search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய்"

    • 4 ஆயிரத்து 274 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.25.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.25-க்கும் ஏலம் விடப்பட்டது.

    காங்கயம் :

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருள்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலங்களில் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள், ஈரோடு மாவட்டம் கொல்லன்கோவில், சிவகிரி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர் ஊராட்சி, கரூர் மாவட்டம் அஞ்சூர், கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வேளாண் விளை பொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.

    இதன்படி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 4 ஆயிரத்து 274 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இவை டெண்டர் முறையில் ஏலம் நடைபெற்றது. இதில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.25.25-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.25-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் 47 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.81.10-க்கும், குறைந்தபட்சமாக என ரூ.57.25-க்கும் ஏலம் போனது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 1,105 தேங்காய்களும், 13 தேங்காய் பருப்பு மூட்டைகளும் கூடுதலாக கொண்டு வரப்பட்டிருந்தது.

    தேங்காய், தேங்காய் பருப்பு 3¼ டன் அளவில் மொத்தம் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 272-க்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

    • கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • கடந்த ஆண்டு பரவலாக பெய்த மழையால், தேங்காய் அமோக விளைச்சலை தந்துள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் பொள்ளாச்சி, சேலம், உடுமலைப்பேட்டை, பெருந்துறை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளாவிலும் தென்னை மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் தேங்காய் இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையால் அனைத்து பகுதிகளிலும் தென்னை மரங்களில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் தேங்காய் விலை சரிய தொடங்கி உள்ளது. குறிப்பாக சேலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ தேங்காய் ரூ.32 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து சேலம் தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறுகையில், சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 டன் தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இதனை சில்லரை வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். கடந்த ஆண்டு பரவலாக பெய்த மழையால், தேங்காய் அமோக விளைச்சலை தந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தேங்காய் வரத்து கூடியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு டன் தேங்காய் ரூ.30 ஆயிரத்திற்கு விற்றது. தற்போது டன்னுக்கு ரூ.4 ஆயிரம் சரிந்து ரூ.26 ஆயிரம் என விற்பனை செய்யப்படுகிறது. சில்லரையில் சிறிய அளவுள்ள தேங்காய் ரூ.8 என்றும், நடுத்தர அளவு ரூ.10 முதல் ரூ.15 என்றும், பெரிய தேங்காய் ரூ.18 முதல் ரூ.20 என்றும் விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் தேங்காய் வரத்து அதிகரிக்கும். அப்போது மேலும் விலை சரிய வாய்ப்புள்ளது என்றனர்.

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங் காய் மறைமுக ஏலம் வேளாண்மை துணை இயக்குனரும், முதுநிலை செயலாளர் தலைமையில் தேசிய வேளாண் மின்னணு சந்தை என்று இணையதளம் மூலம் நடைபெற்றது.
    • மொத்தம் 2 டன் எடை யுள்ள கொப்பரை தேங்காய் ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப் பாளர் பிரபாவதி தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங் காய் மறைமுக ஏலம் வேளாண்மை துணை இயக்குன ரும், முதுநிலை செயலாளருமான கண்ணன் தலைமை யில் தேசிய வேளாண் மின்னணு சந்தை என்று இணையதளம் மூலம் நடைபெற்றது. இதில் 20 விவசா யிகளும், சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர். கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட் சமாக 55 ரூபாய் 75 காசுக்கும், அதிகபட்சமாக 82 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 2 டன் எடை யுள்ள கொப்பரை தேங்காய் ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப் பாளர் பிரபாவதி தெரிவித்தார்.

    • ஒரு கிலோ ரூ. 20.65 முதல் ரூ. 26.60 வரை விற்பனையானது
    • ஏலத்தில் மொத்தம் 56 விவசாயிகள், 8 வியாபாரிகள் கலந்து கொண்டனா்.

    வெள்ளகோவில் :

    முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3.50 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.இந்த வார ஏலத்துக்கு 2,004 கிலோ எடையிலான தேங்காய் வரத்து இருந்தது. ஒரு கிலோ ரூ. 20.65 முதல் ரூ. 26.60 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 23.55.

    கொப்பரை 1,544 கிலோ வரத்து இருந்தது. ஒரு கிலோ ரூ. 60.10 முதல் ரூ. 81.55 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 80.20.ஏலத்தில் மொத்தம் 56 விவசாயிகள், 8 வியாபாரிகள் கலந்து கொண்டனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.67 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா். 

