஜியோவின் சந்தைப் பங்கு 40.48 சதவீதமாகவும், ஏர்டெல் 33.12 சதவீதமாகவும், வோடபோன் ஐடியா 18.77 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

    ஏப்ரல் மாத இறுதியில் மொத்த தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சந்தாதாரர்களின் பங்கு முறையே 55.35 சதவீதம் மற்றும் 44.65 சதவீதம் ஆகும்.

    • உலகளவில் 184 நாடுகளில் சேவைகளை தடையின்றி டேட்டா சேவைகளை பெற அனுமதி அளித்திருந்தது.
    • ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதுபுது வசதிகளை செய்து வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

    2022 டிசம்பர் மாதம் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் வேர்ல்ட் பாஸ் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் உலகளவில் 184 நாடுகளில் சேவைகளை தடையின்றி டேட்டா சேவைகளை பெற அனுமதி அளித்திருந்தது. எனவே ஏர்டெல் வாடிக்கையாளர்கள் விமான நிலையத்திற்குச் சென்றாலும் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்தாலும், இந்த ஒரு பேக் இப்போது அனைத்து ரோமிங் தேவைகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

    அதன்படி வெளிநாடுகளில் அதிகம் தங்குபவர்கள் அல்லது அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கென சிறப்பு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பேக்குகள் மலிவு விலையில் சுமார் 1 வருடம் வரை செல்லுபடியாகும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உலகின் எந்த மூலையிலிருந்தும் வாடிக்கையாளருக்கு 24X7 கால் சென்டர் மூலம் வாடிக்கையாளர் சேவையை முற்றிலும் இலவசமாக பெறலாம் என்றும் தெரிவித்து அதை நடைமுறைபடுத்தி இருந்தது. இந்த மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்விக்கும் விதமாகவும், பயனுள்ளதாக இருந்தது.


    இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதவாது.

    வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாடிக்கைகாளர்கள் அந்தந்த நாட்டில் புதிய சிம் கார்டுகளை வாங்குபதை தவிர்க்கும் வகையில் 'அனைத்து நாடுகளுக்கும் ஒரே பிளான்' என்ற பெயரில் 'புதிய சர்வதேச ரோமிங்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, 10 நாட்களுக்கு 1GB இணைய சேவையுடன் 100 நிமிடங்கள் டாக் டைம் கொண்ட இந்த புதிய திட்டம் 899 ரூபாய் கட்டணத்தில் கிடைக்கும். அதே போல் 30 நாட்களுக்கான கட்டணம் ரூபாய் 2998 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாடு செல்லும் பயணிகளுக்கும் மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

    • பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாகவும், இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகிறது.
    • தேர்தல் முடிந்த உடன் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்த உள்ளன.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் உள்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இறுதிக்கட்டமாக ஜூன் 1-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு டெலிகாம் நிறுவனங்களின் கட்டணம் 15 முதல் 17 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

    ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவது தவிர்க்கவே முடியாதது. இதன்மூலம் ஏர்டெல் நிறுவனம் அதிக பயன் பெறும் எனவும், அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே, கடந்த 2021 டிசம்பரில் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை சுமார் 20 சதவீதம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

    ×