என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேங்காய்"
- அதிகபட்சமாக கிலோ ரூ.25-க்கும், குறைந்த பட்சமாக ரூ.21.77-க்கும், சராசரியாக ரூ.24-க்கும் ஏலம் போனது.மொத்தம் ரூ.67 ஆயிரத்து 166-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
- ஏலத்திற்கு 5 ஆயிரத்து 535 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மின்னனு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது. பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் முழுத்தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 2ஆயிரத்து 791 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.25-க்கும், குறைந்த பட்சமாக ரூ.21.77-க்கும், சராசரியாக ரூ.24-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.67 ஆயிரத்து 166-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
நேற்று செவ்வாய்க் கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 5 ஆயிரத்து 535 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.25.11 -க்கும், குறைந்தபட்சமாக ரூ20- க்கும், சராசரியாக ரூ.24.51-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 544 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.
- மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- மொத்தமாக தேங்காய், தேங்காய்பருப்பு சேர்த்து ரூ.3 லட்சத்து 58 ஆயிரத்து 56-க்கு விற்பனை நடை பெற்றது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,042 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 1 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 15 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 4,722 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 325-க்கு விற்பனையானது.
இதேபோல் தேங்காய்பருப்பு 111 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 73 ரூபாய் 60 காசுக்கும், அதிகபட்ச விலையாக 76 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 75 ரூபாய் 89 காசுக்கும்,
இதேபோல் 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 40 ரூபாய் 60 காசுக்கும், அதிகபட்ச விலையாக 62 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 50 ரூபாய் 10 காசுக்கு ஏலம் போனது.
மொத்தமாக 3,505 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 731-க்கு விற்பனை நடைபெற்றது.
மொத்தமாக தேங்காய், தேங்காய்பருப்பு சேர்த்து ரூ.3 லட்சத்து 58 ஆயிரத்து 56-க்கு விற்பனை நடை பெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
- குரும்ப கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் வசிக்கின்றனர்.
- குலதெய்மான வீரபத்திரசாமி கோவில் தட்டான் தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி, ஜெ.ஜெ.நகர், ஆண்டிப்பாளைம், தட்டான் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குரும்ப கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குலதெய்மான வீரபத்திரசாமி கோவில் தட்டான் தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாத திருவிழா நேற்று காலை முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து சக்தி கரகம் அழைத்து வரப்பட்டது.
பின்னர் இரவு 7 மணி அளவில் முக்கிய நிகழ்வான தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் பூசாரி முனுசாமி காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தலையின் மீது தேங்காய் உடைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திகடன் செலுத்தி வழிப்பட்டனர். இதனை தொடர்ந்து இரவு முழுவதும் வீரபத்திரசாமி சரித்திர நாடகம் நடைபெற்றது. இதனை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். தேங்காய் உடைக்கும் போது, தலையில் ரத்தமோ, வலியோ ஏற்படாது. இது போன்ற வினோத வழிபாடு மேற்கொள்ளும் போது வருடம் முழுவதும் உடல் நல கோளாறு ஏற்படாது எனவும், பஞ்சம் நீங்கி நாடு செழிப்படையும் என்பது ஐதீகம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது.
- இதில் 2 விவசாயிகளின் 1300 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது .
உசிலம்பட்டி
உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மட்டையுடன் கூடிய தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் 2 விவசாயிகளின் 1300 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது .
இதில் 3 வியாபாரிகள் கலந்து கொண்டனர். அதிகபட்ச விலையாக காய் ஒன்றுக்கு ரூ.8.14 எனவும், குறைந்தபட்ச விலையாக ரூ .6.87 எனவும் விலை கோரப்பட்டு மொத்தம் ரூ.9 ஆயிரத்து 500-க்கு ஏலம் போனது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் கொப்பரை மறைமுக ஏலம் நடைபெறும்.
அனைத்து வேளாண் விளைபொருட்களையும் விவசாயிகள் தரம்வாரியாக பிரித்து எடுத்து வந்து விற்பனை செய்து அதிக லாபம் பெற்று பயன்பெறலாம். இந்த தகவலை உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தெரிவித்தார்.
- விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த காய்கறிகள், பழங்கள், தேங்காய், வாழை இலை, பூக்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.
- விவசாயிகளின் விலை பொருள்களான காய்கறிகள், கீரைகள், பழங்களின் தரத்தை பார்வையிட்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உழவர் சந்தை உள்ளது. இங்கு பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த காய்கறிகள், பழங்கள், தேங்காய், வாழை இலை, பூக்கள் உள்ளிட்ட பலவற்றை விற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த உழவர் சந்தையை தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகளின் விலை பொருள்களான காய்கறிகள் கீரைகள் பழங்களின் தரத்தை பார்வையிட்டார். உழவர் சந்தைக்கு காய்கறி வரத்தை அதிகரிக்கவும், சாகுபடி தீவிரப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்ப ட்டது. விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் காய்கறி,பயிர் முகாம் நடத்திவிநியோ கிக்க ப்பட்டதுஇந்த ஆய்வின்போது பட்டுகோ ட்க்கடை தோட்ட க்கலை உதவி இயக்குனர் ராகினி, உழவர் சந்தை அலுவலர் வெங்கடாஜலபதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,174 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
- இதேபோல் ஒரு மூட்டை கொப்பரை தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது. இது கிலோ 64 ரூபாய்க்கு ஏலம் போனது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,174 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 22 காசுக்கும், அதிகபட்ச விலையாக 28 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 25 ரூபாய் 30 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 5,993 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 116 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இதேபோல் ஒரு மூட்டை கொப்பரை தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது. இது கிலோ 64 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 31 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய்கள் 1,984 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்கள் இரண்டும் சேர்த்து ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
- எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
- தேங்காய்கள் ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்து 788 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
மொடக்குறிச்சி:
எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 47,614 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 21 ரூபாய் 49 காசுக்கும், அதிகபட்ச விலையாக 25 ரூபாய் 26 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 69 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 19,622 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்து 788 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
- சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
- ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 42 ஆயிரத்து 708 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 42 ஆயிரத்து 708 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 20 ரூபாய் 20 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 39 காசுக்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 31 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 13 ஆயிரத்து 189 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 2 லட்சத்து 94 ஆயிரத்து 605 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
அதேபோல் கொப்பரை தேங்காய்கள் 5 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 76 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 77 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 77 ரூபாய் 49 காசுக்கு ஏலம் போனது.
மொத்தம் 98 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய்கள் 7 ஆயிரத்து 590 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்கள் இரண்டும் சேர்த்து மூன்று லட்சத்து இரண்டாயிரத்து 195 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்