    • பரமத்திவேலூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ-நாம் செயலி) மூலம் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
    • இதில் 7 ஆயிரத்து 857‌ கிலோ தேங்காய் பருப்பு, மொத்தம் ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 531-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஏலத்தில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.39-க்கும், குறைந்த பட்சமாக ரூ.51.65-க்கும், சராசரியாக ரூ.84.39-க்கும் ஏலம் போனது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ-நாம் செயலி) மூலம் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

    இதில் 7 ஆயிரத்து 857 கிலோ தேங்காய் பருப்பு, மொத்தம் ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 531-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ஏலத்தில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.39-க்கும், குறைந்த பட்சமாக ரூ.51.65-க்கும், சராசரியாக ரூ.84.39-க்கும் ஏலம் போனது.

    இ-நாம் செயலி மூலம் ஏலம் நடைபெற்றது, விவசாயிகளுக்கு விற்பனை தொகையானது அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா விவசாய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
    • ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கையில் தேங்காய், கரும்பு ஆகியவற்றை ஏந்திய படி தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    நாகர்கோவில் :

    பொங்கல் திருநாளில் பொதுமக்களுக்கு கரும்பு, சர்க்கரை, தேங்காய் உள்பட பல்வேறு பொருட்கள் வழங்காத தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா விவசாய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    குமரி மாவட்ட பாரதிய ஜனதா விவசாய அணி சார்பில் இன்று காலை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட விவசாய அணி தலைவர் முருகராஜன் தலைமை தாங்கினார்.

    பொதுச் செயலாளர் அருள், மாநில விவசாய அணி துணைத் தலைவர் ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாநில செயலாளர் மீனா தேவ், மாவட்ட துணை தலைவர் தேவ், பொருளாளர் முத்துராமன் மற்றும் நிர்வாகிகள் சுனில் குமார், அஜித் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கையில் தேங்காய், கரும்பு ஆகியவற்றை ஏந்திய படி தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    • தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டைகளை குவித்து வைத்து அப்பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்கின்றனர்.
    • கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.10-க்கு விலைபோனது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.12-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பெருங்குறிச்சி, குப்பரிக்காபாளையம், மணியனூர், கந்தம்பாளையம், சுள்ளிப்பாளையம், மாரப்பம்பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம் பள்ளி, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், வடகரையாத்தூர், ஆனங்கூர், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், சேளூர், அண்ணா நகர், கபிலக்குறிச்சி, பெரியசோளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர்.

    தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டைகளை குவித்து வைத்து அப்பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்கின்றனர். கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.10-க்கு விலைபோனது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.12-க்கு விற்பனையானது. தேங்காய் சிரட்டை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மழை, பனி காரணமாக கறிவேப்பிலை விலையும் உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோ 22 முதல் 24 ரூபாய் விற்ற தேங்காய் தற்போது 28 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    திருப்பூர் : 

    சபரிமலை சீசன் என்பதால் தேங்காய் விற்பனை ஜோராகியுள்ளது. தேங்காய்க்கு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ 22 முதல் 24 ரூபாய் விற்ற தேங்காய் தற்போது 28 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    வழக்கமாக சின்னரகம் ரூ.8 முதல் ரூ.10-க்கும் நடுத்தரம் ரூ. 14 முதல் 16 ரூபாய்க்கும், பெரிய தேங்காய் 18 முதல் 24 ரூபாய்க்கும் விற்கப்படும். தேங்காய்க்கு கிராக்கி நிலவுவதால் சின்னரகம் 11 ரூபாய், நடுத்தரம் 15 முதல் 18 ரூபாய், பெரியது 22 முதல் 26 ரூபாயாக மாறியுள்ளது.

    மழை, பனி காரணமாக கறிவேப்பிலை விலையும் உயர்ந்துள்ளது. கிலோ 25 முதல் 40 ரூபாய் இருந்த கறிவேப்பிலை கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கட்டு 8 முதல் 10 ரூபாய்க்கு விற்கப்படும். தற்போது ஒரு கட்டு 15 முதல் 20 ரூபாய்க்கு விற்கிறது.  

    • வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் 3,993 கிலோ தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 45-க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 8,703 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக ரூ.23.75-க்கும், அதிக பட்ச விலையாக ரூ.34.59-க்கும், சராசரி விலையாக ரூ.28.89-க்கும் ஏலம் போனது.

    மொத்தம் 3,993 கிலோ தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 45-க்கு விற்பனையானது.

    • சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது சீசன் ஜனவரி 20 வரை நடக்கிறது.
    • ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனில் லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சபரிமலை சென்று தரிசனம் செய்வார்கள்.

    புதுடெல்லி:

    சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்த சீசன் ஜனவரி 20-ந் தேதிவரை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனில் லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சபரிமலை சென்று தரிசனம் செய்வார்கள். பெரும்பாலானோர், தலையில் இருமுடி ஏந்திச் செல்வது வழக்கம்.

    அந்த இருமுடி பையில், நெய் நிரப்பப்பட்ட தேங்காய் மற்றும் வழியில் உள்ள புனித இடங்களில் உடைப்பதற்கான சாதாரண தேங்காய்கள், இதர காணிக்கை பொருட்கள் ஆகியவை இருக்கும். ஆனால், எளிதில் தீப்பிடிக்கக் கூடியது என்ற அடிப்படையில், விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. இதனால், அய்யப்ப பக்தர்கள் விமான பயணத்தை தவிர்க்க வேண்டிய நிலை இருந்தது.

    இந்நிலையில், நடப்பு சபரிமலை சீசனில் ஜனவரி 20-ம் தேதிவரை விமானத்தில் தேங்காய்களை கொண்டு செல்ல சிவில் விமான போக்குவரத்து பிரிவு அனுமதி அளித்துள்ளது.

    வழக்கமாக பயணிகள் அமரும் பகுதியில் குறிப்பிட்ட எடை அளவு கொண்ட கைப்பையை தங்களுடன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அப்படி தேங்காய்களை கொண்ட கைப்பையை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

    எக்ஸ்ரே பரிசோதனை, வெடிகுண்டு கண்டறியும் டிடெக்டர் பரிசோதனை, வழக்கமான பரிசோதனை ஆகியவற்றுக்கு பிறகுதான் தேங்காய்களை கொண்டு செல்ல முடியும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
    • தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்கள் இரண்டும் சேர்த்து ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 719-க்கு விற்பனை நடை பெற்றது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 7 ஆயிரத்து 665 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 23 ரூபாய் 25 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 5 காசுக்கும், சராசரி விலை யாக 23 ரூபாய் 60 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 3 ஆயிரத்து 352 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 78 ஆயிரத்து 740 ரூபாய்க்கு விற்பனையானது.

    இதேபோல் கொப்பரை தேங்காய்கள் 13 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 65 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 73 ரூபாய் 50 காசுக்கும், சராசரி விலையாக 73 ரூபாய் 50 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 616 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய்கள் 44 ஆயிரத்து 979 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

    தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்கள் இரண்டும் சேர்த்து ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 719-க்கு விற்பனை நடை பெற்றது.

    • விவசாயிகளின் 13 மாதம் கால போராட்ட கோரிக்கைகளை ஒப்புதல் அளித்தபடி ஒன்றிய அரசு உடனே அமல்படுத்த வேண்டும்.
    • தேங்காய்களுக்கு கிலோ ரூ. 50 நிர்ணயம் செய்யவும், கொப்பரை ஒரு கிலோ ரூ.150-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி காமராஜ் சிலை அருகில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் டார்ச் லைட் ஒளி வீச்சில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாநிலச் செயலாளர்பி.எஸ். மாசிலாமணி,விவசாய சங்கம் உலகநாதன் முன்னாள் எம்.எல்.ஏ, பிவி.சந்தர ராமன், மாவட்ட நிர்வாக குழு கோ. ஜெயபால், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் டி.பி. சுந்தர், விவசாய சங்க நகர செயலாளர் முருகேசன், பக்கிரிசாமி, பி எச் பாண்டியன், பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜவகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    விவசாயிகளின் 13 மாதம் கால போராட்டக் கோரிக்கைகளை ஒப்புதல் அளித்த படி ஒன்றிய அரசு உடனே அமல்படுத்தவும், கோவில் மடம் அறக்கட்டளை வக்போர்டு குத்தகை விவசாயிகளை தொடர் பேரிடர் பாதிப்பில் கால குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்யவும், தேங்காய்களுக்கு கிலோ 50 ரூபாய் நிர்ணயம் செய்யவும், கொப்பரை ஒரு கிலோ 150க்கு கொள்முதல் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு சம்பா, தாளடி பருவ காப்பீடு திட்ட இழப்பீட்டை வழங்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×